தனக்கு இருபது வயதாகும்போது கண்ணன் அரியக்குடி, செம்பை, ஜிஎன்பி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாசித்திருத்தார். “என் பக்கவாத்தியம் இல்லாத தண்டபாணி தேசிகரின் கச்சேரியை நீங்கள் கண்டுபிடிப்பது அரிது,” என்கிறார் கண்ணன்.
Category: இதழ்
வைரஸ் – சில முக்கிய விவரங்கள்
பெரும்பாலான நச்சியங்கள் சில குறிப்பிட்ட உயிரினங்களில் குறிப்பிட்ட கண்ணறைகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. மூச்சுப்பாதையில் உள்ள கண்ணறைகள் நச்சியத்தால் தாக்கப்படும்போது தடுமண் (சளி) உண்டாகிறது. நச்சியங்களால் கண்ணறைகளுக்கு வெளியே தனித்து வாழ இயலாது.
பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? – இறுதிப் பகுதி
க்ரெடிட் கார்டுகள் கண்டதுக்கெல்லாம் கட்டணம் வசூலித்து வந்தார்கள். ஆரம்பத்தில் இதற்கு அவர்கள் சொன்ன காரணம், உயர்தர பாதுகாப்பான வலையமைப்பு செலவுகளை மீட்பதற்கே என்பது. இன்று வலையமைப்பு செலவு குறைந்து கொண்டே வருகிறது. கிரெடிட் கார்டு கம்பெனிகள், இடை கம்பெனிகளான processors எல்லோரும் இணைய புரட்சியால் முன்னைப் போல கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள்.
வெர்மீயர்
காதுகளில் ர்ர்ர் என்ற ரீங்காரம்.ஆழமா? உயரமா?
அது அந்த சுவருக்கப்பாலிருந்து வரும் அழுத்தம்,
யதார்த்தத்தை மிதக்க வைத்து,
தூரிகையை நிலைக்க வைக்கும் அழுத்தம்.
தாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம்
பெண்களுக்கு எதிரான, பெண்மையை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பாக மேற்கத்திய அமைப்பு இருக்கிறது, அது பெண்ணை ஒரு குழந்தைத்தனமான சார்நிலையில் வைத்திருக்கிறது- மாறாக இந்திய மரபு ஆண் பெண் பேதங்களைக் கடக்க உதவுவதாக இருக்கிறது: இங்கு பெண்ணியம் என்பது ஆண்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒன்றல்ல- தாந்திரிக மரபில் எவரும் முழுமையான ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்பதாகக் கருதப்படுவதில்லை.
மகரந்தம்
உணவு வாங்கப் பணம் இல்லை, வீட்டுக் கடனுக்கு வட்டி கட்டப் பணம் இல்லை என்று தெருவில் வாழ நேர்கிற நிலையில் உள்ள முன்னாள் மத்திய வர்க்கத்தினர் இன்று ஏழைகளுக்கு இலவச உணவு கொடுக்கும் சூப் கிச்சன்களில் வரிசையில் நின்ற வண்ணம் தம் நிலையை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறார்கள். ஆனால் இன்னும் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிக்கக் கூடாது என்ற அரசியல் கொள்கையையே ஆதரிக்கிறார்கள் என்பதுதான் என்னே விசித்திரம்.
Quantum Levitation
அந்தரத்தில் மிதக்கும் வித்தையாளர்களைத் தான் பார்த்திருக்கிறோம். அடுத்த கட்ட இயற்பியலின் விதிகளை முன்னிருத்தும் இந்த கண்டுபிடிப்பை பாருங்கள்.
புரட்சியில் நீ இணையும் நாள் இதுதானா?
காவல் துறையினர், தன்னைப் பார்க்கக்கூடிய அளவில், அண்மையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்ட லிஸ், கொஞ்சம் தாராளமாகவே நீலிக்கண்ணீர் வடித்தாள். அவர்கள் கிரெக்கிடம் அச்சிட்ட தாள் ஒன்றினை அளித்து, அவனிடமிருந்த பற்றுச்சீட்டின் எஞ்சிய பகுதியில் முத்திரை பதித்துவிட்டு, அவளை கண்ணியமாக நடத்தி, வீட்டிற்கு உடனே இட்டுச்செல்லுமாறு கூறினர்.
ஆயிரம் தெய்வங்கள் – 15
கிரேக்க தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தாய் தெய்வம் ஹீரா. இவர் ஸீயஸ்ஸின் சட்டப்பூர்வ மனைவி. நிறைய அதிகாரம் உள்ளவள். ஸீயஸ்ஸின் தங்கை முறை என்றாலும் கிரேக்க நாடோடி வழக்கிலும், பிராந்தியத் திரவிழாக்களிலும், ஹோமரின் இலியத்திலும் ஸீயஸ் ஹீரா திருமணம் தெய்வத் திருமணமாகப் போற்றப்படுகிறது.
பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? – இரண்டாம் பகுதி
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் ஒரு வெள்ளியன்று தள்ளுபடி விற்பனை திருவிழா போல வருடம்தோறும் நாடெங்கும் நடைபெறும். இதை கருப்பு வெள்ளி (black Friday) என்கிறார்கள். சமீப காலமாக, வெள்ளியுடன் கருப்பு திங்களும் (black Monday) உண்டு. திங்களன்று இணையம் மூலம் மட்டுமே தள்ளுபடி விற்பனை. சில்லரை வியாபாரிகள் கருப்பு திங்கள் வியாபாரம் வளர்ந்து வருவதை கவனித்து வருகிறார்கள். அடித்து பிடித்துக் கொண்டு வரிசையில் குளிரில் அல்லல்படுவதைவிட க்ளிக்கினால் அடுத்த வாரம் குறைந்த விலையில் ஆசைப்பட்ட பொருளை வாங்கி விடலாம்.
நீர் சூழ் பேங்காக்
பருவ மழையால் வெள்ளம் பெருகி பாங்காக் நீர் நிரம்பிக் கிடக்கிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு வெள்ள அளவு குறையாது என்று அரசு சொல்லிவிட்டது. இத்தகைய சூழலில் பாங்காக்கின் வெவ்வேறு தருணங்களை அழகாக நம்முன் வைக்கும் படத் தொகுப்பு. இங்கே. தவறாமல் பார்க்கவேண்டி தொகுப்பு.
சீனா – சவால்களும் குற்றச் செயல்களும்
பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக சமூகவியலாளர்கள் பார்ப்பவை ஊழல், குடிமக்கள் சட்டங்களை, நிர்வாக விதிகளை அவமதிப்பது, சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவை, இவை தவிர, நகரை நோக்கி அலையலையாகக் கிளம்பிப் போகும் மக்கள் கூட்டம். நகர வாசிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இம்மக்களிடம் இல்லாததால் இவர்களை நிர்வகிப்பதே மிகவும் சவாலாக இருக்கிறதாகச் சொல்பவர்கள் அரசு அதிகாரிகள்.
வம்ச விருட்சம்
தலைவர் வீட்டின் முற்றத்தில் உள்ள சாவடியில் அம்மாவையும் , அப்பாவையும் கட்டி வைத்துவிட்டார்கள். அண்ணன் சொன்னது மாதிரிச் செய்து விட்டான். அவனுக்கு எங்கள் சாதி மீது வெறுப்பா சாதிகள் மீதே வெறுப்பா என்று தெரியவில்லை. எங்கள் பக்கம் ஜாதியைச் சொல்லும் போது பிள்ளைமார் , நாய்க்கமார் , தேவமார் என்று மார் சேர்த்துச் சொல்வோம். அண்ணன் எல்லாவற்றையும் சொல்லி, எல்லாம் விளக்கமாறு என்பான். அப்பொழுது சிரித்தோம்.
தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை
சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன்.
இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – கட்டுரைத் தொடர்
1909 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் மூனிச் (Munich) நகரில் ‘புதிய கலைஞர் குழுமம்’ (New Artist Assiociation) என்னும் பெயரில் ஒரு ஓவியர் குழு தோன்றியது. ‘வாஸ்லி கண்டின்ஸ்கி’ (Wassily Kandinsky) என்னும் ஓவியர் அதற்குத் தலைவராய் இருந்தார். ஓவியர் ‘பால் க்லீ’ (Paul Klee) யும் அதில் ஒரு உறுப்பினர். அந்தக் குழுவின் இலட்சியம் வெறும் உணர்வு சார்ந்த கருப் பொருளை மையமாகக் கொண்ட ஓவியங்களைவிடவும் மற்ற தளங்களில் இயங்கும் விதமாகப் படைப்பதுதான்.
ஹிந்தித் திரையிசையில் கஸல்
கஸல் பாடல்களில், இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் கவிதைக்கும் கொடுக்கப்படுகிறது. வார்த்தைகளின் அழகும், சந்தத்தின் நேர்த்தியும், மெட்டுகளின் இனிமையும், மனம் கவர் ராகங்களும் ஒன்று சேர இருக்கும் கஸல் பலரை மயக்கியதில் ஆச்சரியம் இல்லை. (அதே சமயம், ஒரு பாடல் மென்மையாக இருப்பதினாலோ, கவிதை நன்றாக இருப்பதினாலோ அதை கஸல் என்று சொல்லி விடமுடியாது. அந்த பாடல் வரிகள் கஸல் இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும்.) இந்த அருமையான வடிவம் திரையிசைக்கு உகந்ததாக இருந்தது. இருப்பினும், கஸலை திரைசையில் பொருத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.
செண்பகத்தக்காவின் குரல்
தான் பாடி வந்த காலகட்டத்தில் ஜென்ஸி, பல இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்த காரணத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. எந்த நளினமும், மேதமையும் இல்லாத ஜென்ஸியின் குரலை தங்களின் குரலாக அப்போதைய பெரும்பாலான யுவதிகளும், தங்கள் சகோதரிகளின், காதலிகளின் குரலாக அப்போதைய இளைஞர்களும் நினைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘இதயம் போகுதே’, ‘அடி பெண்ணே’ இப்படி எந்த ஒரு ஜென்சியின் பாடலைக் கேட்டாலும் அதில் ஜென்சியின் குரல் கேட்பதில்லை. அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, ‘ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது. இல்லையென்றால் அத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பில்லாத ஜென்ஸிக்கு இத்தனை வரவேற்பு அந்த சமயத்தில் கிடைத்திருக்காது.
சுற்றம்
முதல் நாளிரவு சாப்பாட்டில் திருப்தியின்மை கண்களில் தெரிய தெருக்கோடி முதலியார்
இன்னும் சில வருடங்களில் விபத்தில் உடல் சிதறப்போகிற சபாரி சூட் பழனி சித்தப்பா
குருப் போட்டோவிலும் கால் வீக்கம் தெரியும் வில்லுக்குறி அத்தை
கொடைக்கானல்
தண்ணீர்ப் பூக்களின்
பரஸ்பர பரிமாறல்களுடன்
கூச்சலிடும் குழந்தைகளின்
குதூகலத்தை ரசித்தபடி
தள்ளாத வயது படகோட்டி.
விவல் அக்கா
அப்போதெல்லாம் நவராத்திரிக்கு எங்கள் அரைகுறை அக்ரஹாரத்து சிறுவர் சிறுமியர் அலங்கரித்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று தெரிந்தது தெரியாதது அறிந்தது அறியாதது என்ற பாகுபாடற்று சொல்லியும் பாடியும் சுண்டல் அள்ளிக் கொண்டு வருவோம். இப்படி இருந்த அக்ரஹாரத்தில் ஒரு தென்றல், ஆடவர் அனைவரையும், ஏன் பெண்டிரையும், மௌனமாக, ஆனால் ஒரு ஆழிப் பேரலையின் தீவிரத்துடன் தாக்கியது.
திறப்பு
சுருதி சுத்தத்தை கவனிக்கப் பழக்கப்பட்ட ஜெயந்திக்கு பாடுபவரே இசையாக மாறிய விந்தையை நம்ப முடியவில்லை. பக்தி பாவத்தை உணரப் பிரயத்தனப்பட்ட அவளது பயிற்சிகள் தன் முன் சிதறுவதைக் கண்டாள். பக்தியையும் தாண்டி அவரது பாடல் வேறெங்கோ சஞ்சாரிப்பதை உணர்ந்தாள். பாடலைக் கொண்டு நிறுத்தியிருந்த நிலையில் ஒவ்வொரு ஸ்வரமும் தனி இசைவெளியாக ஒலிக்கத் தொடங்கியது. எத்தனை அன்பையும், உணர்ச்சியையும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பாடகர் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்க நினைக்க ஜெயந்தியின் கண்களில் அவளறியாமல் கண்ணீர் சுரந்தது.
காற்றிசைச்சரம்
இப்போதெல்லாம்
உச்சுக்கொட்டி கொஞ்சும் கடிகாரத்திற்கும்
சிணுங்கும் காற்றிசைச்சரத்திற்குமான
சில்மிஷ சம்பாஷணைகளைக் கேட்காமல்
உறக்கம் வருவதில்லை.
நகரம் – மூன்று கவிதைகள்
இயற்கையின் பிடியை விடு.
சென்றுவரும் திசையறியா
சக்கரத்தை பற்று.
தளர்ந்த ஒரு நாள், இங்கிருந்து
புல்தேடி பயணம் போவோம்,
படுத்துருண்டு புகைப்படம் எடுத்து,
இருண்ட நம் அறைகளில்
எப்போதும் பார்த்துக்கிடப்போம்
பச்சையை.
நன்றி ஸ்டீவ்!
இப்போது ஜாப்ஸின் உரையை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டேன். எங்கே போனாலும் ஒரு notepad-டும் அதற்குள் இந்த உரையும் இருக்கும். எதோ ஆராய்ச்சிக் கட்டுரை படிப்பது போல்
படித்துக் கொண்டிருப்பேன். சென்ற வருடத்தில் மட்டும் பல முறை அதை படித்திருக்கிறேன். எப்போதெல்லாம் என்னுடைய எண்ணம் சரியான திசையில் இல்லை என்று உணர்ந்தேனோ அப்போதெல்லாம் அந்த தாளை எடுத்து படிக்கத் தொடங்கிவிடுவேன். மனம் நிலைப்படும்.
ஆஸ்காருக்குப் போகும் ஆதாமிண்ட மகன் அபு
அபு ஒரு மிக எளிமையான நேரடியான கதை. வாழ்வின் பின்மாலைப் பொழுதைத் தொட்டுவிட்ட ஒரு முஸ்லிம் தம்பதியினரின் கதை இது. தங்கள் ஒரே மகனாலும் கைவிடப்பட்ட, ஆதரவற்ற அந்த முஸ்லிம் தம்பதியர் இஸ்லாமிய பக்தி மார்க்கத்தில் ஊறியவர்கள். தங்களுடைய ஒரே லட்சியமான ஹஜ் யாத்திரையை அவர்களால் மேற்கொள்ள முடியாமல் போவதை மட்டும் சொல்லும் மிக எளிய கதை. சிடுக்குகளும், சிக்கல்களும், திருப்பங்களும், அதீதமான நாடகீய உச்சங்களும் இல்லாத, ஒரு தம்பதியினரின் வாழ்க்கையில் நடக்கும் சில தருணங்களை மட்டும் சொல்லும் ஒரு சினிமா.
புனர்ஜனி – ஆவணப்படம் (மலையாளம்)
பெருக்கெடுத்து ஓடிய நதி, கிராம மக்களின் அபரிமிதமான இயற்கை சுரண்டலால் 1990–களின் இறுதியில் முற்றிலும் உலர்ந்து வறண்டிருக்கிறது. அதனால் பல வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்தித்த கிராம மக்களின் கூட்டு முயற்சியால், ஏறக்குறைய இறந்துவிட்ட நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து உயிர் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் மது எரவன்கரா ‘புனர்ஜனி’ என்ற ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ‘புனர்’ என்றால் மறுபடியும், ‘ஜனி’ என்றால் பிறப்பு – ஆகவே இறந்த நதியின் மீள்பிறப்பு ஆவணமே புனர்ஜனி .
இரண்டு கவிதைகள்
எப்படியிருக்குமோ என்னசெய்யுமோவென
எண்ணியெண்ணிப் படபடக்கும்
பெஞ்சமினுக்கு பல்பீர்சிங்குடனின்று முதலிரவு
ஒருபிறவியில் மறுபிறவி
சாராவாய் மாறிய சைமனுக்கு இருபாலநுபவம்
அவரவர் நல்லூழ் அவரவரறியார்
சீனா – கல்வியும் இடப்பெயர்வும்
சீனாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்பது வருடக் கல்வி இலவசம் என்பதே அடிப்படை சட்டம். இருப்பினும், அவரவர் ஊரில் இருந்தால் தான் இந்தச் சலுகை கிடைக்கக் கூடியது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சீனா ‘இலவச’க் கல்வி கொடுப்பதாகச் சொன்னாலும் உணவு, சீருடை, போக்குவரத்து, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் கணினிக்கான சிறப்புப்பாடக் கட்டணம், இதர கட்டணங்கள் என்ற பெயரில் கணிசமாக வசூலிக்கவே செய்கிறார்கள். சில அரசுப்பள்ளிகளில் நன்கொடையும் வாங்கப் படுகிறது.
தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… – இறுதிப் பகுதி
நான் இதை முன்பும் சொல்லி இருக்கிறென்: எனக்கு உலகைப் பற்றிய மேம்பட்ட புரிதல் இல்லை. மேம்பட்ட புரிதலை விடுங்கள், நிஜத்தில் எனக்கு இந்த உலகம் புரிபடவில்லை. நான் புரிந்தவளல்ல. எனக்குப் புரியவில்லை என்பதினால்தான் நான் எழுதுகிறேன். அதற்கான விலையைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எதற்கும் ஈடில்லை. ஒருவரின் துன்பம், வாழ்க்கை என்பதே, இருப்பதிலேயே மிக்க மதிப்புள்ளது.
ரிஸ்க்
கார் சிறுகுன்றின் மேல் ஏறும்போதே நசி கவனித்தாள். தொலைவில் நீலநிறக்கோடு. வறட்சியில் தவித்த ஹியுஸ்டனிலிருந்து வந்த அவளுக்கு அது இனிய காட்சி. உணவகத்தில் நுழைந்ததும் உட்காரவைக்க பரிசாரகி வரவேண்டும். அதில் சற்று தாமதம். அதற்குள் நசிக்கு அவசரம். இருட்டுவதற்குள் பார்த்துவிட வேண்டும். நழுவிச் செல்கிறாள். வயதுக்கு சிறிய வடிவாக இருப்பதில் ஒரு லாபம். யார் கண்ணிலும் படாமல் மனிதர்களுக்கு நடுவில் புகுந்து, மேஜைகளுக்கு கீழே குனிந்து ஓகிறாள். ஆறு தெரியவேண்டுமே. எதிர்ப்புறத்தில் தடியான பிளாஸ்டிக் திரை. அதை ஒதுக்குகிறாள். அங்கும் மேஜை நாற்காலிகள்.
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 19
1906 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தினர் ஓவியம் பற்றின தங்களின் நிலைப் பாட்டை ஒரு பிரகடனத்தின் மூலம் அறிவித்தனர். அதில் “கலப்படமற்ற படைப்புத் திறன் கூடிய, தெளிவும் நேர்மையும் கொண்ட எந்த ஒரு படைப்பாளியும் எங்கள் இயக்கத்தில் ஒருவர் என்றே கருதுகிறோம்.” என்று வலியுறுத்தினார்கள். வரையறுக்கப்படாத படைப்புத் திறன், ஆழ் மனதின் மர்மங்களை நேரிடையாக வெளிக் கொணரும் உத்தி, எந்தவொரு பாணியையும் பின்பற்றாத அணுகுமுறை ஆகியவை அவர்களது பொதுத்தன்மையாக இருந்தது.
ஆயிரம் தெய்வங்கள் – 14
மனிதர்களுக்கு தண்டனையை வழங்க ஒரு உத்தியை யோசித்த ஸீயஸ், மோகினியைப் படைக்க முடிவுசெய்தார். புரோமீத்தியாசுக்கு வழங்கப்பட்ட தண்டனை தோல்வியானதால் மோகினியாட்டம் யோசிக்கப்பட்டது. ஹெஃபெஸ்ட்சையும் எத்தீனாவையும் அழைத்து ஒரு அழகான பெண்ணைப் படைத்தார். அந்த அழகியைப் பார்த்த மாத்திரத்தில் தெய்வங்கள் அவளை அடைவதற்குப் போட்டி போட்டுப் பரிசுகளை வழங்குவார்கள். அப்பரிசுகளில் ஒன்று பண்டோராபெட்டி. அந்த அழகியும் பண்டோரா என்று அழைக்கப்பட்டாள்.
மூன்று கவிதைகள்
எங்கள் பார்வைகள்
ஆச்சரியத்தின் பிடியில்
சங்கலித்து,
வினவிக்கொண்டே இருகின்றன,
“நீ எப்படி இங்கே?”
பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா?
கனடாவின் ஒரு பகுதியான யூகான் மாகாணத்தில், ஒரு பழங்குடித் தலைவர் பேட்டி ஒன்றில் அவர்களது மொழி பற்றி சி.பி.சி. க்கு அளித்த பேட்டியில், “எங்கள் மொழியில் பனி சம்பந்தப்பட்ட வார்த்தைகள் கிட்டத்தட்ட 80. ஏனென்றால் எங்களின் மையம் இயற்கை. அதோடு ஒட்டி வாழ்கிறோம். உங்கள் ஆங்கிலத்தில் ‘பணம்’ என்ற விஷயத்துக்கு ஏறக்குறைய 80 வார்தைகள் இருக்கின்றன. ஏனென்றால், உங்கள் மையம் அது!”
காஷ்மீர்
காஷ்மீர் குறித்து இந்திய/உலக பிரக்ஞையில் பதிந்துள்ள பிம்பம் என்பது ரத்தம் சார்ந்தது. அது யாருடைய ரத்தமாகவும் இருக்கலம. அதன் இயற்கை அழகு பெரும்பாலும் யாருக்கும் நினைவிற்கு வருவதில்லை. இந்தப் புகைப்படங்கள் காஷ்மீரின் பல்வேறு அழகான தருணங்களை காட்சிப்படுத்துகிறது.. அதன் பதட்டத்தையும். இந்தியாவின் கிரீடமான காஷ்மீர் தனது அழிவுகளிலிருந்து மீண்டு “காஷ்மீர்”
இயலாமை
என்னுள் உண்டான மாற்றங்களின் நீட்சியான மனிதன் இன்று என்னையே அழிக்கிறான். வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளாக இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அதீதமான வளர்ச்சியாலும், வலிமையாலும், நான்கு கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தின் இருத்தல் இன்று அபாயத்தில் இருக்கிறது.
மகரந்தம்
புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா? இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம்.
நுண் உயிர்களும், மூளையும்
நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்! நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம்! எடை கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ. ஏறத்தாழ ஐநூறு வகையான நுண்ணுயிர் இனங்கள். நாம் இம்மாபெரும் குடியேறிகளுடன் சமரசம் செய்தபடியேதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறோம். இந்த எண்ணிக்கையும், வகைவிரிவும் தான் நம்மைச் சற்று மிரட்டி அவற்றைப் பொருட்படுத்திப் பார்க்க வைக்கிறது. இவற்றுள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியனவும் (Probiotic), சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகளும் (Opportunistic pathogens), இதர நோய்க்கிருமிகளும் உண்டு. பிறக்கும்போது மனதைப் போலவே குடலும் மிகத் தூய்மையாகத்தான் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுகின்றது. பிறந்து இரண்டே வருடங்களில் ஒரு முழு வளர்ச்சி அடைந்த மனிதனின் குடலுக்குள் இருக்கும் அதே அளவுக்கு பல்வேறு இனவகை நுண்ணுயிர்கள் பெருகிவிடுகின்றன. இந்த ஆரம்ப கட்ட குடல் நுண்ணுயிர்ப் பெருக்கம், மூளை வளர்ச்சியிலும் பிற்கால நடத்தையைத் தீர்மானிப்பதிலும் பங்கு வகிக்கலாம். மனிதனில் இன்னும் நேரடியாக ஆராயப்படவில்லை. ஆனால், எலிகளை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது
பெருங்கொள்ளையும், அன்னிய வங்கிக் கணக்குகளும்
ஒரு முறை தன்னிடம் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கொடுப்பதென்று தீர்மானித்து விட்ட இந்த வங்கிகள், இதர நாடுகளின் அரசுகள் இத்தகைய கணக்குகளைப் பற்றிய தகவல் சேகரிக்க முனைந்தால் தருவதாக உறுதி கொடுத்திருக்கின்றன. ஒரு நாடு மட்டும் இந்தக் கணக்குகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது எந்த நாடு என்று யோசியுங்கள்!! ஆம், அது இந்தியாதான்.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 3
பசுவையும் காளையையும் எருமையையும் எருமைக் கடாவையும் மாடு என்றழைக்கும் பருவத்துக்கு வந்து விட்டோம் நாம். இந்த யோக்கியதையில் மாட்டின் சுழிகள் பற்றியும் அவற்றுள் யோகச் சுழிகள் எவை, யோகமற்ற சுழிகள் எவை என்றும் சொன்னால் நமக்கு என்ன விளங்கும்? தாமணிச் சுழி, இரட்டைக் கவம், பாஷிகம் சுழி, கோபுரச் சுழி, நீர்ச் சுழி, ஏறு பூரான், லக்ஷ்மிச் சுழி, பட்டிச் சுழி, வீபூதிச் சுழி, ஏறு நாகம் என்பன நல்ல சுழிகள் என்றும்…
கொலு
பி.சுசீலா பாடிய ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலைப் பாடத் துவங்கினார் ‘நீலு சம்சாரம்’. எனக்கு நன்கு பழக்கமான மோகன ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி பல ராகங்களில் பாடி, ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலை ராகமாலிகையாக்கினார். ஒருமாதிரியாக பாட்டு முடியும் போது, எனக்கு சுத்தமாக ஹார்மோனியம் வாசிக்க மறந்து போயிருந்தது. பெரியப்பாவுக்கு மிருதங்கம்.
இரு புத்தகங்கள்- புலன்வழிப் பாதை: அறிவு, ஆற்றல் மற்றும் அறம் குறித்த விசாரணைகள்
நித்ய கன்னியை உருவகக் கதையாகப் படிப்பதில் தவறில்லை. நாவலில் ஓரிடத்தில் இந்த புதிரான பகுதி வருகிறது, இது கவனிக்கத்தக்கது- இந்தப் பத்திகள் நாவலை பெண்ணுரிமைக்கு ஆதரவான குரலாக மட்டும் இருப்பதிலிருந்து காப்பாற்றி, பிரதியின் இயல்பு குறித்த சில கேள்விகளை எழுப்பி, அதை மிக நவீனமான வாசிப்புகளுக்குக்கும் உட்பட்டதாக மாற்றுகிறது- இந்தப் பத்திகள் ஒரு படைப்பின் ஆக்கத்தில் துவங்கி அது இருவகை தீவிர வாசகர்களாலும் தவறாக வாசிக்கப்பட்டுத் தன் உண்மையான வாசகனை அடைவதை உருவகிக்கின்றன;
அமெரிக்காவின் மனதில் காந்தி
முதலாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படையில் பணிபுரிய இந்தியர்களைத் திரட்டித் தர முன்வருகிறார் காந்தி. அகிம்சையைப் பயன்படுத்தி இந்தப் போரை நிறுத்தவோ அதன் கோரங்களைத் தணிக்கவோ தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று இங்கும் சொல்கிறார். அவர் மிகவும் நோய்வாய்ப்படுகிறார். அவரை மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்ற சுகவீனம் அவரது உளச் சிக்கலால் நேர்ந்தது என்று சிலர் சொல்கிறார்கள்- ஆங்கிலேய ஆட்சியும் அதன் சட்டங்களும் அவருக்குப் பாதுகாப்பளித்தன என்ற நம்பிக்கைக்கும், அகிம்சையில் அவருக்கு இருந்த பிடிப்புக்கும் இடையே எழுந்த முரண்பாடு அவரது உள்ளத்தைப் பிணித்தது என்கிறார்கள் அவர்கள்.
ஜீன் ஷார்ப் எனும் காந்தியவாதி
ஜீன் ஷார்ப் என்ற அமெரிக்கர் உலகெங்கும் இருக்கும் அடக்குமுறை சர்வாதிகார அரசுகளுக்கெதிராக அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னிருத்துபவர். ”From Dictatorship to Democracy” என்ற இவரது பிரபல புத்தகம் அடக்குமுறைக்கெதிரான அற ரீதியான அகிம்சை வழி போராட்டங்களை ஊக்குவிப்பதில் உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. காந்தியின் கருத்துக்களால் “ஜீன் ஷார்ப் எனும் காந்தியவாதி”
பாத்திரங்கள் சுருங்கும்
எழுதாமல் இருப்பதற்கு
முன்னால் வருவது எழுத்து. அங்குதான் இருக்கிறது
சிறிய பெரிய ஏனைய கவிதைகளை ஊட்டி
வளர்த்திருக்கும் ரகசியம்.
ஓராயிரம் கண்கள் கொண்டு
அமெரிக்காவில் ஜெல்லி பெல்லி என ஒரு சிறிய மிட்டாய் வகை உண்டு. வாழைப்பழம் சாப்பிடும்போதெல்லாம் உங்களுக்கு ஒரு சிறுவயது நியாபகம் வந்துபோகுமென்றால் ஜெல்லி பெல்லியும் அந்த நியாபகத்தை மீட்டெடுக்கும். பல சிறந்த இலக்கிய நாவல்களும் ஜெல்லி பெல்லியைப் போன்றவை. அவை வேறொரு வாழ்வனுபவத்தை நமக்குத் தரவல்லவை. ’ஆழி சூழ் உலகு’ ஒரு பெரிய பலாப்பழத்தை உரித்து நம் முன் வைத்ததைப்போல வைக்கப்பட்டுள்ளது. பூடகமில்லாத வெளிப்படையான நேரடியான எழுத்து.
வயிறு
உடலைக் கிடத்திய போதும் லெட்சுமிக்கு அழுகை வரவில்லை. இந்த மாதிரிச் சமயங்களில் யார் அழுகிறார்கள் யார் அழவில்லை என்பதைக் கணக்கெடுக்க ஒரு கூட்டம் இருக்கும். கொஞ்ச நாளைக்குப் பேசுவதற்கு விசயம் வேண்டும் இல்லையா. கல்நெஞ்சம் என்று பட்டம் கொடுக்க. குறிப்பாக மகன்கள் , மருமகள்கள் அழுகிறார்களா என்பதுதான் கவனிக்கப் படும். அவர்களுக்குத்தான் அளந்த துக்கம். லெட்சுமியே அழவில்லை என்பது அவர்களுக்கு புரிந்தும் புரியாத விசயமாகவே இருந்தது.
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 18
வடக்கு ஐரோப்பியப் பகுதிகளில் ‘பாஃவ்’ (Fauves) களின் வண்ண அணுகு முறை வெற்றியடைந்து புதிய உணர்வுகளாகவும், ஆழ்மன உளைச்சல்களாகவும் விரிவடைந்தன. எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) என்று பொதுவாக அறியப் பட்ட அது ஒரே காலகட்டத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் வளரத் தொடங்கியது. அந்தப் படைப்புகளில் வண்ணங்கள் குறியீடுகளாகவும், (Symbolic Colours) இயற்கைக்கு ஒவ்வாத கற்பனை உருவத் தோற்றங்களும் (Imagery) மேலோங்கி இருந்தன.
புண்சட்டை
ஒரு கவ்வியைப்போலச் செயல்பட்டு
மெந்தென்றலில்
உன்னைக் காற்றாட்டினேன்
சுத்தமானபின்
காணாமல் போய்விடுவாய்
மீண்டும் அழற்புண்களுடன்
வந்து நிற்பாய்
பெரு எனும் நாடு
பெரு நாடு குறித்தும், அதன் புகழ்பெற்ற “மச்சு பிச்சு” குறித்தும் நீங்கள் அறிந்திருக்கலாம். அந்நாட்டை பல கோணங்களில் ஆவணப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு இங்கே.