வெக்கையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு
வெறும் வெளிச்சத்தை உலர்த்துகிறது வானம்
ஆசிரியர்: எம்.ராஜா
இரண்டு கவிதைகள் – எம்.ராஜா
இன்னுமென்ன சத்தம்?
ஊரைக்கூட்டி
உரக்கக் கத்தினாலும்
விழவா போகிறது காதுகளில் ?
கவிதைகள் – எம்.ராஜா
குதிரை ஒரு வினோத விலங்கு.
ஆட்டத்தை வென்ற களிப்பில்
சதுரங்கப் பலகையை விட்டு
கனைத்து வெளியேறுகிறேன்.
கவிதைகள்
அவன் பழத்தை கையில் எடுப்பதும்
வாயில் வைத்துக் கடிப்பதுமாக அக் காட்சி
குயிலின் கனவில் தோன்றிற்று
மறு நாள் அதிகாலை
தான் கண்ட கனவை விபரமாக கூறுகிறது குயில்
குயில் கூவுகிறது என்று எல்லோரும் ஏன் சொல்கிறீர்கள்
கவிதைகள்
உதைத்தும் உடையாத
சாளரக் கண்ணாடி மீது
ஊர்ந்து வழிகிறது
ஒரு கறுப்புக் கண்ணீர்த் துளி.
கவிதைகள்
அதிக சக்தி கொண்டவர்
ஆளும் அரசியாக
அரியணைக் குடும்பமே
கட்டிக் காக்கப்பட வேண்டிய
ராஜாதி ராஜவாக.
கவிதைகள்
அவள் கைகளில் இருக்கும் ஐந்து விரல்களையும்
ஒன்றிணைத்து என் கையில் வைக்கிறாள்
அது என் வலக்கரம்
என் வலக்கரத்தில் ஈச்சை மரம் ஒன்று பழங்களுடன்
நிற்பதைக் காணுகின்றேன்
கவிதைகள்
தழல் பரவ பரவ
என்னுடலும் தழலானது
அக்னியின் கோபத்தில்
என்னுடல் கிளர்ந்தபோது
அக்னிக்கும் எனக்குமான
சிறிய இடைவெளியும் அற்றுப்போனது
இரு கவிதைகள்
விரல்களை விரித்து எண்ணியது.
பின், விரல்களை மடித்து மூடியது.
மீண்டும்,
வெயிலில் நின்று
எறும்புகள் கோடாக
நகர்வதை பார்க்கத்
தொடங்கியது.
நான்கு கவிதைகள்
உதடு துடிக்க
உற்றுப் பார்க்கின்றன
திறக்கப்படாத புத்தகங்கள்.
மூடிய புத்தகங்களின் மௌனம்
காந்தப்புலமாய் கவர்ந்திழுக்கிறது.
மரம் மெல்ல பறக்கும்
ஒரு
அற்புதத்துளி போதும்
வேர்களை விடுவிக்க
பெருங்கருணைமுன்
ஆயிரங்கரமுயர்த்தி
மன்றாடும் மரம்.
இரண்டு குளங்கள் மற்றும் சில கவிதைகள்
பிரக்ஞையற்ற பொழுதுகளில்
பறந்து போகிறது
ஒரு சொல்
அல்லது
ஒரு செய்கை.
சிறகால் வருடலாம்
நகங்கொண்டும் கீறலாமெனில்
கூடுகிறது கவனம்
பிரசவித்த பொறுப்பிற்காக.
காற்றிசைச்சரம்
இப்போதெல்லாம்
உச்சுக்கொட்டி கொஞ்சும் கடிகாரத்திற்கும்
சிணுங்கும் காற்றிசைச்சரத்திற்குமான
சில்மிஷ சம்பாஷணைகளைக் கேட்காமல்
உறக்கம் வருவதில்லை.