கவிதைகள்

அவன் பழத்தை கையில் எடுப்பதும்
வாயில் வைத்துக் கடிப்பதுமாக அக் காட்சி
குயிலின் கனவில் தோன்றிற்று
மறு நாள் அதிகாலை
தான் கண்ட கனவை விபரமாக கூறுகிறது குயில்
குயில் கூவுகிறது என்று எல்லோரும் ஏன் சொல்கிறீர்கள்

கவிதைகள்

அவள் கைகளில் இருக்கும் ஐந்து விரல்களையும்
ஒன்றிணைத்து என் கையில் வைக்கிறாள்
அது என் வலக்கரம்
என் வலக்கரத்தில் ஈச்சை மரம் ஒன்று பழங்களுடன்
நிற்பதைக் காணுகின்றேன்

இரண்டு குளங்கள் மற்றும் சில கவிதைகள்

பிரக்ஞையற்ற பொழுதுகளில்
பறந்து போகிறது
ஒரு சொல்
அல்லது
ஒரு செய்கை.
சிறகால் வருடலாம்
நகங்கொண்டும் கீறலாமெனில்
கூடுகிறது கவனம்
பிரசவித்த பொறுப்பிற்காக.

காற்றிசைச்சரம்

இப்போதெல்லாம்
உச்சுக்கொட்டி கொஞ்சும் கடிகாரத்திற்கும்
சிணுங்கும் காற்றிசைச்சரத்திற்குமான
சில்மிஷ சம்பாஷணைகளைக் கேட்காமல்
உறக்கம் வருவதில்லை.