தணிக்கையாளர்கள்

நாட்கள் செல்லச் செல்ல அவன் அந்தப் பணியை மிகவும் விருப்பத்துடன் செய்தான். அவன் இங்கு வந்த காரணமே தற்போது அவனுக்கு முற்றிலும் மறந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கடிதங்களின் பலவரிகளை அழிக்க வேண்டியிருந்தது. பல கடிதங்களை குப்பைக்கூடையிலும் சேர்த்தான். அரசாங்கத்திற்கு ”எதிரான” மக்களின் சூக்குமுமான வாசகங்களை கண்டு பயந்த நாட்களும் உண்டு. தற்போதெல்லாம் அவனால் “விலைவாசி உயர்ந்துவிட்டது”, “வானம் மந்தமாக உள்ளது” போன்ற வரிகளில் கூட அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் புதைந்திருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.

அறிவாற்றல் மரபுப் பண்பா?

நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா இல்லை சமூக சூழ்நிலையால் அமைவதா?”

அன்னாவும், அருணாவும்

இன்றைய கொந்தளிப்பான பொது மனநிலையில், அன்னாவின் தரப்புக்கு மாற்றுத் தரப்பு என்றாலே, “நீ யார்.. உனக்கு என்ன தகுதி” என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அதுவும் சோனியா காந்தியின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என்னும் போது, காங்கிரஸின் கையாள் என்பது போலத் தோன்றி விடுகிறது. ஊடகங்கள் பலவற்றிலும், அருணா அவ்வாறே சித்தரிக்கப் படுகிறார். இன்று அன்னா வெற்றி பெற்று, எல்லோரும் ஆசுவாசம் கொண்டுள்ள நிலையில், நாம் அருணா ராயைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது அவசியம்.

மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு

மீனாட்சி, பூரணி, திரிசடை போன்ற பெண் படைப்பாளிகள் தொண்ணூறுளுக்கு முன்பே நவீன கவிதைப் படைப்புகளில் பங்களிப்பு செய்திருந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின் வந்த பெண் படைப்பாளிகளால் தான் பெண்ணிய சிந்தனைகள் வளரத் தொடங்கியது. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் குறைந்த அளவே வெளிவந்தாலும் பரவலான சலசலப்பிற்கும் கவனத்திற்கும் உள்ளாயின. அவைகள் பெண்ணிய உரிமையைப் பெற்றுத் தரும் அடையாளக் குரலாக ஒலித்தன. ஒலித்த கவிக்குயில்களில் மாலதி மைத்ரி குறிப்பிடத்தக்க முக்கியமான கவிஞர்.

ஊழல் ஒழிப்பு : சிங்கப்பூர் குறித்து சில சிந்தனைகள்

இன்று சிங்கப்பூரில் லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. அப்படி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்-கணிசமான அபராதம் விதிக்கப்படுவதோடல்லாமல், நீண்ட காலம் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம், ஏன், முறைகேடாகச் சேர்த்த சொத்து முழுமையும் பறிமுதலும் செய்யப்படலாம்- முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பதாக ஒருவர் கை விரித்தால், அதற்கு பதிலாக அவருக்குச்சிறை தண்டனை நீடிக்கப்படும்! அவரைச் சார்ந்தவருடைய வங்கி மற்றும் அனைத்து கணக்குகளையும் கூட அரசு விசாரிக்கலாம்.

இடைமட்ட மேலாளுகைக்கு நிலையான வியூகங்கள்

அந்த அறையைவிட்டு வெளியேறியபோது ஒரு கைப்பிடி அந்த அகன்ற இலைகளைப் பிடுங்கிக்கொண்டு என் அலுவலகத்திற்கு மீண்டும் வந்தேன். என் நாவால் இலையின் தடித்த பகுதியிலிருந்து ஒரு நரம்பைக் கண்டுபிடித்தேன். அவ்வளவு மோசமில்லை. பசுஞ்சுவையோடிருந்தது. அது உலரும்வரை நன்றாக உறிஞ்சியெடுத்துவிட்டு சக்கையைக் குப்பைக்கூடையில் எறிந்தேன்.

தர்ப்பை

குழாயைத் திறந்து இரு கைகளையும் சேர்த்து பரபரவெனத் தேய்த்தான். எவ்வளவு முறைத் தேய்த்தும் கையில் இருந்த சிகப்பு தீற்றல் போகவில்லை. தர்ப்பை போல வேண்டிய நேரத்தில் எடுத்து மாட்டி வேண்டாதபோது தூக்கி எறியும்படி எல்லாமே இருந்தால் எவ்வளவு நன்னா இருக்கும் என நினைத்துக்கொண்டான்.

அம்மாயி

அம்மாயிக்கு பால் கறக்கும் நேரம் வந்தவுடன் சோகம் எல்லாம் பறந்து விடும். “யார்ளா அது.. போ.. போ நாம் பால் பீச்சோணும்” என்று துரத்தி விட்டு, தன் பொழைப்பைப் பார்க்கப் போய்விடும். சிக்கனத்தின் சின்னம். வருடத்துக்கு 3-4 வெள்ளைச் சேலைகள் மட்டும் தான் அம்மாயியின் அலங்காரம். பால் காசை மிச்சம் பிடித்து, சீட்டுப் போட்டு, ஓட்டு வீடு கட்டி, புள்ளைக்கும், பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைத்தது.

தடைகளைக் கடந்து கணித மேதையான ஸோபி ஜெர்மைன்

ஜெர்மைனின் தந்தை ஒரு வியாபாரி மற்றும் அரசியல்வாதியாக இருந்தார். அவருக்கும் தன் பெண் கணிதம் படிப்பதால் அவளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற எண்ணம் இருந்தது. அதனால் ஜெர்மைன் கணிதம் படிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். அதனால் அவருக்கு இரவில் படிப்பதற்கு முடியாமல் மெழுகுவர்த்தி மற்றும் குளிராமல் இருக்க தேவையான வெப்பம் போன்றவைகள் கொடுக்காமல் பெற்றோர்கள் தடை செய்தார்கள். அப்படியிருந்தும் ஜெர்மைன் இரவில் பெற்றோர்கள் உறங்கிய உடன் திருடிய மெழுவர்த்தியை உபயோகித்து தன் படிப்பைத் தொடர்ந்தார்.

மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம்

ஒரு நல்ல நாளன்று நான் வாய்ப்பாட்டையும் வீணையையும் கிருஷ்ணசாமி நாயுடுவிடமும், மிருதங்கத்தை பீதாம்பர தேசாயிடமும் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். இப்போதெல்லாம் ஒருவரே பல துறைகளில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏதோ ஒன்றில் தேர்ச்சியை அடைய வேண்டுமென்றாலும் மற்ற அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்று நம்பினோம். நான் வீணையையும் வாய்ப்பாட்டையும் மிருதங்கத்துக்காக விட்டுவிட்டேன்”.

மகரந்தம்

இணையப் பயன்பாட்டாளர்கள் “cookie” குறித்து அறிந்திருக்கலாம். ஒரு தளத்தை முதன் முறை பார்த்துவிட்டு, சில நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ அதே தளத்திற்கு செல்லும்போது உங்களை வரவேற்கும் வாசகம் ஒளிர்கிறதா? இது தான் குக்கீயின் பணி. குக்கீகளை இணைய உலாவிகள் மூலம் தடுக்கலாம். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். சில தளங்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றின் மூலம் இணைய உலாவிகளால் கூட ஒன்றும் செய்யமுடியாத குக்கீக்களை உங்கள் கணிணியில் விதைத்துவிடுகின்றன.

அப்ரஞ்ஜி

பெண் பிரசவத்தின்போது. ‘அப்ரஞ்ஜி… பச்ச உடம்பு, பொண்ண பாத்துக்க’ என்பார்கள் இரண்டுநாள் வீட்டோடு இருந்து முதுகு, கால், தொடையில் எண்ணைவிட்டு நீவி பச்ச உடம்பு பெண்ணை சுகப்படுத்துவது அவளுக்கு கைவந்த கலை. குழந்தை பிறந்ததும் கவனித்தது போக பதினோராம் நாளோ அல்லது பதிமூன்றாம் நாளிலோ அரிவுரிஅம்மன் பூசை இருக்கும். வீட்டின் கிழக்கு பார்த்த சுவரில் கண்மையால் நான்கு குமிழுடைய கோலம்போட்டு இரண்டு பக்கம் பொம்மைகள் வரைந்து வைத்து – குழந்தை அதைபார்த்து சிரிக்கும் என்பாள். – அதற்கு ஐந்து வகை காய்கறியுடன் பூசை செய்வாள் அப்ரஞ்ஜி.

ஜெயந்தி சங்கரின் நெடுங்கதைகள்…..

ஜெயந்தியின் நாவல்களில் உரையாடல்களின் பங்களிப்பும் முக்கியமானது. பல நேரங்களில் வெகு எளிதாக கதையை முன் நகர்த்த அவை உதவுகின்றன. அக்கறையோடு செவிமடுத்தால் சொற்களின் தொனி தெளிவாக, இயல்பாக கேட்கின்றன. வாசிக்கிறவர்களுக்கு கதைக்கான களமெது, உரையாடுபவர்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள், அவர்களது பின்புலமென்ன என்பதை துல்லியமாக உணர்த்தும் வசனங்கள் நாவல்கள் நெடுக வருகின்றன. குரல்களூடாக, சொற்களைக்கொண்டு பேசுவது ரம்யாவா சந்தியாவா; குமாரா செந்திலா; அவுன்ஸ் மாமாவா அத்தையாவென சட்டென்று சொல்லிவிடலாம்.

தேசம், காலம், சிந்தனை

கீழே இருக்கும் இந்த ஒளிப்படம் மனிதர்கள் தங்கள் வாழ்வு மொத்தத்தையும் மூன்று காலநிலைகளில் கழிப்பதாக சொல்கிறது. கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம். உண்மை தான். ஆனால் ஒவ்வொரு தேசமும் கூட இப்படித்தான செயல்படுவதாக சொல்கிறது. இதன் தாக்கம் அந்தந்த மக்களின் சிந்தனை, மொழி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை கூட பாதிக்கிறது “தேசம், காலம், சிந்தனை”

இசை, கேளிக்கை, வாழ்க்கை

கடந்த சில வாரங்களாக உலகமெங்கும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்களின் கொண்டாட்டங்களை வண்ண மயமாக காட்சிப்படுத்திய புகைப்படங்கள் இங்கே.

தலை வெட்டப்பட்ட கோழி

அந்தச் சிறுமிக்கு இப்போது விரல் நுனியை ஊன்றி தன் உடலை மேலே எழுப்ப வசதியான ஒரு இடம் கிடைத்தது. அந்த இடத்தில் தன் விரல் நுனியை நன்கு அழுத்திக்கொண்டாள். தன் உடலை மேலே உயர்த்த முயன்றாள். ஆனால் அவள் காலை யாரோ மிக இறுக்கமாக பிடித்திருப்பதை உணர்ந்தாள். கீழே பார்த்தாள். அந்த எட்டு கண்களும் அவளுக்கு பெரும் அச்சத்தை அளித்தன.

கண்ணீரால் காத்த பயிர்

இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் பங்கேற்க காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் பிரிட்டனிற்கு போர் நேரத்தில் இந்திய உள்நாட்டு எழுச்சியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. 1940-இல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமமந்திரியானதைத் தொடர்ந்து பயிற்சியும் திறமையும் மிக்க இந்திய ராணுவத்தினரை இந்தியாவிலிருந்து அகற்றுவது காலனி அரசுக்கு முக்கியக் கடமையானது. உள்நாட்டில் அவர்களில் ஒரு பகுதியினர் தமக்கு எதிராகத்திரும்பினால் கூட இந்தியாவைத் தக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உலகப் போரின் தோல்வியில் இருந்து இங்கிலாந்தே தப்ப முடியாது என்பதும் சர்ச்சிலுக்கு தெரிந்திருந்தது. ஏனெனில் இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான மணற்சாக்கு மூட்டைகளிலிருந்து, அரிசி, கோதுமை, உணவுப்பொருட்கள், ராணுவத் தளவாடங்கள் என்று அத்தனை போர்க்காலப்பொருட்களுக்குமான உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான ஆதார கேந்திரமாக இந்தியா விளங்கியது.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 16

இக்கலைஞர்கள் உலகை ஒரு பயன்பாட்டுப் பொருளாகவே நோக்கினர். அதிலிருந்து தமக்குத் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமது படைப்புகளில் பொருத்தி ஓவியங்கள் தீட்டினர். வாழ்க்கை, கலை இரண்டையும் அருகருகே கொணரும் முயற்சிதான் அது. தங்களுக்குள் இருக்கும் தாம் சார்ந்த சிந்தனைகளை மீறி ‘ஒன்றிணைந்த சிந்தனை’ என்னும் குறிக்கோளை முன் நிறுத்தி வேற்றுமைகளிடையே ஒற்றுமை என்பதாக இயங்கினர். கலை விமர்சகர் ‘பியெர் ரெஸ்டனி’ இதை, “விளம்பரம், தொழில், நகரவாழ்க்கை கியவற்றின் கவிதுவம் கூடிய மீள் சுழற்சி” கூறினார்.

செந்தாமரைப் புரட்சி

பிரிட்டிஷ் அரசாங்காத்திற்கு எதிராக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டம் குறித்த நூல் “Operation Red Lotus”. இந்தப் போரில் ஈடுபட்ட வீரர்கள் ஒரு சிவப்பு தாமரையுடன் இந்தப் போரில் பங்கேற்றனர். அதனால் தான் புத்தகத்திற்கு இந்தப் பெயர். இந்தப் புத்தகத்தின் ஆசிரிய பராக் டோபே, இந்தப் போரில் முக்கிய பங்காற்றிய தாத்தியா டோபே-வின்(Tatya Tope) வம்சாவளியில் பிறந்தவர். தன் குடும்பத் தலைவரான் பிரபாகர் தாபேரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் இதுவரை வெளியாகாத மற்றும் மறக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த நூலை எழுதியுள்ளார்.

ஆயிரம் தெய்வங்கள் – 12

உலக வரலாற்றில் நதிப்புற நாகரிகங்கள் – எகிப்து – மெசப்பட்டோமியா – சிந்து போன்றவை – செல்வாக்கிழந்த பின்னர் மத்திய தரைக்கடல் தீவுகளில் புதிய நாகரிகங்கள் வேர்விட்டன. இவற்றில் கிரேக்க – ரோம நாகரிகங்கள் படைத்த தெய்வங்கள் பற்பல. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க நாகரிகம் “ஜனநாயகம்” என்ற கருத்தை வழங்கயதைப் போல் ரோமின் வழங்கல், குடியரசு. எனினும் கிரேக்கர்களின் வழங்கலில் கலை, தத்துவம், விஞ்ஞானம் போன்ற பல்கலைக்கழகப் படிப்புகள் சிறப்பானவை. தென்கிழக்கு ஐரோப்பாவில் மத்திய தரைக்கடலில் சங்கமமாகும் ஒரு குறுகிய குறிஞ்சி நிலப்பகுதியில் வளர்ந்த கிரேக்கக் கலாச்சாரமே மேலை நாடுகளின் கலாச்சாரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

மேலாளன் என்பான்…

தன் மேலாளனுக்கு வேலை தெரியாது என்று புறம் கூறுவர் சிலர். மேலாளனைவிட தாம் அதிகத் திறன் பெற்றவர் என்று பீற்றிக் கொள்வர் சிலர். சச்சின் டெண்டுல்கர் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுள் ஒருவர். அவரளவுக்கு, பேட்டிங் திறனும், ஸ்டைலும் அற்றவர் தோனி. ஆனால், தோனிக்கு, சச்சின் டெண்டுல்கரோடு, இன்னும் ஒன்பது பேரைச் சேர்த்து, அதை ஒரு வெல்லும் அணியாக மாற்றும் திறன் உண்டு என்பதை நாம் யாவரும் அறிவோம். சச்சினின் செயல் திறனை, அணிக்குத் தேவையான பயன் திறனாக மாற்றி, இலக்கை எட்டுபவர் தோனி.

தெற்கு சூடான்

நீண்ட போராட்டத்திற்கு பிறகு தெற்கு சூடான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறது. தங்களுக்கென ஒரு நாட்டை பெற்ற அந்த மக்களின் மகிழ்ச்சி தருணங்கள் இங்கே புகைப்பட ஆவணமாய் :

அறிவியலும் மதமும்

இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் மோதல் பல நூற்றாண்டு பாரம்பரியம் வாய்ந்தது. ஸ்டெம் செல்(stem-cell) ஆராய்ச்சி குறித்து மேற்குலகில் மதவாதிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கீழே இருக்கும் ஒளிப்படத்தில் மதவாதிகளின் வாதத்தை மறுத்துப் பேசுகிறார் சாம் ஹாரிஸ். இவர் பிரபல எழுத்தாளர். சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர். “அறிவியலும் மதமும்”

துப்பாக்கி நண்பர்கள்

தொட்டிக்குள் இறங்கிப் பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்து இறங்கியபோது காலில் பாம்பு ஒன்று விரல் இடுக்கில் மாட்டிக்கொள்ள, பதறி தொட்டிக்குள் விழுந்தேன். அது பாம்பு இல்லை, வெறும் தோல் பெல்ட் என்ற அத்வைத ஞானம் பெற்றபிறகு உயிர் வந்தது. அந்த பெல்டை இழுத்துப் பார்த்தபோது எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. பெல்ட்டின் மறு முனையில் துப்பாக்கி ஒன்று உறையுடன் இருந்தது

செயற்கை கிராமங்கள்

பெரும்பணக்காரர்கள் அந்நியர்களையும் திருடர்களையும் உள்ளே விடாமல் தமது வளாகத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவரும் கிராதிக் கதவும், வேலியும் போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வேலிபோட்ட கிராமங்களோ இடம்பெயர்ந்து உழைக்கும் வர்க்கத்தை ‘உள்ளே’ வைக்கும் வழி. இது மனித உரிமைக்கு எதிரானதென்ற கருத்துதான் பரவலாக நிலவிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு “பூட்டி வைக்கப்படும் கிராமங்கள் எல்லோருக்குமே நன்மை செய்யும்”, என்றொரு பதாகை நகரில் ஆங்காகே ஒட்டப்பட்டிருந்தது.

மின் புத்தகப் புழுக்கள்

விருந்தினர்கள் வீட்டிற்கு வரும் பொழுது, சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றை மேற்கோள் காட்டி அப்படியே தன்னுடைய புத்தக அறைக்கு சென்று அந்த புத்தகத்தில் சரியாக எந்த பக்கத்தில் அப்படி சொல்லியிருக்கிறது என்று சுட்டிக் காட்டுவதன் பெருமையே/சுகமே தனி. சிறிய மின் புத்தகக் கருவியை இயக்கி, அதில் மிக எளிதில் புத்தகங்களில் தேடி இதைக் காட்டும் பொழுது, ஏதோ எலக்ட்ரானிக் தில்லாலங்கடி செய்வது போல பிசு பிசுத்து விடுகிறது!

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 15

எந்தக் கலையும் இரு பகுதிகளை உள்ளடக்கியது. ஒன்று, இணைத்தல் அல்லது கூட்டுதல்; மற்றது பிரித்தல் அல்லது கழித்தல். இதில் இணைந்த கலைஞர்கள் படைப்பை எளிமைப் படுத்துதல் என்னும் வகையில் இசை, ஓவியம், சிற்பம் போன்றவற்றில் புதிய உத்திகளைப் புகுத்தி நவீனப் படைப்பு களை அறிமுகப்படுத்தினர். கவிதையில் இடைவெளிகளைப் புகுத்தி வரிவடிவங் களை நீக்கி புதிய வடிவம் கொண்ட கவிதை படைப்பது என்று இப்பாணி வளர்ந்தது. அக்கவிதைகள் குழுவாகப் பாடப்பட்டன (Choral Groups). பின்னர், இப்படைப்புதளம் திரைப்படத் துறையிலும் நுழைந்தது.

கண்ணாடி வீடுகள்

சமூகத்தில் மாற்று அரசியலின் குரலாகவும், தார்மீகத்தின் அதிபதியாகவும் தன்னை முன்னிருத்தும் இந்திய ஊடகங்களுக்கு உண்மையிலேயே அத்தகைய ஒரு இடம் உண்டா என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

இரு புத்தகங்கள்

பொதுவாக தியானத்துக்கு கற்பனையைத் தடையாகச் சொல்வார்கள். ஆனால் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் விசாரத்துக்குரிய நெய்யொழுக்கு காணப்படுகிறது- அவரது கதைகளை நெறிப்படுத்தப்பட்ட மனதின் கட்டற்ற கற்பனை என்று சொல்லலாம்: வாழ்விலிருந்து கிளைத்தாலும் வாசிப்பில் கிளைத்தாலும் அசோகமித்திரனின் கற்பனை வெகு விரைவிலேயே அவரது சிந்தனைக்கு இயல்பான தனியொரு வண்ணம் பெற்று வளர்கின்றன: அவரது கற்பனை எப்போதும் இருப்பின் ஆதாரங்களை தொடர்ந்து விசாரித்தவண்ணம் இருக்கின்றது.

வாசகர் மறுவினை

யானைகளுடன் பேசுபவன் நூல் அறிமுகக்கட்டுரையைப் படித்தேன். ஒரு புனைகதையைப் படிக்கும்போது கிடைக்கக்கூடிய மன எழுச்சியை இக்கட்டுரை வழங்கியது. அருணகிரி விவரிக்கும் துண்டுதுண்டான சம்பவங்கள் புத்ததகத்தைப் படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

மகரந்தம்

நார்வேயில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பும் துப்பாக்கி சூடும் பலரது உயிரை குடித்துள்ளது. இந்த நிகழ்த்திய அந்த மூடனின் 1500 பக்கங்களைக் கொண்டு கையேடு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த கையேட்டின் ஒரு சில பகுதிகள் கீழே இருக்கும் பக்கத்தில் படிக்கக் கிடைக்கின்றன. மத அடிப்படைவாதம் நிரம்பிய, சக மனிதனை நேசிக்கத் தெரியாத ஒரு முட்டாளின் உளறல்கள் என்று இதைப் படிப்பவர்களால் நிச்சயம் சொல்லிவிட முடியும்.

ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு

ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிக்கைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிக்கைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப் பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது.

தஞ்சம் புகுதலின் சுமை

ரத்தம் தோய்ந்த பஞ்சாபி மற்றும் வங்காளப் பிரிவினை பற்றி ஏராளமான ஆய்வுகள் மற்றும் புதினங்கள் எழுதப்பட்டுவிட்ட நிலையில், அமைதியாக, எந்த வன்முறையும் இல்லாமல் நிகழ்ந்த சிந்திக்களின் குடிபெயர்வு குறித்து இந்திய வரலாற்றில் ஒரு வெற்றிடம் இருக்கிறது என்ற குறையைப் போக்கும் வகையில் தன் புத்தகத்தை முன்வைக்கிறார் ரிடா கோதாரி.

இரு மணிகள்

மிருதங்க மேதைகளான மணி ஐயர், பழனி இருவரும் சமகாலத்தில் கோலோச்சியவர்கள் என்ற போதும், அவர்கள் உயரத்தை அடைந்த விதம் வேறாக அமைந்தது. அவர்கள் கடந்து வந்த பாதையே அவர்களின் ஆளுமையையும், வாசிப்பு அணுகுமுறையையும் பாதித்தது. இடது கைப்பழக்கம் கொண்டதாலும், ஆரம்ப நாட்களில் கணக்கு வழக்குகளில் அதிகம் ஈடுபட்டதாலும் அதிக கச்சேரிகள் வாய்ப்புகள் இன்றி இருந்தார் பழனி. அவரது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பாடுபவருக்கு அணுசரணையாய் வாசிக்க ஆரம்பித்த உடன் அவருக்கு கச்சேரி வாய்ப்புகள் பெருகின. பழனியின் தன்மையான பேச்சு அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியதென்றால். மணி ஐயரின் மௌனம் அவர் மதிப்பை உயர்த்திக் காட்டியது.

செந்தமிழ்க் காப்பியங்கள்

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள். அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும்.

‘கோவில் பொக்கிஷங்கள் சந்தைப் பொருட்கள் அல்ல’

இவற்றை வெறும் “சொத்து”க்கள் என்று மட்டுமே பார்க்க முடியாது. இவை நமது கலைப் பொக்கிஷங்கள். கலைப் பொக்கிஷங்கள் சந்தையில் விற்கப்படும் பொருள்கள்(commodity) அல்ல. உதாரணமாக, தஞ்சை பெரிய கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலில் இருக்கும் ஓவியங்களை வெறும் “சொத்து”க்கள் என்று நீங்கள் கூறமுடியுமா? சோழர் கால சிலைகளை வெறும் “சொத்து” என்று வகைப்படுத்திவிட முடியுமா? ”இவற்றையெல்லாம் அரசாங்கம் கைப்பற்றி அதை சந்தையில் விற்று விட வேண்டும். அந்த பணத்தைக் கொண்டு மக்கள் நலப்பணித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்ற சொல்லத் துணிவது எத்தகைய முட்டாள்த்தனம்!

மத்தகங்கள் வீழ்ந்த காலம்!

நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் விளம்பரப் படுத்தி, சிகரெட் வியாபாரத்தில் கொண்டிருந்த வலிமையை உபயோகித்து, பொருளை எளிதாகச் சந்தைப் படுத்தவும் செய்தது. கார்ட் வீல் பல்டி அடித்து வந்து அன்னையைத் தழுவிக்கொள்ளும் குட்டிப் பையன் விளம்பரம் அன்று மிகப் பிரபலம். 90களின் இறுதியில், ஐ.டிஸி, எண்ணெய்த் தொழிலை, கான் அக்ரா என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றது. ஏன்?

ஆயிரம் தெய்வங்கள் -11

கி.மு. 1000-1100 காலகட்டத்தில் செமிட்டிக் மொழி சிரியாவில் லிபி- அகரவரிசை எழுத்துகளாயிருந்தன. கி.பி. 1929-இல் பிரஞ்சுக்கார அகழ்வராய்ச்சிக்குழு ரஸ்வும்ரா என்ற இடத்தில் தோண்டியபோது புராதன உகாரித் நகரைக் கண்டுபிடித்தனர்.

இந்த அகழ்வாராய்ச்சியின் சிறப்பு எதுவெனில் அங்கு கண்டெடுக்கப்பட்ட கியூனிபார்ம் கல்வெட்டுகள் மூலம் செமிட்டிக் அகரவரிசை புலனாவதுடன் செமிட்டிக் தெய்வீக உறவு பற்றிய புதிர்களுக்கு விளக்கம் கிடைத்தது

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 14

பெண்ணியவாதிகள் ஸர்ரியலிஸ இயக்கத்தைப் பற்றி விமர்சிக்கையில் அடிப்படையில் அது ஒரு ஆணாதிக்க சிந்தனை இழை ஓடிய இயக்கம் என்னும் எதிர் கருத்தை முன் வைத்தனர். ஸர்ரியலிஸ குழு உறுப்பினர்களும் மற்ற எல்லா ஆண்களையும் போலவே பெண்ணைத் தேவையற்றுப் போற்றுவதும், பெண்களை உடல்ரீதியாக அணுகுவதும், பெண் எப்போதும் ஆணின் காம உணர்வுடன் கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஜீவன் என்பதாகத்தான் இயங்கினர், என்று கடுமையாகச் சாடியபோதிலும் இயக்கத்தில் சில பெண்கவிஞர்களும் பெண் ஓவியர்களும் இருக்கத்தான் செய்தனர்.

பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு புத்தகங்கள்

தான் முன்னரே தீர்மானித்துக்கொண்ட தமிழ் இனத்தின், சரித்திரத்தின், கலாச்சாரத்தின் உன்னதங்களைத் திரும்பச் சொல்லும் சந்தர்ப்பங்களை அடுக்கிச் சொல்வதும் அல்ல. ஒரு சிந்திக்கும் மனது தன் பார்வையில் பட்டதையெல்லாம் பற்றி தீவிரமாக சிந்திக்கிறது. வெளித்தோற்றத்தில் முரண்பட்ட மேற்கத்திய கலாச்சார அம்சங்களும் கீழைத் தேய கலாச்சார பண்புகளும் உடன் வாழ்வதன் அடியில் என்ன தான் இருக்கிறது இந்த அந்நிய மண்ணின் சமூக, கலாச்சார சூழலில். என்று ஒரு சிந்தனை அடிக்கடி தோன்றுகிறது. இந்தப் பயண வரலாறு முழுதுமே தி. ஜானகிராமனின் மனதில் நிகழும் ஒரு மௌன சம்பாஷணை.

ஸ்டீவ் மக்கரி

ஸ்டீவ் மக்கரி உலகமெங்கும் புகழப்படும் புகைப்படக் கலைஞர். மனிதர்கள், அவர்களது அவலங்கள், தினசரி நடப்புகளை உள்ளடக்கியது அவரது கலை. அவரது ”ஆப்கன் சிறுமி”(Afghan Girl) எனும் புகைப்படம் உலகை உலுக்கிய ஒன்று. அவரது இன்ன பிற சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு இங்கே.

உயிரின் நெடுஞ்சாலை

உயிரின் தோற்றம் குறித்த ஒரு காட்சிப் படம் கீழே. பல பகுதிகளை கொண்ட இந்தப் மொத்தப் படத்தின் முதல் பகுதி கடந்த 4 பில்லியன் வருடங்களை குறித்து மட்டும் எளிமையாக பேசுகிறது. மற்றப் பாகங்களுக்கு இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள்.

அன்புள்ள முதல்வருக்கு..

தமிழகத்தின் பாசன நீர்த் தேவையில் 60 சதத்திற்கும் மேலாக நெல்லுக்கு உபயோகப் படுகிறது. திருந்திய நெற்சாகுபடி என்னும் புது முறையில், ஒரு குத்துக்கு ஒரு நாற்று உபயோகிப்பதும், நீர் நிறுத்திப் பாசனம் செய்யாமல், காய விட்டு, மற்ற பயிர்களைப் போல் நீர் பாய்ச்சுவதும் நல்லதென்று சொல்கிறார்கள். இதனால், தண்ணீர்த்தேவை 50 சதம் குறைகிறதென்றும், மகசூல் 25-40 சதம் அதிகரிக்கிறதென்றும் சொல்கிறார்கள். ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் முறை இது – உபரி நீரை அதிக நிலத்தில் பாசனம் செய்ய உபயோகிக்கலாம்.

தாய்ப்பால் சுரக்கும் பசுக்கள்

மாற்று மரபணு விலங்குகளை(transgenic) உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் சில நாட்களுக்கு முன் இதற்கு முன்பு எட்டப்படாத புதிய உயரத்தை அடைந்திருக்கிறார்கள். தங்கள் ஆராய்ச்சியின் மூலம் தாய்ப்பால் சுரக்கும் கன்றுகளை உருவாக்கியுள்ளனர். சீன விஞ்ஞானிகள் இதை முதலில் சாத்தியப்படுத்தினர். அவர்களைத் தொடர்ந்து அர்ஜென்டேனிய விஞ்ஞானிகள் அதே முயற்சியை அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளனர்.

யானைகளுடன் பேசுபவன்

யானைகளின் அதிசய தொலை தொடர்பு திறமையை அடிக்கோடிடும் இன்னொரு சம்பவம் சூடானில் நடந்திருக்கிறது. வடக்கு சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இருபது வருடங்களாக உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் யானைகள் தந்தக்களுக்காகவும் மாமிசத்திற்காகவும் கொடூரமாக வேட்டையாடப்படுகின்றன. இதன் விளைவாக பெரும் திரளாக யானைகள் சூடானிலிருந்து பல நூறு மைல் தொலைவிலுள்ள கென்யாவிற்கு இடம் பெயர்கின்றன. ஆனால் போர் நிறுத்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே அங்கிருந்து கிளம்பி மீண்டும் சூடானுக்கு வந்து விடுகின்றன. சூடானில் அமைதி திரும்பியது என்பது எப்படியோ அந்த ஒட்டுமொத்த யானைக்கூட்டத்துக்கும் தெரிந்து விட்டிருக்கிறது!