நகரம் – மூன்று கவிதைகள்

இயற்கையின் பிடியை விடு.
சென்றுவரும் திசையறியா
சக்கரத்தை பற்று.
தளர்ந்த ஒரு நாள், இங்கிருந்து
புல்தேடி பயணம் போவோம்,
படுத்துருண்டு புகைப்படம் எடுத்து,
இருண்ட நம் அறைகளில்
எப்போதும் பார்த்துக்கிடப்போம்
பச்சையை.