வார்ட் 34பி

அவளது பார்வையில் அதுவரை இருந்த வெறுமை உயிர் பெற்று சற்றே சலனங்காட்டியது. பதிலாக ஏதோ சொல்ல வருகிறாளோ என்று நினைக்கும் அளவிற்கு ஒரேயொரு கணம் கண்களில் லேசான ஈரமின்னல் தெறித்து மங்கியது. திறந்த வாயைச் சட்டென்று மூடிக் கொண்டாள். கூர்ந்த என் பார்வையைச் சந்திக்க விருப்பம் இல்லாதவளாகக் கண்களைத் தாழ்த்திக் கொண்டவளின் வாயோரம் லேசான துடிப்பு. எதையோ சொல்லவரும் அசைவாக இல்லாமல் அழுகைக்கு முன்பானதாக இருந்தது. வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்வது தெரிந்தது. “பேச ஆரம்பிச்சா அழுக வரும் அதான்,..”, என்றவள் குரலில் மயில் அகவுவது போன்றதொரு பிசிறு தட்டியது.

சிற்றூரும் தளபதியும் – சென் ஷிஸு

அடுத்த இரண்டு நாட்களுக்கு மரத்தடியில் தளபதியைக் காணோம். ஊர்மக்கள் அவரைப் பற்றி விதவிதமாக வம்புபேச ஆரம்பித்து விட்டனர். அவருடைய ஆரோக்கியம் சரியில்லை என்றனர். அவரது நோய் முற்றியிருந்தது. மருத்துவமனையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அடுத்த நகரிலிருந்த இராணுவப் பொதுமருத்துவமனைக்குப் போக அளிக்கப்பட்ட அரசாங்க ஜீப் சவாரி மறுக்கப் பட்டிருந்தது. ஓர் இரவில், கண்ணியம் மின்னிய சில இளைஞர்கள் வந்தனர். முன்னால் இரண்டு கூலிகள் நடந்தனர். டோலியில் கிடத்தித் தூக்கிக் கொண்டு இராணுவ மருத்துவமனைக்கு விரைந்தனர்.

சீனா: பலவித இடப்பெயர்வுகள்

1986களில், கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பருவம் சார்ந்த இடப்பெயர்வுகள் 80% வரை இருந்திருக்கிறது. மற்ற இடப்பெயர்வுகள் 47%. இரண்டு பிரிவினரையும் சேர்ந்துப் பார்த்தால் தற்காலிகமாக இடம்பெயர்ந்தோர் தான் மிக அதிகம். முறைப்படுத்தப்பட்ட இடம்பெயர்வுச் சட்டங்கள் இல்லாதிருந்ததாலும் நகரமயம் இன்னமும் சூடு பிடிக்காதிருந்ததாலும் அன்றைக்கு நகரத்திற்கு வேண்டியிருந்த தொழிலாளர்கள் குறைவு. அதனால், கிராமங்களிலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அப்போதெல்லாம் மிகக் குறைவு. அத்துடன் அன்றெல்லாம், நகருக்கு வருவோர் நகரைவிட்டு வெளியாகிறவர்களை விட அதிக வயதுடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

சீனா – சவால்களும் குற்றச் செயல்களும்

பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக சமூகவியலாளர்கள் பார்ப்பவை ஊழல், குடிமக்கள் சட்டங்களை, நிர்வாக விதிகளை அவமதிப்பது, சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவை, இவை தவிர, நகரை நோக்கி அலையலையாகக் கிளம்பிப் போகும் மக்கள் கூட்டம். நகர வாசிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இம்மக்களிடம் இல்லாததால் இவர்களை நிர்வகிப்பதே மிகவும் சவாலாக இருக்கிறதாகச் சொல்பவர்கள் அரசு அதிகாரிகள்.

சீனா – கல்வியும் இடப்பெயர்வும்

சீனாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்பது வருடக் கல்வி இலவசம் என்பதே அடிப்படை சட்டம். இருப்பினும், அவரவர் ஊரில் இருந்தால் தான் இந்தச் சலுகை கிடைக்கக் கூடியது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சீனா ‘இலவச’க் கல்வி கொடுப்பதாகச் சொன்னாலும் உணவு, சீருடை, போக்குவரத்து, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் கணினிக்கான சிறப்புப்பாடக் கட்டணம், இதர கட்டணங்கள் என்ற பெயரில் கணிசமாக வசூலிக்கவே செய்கிறார்கள். சில அரசுப்பள்ளிகளில் நன்கொடையும் வாங்கப் படுகிறது.

சீனா- இடப்பெயர்வு வாழ்க்கையில் குடும்ப அமைப்பு

சீனாவின் நகர மற்றும் பெருநகர வாசிகளிடையே நடத்தப்பட்ட அரசுக் கணக்கெடுப்பின் முடிவில் குடிமக்கள் ‘மிக மகிழ்ச்சியாக’ இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அது ஒருபுறமிருக்க, இடப்பெயர்வுக் கதைகளையெல்லாம் கேட்கும் போது, பொருளாதாரத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நவீனச் சீனத்தில் குடிமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது. பெரும்பாலோருக்கு இக்கேள்விக்கு பதிலளிக்கும் போது ஒருவிதக் குழப்பமே மிஞ்சுகிறது.

செயற்கை கிராமங்கள்

பெரும்பணக்காரர்கள் அந்நியர்களையும் திருடர்களையும் உள்ளே விடாமல் தமது வளாகத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவரும் கிராதிக் கதவும், வேலியும் போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வேலிபோட்ட கிராமங்களோ இடம்பெயர்ந்து உழைக்கும் வர்க்கத்தை ‘உள்ளே’ வைக்கும் வழி. இது மனித உரிமைக்கு எதிரானதென்ற கருத்துதான் பரவலாக நிலவிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு “பூட்டி வைக்கப்படும் கிராமங்கள் எல்லோருக்குமே நன்மை செய்யும்”, என்றொரு பதாகை நகரில் ஆங்காகே ஒட்டப்பட்டிருந்தது.

சீனா- பாரம்பரியக் கிராமங்கள்

மிகவும் ஏழ்மையிலிருக்கும் கிராம மக்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு இடம்பெயர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளியூருக்கோ நகரத்துக்கோ போக பயணச்செலவுக்கான தொகை கூட அவர்களிடம் இருப்பதில்லை. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் விவசாயம், சிறு தொழில், சிறுபண்ணை போன்ற தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பயணச்செலவுக்கானதைச் சேர்த்துக் கொண்ட பிறகோ, கடன் வாங்கிக் கொண்டோ வெளியூருக்கு வேலை வாய்ப்பும் அதிக வருவாயும் தேடிப் போவோர் தான் அதிகம்.

பகுதி 04 – பெருகிப் பிதுங்கும் நகரங்கள்

சுற்றுச் சூழல் நோக்கில் சீன நகரம் ஒன்றும் அத்தனை கவர்ச்சியாக இல்லை. எங்கு பார்த்தாலும் சிமெண்ட் வாசனையுடன் புதிதுபுதிதாக முளைக்கும் கட்டடங்களுக்கிடையில் நெரிசல் மிகுந்த அடுக்ககப் பேட்டைகளும், பொலிவிழந்து பல்லிளிக்கும் தொழிற்சாலைகளும், புகையும் தூசுமான காற்றும் நகரங்களில் ரசிக்கும்படி இல்லை என்பதே சூழியல் வல்லுனர்களின் கருத்து.

பகுதி 03 – செஞ்சீனாவின் பெரும் மாறுதல்கள்

1997ல் 12 மிலியன் பேர் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். உள்ளூர் ஆசாமிகள் செய்யத் தயங்கிய/மறுத்த ஆபத்தும், கடின உழைப்பும், அழுக்கு நிறைந்ததுமான கட்டட வேலைகளையும் மற்ற பல சேவைகளையும் நகரில் இவர்கள் மேற்கொண்டனர். இதனாலேயே கட்சியும் நகரவாசிகளை ‘கிராமவாசிகளிடமிருந்து கற்றுக்கொள்ள’ச் சொன்னது.

பகுதி 02 – ஹூகோவ்: சீனாவின் வசிப்பிடப் பதிவு முறை

சொந்த நாட்டுக்குள்ளேயே வேறு ஊருக்கோ, மாநிலத்துக்கோ, குறிப்பாக சிற்றூரிலிருந்து பேரூருக்குப் போவோர் இதுபோன்ற வசிப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்துப் பெற்ற அடையாள அட்டையைக் கையில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு உணவு விநியோகம், இருப்பிட வசதிகளை அரசு தருவதற்காக இப்படிக் கணக்கு வைக்கிறது என்று ஒரு சாக்குச் சொல்ல இடம் உண்டு. அதுவல்ல மையக் காரணம். மக்களைக் கட்டுப்படுத்தல்தான் என்பது இன்றைய உண்மை.

பகுதி 01 – கூட்டுக்குள் அலையும் தேனீக் கூட்டம்

சீனர்கள் தங்கள் நாட்டுக்குள் செய்யும் இடப்பெயர்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் – ஆதி மனித நாகரீகத்தின் வளர்ச்சியைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம். சீனாவின் கிராமங்கள் நகரமயமாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் நகரங்கள், உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், குடும்ப வாழ்க்கையும் தனி மனித வாழ்க்கையும் வெறுமையாகிக் கொண்டிருக்கின்றன. சொந்த நாட்டுக்குள்ளேயே சீனர்கள் அகதிகளாக மாறி ஓடத் தொடங்கியது எப்போது? எதனால்? இதன் காரண காரியங்கள் சுவாரசியமானவை. வாருங்கள், சீனாவுக்கு!

பாலழித்தல்

அறுவை நிறைவேற்றப் படும் விதத்தில் வேறுபாடுகள் நிலவியிருக்கின்றன. ஆணுறுப்பையே முழுக்க அறுத்தெறியப் படுவது ஒருவகை என்றால் பீஜக்கொட்டை மட்டும் அகற்றப் படுவதுமுண்டு. தலைநகரில் இருக்கும் மிக பிரமாண்ட அரண்மனை வளாகத்தில் அரசாங்கம் அங்கீகரித்த அறுவை நிபுணர்கள் இருந்தார்கள். அரசாங்க ஊதியம் என்று ஒன்றும் இவர்களுக்குக் கிடையாது. இருப்பினும், இத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர் அக்காலந்தொட்டே தலைமுறை தலைமுறையாக குடும்பத்தொழிலாகவே செய்தனர். ஒவ்வொரு அறுவைக்கும் அதன் பிறகான சிகிச்சைக்கும் ஆறு பணம் வாங்கினர்.

சீனப் பெண் கவிஞர்களின் ஐந்து கவிதைகள்

யாரிடம் சொல்வேன்
இறந்தோருக்கான எனது
நிரந்தர சோகத்தை?
இந்த வேகத்தில்
மலைகளையும் நதிகளையும்
மட்டுமே கண்டேன்.
என் ஆடையிலிருந்த
உதிரத்துடன் சேர்ந்தது என் கண்ணீர்.

பட்டம்

இது மூட நம்பிக்கை என்று கருதப்படக் கூடும். எனினும், முழுக்கவும் காரணங்களில்லாமல் இவ்வாறு நம்பப்படவில்லை என்பதே சீனத்தில் பலரும் சொல்கிறார்கள். மைதானத்தில் இறங்கி நல்ல காற்றைச் சுவாசித்துக் கொண்டு பட்டம் விட்டால் உடல் நோயும் மனநோயும் விலகி உற்சாகம் பிறக்கத்தானே செய்தது…

தேநீர்

தமிழ் பண்பாட்டின் நாட்டுப்புறக் கலையான ‘கூத்து’க்கு இணையான சீன ‘ஓபெரா’ வகையான நாடகங்கள் சீனத்தின் தேநீரகங்களில் நடக்கும். பேய்ஜிங்கின் தென் பகுதியில் தியன்ச்சியோ என்ற வட்டாரத்தில் இருக்கும் ஒரு கட்டடம் முழுக்க மரத்திலானது. இது 1933ல் கட்டப்பட்டுள்ளது. இன்று இந்தக் கட்டடத்தில் இயங்கும் தேநீரகத்திற்குள்ளிருக்கும் மேடையில் அப்பகுதியில் நிலவிய நாட்டுப்புறக் கலாசாரத்தைக் குறித்து அறிந்திட இங்கு நடக்கும் நாடகங்கள் உதவுகின்றன.

தூரிகைக்கலை

ஓவியத்தையும் தூரிகைக்கலையையும் ஒரே தாய்வயிற்றுப் பிள்ளைகள் என்று வருணிப்பர் சீனர். அவ்வந்த காலத்துக் கலைஞர் உருவாக்கிய முக்கிய பாணியிலிருந்தே படைப்பின் காலத்தைச் சொல்லிவிடக் கூடிய தூரிகைக் கலைஞர்கள் சீனாவிலும் சீனாவுக்கு வெளியிலும் இன்றும் உளர். சீனத்திலோ அரசர் முதல் ஆண்டி வரை பலரும் தூரிகை ஓவியங்களைக் காலங்காலமாக சேகரித்துப் பாதுகாத்திருக்கிறார்கள். சீனச் சமூகத்தில் வீடு, அறைகள், பெரிய கட்டங்கள், நீதிமன்றம், கைவிசிறிகள், சுவர்கள், நுழைவாயில்கள், அருங்காட்சியகம், அலுவலகம், நினைவுச் சின்னங்கள், கல்லறைகள், ஆலயங்கள் என்று எங்கெங்கு காணினும் தூரிகைக்கலையின் சுவடுகள் வாழ்த்து, முதுமொழிகள், அறிஞர் பொன்மொழிகள், கவிதை, பாடல், ஈரடிக்கவிதை, கடிதம் போன்ற பல்வேறு வடிவில் மிளிரும்.

புதியதோர் உலகம்

முதல் வாரத்திலேயே ஒருநாள் அம்மாவிடம், “ஏம்மா நீங்களும் ஸ்கூல்ல படிக்கிறப்ப இப்டி தான் எப்பவும் புத்தகமும் கையுமா படிச்சிட்டே இருப்பீங்களா?”, என்று கேட்டேன். அம்மா இல்லையென்று சொன்னதை நம்பாதவனாக, “நிஜமாவா?”, என்றதும், “அடப் போடா, வீட்ல அஞ்சி பிள்ளைங்க. நாந்தான் மூத்தவ. அம்மா வேற எப்பயும் சீக்கு. கேக்கணுமா? அடுப்படியிலையோ இல்ல தம்பிதங்கச்சியப் பார்த்துக்குறதோன்னு,.. எப்பயும் வேலையிருக்கும். அதுக்கிடையில தான் நான் பள்ளிப்பாடத்தை எழுதவும் படிக்கவும் செஞ்சிக்கணும்.