காதலர் பூங்கா

தொடர்ந்து நாங்கள் அந்தப் பூங்காவில் ‘Walking’ போனாலும், எங்கள் இருவரின் உடம்பும் இளைக்காமல் போனதற்குக் காரணம், இரண்டு மாதங்களுக்கு நான்கே நான்கு முறை மட்டும் நாங்கள் அந்தப் பூங்காவுக்குச் சென்றது மட்டும் காரணமில்லை. உட்கார இடம் தேடி அந்தப் பூங்காவில் நாங்கள் அலையும் நேரம் மட்டுமே எங்கள் ‘Walking’ அமையும்.

இதழ் குறித்து…

துவக்கத்திலிருந்து ’சொல்வனம்’ இலக்கியம் மட்டுமல்லாமல் பல்துறை சார்ந்த கட்டுரைகளையும், புனைவுகளையும் வெளியிட்டுவருகிறது. இவற்றுக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் மறுவினைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. தொடர்ந்து சொல்வனம் இதே திசையில் செல்லும். சமீபத்தில் பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோருக்கு அவர்களின் பல பத்தாண்டு கால இலக்கிய இயக்கத்தைக் கௌரவிக்கும் வகையில் பொருத்தமான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களை எம் பங்குக்குக் கெளரவப்படுத்தும் விதமாக, இந்த இதழில் எப்போதும் போல் பல்துறை சார்ந்த கட்டுரைகளுடன், அவர்கள் சம்பந்தப் பட்ட சில படைப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.

துருவ நட்சத்திரம் – தனி ஆவர்த்தனக் கச்சேரி

இந்தக் கணக்கெல்லாம் கையில பேச அசுர சாதகம் பண்ணிருப்பாய் இல்லையா? கேட்க நன்னாத்தான் இருக்கு. இதையெல்லாம் ரசிக்கவே நிறைய ஞானம் வேணும். போன கச்சேரியில பிரமாதமா தனி வாசிச்சாய். திஸ்ரத்துக்குள்ள சதுஸ்ரத்தை நுழைச்சு வாசிச்சதெல்லாம் பெரிய காரியம். பட்சே, நான் கல்யாணி கிருதி அனுபல்லவியில கார்வை குடுத்து நிறுத்தினப்போ ஸர்வலகுவா ரெண்டு ஆவர்த்தம் வாசிச்சயே, அப்போ நிஜமாவே சிலிர்த்துப் போச்சு. அதுனாலயாக்கும் இன்னொருக்கா அதே எடத்தைப் பாடினேன்.

பூமணி – அள்ளக் கிடைக்காத அம்பாரம்

பூமணியின் சிறுகதைகளில் ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில கதைகள் சிறுவர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில பெண்களின் பார்வையில் என்று ஒவ்வொரு கதையும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது.

ஒரு மரம்; தனி மரம்

என் அறையில் நான். உறாலில் அவள். உள் அறையில் அவன். வீடே ஒரு நூலகமாய்த் தோன்றுகிறது. ஏகாந்த அமைதி. பல மணி நேரங்கள் இந்த வீடு இப்படி இருப்பதற்கு அனுபவப்பட்டிருக்கிறது. என் வீட்டிற்குப் பெயா; சாந்தி இல்லம். அது என் மனதை ஈர்த்த ஒரு ஏழைப் பெண்ணின் ஞாபகமானது. முட்டி முட்டிக் கேட்டிருக்கிறாள் சத்யா அது யார் என்று? அது என்னோடு தோன்றி என்னிலேயே அழியக் கூடிய ரகசியம்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 23

ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் உருவங்களைத் தத்ரூபமாக -இயற்கைக்கு வெகு அண்மையான நுணுக்கங்களுடன்- படைத்தனர். ஓவியங்களில் அனைத்துப் பொருட்களும் (உருவங்கள் / வடிவங்கள்) ஒரே விதமான அக்கறையுடனும், தெளிவுடனும் தீட்டப்பட்டன. முன்னர் ஓவியத்தின் கீழ்பகுதியில் பெரும்பாலும் உருவங்கள் நிழலில் தெரியும் தெளிவில்லாதவிதமாகவே படைக்கப்பட்டன. அதை மாற்றி அவற்றையும் தெளிவாகத் தெரியும் விதமாக ஒளிரும் வண்ணங்கள் கொண்டு அமைத்தனர்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 6

காரைக்காலம்மையின் தமிழை, செய்யுளை, வெண்பாவின் நேர்த்தியை, நயத்தை வாசித்து உணர்தல் வேண்டும். எட்டாம் நூற்றாண்டுத் தமிழ் அப்படியொன்றும் நமக்கு இன்னும் அன்னியமாகிப் போய்விடவில்லை. இருமலுக்கு பனங்கற்கண்டுக் கட்டியை அலவில் ஒதுக்குக் கொள்வதைப் போல, ஒரு பாடலை மனதில் போட்டுக் கொண்டால் அது கரைந்து இனிப்புப் பயக்கும். முதலில் பொதுவான பொருள் புரிந்தால் போதும். சில சொற்களுக்குப் பொருள் முதலில் புரியாவிடின் ஒன்றும் மோசம் இல்லை. நாட்பட நாட்படப் புரியும். கொண்டல், கொண் மூ, கார்முகில், எல்லாம் மேகம் தான். அரவம், நாகம், சர்ப்பம் எல்லாம் பாம்பு தான். நாட்பட நாட்பட நாகம் எனில் யானை என்றும் பொருள் உண்டு என்பதும் அர்த்தமாகும்.

மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா?

மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா? அதற்கு என்ன தடைகள்? என்ன செய்து இவற்றில் பலவற்றை நாம் விலக்க முடியும்? துவக்கத்தில் சாவைப் பற்றி நாம் நினைப்பதையே நாம் மாற்ற வேண்டும். மூப்பு என்பதை எப்படி அணுகுகிறோம் என்பதில் இருந்து துவங்க வேண்டும். வெறும் மூப்பு என்பது அத்தனை நல்ல “மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா?”

2011 – ஒரு பார்வை

இந்த வருடமும் வழக்கம்போல் மகிழ்ச்சிகள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள், சோகங்களுக்கிடையே கழிந்தது. பல இடங்களில் நடந்த பல்வேறு இது போன்ற நடவடிக்கைகளை காட்சிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு இங்கே : மேலும் புகைப்படங்கள் : 1. http://www.theatlantic.com/infocus/2011/12/2011-the-year-in-photos-part-1-of-3/100203/ 2. http://www.theatlantic.com/infocus/2011/12/2011-the-year-in-photos-part-2-of-3/100204/

SPARROW – ஒரு பெண்களின் நிறுவனம்

பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). எழுத்தாளர் அம்பையின் பங்களிப்பை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் குறித்து ஒரு அறிவிப்பு.

மகரந்தம்

கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கையாளும் தரவுகள் அளவில் மிகப்பெரியவை. அவை இந்த தரவுகளை எப்படி கையாளுகின்றன போன்ற தகவல்கள் பொதுவாக வெளியில் வருவதில்லை. ஏதோ ஒரு ரகசிய இடத்தில் இந்த தரவுகளும், அதன் சர்வர்களும் கையாளப்படுகின்றன. ஆனால் முதன் முறையாக ஒரு கட்டுரை உங்களை அந்த ரகசிய இடத்திற்கு கொஞ்சம் அருகில் அழைத்து செல்கிறது.

அலீசியா பூல் ஸ்டாட் பார்த்த நான்காம் பரிமாணம்

ஏற்கனவே நான்காம் பரிமாணத்தில் ஒழுங்கான ஆறு பன்வகைகள் (polytopes) இருப்பது அறியாமல், அலீசியாவும் அவைகளைத் தானாகவே கண்டறிந்தார். மேலும் அந்த ஆறு பன்வகைகளுக்கு மூன்றாம் பரிமாணக் குறுக்கு வெட்டு (cross section) மாதிரிகளை அட்டையை (card board) வைத்து உண்டாக்கினர். இதே நேரத்தில் ஹாலந்து நாட்டில் ஷௌடே (Schoute) என்ற பேராசிரியர் பகுப்பாய்வு முறையில் அலீசியா கண்டறிந்த அதே போன்ற நான்காம் பரிமாணத்தின் ஒழுங்கான பன்வகைகளின் மூன்றாம் பரிமாணத்தின் குறுக்கு வெட்டுக்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

மானிடர்க்கென்றுப் பேச்சுப்படில்!

சித்தி பெயருக்கேற்ற கோதைதான், 75 வயதிலும் அழகும் மெருகும் குலையாமல், சிக்கென, சின்னப் பெண்போல காரியங்களைக் கண்ணும் கருத்துமாகச் செய்வாள். எப்போதும் யாராவது உறவினர் வீட்டு கல்யாண கலாட்டா நிரம்பிய சமையலறையிலோ, இல்லை குழந்தைப் பேற்றுக்காக அழைத்து வரப்பட்ட உறவினர் வீட்டுச் சமையலறையில் பத்திய உணவு தயாரிப்பதிலோ, பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி, சீராட்டி, தாலாட்டுவதிலோ தன்னை மறந்திருப்பாள்.

வீடு வாங்கிய கதை

திருமணம் ஆன பிறகு “மாப்பிள்ளை, எப்போது குழந்தை?” என்ற கேள்விக்கு விடைகிடைத்தபின்பு வீட்டுக்கு வருபவர்கள் “எப்போது சொந்த வீடு?” கேள்விக்கு மாறிவிட்டார்கள். “சரி நாமளும் ஆணி அடிக்க சொந்த வீடு வாங்கலாமே” என்ற எண்ணம் எட்டு வருடம் முன் உதித்தது. பிளாட்(Plot) வாங்கி நம் இஷ்டத்துக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற நினைப்பில், சனி ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் காலி வீட்டு மனை கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தேம்.

இலக்கிய அங்கீகாரங்கள்

சமீபத்தில் இரு இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டும் தகுதியான படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான ‘சாரல்’ விருதிற்கு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் பூமணிக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். தகுதி வாய்ந்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் சாரல் விருது அமைப்புக்கும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் சொல்வனம் தெரிவித்துக் கொள்கிறது.

பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்

மொட்டை மாடி அழகாகவே இருந்தது. யாராலும் மொட்டை மாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை, சிறியதோ, பெரியதோ அது அடைசலும் புழுக்கமும் அற்ற திறந்த வெளியில் நம்மை நிறுத்திவிடுகிறது. நிச்சயம் காற்று இருக்கும். பளிச்சென்று நம்மைச் சுற்றி வானம் வெள்ளையும் நீலமுமாக இறங்கும். இடம் வலம் எங்கு திரும்பினாலும் மேகமாக இருப்பது நம்மை என்னவோ செய்யாமல் இராது. மொட்டை மாடியில் வைத்து யாராவது கோபப்பட்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை. மேலும், மழையும் வெயிலும் அடித்து அடித்து இந்தத் தளச் செங்கல்களுக்கு நேர்ந்திருக்கிறதை உற்றுப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடவும் கூடும்.

வண்ணநிலவனுடன் ஒரு சந்திப்பு

ஏராளமான படைப்புகளைப் படித்துப் படித்து மனம் ஒருவிதமான மொழிசார்ந்த தளத்தில் பக்குவமாக இருக்கிறது. இதனுடன் நமது சொந்த அனுபவங்கள் சேரும்போது படைப்பு வெளியாகிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் சிறுகதையான ‘மண்ணின் மலர்கள்’ என்ற சிறுகதை, சாலையோர மரம் ஒன்று வெட்டப்படுவதைப் பற்றியது. இது ஒரு உண்மைச் சம்பவம். பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பலருக்கும் நிழல் தந்த மரத்தை எதனாலோ வெட்டினார்கள். அது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்த மனநிலையைத்தான் சிறுகதையாக எழுதினேன்.

பொறாமை எனும் விஷம்

இன வாதக் கோட்பாடு, தங்களைக் குறித்து சந்தேகமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டிருந்த பலவீனமான ஜெர்மானியர்களை, தாங்கள் ஒரு வலுவான மற்றும் உயர்ந்த அறிவுஜீவிகளாகக் கற்பனை செய்துகொள்ளும் கூட்டத்தினராக மாற்றியது. இனவாதம் என்பது பலவீனத்தால் உந்தப்பட்டு மந்தைக்குள் சென்று சேர்வதன்றி வேறல்ல.

எம்மைப் பறித்தால், எம் குருதி வடியாதா

1900ஆம் ஆண்டு வாக்கில் போஸ் தாவரங்களின் ரகசிய உலகம் பற்றிய தனது புலனாய்வுகளை ஆரம்பித்தார். அனைத்துத் தாவரங்களுக்கும், தாவரங்களின் உறுப்புகளுக்கும், பிராணிகளை ஒத்த கூர் உணர்வுடைய நரம்பு மண்டலம் இருப்பதையும், புறத்தூண்டுதல்களுக்கு அவற்றின் எதிர்வினைகள் அளக்கப்பட்டு பதிவு செய்யக்கூடியவை என்றும் அவர் கண்டறிந்தார்.

டென்னிஸ் ரிச்சீ (1941- 2011)

டென்னிஸ் ரிச்சீக்கு கவனம் படிப்பில் மட்டும்தான். இவருக்கு உடற்பயிற்சி, விளையாட்டுகளில் கவனம் இல்லை என்பது தாய் மேக்கீக்கு வருத்தம் அளித்தது. ஆனால் இவரே பிற்காலத்தில் தான் உருவாக்கப்போகும் ஸி மொழி மூலம் உலகெங்கும் பல்வேறு கம்ப்யூட்ட கேம்ஸ் உருவாகக் காரணமாக இருக்கப்போகிறார் என்பது அப்போது அவர் தாய்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏன் பல்லி கொன்றீரய்யா

பத்து வருட ஆராய்ச்சியில் பல பல்லிகளை சந்தித்து, க்ளவுஸ் அணிந்து கைகுலுக்கி, நுண்னோக்கி, சிந்தித்து, பல்லியின் கால் படம் மட்டும் வரைந்து, நுண்ணோக்கியில் தெரியும் பல பாகங்களை குறித்து… என்.சி.வசந்தகோகிலம் இன்றிருந்து இப்பல்லி ஆராய்ச்சியை கேள்விப்பட்டிருந்தால், தான் ரங்கனாதர் மேல் பாடியதை சற்றே திருத்தி, “ஏன் பல்லி கொன்றீரய்யா” என்று மோஹனத்தில் பொருமியிருப்பார்.

ஈர்ப்பு : ஒரு வியப்பு

அமர்ந்திருக்கும்போது அல்லது நின்றுகொண்டிருக்கும் போது, நம் உடலின் எடை முழுவதும் ஏதோ ஒரே ஒரு புள்ளியில் குவிந்திருப்பதைப் போல் தோன்றும்படி, ஈர்ப்பு விசையை அளிப்பதுபோல் தோன்றும். பொருளுக்கு ஒன்று ஓர் அடித்தளம் கொண்டிருக்குமானால் அந்த அடித்தளத்தின் மீது பொருளின் ஈர்ப்பு மையம் இருக்கும்; அப்போதுதான் அந்தப்பொருள் தடுமாறி விழாமல் இருக்கும்.

துருவநட்சத்திரம் – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு, லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகம் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடாக வெளிவரவிருக்கிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். துருவ நட்சத்திரம் புத்தகத்தின் வெளியீட்டு விழா 11.12.2011 அன்று சென்னை ராகசுதா “துருவநட்சத்திரம் – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்”

ஆயிரம் தெய்வங்கள் – 16

ஸீயஸ் லெட்டாவுக்கு வழங்கிய தெய்வக்குழந்தையே அப்போல்லோ. கர்ப்பவதியான லேட்டாவுக்கு ஹீரா வழங்கிய துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பூமியில் குழந்தையை விழச்செய்ய ஒரு துளி இடத்தைக்கூட ஹீரா வழங்கவில்லை. பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக குவாயில் தீவில் தலைமறைவாய் வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 22

முதலாம் உலகப் போருக்குப்பின்பு ஜெர்மன் நாட்டில் ‘ஓடொ டிக்ஸ்’, ‘ஜார்ஜ் க்ரோட்ஸ்’ (Otto Dix, George Grosz) என்ற இரு ஓவியர்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இதை எக்ஸ்ப்ரெஷன் (Experssion) பாணியின் போலி (Pseudo- Expressionist) என்று அடையாளப் படுத்தினர் அன்றையக் கலை திறனாய்வாளர். கடுமையான சமூக விமர்சனம், குறை கூறி வெறுக்கும் அணுகு முறை, தத்துவார்த்த நிலைப்பாடு, இவற்றுடன் தத்ரூபப் பாணி கலந்த ஒரு புதிய உத்தியாக அவர்கள் படைப்புகள் அமைந்தன. இந்த இயக்கத்தில் இரண்டு முக்கிய வழி அணுகல்கள் கவனம் பெற்றன.

மகரந்தம்

பணம் பாதாளம் வரை பாயும் என்று சொன்னவர்கள் அதை சக்தியைக் குறிக்கச் சொல்லவில்லை, அது தொடர்ந்து மனிதரை எத்திசையில் அனுப்பும் என்று குறித்தார்கள் போலிருக்கிறது. ஏதோ ரஷ்யா, சீனாவின் முதலியம்தான் கம்யூனிஸ்டு என்று பெயர் தாங்கிய குற்றக் கும்பல்களின் விளையாட்டரங்கு என்று நினைக்கத் தேவையில்லை. உலகெங்கும் இதே கதைதான்.

மை விலேஜ் இஸ் பம்பை – விவரணப்படம்

பெருநகரங்களில் வசிப்பவரா நீங்கள்? அரக்கப் பறக்க வேலைக்குச் செல்பவரா? நெரிசல் ஏற்படுத்தும் கூட்டத்துடன் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்பவரா? சுற்றிப் பார்க்க மட்டுமே ஓரிரு தினங்கள் வருபவராக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயம் இதுபோன்ற விளம்பரங்கள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கும். ஒரு மின்னல் பார்வையில் அந்த கருப்பு வெள்ளை விளம்பர ஒட்டிகளை கடந்து சென்றிருப்பீர்கள்!

மொழியின் விதை

மூளையில் மொழி மையங்கள் இருப்பது உறுதியானாலும், மூளை என்பது உடல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும், கட்டளைகளைக் கடத்தும் கட்டுப்பாட்டு மையம் மட்டும் தான். மூளையின் செயல்க்கட்டுப்பாட்டு மையங்களைத் தூண்டும் காரணிகள் அதற்கான புரதங்களே. புரதங்களோ மரபணுக்களால் குறிக்கப்படுபவை. மரபணுக்களே உயிரியல் பண்புகளைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் அடிப்படை அலகுகள். அப்படியானால் மூளையின் மொழிமையங்களின் வளர்ச்சிக்கும், தூண்டுதலுக்கும், இணைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமான மரபணுக்கள் எவை?

சீனாவின் நிஜமான மக்கள் புரட்சி

பத்திரிகை சுதந்திரம் இல்லாத சமூகத்தில், பாதிக்கப்பட்டவர்கள் கவனம் பெறுவது கடினம். நேற்று நடந்ததையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்களேன்: நான் CNN-க்குத் தொலைபேசியில் நேர்முகம் தந்திருந்தேன். அதன்பின் திடீரென்று, CNN ஒளிபரப்பு ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. என் தொலைகாட்சிப் பெட்டி முழுமையாக மௌனமானது. எனக்கு அது முதல் அனுபவம். கடவுளே, நான் பேட்டி கொடுத்ததால்தான் இப்படி நடக்கிறதா, என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! என்று நான் நினைத்தேன். எந்த ஒரு நாட்டில் இப்படி நடக்கும்? ஒருவேளை க்யூபா, வட கொரியா, சீனா. ஆனால் அவர்களுக்கு என்ன வேண்டும், அவர்கள் எதைப் பார்த்து பயப்படுகிறார்கள்?

பேராலயம்

கருவிழிகள் ரெம்ப வெள்ளையா இருக்கும், கட்டுப்படுத்த முடியாததப்போலவும், நிறுத்த முடியாததப்போலவும் தன்னிச்சையா சுத்திகிட்டிருப்பதப் போலிருக்கும். அறுவருப்பா! அவனப் பார்த்துகிட்டேயிருந்தப்ப, அவனுடைய இடது கருவிழி அவன் மூக்க நோக்கி நகர்ந்துச்சு, இன்னொண்ணு அப்படியே நின்ன இடத்திலேயே நிக்க முயற்சி செய்துச்சு, முயற்சி மட்டும்தான், ஏண்ணா அதுவும் தெரியாம, முடியாம அலைஞ்சுகிட்டிருந்துச்சு.

பேட்மேன் பேல்பூரி

தமிழர்களுடைய குணம் பொட்டுக்கடலை, வேர்கடலை, பொரியை பார்த்தால் உடனே அதில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்வது. ஆனால் பேட்மேன் கடையில் அப்படி நாம் எடுத்துப் போட முடியாது. உடனே பேல்பூரியைக் கலக்கும் கரண்டியால் அடித்துவிடுவார். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதைப் போல அவரிடம் தாரளமாகக் கடன் வைக்கலாம், மறுநாள் மறந்துவிடுவார்.

என் நண்பர் ஆத்மாநாம் – ஸ்டெல்லா புரூஸ்

‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இக்கட்டுரைகளில் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு விதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரணம் வந்து போகிறது. தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை எந்தப் பாசாங்கும் இல்லாமல், நேரடியாகச் சொல்லிச் செல்லும் எளிமையும், ஆன்மிக நாட்டமும், தீவிர இலக்கிய வாசிப்பும், வெகுஜன இலக்கியவாதிகளிடம் நாம் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள். ஒருவேளை ஸ்டெல்லா புரூஸ் வெகுஜன இதழ்கள் பக்கம் செல்லாமல், தீவிர இலக்கியம் பக்கமே நின்றிருந்தால், தமிழுக்கு ஒரு சிறந்த இலக்கியவாதி கிடைத்திருப்பாரோ என எண்ண வைக்கிறது இப்புத்தகம்.

கைகழுவப்பட்டவன்

பாவம் டாக்டர் இன்னாசு. மருத்துவ விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இவரா பைத்தியம்? வெளியில் இருக்கும் படித்த பெரிய டாக்டர்கள்தான் பைத்தியம், என்ற உறுதியான எண்ணம் தெரசாவிற்கு ஏற்பட்டது. அதே நேரம் டாக்டரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று வந்த ஒரு டாக்டரே இவரைக் கேலி பேசியபோது கிட்டத்தட்ட அவர் கழுத்தை நெறிக்கவே செய்து விட்டார் டாக்டர் இன்னாசு; இரண்டு மூன்று காவலாளிகள் சேர்ந்து அவரை எப்படியோ பாடுபட்டு அடக்கினார்கள்.

இரண்டு குளங்கள் மற்றும் சில கவிதைகள்

பிரக்ஞையற்ற பொழுதுகளில்
பறந்து போகிறது
ஒரு சொல்
அல்லது
ஒரு செய்கை.
சிறகால் வருடலாம்
நகங்கொண்டும் கீறலாமெனில்
கூடுகிறது கவனம்
பிரசவித்த பொறுப்பிற்காக.

நேஷனல் ஜியோகரபிக் புகைப்படப் போட்டி

பல்வேறு இயற்கை, மனிதர்கள், இடங்களை அழகிய முறையில் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள். தவறவிடக் கூடாதவை. அவற்றை இங்கே பார்க்கலாம்.

சொல்வனம் 2011 – புத்தக வெளியீடுகள்

லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகமும், சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ நூலின் இரண்டாம் பதிப்பும் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடுகளாக வெளிவரக்கின்றன என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

சீனா: பலவித இடப்பெயர்வுகள்

1986களில், கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பருவம் சார்ந்த இடப்பெயர்வுகள் 80% வரை இருந்திருக்கிறது. மற்ற இடப்பெயர்வுகள் 47%. இரண்டு பிரிவினரையும் சேர்ந்துப் பார்த்தால் தற்காலிகமாக இடம்பெயர்ந்தோர் தான் மிக அதிகம். முறைப்படுத்தப்பட்ட இடம்பெயர்வுச் சட்டங்கள் இல்லாதிருந்ததாலும் நகரமயம் இன்னமும் சூடு பிடிக்காதிருந்ததாலும் அன்றைக்கு நகரத்திற்கு வேண்டியிருந்த தொழிலாளர்கள் குறைவு. அதனால், கிராமங்களிலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அப்போதெல்லாம் மிகக் குறைவு. அத்துடன் அன்றெல்லாம், நகருக்கு வருவோர் நகரைவிட்டு வெளியாகிறவர்களை விட அதிக வயதுடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

முத்தொள்ளாயிரத்தில் யானைகள்

யானைகள் மெதுவாகவே நகருமென்றாலும் அவற்றுக்கான பிரத்யேகப் பயன்பாடுகள் இருந்தன. ஒரு யானையின் மேல் ஏழு முதல் 10 வீரர்கள் வரை ஏறிப் போர் புரிந்தார்களாம். யானையால் மட்டுமே அத்தனை மனிதர்களைச் சுமக்க முடியும். உயரமான விலங்கு என்பதால் களப்போரில் யானை மேலிருந்து தெளிவாக அம்பு எறிய முடியும். ஆனால் இவற்றைவிட முக்கியமானது, பகைவர்களின் மதிற் சுவர்களை உடைப்பது.

பேரிசையின் பின்னணி: தவில் கண்ட மாற்றங்கள்

நாஞ்சில் வீட்டுத் திருமணத்தைப் பொறுத்தவரை, எழுத்தாளர்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவதற்கான வாய்ப்பை தவில் சத்தம் கெடுத்து விட்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆகவே ஒவ்வொருவராக வெளியேறி வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் உரையாடலில் பங்கெடுத்தாலும், என் காதுகள் என்னை அறியாமல் மண்டபத்திற்கு உள்ளே சென்று கொண்டிருந்தன. அதே சமயத்தில் தவில் ஒலி குறித்த எண்ணமும் வளர்ந்தது. தவில் மிகு ஒலியை எழுப்பும் ஒரு வாத்தியம். ஒரு காலத்தில் கோயிலில் பூசை தொடங்குவதையும் சுவாமி புறப்பாடு தொடங்குவதையும் மக்களுக்கு அறிவிக்க அதற்கு ஒரு தேவை இருந்தது. “தொம் தொம்” என்று அலாரிப்புடன் மல்லாரிக்காக தவில் வாசிக்கும் போது, அது இசை இரசிகனிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை இன்னவென்று சொல்லி விட முடியாது. மலைக்கோட்டை பஞ்சாமி என்று அழைக்கப்படும் பஞ்சாபகேசபிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோயில் இராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசன் என கடந்த காலத்து வித்வான்கள் தொடங்கி, இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம், ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், திருவாழபுத்தூர் கலியமூர்த்தி, திருப்புங்கூர் முத்துக்குமாரசாமி என மாபெரும் தவில் கலைஞர்கள் வரிசை நீள்கிறது. ஆனால் இவர்கள் எல்லோருடைய வாசிப்பையும் தொடர்ந்து கேட்கும் ஒரு இரசிகன், காலந்தோறும் தவில் வாத்தியத்தின் சத்தத்திலும் வாசிப்பிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் புரிந்து கொள்வான்.

நிழல்குத்தில் நுழைந்த பனைமரம்

கதைக்குப் பொருத்தமான சூழலையும், பின்புலத்தையும் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கவில்லை. அறுபது வருடங்களுக்கு முந்தைய உள்கிராமத்தையும், சுற்றுப்புறங்களையும் மறு உருவாக்கம் செய்யவேண்டியிருந்தது. நெடிதுயர்ந்த கரும்பனைகளையும், ஓங்கியுயர்ந்த பாறைக்கூட்டங்களையும் தேடிப் பயணம் செய்தோம். ஆனால், மாற்றத்தி அடையாளங்களாகவும், நவீனமயத்தின் அடையாளங்களாகவும் மாறிய தார் ரோடுகளும், மின்கம்பிகளும், சிமெண்டு போட்ட குடியிருப்புகளும் பனைமரத்தை எரிபொருளாக்கிய செங்கற்சூளைகளுமாகக் கன்னியாகுமரி மாவட்டம் முற்றிலும் மாறிப்போயிருப்பதை நாங்கள் ஏமாற்றத்துடன் புரிந்துகொண்டோம்.

அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘நிழல்குத்து’

1940-களில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் இந்த விசித்திரமான வழக்கம் இருந்தது. மரணதண்டனை விதிக்கப்பட்ட எல்லோரின் தண்டனையையும் மகாராஜா ரத்து செய்துவிடுவார். அனால் அந்த செய்தி வரும் முன் குற்றவாளி தூக்கிலிடப்பட்டிருப்பான். மகாராஜா மரணதண்டனையை ரத்து செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும். அதைப்போல, அந்த பத்திரம் வரும் முன் குற்றவாளியைத் தூக்கில் ஏற்றி விடுவார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். தெரிந்தே நடத்தப்படும் நாடகம் இது.

காந்திமதியின் தாயார்

அம்மாவின் சமையலை ஊரே மெச்சினாலும் அம்மா என்னவோ ஆச்சியின் சமையலுக்கு முன்னால் தன்னுடையது ஒன்றுமேயில்லை என்பாள். அவளுக்கு தன் தாயார் வைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன பதார்த்தமும் அவ்வளவு ருசியை அளித்தவை. ‘வெறும் புளித்தண்ணி வச்சாலும் எங்க அம்ம கைமணமே மணம்’. மகள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் போது, அவளுக்குப் பிடித்த ’கத்திரிக்காய் கொத்சு’ செய்து, சோற்றுடன் பிசைந்து சின்னக் குழந்தைக்கு ஊட்டிவிடுவது போல் ஆசைஆசையாக ஆச்சி ஊட்டி விட்டதைப் பார்க்க முடியாமல் அந்த இடத்தை விட்டுத் தள்ளி வந்து அழுதேன்.

பர்வீன் சுல்தானாவின் ஆட்டோகிராஃப்

1976-ஆம் வருடம் பிப்ரவரி மாதம். ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான் பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சென்னை சங்கீத ரசிகர்களின் மத்தியில் அப்போது பர்வீன் சுல்தானா மிகவும் பிரபலமாக இருந்தார். எனக்கும் பர்வீன் சுல்தானாவின் இசைமேல் பெரும் மோகமே இருந்தது. ஒருவித போதையை தந்திருக்கிறது. அவரின் ஆலாபனைகள். இரவில் அறை விளக்கை அணைத்துவிட்டு ப்ளேயரில் பர்வீன் சுல்தானாவின் இசைத்தட்டை ஒலிக்கவிட்டு இருளில் கிடந்த கணங்கள் ஒலியின் அரூப யாத்திரைப் பிரவாகமாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறது.

மூன்று கவிதைகள்

என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்

என் தொஸ்தாயெவ்ஸ்கி

தொஸ்தாயெவ்ஸ்கி ஒரு வாசகனுக்கு மிக முக்கியமாக இளைஞனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். அவரிடம் நீங்கள் உங்களின் இயற்பியல் சந்தேகங்களிலிருந்து உங்கள் காதலர் உங்களிடம் இரண்டு நாட்களாக பேசவில்லை என்பது வரை எதை குறித்தும் புகைபிடித்துக் கொண்டோ, மதுவகத்தில் அமர்ந்துகொண்டோ பேசலாம். உடனே டால்ஸ்டாய் போல கையை உயர்த்திக்கொண்டு உங்களுக்கு அவர் ஆசிர்வாதம் செய்து துன்புறுத்தமாட்டார்.