ஈர்ப்பு : ஒரு வியப்பு

அமர்ந்திருக்கும்போது அல்லது நின்றுகொண்டிருக்கும் போது, நம் உடலின் எடை முழுவதும் ஏதோ ஒரே ஒரு புள்ளியில் குவிந்திருப்பதைப் போல் தோன்றும்படி, ஈர்ப்பு விசையை அளிப்பதுபோல் தோன்றும். பொருளுக்கு ஒன்று ஓர் அடித்தளம் கொண்டிருக்குமானால் அந்த அடித்தளத்தின் மீது பொருளின் ஈர்ப்பு மையம் இருக்கும்; அப்போதுதான் அந்தப்பொருள் தடுமாறி விழாமல் இருக்கும்.

கைகழுவப்பட்டவன்

பாவம் டாக்டர் இன்னாசு. மருத்துவ விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இவரா பைத்தியம்? வெளியில் இருக்கும் படித்த பெரிய டாக்டர்கள்தான் பைத்தியம், என்ற உறுதியான எண்ணம் தெரசாவிற்கு ஏற்பட்டது. அதே நேரம் டாக்டரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று வந்த ஒரு டாக்டரே இவரைக் கேலி பேசியபோது கிட்டத்தட்ட அவர் கழுத்தை நெறிக்கவே செய்து விட்டார் டாக்டர் இன்னாசு; இரண்டு மூன்று காவலாளிகள் சேர்ந்து அவரை எப்படியோ பாடுபட்டு அடக்கினார்கள்.

வைரஸ் – சில முக்கிய விவரங்கள்

பெரும்பாலான நச்சியங்கள் சில குறிப்பிட்ட உயிரினங்களில் குறிப்பிட்ட கண்ணறைகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. மூச்சுப்பாதையில் உள்ள கண்ணறைகள் நச்சியத்தால் தாக்கப்படும்போது தடுமண் (சளி) உண்டாகிறது. நச்சியங்களால் கண்ணறைகளுக்கு வெளியே தனித்து வாழ இயலாது.

புண்சட்டை

ஒரு கவ்வியைப்போலச் செயல்பட்டு
மெந்தென்றலில்
உன்னைக் காற்றாட்டினேன்
சுத்தமானபின்
காணாமல் போய்விடுவாய்
மீண்டும் அழற்புண்களுடன்
வந்து நிற்பாய்

மெலமீன் – நடந்தது இதுதான்

மெலமீன், நைட்ரஜன்(N என்பது நைட்ரஜனைக்குறிக்கும்) நிறைந்த ஒரு வேதிப்பொருள்(C6H6N6). குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்ட குழந்தை பால்மாவு தயாரிப்பாளர்களில் சிலர், பால்மாவில் உள்ள புரதத்தைக் காட்ட நச்சுத்தன்மைதான் இல்லையே என்று நினைத்து பால்மாவில் நைட்ரஜன் நிறைந்த மெலமீனைக் கலக்கத் துணிந்தனர்.

நிறத்தைத் தந்தவர் யார்? – ஓர் அறிவியல் பார்வை

இலைகள் ஏன் பச்சைநிறத்தில் இருக்கின்றன என்று யாராவது கேட்டால், அதிலுள்ள பச்சையத்தால் என்று உடனே பதில் சொல்லிவிடலாம். கீரை எப்படி பச்சையாக இருக்கிறது என்றால் அதற்கும் இதே பதிலைச் சொல்லிவிடலாம். நம் கண்களில் அன்றாடம் தென்படும் கமலாப்பழத்தின் காவி நிறத்திற்கோ, கத்தரிக்காயின் கத்தரி நிறத்திற்கோ காரணி யார்? நம் அருகிலேயே இருக்கும் சில நுணுக்கமானவற்றைக் கவனிக்க மறந்துவிடுகிறோம் அல்லது தவறிவிடுகிறோம். இயற்கை பல புதிர்களை எளியமுறையில் நாளும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.

மூன்று கவிதைகள்

சட்டை, கன்னம் கை கால் என்று
எங்கும் மண்தீற்றல்களுடன்
இரண்டு கற்களை எடுத்துக்கொண்டு வந்து
இப்பவே வீட்டுக்குப்போய் பச்சை அட்டையை
எடுத்துவரவேண்டும் என்கிறாள் பொறுப்பு வழியும் குரலில்

புரை

பள்ளி வாயிற்காவலர் வைத்திருக்கும் வெளியே செல்லும் மாணவர்களைக் குறித்துவைத்துக்கொள்ளும் கோப்பிலும் அவள் பெயர் இல்லை. கவலையாக இருக்கிறது என்றார். உடனே கவனிக்கிறேன் என்று கூறினாலும் இப்போது எனக்கு ஒரு சிறு பதற்றம் வந்துவிட்டது.

கோமாளி

கோமாளி என்று என்னைக் கூப்பிடுவது சிரமமாக இருக்கிறது கோமு என்று கூப்பிடுகிறேன் என்று ஜெ. ஊர்மிளா என்னிடம் வேண்டிக்கொண்டாள். முதல் ராங் வாங்கும் உஷா என்னை ஒரு நாள் அழைத்து ஊர்மிளா எதாவது சொன்னால் அல்லது அடித்தால் நன்றாகத் திருப்பிக்கொடுத்துவிடு என்று கோபமாகச் சொன்னாள். நான் அவளிடம் இருந்து நோட்டு பென்சில் எதுவும் வாங்கினதேயில்லையே எதை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்றேன். தலையில் அடித்துக்கொண்டு உனக்கு கோமாளி பெயர் பொருத்தம்தான் என்றாள்.

ஐஸ்கிரீம் தின்பவர்களைப் பற்றிய சிலகுறிப்புகள்

பெரியவர்களும்
பெரியவர்கள்போல வளர்க்கப்படும்
குட்டிக்குழந்தைகளும்
தவறாமல் உடனுக்குடன்
காகிதக்கைக்குட்டையால்
துடைத்துக்கொள்கிறார்கள்

கதைசொல்ல வரும் குழந்தை

நீ இப்போது கதை கேட்பவன்
உன் சேமிப்பிலிருக்கும்
ஆச்சரியங்களையும்
வைப்புக்கணக்கில்
இருக்கும்
புன்னகைகளை
கொஞ்சம் கொஞ்சமாக
செலவழிக்கத் துவங்கு