சிறுகதை

ஓ!! அந்த வீட்டுக்குள் கதை நுழைந்தே விட்டது. போர்வையை நனைத்தது வியர்வை…வாய் ஒட்டிக் கொண்டது. பேய்க்குப் பயப்பட்டால் கூடத் தாயத்தோ, திருநீறோ, மந்திரமோ…கதைக்குப் பயப்படுவதை என்ன சொல்லிப் புரிய வைக்க.. என்ன செய்து தடுக்க முடியும்.

சதி பதி

வைகாசி பிறந்தால் மாரியம்மாளுக்கு முளைப்பாரிக் கும்மி. வானம் பொய்த்தால் மழைக்கஞ்சிக் கும்மி. வாழ்க்கையை முழுக்க முழுக்க சந்தோசமாக அனுபவிக்கப் பிறந்தவள் மாதிரி சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தாள். மரம் ஏறித் தேங்காய் பறிப்பவளா இப்படிப் பூக்கட்டுகிறாள் என்று தோன்றும்படிச் சரம் தொடுப்பாள். சாமிக்குக் கலக்கமாகக் கட்டி சடைக்கு வைக்க நெருக்கமாகக் கட்டும்போதே நூலில் ஐந்து முடிச்சுப் போட்டுக் குஞ்சாரமாக்கி விடுவாள்.

தானம்

நாம் விளையாடித் தான் பார்க்க வேண்டும் வாழ்க்கை விளையாட்டு. பேச வைக்க வேண்டும். சிரிக்க வைக்கவேண்டும். இதெல்லாம் எதற்கு என்பவர்களுக்கு அதெல்லாம் எதற்கு என்பது தான் என் பதில். இப்படிப் பட்டவர்களை தொடாமல் விட்டுச் செல்வது யாருக்கும் நல்லதில்லை. நாமாக முந்திக் கொண்டு எங்கோ திறந்திருக்கும் துவராத்தைக் கண்டு பிடித்து கசிவுண்டாக்க்கி கடலைக் கொண்டு வந்து விட வேண்டும்.

இடும்பைக்கூர் வயிறே…

இந்தியா கேட்.ராஷ்ட்ரபதி பவனைக் கேட்டுக்கு வெளியே இருந்து ஒரு பார்வை. நாடாளுமன்றம். வெளியே இருந்த குரங்குகள், உள்ளே போய்க் கொண்டிருந்த அரசியல்வாதிகள், வட்ட நீர்க் கொப்புளிப்பைச் சுற்றிப் பறக்கும் பறவைகள் ..எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நாங்கள் ரயில் ஏறும் போது தான் உறைத்தது குளிர் மட்டுமல்ல செலவும் நாங்கள் எதிர்பார்க்காததை விட அதிகம் ஆகியிருந்தது. அதிகம் என்ன ஒன்றும் இல்லாமல் ஆகி இருந்தது. ஆசிரியரிடம் போய்க் கடன் கேட்கலாம் என் நினைத்திருந்ததை ஏதோ தடுத்தது. கொஞ்ச நேரத்தில் பசி அந்த ஏதோவைத் தள்ளிவிட்டு அவரிடம் போய்க் கேட்டபோது அவரிடமும் பணம் இல்லை. பரிதாபமாக விழித்தார்.

முகங்கள்

நீங்கள் ஓமானியா என்று தெரியாமல் கேட்டு விட்டேன். நம்பர் ஒன் ஓமானி என்றார். அப்படியே விட்டுவிட முடியுமா ? அப்படியானால் நம்பர் டூ ஓமானி யார் என்று கேட்டேன். ரிங்பாரி என்று ஏதோ சொன்னார். நிச்சயம் கெட்ட வார்த்தையாக இருக்க வாய்ப்புள்ளது.

டபுள் டாக்டர்

சில புதிர்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால் அவரைப் பற்றிய எங்கள் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர் யார் ? எங்கிருந்து வந்தார் ? பிள்ளைகள் உண்டா ? தம் அடிப்பாரா ? ஏன் டிபார்ட்மெண்ட் ஆசிரியர் அறையில் போய் உட்கார்வதில்லை. எப்பொழுது பார்த்தாலும் லைப்ரரிக்கே போய் விடுகிறார். ஏன் டூருக்கு வரமாட்டேங்குறார். ஏன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படி முக்கியமான கேள்விகளுக்கு விடை கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம் தான். இருக்கட்டும் . பாடம் நன்றாக எடுக்கிறார் அல்லவா?

வம்ச விருட்சம்

தலைவர் வீட்டின் முற்றத்தில் உள்ள சாவடியில் அம்மாவையும் , அப்பாவையும் கட்டி வைத்துவிட்டார்கள். அண்ணன் சொன்னது மாதிரிச் செய்து விட்டான். அவனுக்கு எங்கள் சாதி மீது வெறுப்பா சாதிகள் மீதே வெறுப்பா என்று தெரியவில்லை. எங்கள் பக்கம் ஜாதியைச் சொல்லும் போது பிள்ளைமார் , நாய்க்கமார் , தேவமார் என்று மார் சேர்த்துச் சொல்வோம். அண்ணன் எல்லாவற்றையும் சொல்லி, எல்லாம் விளக்கமாறு என்பான். அப்பொழுது சிரித்தோம்.

வயிறு

உடலைக் கிடத்திய போதும் லெட்சுமிக்கு அழுகை வரவில்லை. இந்த மாதிரிச் சமயங்களில் யார் அழுகிறார்கள் யார் அழவில்லை என்பதைக் கணக்கெடுக்க ஒரு கூட்டம் இருக்கும். கொஞ்ச நாளைக்குப் பேசுவதற்கு விசயம் வேண்டும் இல்லையா. கல்நெஞ்சம் என்று பட்டம் கொடுக்க. குறிப்பாக மகன்கள் , மருமகள்கள் அழுகிறார்களா என்பதுதான் கவனிக்கப் படும். அவர்களுக்குத்தான் அளந்த துக்கம். லெட்சுமியே அழவில்லை என்பது அவர்களுக்கு புரிந்தும் புரியாத விசயமாகவே இருந்தது.