சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 2

சீர்காழி கோவிந்தராஜன் குரலில், அறுபது ஆண்டுகளாக நான் கேட்டுவரும் எடுப்பான பாடல் ஒன்று. அது இந்த நூலின் பாடல் என்று இந்தக் கணம் வரை எனக்குத் தெரியாது. மார்கழி மாதத்தின் அதிகாலைக் குளிரில், ஆண்டாள் திருப்பாவையின் ஐந்தாம் பாடலான ‘மாயனை, மன்னு வடமதுரை மைந்தனைத், தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை. ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத், தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைப்’ பரவும் நாளில் இந்தப் பாடலை எழுதும்போது, அதன் ஓசை நயம் எனக்கு சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது.

சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 1

‘பனுவல் போற்றுதும்’ தொடரில் பழந்தமிழ் இலக்கிய வகைகளை பற்றி அறிமுகம் செய்யும் நாஞ்சில் நாடன், இம்முறை சிற்றிலக்கிய வகையான ‘மாலை’ வகை இலக்கியங்களை பற்றி பேசுகிறார் : “சிற்றிலக்கிய வகையினதாகப் பேசப்படும் 96 பிரபந்தங்களுக்குள் மாலை என்று முடியும் நூல்கள் 28 வகைகள் ஆகும். அங்க மாலை, அநுராக மாலை, இரட்டைமணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாம மாலை, பலசந்த மாலை, கலம்பக மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருத்த மாலை, மெய்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேனில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவ மாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டக மாலை, வீர வெட்சி மாலை, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை என்பன அவை”.

மும்மணிக்கோவை – இறுதிப் பகுதி

இருபத்தியோரு வயது இளைஞனின் வாக்குமூலம் இது. எனதாச்சரியம், ஒரு வாக்கியத்தில் அவர் கையாளும் கால்புள்ளிகள், அரைப்புள்ளிகள். இன்று அரைப்புள்ளி பயன்படுத்தி எவரும் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. இலட்சத்துக்கும் பக்கம் ஊதியம் வாங்கும் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் எவரும் இன்று தொல்காப்பியத்தின் எழுத்து-சொல்-பொருள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து பத்து சூத்திரங்கள் மனப்பாடமாகச் சொல்வாரா?

பனுவல் போற்றுதும் – மும்மணிக்கோவை

நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி கொப்பளிக்கும் இவ்வகை இலக்கண வரையறைகளுக்குள் இயங்க. நாம் எம்பாடு? நமக்கு விதித்தது சந்தம் இல்லாத, இலக்கணம் இல்லாத , எதுகை மோனை இல்லாத, இசைக் கணக்குகள் இல்லாத, தொடைகள் இல்லாத, சீர்தளை இல்லாத, எழுத்து எண்ணி பாப்புனையும் இறுக்கம் இல்லாத புதுக்கவிதை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டன்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது.

[…]

‘பனுவல் போற்றுதும்’ தலைப்பில் வேறு வகையான கட்டுரைகளை நான் தொடர்ந்து எழுதுவேன். படைப்பு இலக்கியமும் கை பற்றி இழுக்கின்றது. உங்கள் ஆதரவுடன் எல்லாம் சாத்தியமாகும். தமிழ் எமக்கு வாழ்நாளும் உடல்நலமும் வசதியும் தரும்!

– நாஞ்சில் நாடன்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி – 16

ஏதோ ஒரு உந்துதலில் ‘செந்தமிழ் காப்பியங்கள்’ என்றொரு கட்டுரை எழுதி, சிறு காப்பியங்களை விட்டு வைப்பானேன் என்று, ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எழுதி, அதுபோல் சிற்றிலக்கியங்கள் பற்றியும் எழுதத் துணிய, அது நாஞ்சில் பிடித்த புலிவால் ஆயிற்று. வாலை விட்டு விட்டால், புலி அடித்துத் தின்றுவிடும் என்பதால், வாலை விடாமல், அது இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஓடிக் கொண்டிருந்தேன். அல்லது ஆங்கிலத்தில் சொல்வது போல, bear hug. அதற்காக ஆயுளுக்கும் வாலைப் பிடித்துக் கறங்கிக் கொண்டிருக்க முடியுமா?

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

வாழை இலை, புன்னை இலை, புரசு இலை, குருக்கத்தி இலை, மாவிலை, பலா இலை, தென்னை இலை, பன்னீர் இலை ஆகியவற்றில் உணவு உண்ணலாம் என்கிறார் புலவர். புன்னை மரம் சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அதில் எங்கள் பக்கம் எவரும் உண்டதில்லை இன்றுவரை. மாவிலை, பலா இலை தொன்னை பிடித்துக் கஞ்சி குடித்ததுண்டு. குருக்கத்தி மரம் என்னால் இனங்காண முடியவில்லை. கேட்டதோடு சரி.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 14

இறைவனைத் துதிக்க, நாட்டு வரலாற்றினை வளமையை எடுத்துரைக்க, நீதி அறிவிக்க சதக இலக்கியம் பயன்பட்டுள்ளது. தமிழில் சிருங்கார சதகங்கள் எழுதப்பட்டுள்ளனவா, கிடைத்துள்ளனவா என்பதெல்லாம் நானறியேன். குருநாத சதகம் , கோகுல சதகம், கோவிந்த சதகம் போன்றவற்றுள் 102 பாடல்களும் தண்டலையாச் சதகம் 104 பாடல்களையும் கொண்டுள்ளன என்கிறார்கள்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 13

தமிழில் சதகம் எனும் இலக்கிய வகை எழுவதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே, வடமொழியில் சதகம் எனும் இலக்கிய வகை தோன்றி இருந்தது. ‘வடமொழியில் உள்ள சதகங்கள் தர்மம், காமம், மோட்சம் ஆகிய பொருட்களை விலக்கி, நூறு சுலோகங்களால் தனித்தனியே அமைக்கப்பட்டவை. தர்மத்தைக் கோரும் சதகங்கள் நீதி சதகங்கள் என்றும் காமத்தைக் கூறும் சதகங்கள் சிருங்கார சதகங்கள் என்றும் மோட்சத்தைக் கூறும் சதகங்கள் வைராக்கிய சதகங்கள் என்றும் பெயர் பெற்று விளங்குகின்றன. பெருங்கவிஞன் பர்த்ருஹரி எழுதிய நீதி சதகமும் சிருங்கார சதகமும் வைராக்கிய சதகமும் கி.பி. ஆறாம் நூற்றாண்டாகும்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- தக்கயாகப் பரணி

ஒட்டக்கூத்தர் பிரபந்தம் பாடுவதில் வல்லவர் என்பதினால், ‘கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்’ எனப் புகழ் பெற்றவர். ஆனால் இவர் பாடிய அந்தாதி எதுவும் கிடைக்கப் பெற்றிலோம். ‘ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 11

குலோத்துங்கன் படைகளில் நெருங்கி நடக்கும் யானைகள், கடல் நீரைப் பொழிகின்ற மலைகளைப் போல் மதம் பொழிகின்ற இரண்டு கன்னங்களை உடையன. நெருப்புப் பிறக்கும் மேகங்கள் என அவற்றின் விழிகளில் இருந்து கனல் பிறந்தன. பகைவரது யானைகளின், குதிரைகளின் உடல்களைப் பிளப்பன போன்று பிறைச் சந்திரனை ஒத்த இரு தந்தங்களை உடையன. உலகம் நடுங்கவும் வடவைக் கனல் போன்றும் முழங்கும் ஒலி எழுப்பின.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 10

பரணிப்போர் என்பது சாதாரண சண்டை அல்ல என்பது நமக்குப் புரிகிறது. யுத்தம், WAR என்பனவற்றுக்குச் சமமான தமிழ்ச்சொல் போர் என்பதுதான். எனினும் பரணிப்போர் என்பது அதையும் நோக்க அதிபயங்கரமானதாக இவண் வருணிக்கப்படுகிறது. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற’ என்ற தொடரின் அர்த்தம் புரிகிறது. நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், துப்பாக்கியும் பீரங்கியும் குண்டு வீசும் போர் விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு எண்ணூறு ஆண்டுகள் முந்தைய கோரம் இது. அந்தக் கோரத்தை, கொடுமையை செயங்கொண்டாரால் சொற்களால் எழுப்பிக்காட்ட முடிந்திருக்கிறது என்பதோர் சொல் கடந்த அதிசயம்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 9

தமிழ் இலக்கிய வளங்களின் உச்சங்களில் ஒன்று கடை திறப்பு. போருக்குச் சென்று, அமர் முடித்து, வெற்றிக் களிப்பில் வீடு திரும்புவர் வீரர்கள். நாட்டு மக்கள் வழி நெடுக அவ்வீரர்களைக் கொண்டாடுவர். ஆனால் பிரிவுத் துயர் உழன்ற இல்லக் கிழத்திகள், உள்ளே ஆர்வத்தோடும் வெளியே சினத்தோடும் வீட்டுக் கதவுகளைத் தாழித்துக் கொள்கின்றனர். அவர்கள் ஊடலைத் தீர்க்கவும் அடித்த கதவங்களைத் திறக்க வேண்டுவதுமான பாடல்கள் கொண்ட பகுதி கடை திறப்பு. கடை திறப்பு என்பதை Shop Opening என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. 54 பாடல்கள் இப்பிரிவில். காமம், கற்பனை, உவமை, சந்தம், கவிச்சுவை செறிந்தவை.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8

கலம்பகங்கள் அகம், புறம் என இரு பிரிவுகளிலும் பாடப்பெறும். புயவகுப்பு, அம்மானை, ஊசல் முதலிய பதினெட்டு உறுப்புகள் கொண்டது அந்தாதியாக அமைக்கப் பெறும். தேவர், அரசர் இவரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெறுவது. இன்று தேவர் எங்கு கறந்து உறைகின்றனரோ? அரசர் இனமும் அழிந்து போயிற்று. இனமானத் தலைவர்கள் மீது பாடலாம் எனில் கலம்பகம் பாடுவது எளிய யாப்பு முறையும் அன்று.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 7

எனக்குத் தனிப்பட்ட முறையில் சிலசமயம் கர்வமாக இருக்கும் நம்மாழ்வாரை நினைக்க. வெள்ளாளன் என்பதால் அல்ல. ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தாயார் ஊருக்கு அவர் வந்திருக்கிறார் தானே. திருப்பதி சாரத்தின் மேற்கில் பழையாற்றில் குளித்தும் கீழ்புறத்தில் தேரேகாலில் குளித்தும் அந்நன்னீரைக் குடித்தும் இருப்பார்தானே! அது எனக்கும் நேர்ந்திருக்கிறது தானே! அவர் வழிபட்ட திருவாழிமார்பனை நானும் வழிபட்டிருக்கிறேன் தானே!

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 6

காரைக்காலம்மையின் தமிழை, செய்யுளை, வெண்பாவின் நேர்த்தியை, நயத்தை வாசித்து உணர்தல் வேண்டும். எட்டாம் நூற்றாண்டுத் தமிழ் அப்படியொன்றும் நமக்கு இன்னும் அன்னியமாகிப் போய்விடவில்லை. இருமலுக்கு பனங்கற்கண்டுக் கட்டியை அலவில் ஒதுக்குக் கொள்வதைப் போல, ஒரு பாடலை மனதில் போட்டுக் கொண்டால் அது கரைந்து இனிப்புப் பயக்கும். முதலில் பொதுவான பொருள் புரிந்தால் போதும். சில சொற்களுக்குப் பொருள் முதலில் புரியாவிடின் ஒன்றும் மோசம் இல்லை. நாட்பட நாட்படப் புரியும். கொண்டல், கொண் மூ, கார்முகில், எல்லாம் மேகம் தான். அரவம், நாகம், சர்ப்பம் எல்லாம் பாம்பு தான். நாட்பட நாட்பட நாகம் எனில் யானை என்றும் பொருள் உண்டு என்பதும் அர்த்தமாகும்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5

முத்துக்களின் நிறம் எது நண்பர்களே! மனக் கண்ணில் உடனே தோன்றுவது வெள்ளை நிறம். ஆனால் இந்த பிள்ளைத் தமிழ் மூலம் ஒவ்வொரு முத்தின் நிறம் என்ன என்பதை முதன் முதலாய் நான் தெரிந்து கொண்டேன்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4

மிச்சில் எனில் மிச்சம் என்றும் பொருள். எச்சில் என்றும் பொருள். குமுதம் எனில் ஈண்டு ஆம்பல். ஆம்பல் மலரின் அமர்ந்த வாசனை இளம் பெண்களின் வாய் மனத்துக்கு ஒப்புமை. மிசைந்து எனில் உண்பது. ஆனால் தீம குமுதத்து அமுதத்தில் விருந்தாடுகிறான் முருகன். அதை நாங்கள் சொன்னோமா, பிறகேன் எங்கள் சிற்றில் சிதைக்கிறாய் எனும் மென் கோபமும் கெஞ்சலுடன் தொனிக்கும் அற்புதப் பாடல் இது. குமரகுருபரரின் மொழியாளுமையின் உச்சம் இந்தப் பிள்ளைத் தமிழ்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 3

பசுவையும் காளையையும் எருமையையும் எருமைக் கடாவையும் மாடு என்றழைக்கும் பருவத்துக்கு வந்து விட்டோம் நாம். இந்த யோக்கியதையில் மாட்டின் சுழிகள் பற்றியும் அவற்றுள் யோகச் சுழிகள் எவை, யோகமற்ற சுழிகள் எவை என்றும் சொன்னால் நமக்கு என்ன விளங்கும்? தாமணிச் சுழி, இரட்டைக் கவம், பாஷிகம் சுழி, கோபுரச் சுழி, நீர்ச் சுழி, ஏறு பூரான், லக்ஷ்மிச் சுழி, பட்டிச் சுழி, வீபூதிச் சுழி, ஏறு நாகம் என்பன நல்ல சுழிகள் என்றும்…

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 2

எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய பத்தும் தூது விடப்பட்டுள்ளன. இந்தப் பத்தினுள் மயில், பூவை, குயில் என்பன தூது போன இலக்கியங்கள் இன்று எல்லை என்கிறார்கள். மேற்குறிப்பிட்ட பத்தும் நீங்கலாக, அந்த வரையறைக்குள் அடங்காமல் பண விடு தூது, முகில் விடு தூது, தமிழ் விடு தூது, மான் விடு தூது, வசை விடு தூது, சவ்வாது விடு தூது, நெல் விடு தூது, விறலி விடு தூது, புகையிலை விடு தூதும்,வசை பாடிக் கழுதை விடு தூதும்கூட இருந்திருக்கின்றன.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

தமிழில் பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்தத் தொண்ணூற்றாறுக்கு வகை மாதிரிக்கான பிரபந்தங்கள் எழுதப்பட்டனவா, இன்னும் இருக்கின்றனவா எனும் தகவல்கள்கூட என்னிடம் இல்லை. நான் அறிந்து வைத்திருக்கும் வகைகள் ஆவன: கோவை, தூது, உலா, பரணி, கலம்பகம், காதல், மடல், பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், அந்தாதி முதலானவை. அவற்றுள்ளும் கோவை எனில் பல, தூது எனில் பற்பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. நான் கேள்விப்பட்ட, வாசித்த, அனுபவித்த சிலவற்றை மட்டும்- சாம்பிள் சர்வே போல- உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

செந்தமிழ்க் காப்பியங்கள்

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள். அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும்.

நினைவுகளின் சுவட்டில்

பரந்த வாசிப்பும், நம்பும் தீவிரமான இலக்கியக் கொள்கைக்கான அர்ப்பணிப்பும், அஞ்சாமையும், கூர்ந்த அவதானிப்பும், நேர்மையான அபிப்பிராயங்களும் வெ.சாவின் பலங்கள் என்பதை அவர் எழுதிய ஒரு நூலையேனும் வாசித்திருப்பவர் உணர இயலும். வெ.சாவுக்கு இந்த பலம் வந்த ஊற்றுக்கண், நாற்றங்கால், உரக்குண்டு எதுவென இந்த நூலை வாசிப்பவர் உணர இயலும். இலக்கிய விமர்சனமாக 12, நாடகம் சார்ந்த 3, ஓவியம் சிற்பம் பற்றி 3, சினிமா சார்ந்து 3, இன்ன பிற 3, என 24 நூல்கள். மொழி பெயர்ப்புகள் 3, தொகை நூல்கள் 4 என்பன தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு அவர் கொடை. என் நினைவு சரியாக இருக்குமானால், எனது முதல் கட்டுரையை நான் 1982-ல் எழுதினேன். அது ஒரு மதிப்புரையாக இருந்தது. அதுவும் வெ.சா கேட்டதற்குப் பணிந்து- ஆ.மாதவனின் நாவல், ‘கிருஷ்ணப் பருந்து’ பற்றியது. மதிப்புரை அல்லது கட்டுரை எழுத எனக்கு வரும் என்றே தெரியாது அப்போது.

காப்பிய இமயம்

வழக்கமாக மேடைப் பொழிவாளர்கள் பலரும் தம் கைவசமிருக்கும் நூற்றுக்கும் குறைவான கம்பன் பாடல்களையே எல்லாப் பந்திகளிலும் திரும்பத் திரும்ப விளம்புகிறார்கள். அதாவது கம்பனில், மேடைகளில் புழங்கும் பாடல்கள் ஒரு சதமானத்துக்கும் கீழே. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு ஒரு புருஷ ஆயுளையும் ஓட்டிவிடலாம். விளைவு திரும்பத் திரும்ப காதில் ஒலிக்கும் அதே நூற்றுக்கும் குறைவான பாடல்கள்.

நெடுஞ்சாலை

படைப்பாளி எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் போல்தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது உத்தியை அமைத்துக்கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். தற்செயலாக அமைவதும் திட்டமிட்டுக் கொள்வதும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு கூற்றுண்டு வண்டமிழில். இயல்பாக ஒரு மெக்கானிக் சொல்வதில்லையா 24/26 ஸ்பேனர் எடு என அது போல.

குணங்குடியார் பாடற்கோவை

எல்லோரும் நாத்திகம் பேசும்போது ஒற்றைத் தனியாளாய் எதிர் நின்று வாதாடுபவர் இருளப்பப் பிள்ளை பெரியப்பா. சிலசமயம் திருவனந்தபுரம் வாசம். எனவே, ‘கேரளாக் கொம்பையா’ எனப்பட்டப்பெயரும் உண்டு. வெற்றிலை – பாக்கு – புகையிலைப் பழக்கமும், பீடிப்புகையும் உண்டு. அவர்தான் சித்தர் பாதை பயின்றவர். சீட்டுக்களி இல்லாதபோது, ஆள் சேராதபோது உற்சாகமான மனநிலையில், அவர் தொண்டை திறந்து கம்பீரமாகப் பாடுவது மஸ்தான் சாகிபு பாடல்கள்.

மீன்கள் அன்றும் இன்றும்

‘மீன்கள் அன்றும் இன்றும்,’ நூலை எழுதியது முனைவர் ச.பரிமளா. தமிழ்ப்பல்கலைக்கழகம் 1991-இல் வெளியிட்டது. சிலர் மணக்கோலத்தில் கூடக் கிழவன் போல் தோற்றம் தருவதுண்டு. அதுபோல, வாங்குபோதே பழம் புத்தகமாகத் தோன்றியது. விலை குறிப்பிட்டிருக்கவில்லை. 280 பக்கங்கள் கொண்ட டெமி அளவிலான நூலுக்கு, கழிவு போக, என்னிடம் ஐம்பத்தி நான்கு ரூபாய் வாங்கினார்கள்.

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

அந்தண இளம்பெண், கைம்மை நோற்பவள், ஞானம் பெற்றாள், பாடல்கள் புனைந்தாள் எனில்- இருநூறோ, நானூறோ ஆண்டுகள் முந்திய சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கடும் தண்டனையாக ஜாதிப் பிரஷ்டம்.. சற்று யோசித்துப் பாருங்கள், ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட கன்னி கூடக் கழிந்திராத இளம் விதவை எங்கு போவாள், எதை உண்பாள், காமக் கடூரக் கண்களிலிருந்து எவ்விதம் தப்புவாள், எங்ஙனம் உயிர் தரித்திருப்பாள்?

எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு

பிறந்து, வளர்ந்து, உண்டு, படித்து, வேலைபார்த்து, தாம்பத்யம் நடத்தி, சீரியல் – சினிமா பார்த்து கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் ஓர் அற்ப மானுட சீவனுக்கு – விபத்தில் மாண்டால் இரண்டு இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுக்குத் தகுதியானவருக்கு – பெயர் வைக்க, எய்ட்ஸுக்கு மருந்து காணும் முயற்சி போல் தம்பதியர் உழைக்கும்போது, பல நூறு ஆண்டுகள் சீவித்திருக்கப் போகிற – சீவித்திருக்குமா என்பதோர் உப கேள்வி – புத்தகத்துப் பெயரிட எத்தனை சிரமப்பட வேண்டும்?

தமிழரும், தாவரமும்

‘தமிழரும், தாவரமும்’ என்றொரு புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. கண்ணில் பட்ட இடம் பொது நூலகம், தற்செயலாக. நூலகர் என் வாசகர், உறவினர், நண்பர். எனவே அவர் பெயரில் பதிவு செய்து எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் படியின் முதல் வாசகன் நான். பெரும்பாலும் இதுபோன்ற நூல்கள், கிராம நூலகங்களில் ஒரு வாசகனால் கூட எடுத்துப் புரட்டிப் பார்க்கப்படும் யோகமற்ற சோகத்தில் வெறிதே உறங்கிக் கிடக்கின்றன. இன்னொரு வாசகரால் படிக்கப்படாமலே போய்விடும் சாத்தியமே அதிகம்.

பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள்

பெருஞ்சொல் அகராதி தொகுதி இரண்டும் நான்கும், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிகள் ஒன்றும், இரண்டும், நான்கும் வாங்கினேன். விற்பனை செய்யும் ஊழியர் பெருந்தன்மையுடன் இருபத்தைந்து விழுக்காடு கழிவு செய்து பில் கொடுத்தார். மேலதிகம் தகவல் ஒன்றும் சொன்னார். பேரறிஞர், மாமேதை, இன்னாட்டு இங்கர்சால், தென்னாட்டு பெர்னாட் ஷா என்றெல்லாம் அறியப்பட்ட அண்ணாதுரை பிறந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஐம்பது சதமானம் தள்ளுபடி என்று. வேறு எந்தத் தமிழ்க் கொம்பன் பிறந்த மாதமானாலும் இருபத்தைந்து விழுக்காடுதான். வரும் செப்டம்பரில் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.