2022

சொல்வனம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடமாவது தொற்று நோய்கள் முற்றிலுமாக அகன்று இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். இயற்கையின் சீற்றங்களும் தணிந்து உலகெங்கும் மனிதர் நன்னிலைக்குத் திரும்பினால் அது உபரி நன்மை.  *** ஓரிரு தினங்கள் முன்பு எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு சாஹித்ய அகதமியின் “2022”

அறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் அடுத்த இதழ் (240) வங்க மொழி இலக்கியம், கலை ஆகியவற்றைச் சிறப்பிக்கும் இதழாக அமையும்.

மகரந்தம்

அரிஸ்டாட்டலின் காலம்தொட்டு மனிதனின் சிந்தனை இயல்புகளை பதிவு செய்யத் தொடங்கியிருந்தாலும் நாம் விலங்குகளின் இயல்பிலிருந்து எத்தனை தூரம் விலகி இருக்கிறோம் என்பதைக் காட்டும் தொகுப்பாக அது இருந்து வந்திருக்கிறது. சகஜீவனான மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூட சரியான கருவிகள் இல்லாத மனிதனுக்கு விலங்குகளுக்கு பசி, தூக்கம், வலி போன்ற எந்த உணர்வுகளும் கிடையாது என அறிந்துகொள்ள பலகாலம் ஆனது என்பதில் அவ்வளவாக ஆச்சர்யம் இல்லை. வவ்வாலாக ஒருவன் மாறினால் அவனது சிந்தனையில் எவ்விதமான மாற்றங்கள் நடக்கும்? இன்றைய காலத்தில் நாம் விலங்குகளின் அரிதான பல நடத்தைகளைப் பற்றிப் படிக்கிறோம் – கால் உடைந்த ஒட்டகத்தைப் ரெண்டு நாட்கள் பார்த்துக்கொண்ட யானை, பல வருடங்கள் பிரிந்திருந்த மனிதனை அடையாளம் கண்டுகொள்ளும் சிங்கம், டால்ஃபின்களின் தன்னலமற்ற செயல்கள் போன்றவற்றை எளிய அறிவியல் கொண்டு விளக்க முடியுமா?

பிரக்ஞையை அளவிடுதல்

வெகுஜன தளத்தில் அறிவியல் போக்குகளை அறிமுகப்படுத்துவதில் மிஷியோ காகு பிரபலமானவர். பிரக்ஞையை குறித்து அவரது ஒளித்துண்டு இங்கே. Michio Kaku: Consciousness Quantified

குளக்கரை

இது பற்றி இந்திய முற்போக்குகள் ஏதும் போராட்டம் நடத்துவார்களா என்று நாம் வேடிக்கை பார்க்கலாம். வேலைக்குப் போகாமல் டீ குடித்து அரட்டை அடித்து வெட்டியாக உலவ இன்னொரு வாய்ப்பு என்று அவர்களுக்குத் தோன்றாமலா இருக்கும், தோன்றி இருக்கும். ஆனால் இதைச் செய்வதோ அவர்களின் அபிமான மதமான அமைதி மார்க்கம். எனவே இதை எப்படித் திரித்து இந்துக்களின் சதி, இந்துத்துவாக்களின் ஃபாசிஸம் ஒழிக, இந்தியா உடைக, பாகிஸ்தான் ஜிந்தாபாத், காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுவி, மோடியைக் கைது செய் என்ற அவர்களது என்றென்றைக்குமான கோஷங்களோடு இந்த நிதி திரட்டலே யூத, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி, ஆர் எஸ் எஸ்தான் இதன் ஆணி வேர் என்றும் போஸ்டர்கள் எழுதலாமா என்றும் யோசிப்பார்களாக இருக்கும்.

இணைய உரையாடல் – ஆள் குறைப்பு, ஐ.பி.எம்.

இது ஐபிஎம் மில் உலகெங்கும் உள்ள பிரச்சினையா அல்லது அமெரிக்கா அல்லாத இடங்களில் உள்ள பிரச்சினையா? இதில் என்ன அளவு மிக்க உயர் கல்வி பெற்றவர்களின் ஆதிக்கம் உள்ளது? நேற்று உயர்கல்வித் தகுதி பெற்றவர்களின் தகுதிகள் இன்று பயனற்றவையாக ஆகும் நிலை பல துறைகளில் பல தொழில் முகங்களில் ஆகி விட்டது. காட்டாக கெமிகல் ஃபிஸிக்ஸ் அல்லது ஆர்கானிக் கெமிஸ்ட்ரி என்ற துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள் இன்று கிட்டத்தட்ட வேலைக்காகாதவர்களாகப் பல கெமிகல் நிறுவனங்களிலும், மருந்துதயாரிப்பு நிறுவனங்களிலும் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் குறுக்கு வெட்டாக இருக்கும் பல இன்றைய தொழில் நுட்பத்துறைகளுக்குப் பக்கவாட்டிலோ, மேல் நோக்கியோ தாவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

மகரந்தம்

இங்கிலாந்தில் இப்போது சூரியன் உதித்து அஸ்தமிக்கிறது என்பதோடு மட்டுமல்ல, அஸ்தமித்தபின் இங்கிலாந்தின் தெருக்கள், ஊர்களில் ஒளிரும் தெருவிளக்குகளும் இப்போது மங்கி, அணையும் நிலையில் இருக்கின்றன என்று இச்செய்தி அறிக்கை சொல்கிறது. வருமானம் அதிகம் இல்லாத நிலைக்கு வந்திருக்கிற பிரிட்டிஷ் அரசு, சமீபத்தில் தன் வருடாந்தர வரவுசெலவுக் கணக்கில் துண்டு விழுவதைத் தவிர்க்கவியலாமல், ஏற்கனவே கொண்டுள்ள கடன் பளுவையும் சமாளிக்க இயலாமல், தன் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்க முயல்வதாகப் பாவலா காட்டுகிறது.

மார்கழி கணங்கள்

மார்கழியின் கலைக் கொண்டாட்டங்களை, உலக கலை ரசிகர்களுக்காக ஒரே இடத்தில் தொகுத்து அளிக்கிறது, margazhi.org தளம். இத்தளத்தில் சார்பாக நடத்தபடும் ‘மார்கழி மனநிலைகள்’ புகைப்பட போட்டியின் முதற்கட்ட வெற்றியாளர்களின் படங்களின் தொகுப்பு இதோ.

ராஜம் கிருஷ்ணன் – அஞ்சலி

கலைமகள், ஆனந்த விகடன் நாவல் போட்டிகள், சோவியத்லாந்து-நேரு, இலக்கிய சிந்தனை, பாரதீய பாஷாபரிஷத், தமிழ் நாடு அரசு , சாஸ்வதி பரிசுகளையும், சாகித்ய அகாதமி, திரு.வி.க., தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் முதலிய விருதுகளையும் பெற்றவர். அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘ஊசியும், உணர்வும்’ என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத்தொகுப்பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.

பெண்கள் சிறப்பிதழ்

சிறப்பிதழ் என்றால் இவையெல்லாம், இவர்களெல்லாம் இருக்க வேண்டும் என்கிற Blue Print பற்றியெல்லாம் எண்ணாமல் பல் கலைகளையும், இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும், பல வயதுப் பகுப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர்களின் தமிழ் எழுத்துகளையும் மற்றும் உலக, அகில இந்திய எழுத்துகளின் மொழி ஆக்கங்களையும் கொண்டிருக்கும் ‘பெண்கள் சிறப்பிதழை’ மிகுந்த மகிழ்ச்சியோடு வெளிக் கொணர்கிறோம்.

மூன்று விருதுகள்

எழுத்தாளர் அம்பை முன்னின்று நடத்தி வரும் ஸ்பாரோ(SPARROW – Sound & Picture Archives for Research on Women) என்ற ஆவணக் காப்பு அமைப்பிற்கு இந்த ஆண்டின் பிரின்ஸ் க்ளௌஸ்(Prince Claus) விருது வழங்கப்படுகிறது.

 

கடந்த நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எம்.ஜி.சுரேஷ் அவர்களுக்கு இலக்கிய வீதியும், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து வழங்கும் 2014-ஆண்டுக்கான அன்னம் விருது வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் வெ. சுரேஷ் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை பிரிவினரால், கோவை மாவட்டத்தின் நேர்மையான அலுவலர்களுள் ஒருவர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாகித்திய அகாதமியுடன் மொழிபெயர்ப்பாளராக பதிந்து கொள்ள

சாகித்திய அகாதமி, தேசிய மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்துகொண்டிருக்கிறது. இந்திய மொழிகளிலிருந்து பிற இந்திய/வேறு மொழிகளுக்கோ இல்லை பிற இந்திய/வேறு மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கோ மொழிபெயர்ப்பவர்கள், தங்களை சாகித்திய அகாதமியுடன் பதிவு செய்துகொள்ளலாம். இப்பட்டியல், பதிப்பாளர்கள், வெளியுறவு அலுவலகங்கள், இலக்கிய அமைப்புகள், அரசு அமைப்புகள், கல்வி /ஆய்வு “சாகித்திய அகாதமியுடன் மொழிபெயர்ப்பாளராக பதிந்து கொள்ள”

வாசகர் மறுவினை

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு வாசித்தமை குறித்து……
வியந்து படிக்க ஆரம்பித்த நான் வியப்போடவே முடித்தேன்.
சகோதரி அம்பையை மெச்ச எனக்கு இலக்கிய அனுபவம் போதாது. ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

மகரந்தம்

ஆங்கிலத்தில் introvert என்றால் என்ன அர்த்தம்? விக்கிப்பிடியாவைக் கேட்டால், ‘தன்னுடைய நலத்தைப் பற்றி சிந்திப்பவர்’. பொதுவில் பேசத் தயங்குபவரையும் அறிமுகமில்லாதவர்களிடம் ஒடுங்கி இருப்பவர்களையும் அகமுக சிந்தனையாளர் என நினைக்கிறார்கள். தடாலடியாகக் கூட்டங்களில் முழங்குபவர்களையும் படோடாபமாக களத்தில் இறங்கி களேபரம் செய்பவர்களை எக்ஸ்ட்ரொவெர்ட் என எதிர்ப்பதத்தில் வைக்கிறார்கள். இந்தப் பிரிவுகள் சரியா? நீங்கள் இதில் எந்த ரகம்? எப்படி இந்த வகையறாக்கள் தொக்கி நிற்கின்றன என ஸ்காட் பாரி கௌஃப்மான் அலசுகிறார்

ஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல்

தமயந்தி: சினிமாக்கள் மொத்தம் 7 கதைக்கருக்களைச் சுற்றியே எடுக்கப்படுகின்றன என்கிறார்கள். பெற்றோர் எதிர்க்கும் காதல் என்பதுதான் இவற்றில் மிகவுமே அடிச்சுத் துவைக்கப்பட்ட ப்ளாட்டோ? லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே? அதிலே 100 ரூபாய் என்னுடையது. வேறு யாராவது பார்த்தீர்களா?

வாசகர் மறுவினை

கதையைப் படித்து முடித்ததும், அவர் இளமையில் வசித்த ‘லான்சர் பாரக்’ சென்று தற்போதைய நிலையைப் பார்த்து எடுத்த சில புகைபடங்களை சொல்வனத்திற்காகப் பகிர்ந்து கொள்கிறேன். பழைய கட்டிடங்கள் அடுக்கு
மாடிகளாக ஆகியிருந்தன. காலனியிலுள்ள சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய படி இருந்ததைப் பார்த்ததும் 18 ம் அட்சக்கோடுகளில் அவ்ர் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடியதைப் படித்தது நினைவில் வந்தது.

மகரந்தம்

மேற்கில் மிருக வளர்ப்பு என்பது அனேகமாக எல்லா நகரங்களிலுமே தடை செய்யப்பட்டிருக்கிற ஒன்று. நாய்கள், பூனைகள் போன்ற சில வளர்ப்பு மிருகங்களுக்கு விலக்கு இருக்கும். ஆனால் அவையும் பெருமளவு நகர அனுமதி பெற்ற மிருகங்களாக இருக்க வேண்டி வரும். சமீபத்தில் அமெரிக்காவிலாவது ஓரளவு இந்தத் தடைகள் விலகி வருகின்றன. பலர் பலவித முன்னாள் குடியானவ வாழ்வுக்குத் திரும்ப விரும்புகிறார்கள். அவர்கள் கோழி வளர்ப்பை மேற்கொள்ள முனைகிறார்கள். .

வாசகர் மறுவினை

சொல்வனம் 100 வது இதழ் நல்ல கட்டமைப்போடு வெளிவந்திருக்கிறது. அசோகமித்திரனின் படைப்புகளைக் குறித்த கட்டுரைகள் முக்கியமானவையாக தோன்றுகிறது. ஒரு இலக்கிய இதழ் நூறாவது பிரதி காண்பது மகிழ்ச்சியான விசயம் தான்.

அறிவிப்பு

இது சொல்வனத்தின் நூறாவது இதழ். இம்மகிழ்ச்சித் தருணத்தில் இதைச் சாத்தியமாக்கிய வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்புவோருக்கும் எங்கள் இதயப் பூர்வமான நன்றி. தமிழ் செம்மொழியாய் இருப்பதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அநாதி காலமாக இம்மொழியில் சிந்தித்து, பேசி, எழுதி வரும் கோடிக் கணக்கான சாமான்ய மக்கள். இன்னொன்று இதன் செழுமையையும், வளமையையும், சீரிளமைத் திறனையும் தம் எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கட்டிக் காத்து வரும் இலக்கிய கர்த்தாக்கள். பாரதியுடன் துவங்கிய நவீன கால தமிழ் இலக்கியத்தின் முதன்மை இடத்தில் இருக்கும் சிகரங்களில் ஒருவரான திரு. அசோகமித்திரன் அவர்களின் சிறப்பிதழாக இந்த நூறாவது இதழை வெளிக் கொணர்வதில் பேருவகையும், பெருமிதமும் கொள்கிறோம்.

அசோகமித்திரனுடன் ஓர் உரையாடல்

நாவல் வடிவத்துக்கே சில குறைகள் உண்டு.
அது நீளமா போயிடறதாலயே, கதையை வேறே வேற காலகட்டங்கள் சொல்றதாலயே, அதுலே கொஞ்சம் பிழைகள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. பர்ஃபக்ட் நாவல்னு தேர்ந்தெடுக்கறது ரொம்ப கஷ்டம். உலக இலக்கியத்திலே எனக்கு தெரிஞ்ச அளவிலே, அப்படி பர்ஃபெக்ட்னா – சின்ன நாவல்கள்லதான் கண்டுபிடிக்க முடியறது. ஆல்பர்ட் காமு எழுதினது, ‘த அவுட்சைடர்’ன்னு ஒண்ணு எடுத்துண்டாக்க, அது அப்படியே, ஒண்ணுமே பிரிக்கவே முடியாது, சேர்க்க முடியாது. கரெக்ட்டா இருக்கும். காஃப்காவோட நாவல்களும் கரெக்டா இருக்கும். ஆனா காஃப்காவே ஒரு லாங்கர் பீஸா, இன்னும் நீளமா எழுதணும்னு ஆசைப்பட்டிருக்கார் – அவருக்கு சார்ல்ஸ் டிக்கன்ஸ் மாதிரி எழுதணும்னு ஆசை, சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவரோட சமகாலத்தவர் இல்லை, செத்துப் போயிட்டாரு, ஆனா அவர் எவ்வளவு பேரை சந்தோஷப்படுத்தினார்… அந்த மாதிரி தானும் எழுதணும்னு அதை நினைச்சு ஒண்ணு எழுதினார், ‘அமெரிக்கா’னு. ஆனா அது அவ்வளவு வெற்றிகரமா வரலை. அது என்னன்னா இந்த நீளமும் – அதுலே ஏதோ சங்கடம் இருக்குனு எனக்கு தோணறது, இல்லே. என்னால பெருசாத்தான் நினைக்க முடியும், எழுத முடியும்னா இதுலெ ஒண்ணும் நாம யாரையும் தடை சொல்ல முடியாது. அதுதான் உத்தமமானதுன்னு சொன்னாக்க உத்தமமானதுன்னு நாம ஒத்துண்டுட்டா போறது.

டார்வின் தினம்

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகமெங்கும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது. டார்வினை அறிமுகம் செய்யும் ஒரு புகைப்பட தொகுப்பு இங்கே. அறிவியலை காதலிப்போம். அன்று காதலர் தினமும் கூட.

திரு.ஐராவதம் அவர்களுக்கு அஞ்சலி

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஐராவதம் என்ற புனைபெயரில் எழுதியவரும், தமிழிலக்கிய ஆர்வலர்களிடையே நன்கு தெரிய வந்தவருமான மூத்த எழுத்தாளர் ஆர்.சுவாமிநாதன் சில தினங்கள் முன்பு சென்னை மாநகரில் காலமானார்.எழுத்து பத்திரிகையின் காலம் தொட்டே இலக்கிய உலகில் சஞ்சரித்தவர். 60களின் இறுதியில் பிரபலமாகி இருந்த, நடை, கசடதபற, ஞானரதம் போன்ற இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதியவர். 1974 இல் ’பிரக்ஞை’ மாத இதழ் துவங்கிய போது அதைத் துவக்கிய முன் அனுபவமில்லாத இளைஞர்களுக்கு நல்ல ஆசிரியராகவும், இலக்கியப் படைப்புகளைச் சீர்தூக்குவதில் வழிமுறைகளைச் சுட்டியவராகவும் இருந்தவர்….

உலகம் கொண்டாடும் புத்தாண்டு

புத்தாண்டை அமெரிக்காவில் இருந்து அம்ரிட்சர் தங்கக்கோவில் வரை எப்படி வரவேற்றார்கள் என்னும் புகைப்படத் தொகுப்பு:

மகரந்தம்

நம்முடைய தலைமைச் செயலகம் எவ்வாறு இயங்கும் என்பதை கணினி மூலம் பார்க்கலாம். என்ன என்ன செயல்களை நடத்தும்போது எவ்வாறு இயங்கும் என்பதை கணித்திரை வழியாக உருவகப்படுத்தி பார்க்கலாம். ஆனால், சிரியாவில் உயிர்க்கொல்லிகுண்டுகளை அரசே போடும்போது தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் மூளையும்; ”அது அவர்கள் உள்ளூர் பிரச்சினை… அதில் தலையிட நாம் மூன்றாம் மனிதர்கள் யார்?” என ஒதுங்கி நிற்கும் மூளையும் எப்படி முடிவெடுக்கிறது? அதை படம் பிடித்து அறிவதுஎப்படி என்னும் ஆராய்ச்சி கடந்த பதினைந்தாண்டுகளில் எங்கே முன்னேறி இருக்கிறது?

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைக் குறிப்புகளை அரிய புகைப்படங்களையும் அவரைக் குறித்த ஒலிப்பதிவுகளையும் கொண்டு இங்கே தொகுத்திருக்கிறார்கள்.

மகரந்தம்

அரிஸ்டாட்டிலும் டேகார்த்தும் கலிலீயோவும் மாக்கியவெல்லியும் திருடு போய்விட்டார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்களின் பண்டைப் பிரதிகள் காணாமல் போய்விட்டன. ஒவ்வொரு புத்தகமும் சராசரியாக பத்து பதினைந்து மில்லியனுக்கு ஏலம் போகும். நேப்பிள்ஸ் நூலகத்தின் காப்பாளரும் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் எப்படி கால்முளைத்து சென்றன என அறியேன் என்று கைவிரித்து விட்டார்.

2013: புரட்டிப் போடும் 10 புதிய நுட்பங்கள்

தனிமங்களைக் கலைத்துப் போட்டு புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது பழைய வேதியியல் நுட்பம். கணினியைக் கொண்டு பொருத்தமான தனிமங்களை மாற்றி மாற்றிப் போட்டு பொருத்தமான சேர்மங்களைக் கண்டுபிடிக்க வைப்பது தற்கால வேதியியலின் நுட்பம். எளிமையாகப் பொருந்தக் கூடியவை வெண்நிறத்திலும், பொருந்தாதவை கருநிறங்களிலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே போல் கரிவளி காப்பகம் “2013: புரட்டிப் போடும் 10 புதிய நுட்பங்கள்”

இணைய உரையாடல் – பெற்றோர்- குழந்தைகள் உறவு

இது மாறிவருகிறது. பெற்றோர்- குழந்தைகளிடையே மன அழுத்ததிற்கு இன்னொரு பெரிய காரணம் அவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகளை குழந்தைகளின் ஆர்வம், ஆற்றல் இவற்றிச் சார்ந்து எடுக்காமல் பெற்றோர் தம் கனவுகளை அவர்கள் மேல் திணிப்பதும்தான்., போர்ட் தேர்வுகளுக்கு முன்பு, பரிட்சை முடிவுகள் வெளியாகும்போதும்தான் எத்தனை தற்கொலைகள்!

மகரந்தம்

ஒரு ராணுவமே எப்படி மரக்கறி உணவை நம்பி நடத்தப்பட முடியும்? உலர்ந்த மாமிசம் என்பது ராணுவங்களில், குறிப்பாக மேலை ராணுவங்களில் அடிப்படை உணவு, அல்லது தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட மாமிசம் அப்படிப்பட்ட அடிப்படை உணவு என்றுதானே இத்தனை காலமாக இருந்தது. நார்வேயின் ராணுவம் இப்போது மரக்கறி உணவைத் தன் படையாட்களுக்குக் கொடுக்கப் போகிறதென்றால் அதன் செயல்முறைகள் என்ன்? இந்தக் கட்டுரை அப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று விளக்குகிறது.

பெண்களுக்கு அநியாயமாய் அநியாயம் செய்யும் நாடுகளின் பட்டியல்

பெண்களுக்கெதிராய் செயல்படும் நாடுகள் எவை? இருபாலாருக்கும் கல்வி பயில சம உரிமை கிடைக்கிறதா என்பதில் துவங்கி அரசியலில் எவ்வளவு பேர் ஈடுபடுகிறார்கள் என்பது வரை ஆராய்ந்து இந்தப் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு 23ஆம் இடம் கிடைத்திருக்கிறது.

மகரந்தம்

ஃப்ரான்ஸீனுக்கு ஒரு மஹா கணபதி கிடைத்திருக்கிறார். இன்று நேற்றல்ல… நாற்பது வருடங்களாக கூட வருகிறார். கல்யாணமான பிறகும் அவரின் மேஜையை அலங்கரித்திருக்கிறார். கல்லூரி கல்லூரியாக வேலை மாறினாலும் சுவரில் அருள்பாலிக்கிறார். மேற்கத்திய உலகில் நம்பிக்கைகள் ரொம்ப அதிகம். சொந்த அணி ஜெயிக்க வேண்டுமானால் ஜட்டி கூட மாற்றாமல் அலுவலுக்கு வருபவர்கள் அதிகம். அவர்களுக்காக பிள்ளையாரின் பெருமையை எடுத்துரைக்கிறார்.

பாரத் ரத்னா CNR ராவ் அவர்களுக்கு சொல்வனத்தின் வாழ்த்துக்கள்!

இந்திய வேதியியல் விஞ்ஞானி. முழுப்பெயர் சில வாசனை மூலக்கூறுகள் போல நீண்டது. சிந்தாமணி நாகேஸ ராமசந்திர ராவ். அவர் ஆய்வுக்கூடத்தில் முதன் முதலில் கால்வைத்தே 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் ஒரு வருடத்தில் 80 வயது தாத்தா. வேதியியல் என்ற துறைதான் அவரது சுவாசம், தவம் எல்லாம்….

ஆறு பேர் ருசிக்கிறார்கள் – ஆடு

விதூஷகன் : தமிழில் ஆடு என்றால் ஆடுவாயா? ஆட்டை வளர்த்து வெட்டுவாயா? ஆடு, புலி, ஆட்டம் வியூகம் வகுப்பாயா? ஆட்டை போடுவாயா?

இணைய உரையாடல் – ஆண்பார்வை

பெண்களின் மனோநிலைகள், சமூக நிலைகள், பெண்ணியம் என்ற கருத்தியலால் ஏற்பட்ட மாறுதல்கள், பாதிப்புகள் போன்றவற்றைப் பற்றி உரையாடினோம். இலக்கியத்தில் மட்டுமல்லாது அன்றாட வாழ்விலும் ’ஆண் பார்வை’ என்பது என்னவொரு உபாதை, அது கரிப் பிசின் போல எல்லாவற்றையும் குறைப்படுத்துகிறது என்ற ஒரு கருத்து பற்றியும் பேசி இருக்கிறோம்.

மூவகைப் போட்டி

உங்களுக்கு நீஞ்சத் தெரியுமா? சைக்கிள் விடுவீர்களா? ஓடவும் வருமா? அப்படியானால் நீங்களும் டிரையாத்லான் போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த மாதம் ஹவாய் மாநிலத்தில் நடந்த வருடாந்திர இரும்பு மனிதன் உலகக் கோப்பையில் இருந்து சில படங்களைக் காண வாருங்கள்.

மகரந்தம்

பல்லாயிரம் மக்களின் வாழ்வை அழித்து, பல கோடி உயிரினங்களை ஒழித்த ஒரு பெரும் விபத்தை, இத்தனை ஆண்டுகள் துப்புத் துலக்கி, இறுதியில் ஒரு சில தனி நபர்களை மட்டும் தண்டித்து விட்டு வழக்கை இழுத்து மூடப் போகிறது அமெரிக்க முதலிய அரசு. பெரும் தனக்காரர்களின் பலம் உலகப் பொருளாதாரத்தில் அத்தனை வலுவாக உள்ளது. இந்தியாவில் எத்தனை அழிப்புகளை இவர்கள் ராகு காலத்தின் ஆட்சியில் செய்யப் போகிறார்களோ.

லூயீஸ் எர்ட்ரிக் – கதை அறிமுகம்

பெண்குழந்தை, ஊனமானது, வாழப்போவதில்லை என்பது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான ஆண், ஊனமற்றது, வாழக் கூடியது தேர்வு செய்யப் படுகிறது.
கழித்துக் கட்டப்பட வேண்டிய உயிரிடம் தருவதற்கு இருக்கிறது. வாழ்வுக்கு உகந்ததென்று தேர்ந்து வளர்க்கப்பட்டதிடம் அதை வாங்குவதற்குக் கூட திராணி இல்லை.

ஃபாத்வா மீறுதல்: இந்திய இஸ்லாமியர்களில் புகைப்பட பெண்கள்

”இஸ்லாமில் புகைப்படம் எடுப்பது பாவச்செயலாகும். முஸ்லீம் சட்டப்படி குற்றமாகும். புகைப்படம் எடுப்பதற்கு எதிராக ஹதீதுகளில் எச்சரிக்கை இருக்கின்றது” என தாரூல் உலூம் பத்வா விதித்திருந்தது. இதை மீறி இஸ்லாமியப் பெண்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுக்கொடுப்பதில் ஆவாஸ்-இ-நிஸ்வான் அமைப்பு முனைப்புடன் ஈடுபடுகிறது. வீட்டிற்க்குள்ளே முடங்கிக் கிடக்கும் முஸ்லீம் பெண்கள் வெளியில் “ஃபாத்வா மீறுதல்: இந்திய இஸ்லாமியர்களில் புகைப்பட பெண்கள்”

From Atlantis to Noah’s Ark, we have long been drawn to stories of submerged lands. What lies beneath the flood myths?

மகரந்தம்

இது ரஷ்யாவில் மட்டும் நடக்கும் கொடுமை இல்லை. அங்கு கட்டாய ராணுவப் பணி என்பது இருப்பதால் இளைஞர்கள் இரண்டு வருடமாவது ராணுவத்தில் சிக்கிக் கொள்ளும் பயங்கரம் இருக்கிறது. மாறாக அமெரிக்க ராணுவமோ மக்கள் தாமாக விரும்பிச் சேரும் வகைப் படை. இதில் சேர்பவர்கள் அனேகமாக கீழ் மத்திய நிலை குடும்பத்து இளைஞர்கள், விவசாய நிலப்பகுதிகளிலிருந்தும், சிற்றூர்களிலிருந்தும், மத நம்பிக்கைகள் அதிகமாக உள்ள சமூகஙகளிலிருந்தும் வருபவர்கள். அனேகமாக உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர்கள். நகர்ப்புறங்களில் இருந்து சேர்பவர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, வறுமைக் கோட்டுக்கு அருகில் உள்ள குடும்பத்தினராகவோ, மத நம்பிக்கை அதிகம் உள்ளவராகவோ இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத்தில் சில வருடங்கள் பணி புரந்தால் குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சேரும் குடியேற்றக் குடும்பத்தினரும் இதில் உண்டு. இதனாலோ என்னவோ அமெரிக்க ராணுவத்தில் மோசமான வன்முறை அத்தனை அதிகம் இல்லை, என்றாலும் இங்கும் பெண்கள்,சிறுபான்மையினர் மீது அடக்கு முறை அல்லது பால் வன்முறை ஆகியன செலுத்தப்படுகின்றன. உலகில் பல ராணுவங்களிலும் இந்த வகைக் கொடுமை நுழைவு நிலைப் பயிற்சியாளர்கள் மீது பாய்கிறது என்றே தெரிகிறது.

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம்

அவர்கள் அனைவரும், (கோக்கப்பட்ட) நூல் அறுந்த ரத்னங்கள் போலவும் சிறகுகள் வெட்டப்பட்ட பக்ஷிகள் போலவும் மகிழ்ச்சியற்ற மனமுள்ளவரானார்கள். புகழத்தக்க செய்கைகளை உடைய அந்த அர்ஜுனனால் விடுபட்ட அந்த வனமானது, குபேரனால் விடுபட்ட சைத்ரரதமென்னும் உத்யான வனம் போலாயிற்று. ஜனமேஜயரே! ஆண்மையிற் சிறந்தவர்களான அந்தப் பாண்டவர்கள் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிந்ததனால் ஸந்தோஷத்தை அடையாதவர்களாவே காம்யக வனத்தில் அப்பொழுது வஸித்து வந்தனர். பரதர்களுள் சிறந்தவரே! பிராம்மணர்களுக்காகப் பராக்கிரமம் செலுத்துபவர்களும் மஹாரதர்களும் புருஷ ஸ்ரேஷ்டர்களும் பகைவரை அடக்குகிறவர்களுமான (பாண்டவர்கள் கானகத்தில்) மிக அலைந்து சுத்தமான பாணங்களால் யாகத்துக்குத் தக்கவையான பலவித மிருகங்களைக் கொன்று வனத்தில் கிடைப்பதான (அந்த) ஆகாரத்தைக் கொண்டுவந்து நாள்தோறும் பிராம்மணர்களுக்குக் கொடுத்தார்கள்.

பெர்லின் நகரின் இந்துக்கோவில்

எண்ணூறாயிரம் யூரோ செலவில் ஜெர்மனியின் தலைநகரில் கட்டப்பட்டிருக்கும் ஹிந்துக் கோவில் குறித்த புகைப்படத் தொகுப்பு: http://www.spiegel.de/fotostrecke/photo-gallery-berlin-s-celebrates-its-first-hindu-temple-fotostrecke-101197.html

மகரந்தம்

சீனா வேறென்னென்னவோ திசைகளில் மக்களை ஓரம் கட்டினாலும், உற்பத்தித் திறனைப் பெருக்குவதில் கவனம் செலுத்துகிறது. விளைவு இன்றைய தலைமுறைகளுக்கு நாசகரமாக இருக்கலாம். நாளைய தலைமுறைகளுக்குக் கொஞ்சமாவது வளர்ந்த நாடொன்றில் வாழ்வதான உணர்வைத் தர வாய்ப்பு இருக்கிறது. இந்த அமெரிக்கச் செய்தியறிக்கையில் சீனாவின் அதிவேக ரயில் பாதைகளின் நன்மைகள் (அதிகமானவை) தீமைகள் (குறைவு) எல்லாம் பேசப்படுகின்றன.