நாவலின் தொடக்கத்தில் நாற்பதை நெருங்கும் பெண்ணாக அறிமுகமாகும் லீலா தன் கடந்த காலத்தை நினைவுகூறுவதன் வழியாக, அவளது குழந்தைப் பிராயம், பதின்ம வயது மாற்றம் பின் இளவயதிலேயே திருமணம் எனத் தன் வாழ்வை மீண்டும் மீண்டும் கனவுகளாலேயே அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்வதாக இந்தக் குறுநாவல் அமைந்திருக்கிறது. லீலா தனது நினைவுகளை மீட்டெடுக்கும் விதம், அவளுக்கு கடந்தகாலம் என்பது நினைவுகள் அல்ல; காலத்தின் முன் எப்போதும் பதினாறு வயதுப் பெண்ணாகத் துள்ளிக்குதிக்க விரும்புகின்ற அவளால், இயல்பாக சுவாசிக்க முடிகின்ற ஒரே உலகம் எனக் காட்டுகிறது.
Tag: சந்திரா தங்கராஜ்
சந்திரா தங்கராஜின் ‘மலையேற்றம்’
இந்நாவலின் உருவகங்கள் உயிரோட்டம் அளிக்கின்றன, ராசபாண்டியின் தனிமையின் சுவர்கள் இயற்கையின் அழகில் பாளங்களாய் உதிர்கின்றன. அப்பாவின் அருகில் போவதும் வருவதுமாய் இருக்கும் மஞ்சள் பட்டாம்பூச்சிகளை அவன் அம்மாவாகக் காண்கிறான். ‘தேன் இருக்கும் லட்சம் பூக்களை விட்டுவிட்டுக் காய்ந்த மரக்கட்டைகளில் அவை எதைத் தேடுகின்றன’ என வியக்கிறான்
