சிப்பாய் கோடாரியை வீசினான். முதல் அடி தாடையில் விழுந்தது. கல் பொடியாகி வெண்மையான தூசியாக கீழே விழுந்தது. இரண்டாவது அடி முழங்காலில். மூன்றாவது வயிற்றில். உடைந்த சிலைக்குள்ளிருந்து எலிகள் திரண்டோடின. கடவுளின் உடலை வீடாகக் கொண்டிருந்த சிறு உயிரினங்கள் திடீரென்று வீடிழந்தன. கும்பலில் சிலர் பின்வாங்கினார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் அழுதார்கள். கடவுளுக்காக அல்ல. தங்கள் இளமைக்கால நினைவுகள் கைவிட்டு போவதால் அவர்கள் அழுதார்கள்.
Author: சங்கரநாராயணன் ரா
கட்டில்- அலமாரி
மாநாட்டில் எல்லோராலும் கவனிக்கப்பட்டு , மிகப் பெரிய பாராட்டுகளுடன் சிவனேறு என்ற பட்டம் பெற்றிருந்தாலும் பிள்ளை அவர்கள் மாநாட்டு தீர்மானங்கள் பலவற்றுடன் ஒத்துப்போவதில்லை. குறிப்பாக முதலாவது தீர்மானமான “சைவ உணவு உண்ணும் தொண்டை மண்டல முதலியார், கார்காத்தார், சைவ செட்டியார் , தேசிகர், ஓதுவார் , ஓமநல்லூர் , பட்டர்புரம் சீமைச்சம்பிரதி வேளாளர் , சோழபுரம் வேளாளர் என்பவர்கள் அனைவரும் இனி சைவ வேளாளர் என்று அழைக்கப்படுவர்’ என்று குறிப்பிட்டது பிள்ளை அவர்களுக்கு தங்க முடியாத வருத்தத்தை அளித்தது. ‘அது எப்படில நமக்கு இணையா’ என்று குமுறுவர்
ஹிக்கூரி
அவள் மணலை விரலால் மெதுவாக மூடினாள். அப்போதுதான் சேவியர் அவள் கைகளைக் கவனித்தான். விரல் நுனிகளில் ஒரு பழைய ஆழமான வெட்டுக்காயம் . காயத்தின் தழும்பு வெண்மையாக இருந்தது . அவன் தன் கைகளைப் பார்த்தான். நடுங்கிய விரல்கள், இறுக்கிய கைகள். அவளுடைய காயத்துக்கும் அவனுடைய கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு கணம் அப்படி நினைத்தான்.
