சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம

பிரம்மத்தினுடைய இலக்கணத்தை “சத்யம்-ஞானம்-அனந்தம் பிரம்ம” என்று தைத்திரீய உபநிஷத் வரையறை செய்கிறது. இதுவே பிரம்மத்தின் ஸ்வரூப லக்ஷணம். மேலும் ஆத்மா மற்றும் பிரம்மத்துடைய இலக்கணமாக சத்-சித்-ஆனந்தம் என்பதையும் அத்வைத வேதாந்தம் வரையறை செய்கிறது. சத்-சித்-ஆனந்தம் ஆகிய மூன்று சொற்களும்தாம் பிரம்மத்தை அறிந்து கொள்வதற்காக துல்லியமான வரையறைகளை அளிக்கின்றன. பிரம்மம் என்பது இருக்கின்ற ஒரே உண்மையைக் குறிப்பதற்கான ஒற்றைச் சொல். அதை மூன்று சொற்களாக சத்-சித்-ஆனந்தம் என்றும் புரிந்து கொள்ளலாம்.