படகோட்டி தரிணி

தரிணி சொன்னது சரிதான். மயூராக்ஷி தனது வேகமான நீரோட்டத்திற்குப் பெயர் போனவள். ஓர் ஆண்டில் ஏழு ,எட்டு மாதங்கள் அந்த ஆறு ஒரு பாலைவனம்தான்— ஒன்று ஒன்றரை மைல் வரை கரைக்குக் கரை மண் பரவிக் கிடக்கும். ஆனால் மழை வந்துவிட்டால் அவள் அசுர பலம் பெற்று நான்கு, ஐந்து மைல் வரை விரிந்து, ஆழமான சாம்பல் நிற நீரால் எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுவாள்.