டார்ஜீலிங்கில் இருந்தபோது சிஸ்டர் சாராவுடன்தான் நான் நடைப்பயிற்சி செய்வேன். தாவரவியல் தோட்டங்களில் கைகோத்துக்கொண்டு சிரித்துப் பேசியபடியே நடந்து செல்வோம். இப்போதுகூட அப்படிப்பட்ட தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தான் வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அவரது அழைப்பை ஏற்று அவருடன் வெளியே சென்றேன்.