குழந்தை முகம் சிவக்க அலறி அழுதது. அவர்களின் சிறிய கைகலப்பில் அடுப்பிற்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டியைக் கீழே தள்ளிவிட்டார்கள். அவன் அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி, அவள் பிடியை விடுவிக்க முயன்றான். குழந்தையை பிடித்துக்கொண்டு அவளை முழுபலத்தோடு தள்ளினான்.
Category: சிறுகதை
நம்பிக்கை
உடன் பிறந்தவர்கள் நான்கு பேரிலும் பெண் குழந்தை உள்ள ஒரே குடும்பம் இவருடையது தான். ஒரு கோழி குஞ்சை போல் அத்தனை சிறியதாக, வெதுவெதுப்பாக இருந்த பிறந்த குழந்தையை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பே கண்ணாக இரு கைகளிலும் ஏந்தி மனம் பொங்க நின்றார். இத்தனை சிறிய உயிருக்கு இவ்வளவு கனம் இருக்க முடியுமா? கனம் அதன் உடலில் இல்லை.குவிந்த அவர் கவனத்தில் இருந்திருக்க வேண்டும்.
பயம்
மனித மனம் விசித்திரமானது. சிலரைப் பார்த்ததும் உடனே பிடித்துவிடும். சிலரைப் பார்த்ததும் காரணமே இல்லாமல் எரிச்சல் வரும். அந்த இளைஞனின் நிதானமும், பணிவும் கண்டுச் சுந்தருக்கு அவனைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் சுந்தருக்கு இப்போது எரிச்சல்தான் வந்தது. காலங்காலையில் வந்துத் தொந்தரவு செய்கிறானே என்ற எரிச்சல். ஏதாவது நன்கொடை என்று கேட்டால் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடவேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.
கனவு
அபி, கூடத்தின் கருங்கல் தரையின் மேல் கால் மீது கால் வைத்து ஆட்டியபடியே படுத்திருந்தாள். அவள் ‘ப்ளே ஸ்கூலி’லிருந்து கொண்டு வந்த பையும் தண்ணி பாட்டிலும் அவள் கையருகே இருந்தன. அவளுக்கு மிக அருகில் தாழ இறங்கிய இரும்பு கட்டிலில் எம்.வி.மாமா படுத்திருந்தார். இந்த தூங்கும் நேரம் இன்னும் எத்தனை மணி நீளும் என்று அபி யோசித்துக்கொண்டிருக்கையிலேயே…
நந்தாதேவி
அங்கு ஒரு ஓநாய் என்னையே வெறித்துப் பார்த்திருந்தது. சேற்றில் மூழ்கி எழுந்தது போல உடல் முழுவதும் சடை சடையாக அடர்ந்த கரிய முடி. முழுவதுமாக மூடாத வாய். பற்களிலிருந்து கோழை வழிந்தது. தலையில் அடிபட்டது போல உறைந்த ரத்தச் சிகப்புக் கட்டிகள். எனது கால்கள் பின்வாங்கத் தொடங்கின. உடனடியாக திரும்பி ஓடிவிடக்கூடாது. உயிர் தப்பாது. ஓநாய்க்கு ஆபத்தில்லை எனும்படியாக எனது ஒவ்வொரு உடலசைவும் இருந்தாக வேண்டும்.
மணியம் செல்வன்
தேவைக்கு அதிகமாக வெட்டிவிட்ட சுண்டுவிரல் நகம் போல உறுத்தியும் உறுத்தாமலுமான தூறல் மாலையில் மைதிலியின் கேட்டதற்காக நான் அன்று உமாவை, நனைந்த ம.செ. ஓவியத்தை என் பைக்கில் அவள் மாம்பலம் பெரியப்பா வீட்டில் கொண்டுவிட்டேன்.
ஆடியில் கரைந்த மனிதன்
நள்ளிரவில் ஒரு சிறிய அறையில் அகல் விளக்குகள் மட்டுமே மினுங்கும் வெளிச்சத்தில் மஞ்சள் சேலை மஞ்சள் ஜாக்கட்டில் பளீரென்று மஞ்சள் பூசிய முகத்தோடு எஸ் ஜானகி மாதிரி என்னா என்று விழித்துப் பார்க்கும் வண்டிச் சக்கரப் பொட்டு -சீவல் சேர்த்த வெத்திலை போட்டு போட்டுச் சிவந்த நாக்குடன் அந்த அம்மாவே காளியின் ப்ரோடோ டைப் போல இருந்தாள் .மிக கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒப்பனை.அந்தக் கண்கள் மட்டும் எதோ ஒரு போதையில் அமிழ்ந்தது போலிருந்தன .நீரில் மிதக்கும் விளக்குகள் போல..அவள் இதழ்களே மீண்டும் கண்கள் ஆனார் போல .
மயக்கம்
அப்பாவிடம் பலமுறை திரும்பத்திரும்ப சொல்லச்சொல்லி கேட்டது தான். சுந்தாச்சுச் சித்தப்பா யானையின் பின்னால் ஓடிப்போன கதை. எத்தனை முறை கேட்டாலும் ராமனுக்குச் சலிக்காது, அவன் அப்பாவிற்கும் சொல்லிச் சலிக்காது. ஒவ்வொரு முறையும் அவரின் மனநிலையைப் பொறுத்து பல கிளைக் கதைகளுடன் வளர்ந்துகொண்டே வந்தது.
வட்டங்களுக்கு வெளியே
அவரவருக்கு என்று ஒரு வட்டப் பாதையை ஏற்றுக் கொண்டு அந்த வட்டப் பாதையில் மற்றுமொரு குழு எதிர்ப்படுவதை எப்போதும் தவிர்ப்பதாகவே தோன்றியது. சூரியனைச் சுற்றி பல கோள்கள் தமக்கிட்ட பாதையில் சுற்றி வருவதைப் போல ஆசானைச் சுற்றியும் இப்படி பலக் குழுக்கள் இருக்கக் கூடும். ஆசானைப் போல இன்னும் பல ஆசான்கள் அவரவர் குழுக்களில் தனித்தனி வட்டப் பாதைகளில் பயணிக்கிறார்கள். மேலும் பார்த்தால் ஆசான்கூட ஒரு வட்டப் பாதையில்தான் பயணிக்கிறார். பல ஆசான்கள் ஒரு குழுவாக சார்ந்து ஒரு வட்டப் பாதையில் பயணிப்பதாகவும், மற்றவர்களுக்கு அந்தப் பாதையில் இடமில்லை என்றும் தோன்றியது.
பித்து
மறுநாள் மாலை வேலையிலிருந்து திரும்பும்போது அந்தப் பெண்ணை அதே கட்டிடத்தில் பக்கத்தில் திரும்பப் பார்த்தேன். 25 , 30 வயது இருக்குமோ என்னவோ. மொட்டைத் தலையில் முடி அங்கங்கே முளைத்திருந்தது. மண்டையில் நீளமாய் தையல் போட்ட தழும்பு இருந்தது. குச்சியான உடம்பிற்கு மிகபெரிதான ஒரு நைட்டியை போட்டுக் கொண்டிருந்தாள். நிறைய கிழிசல்கள். கையில் எதையோ வைத்துக் கொண்டு கட்டிட வாட்ச்மேனின் சின்னக் குழந்தையை ‘வா வா’ என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மேலும் கீழும்
சௌமியா, மெதுவாக ஒரு புஸ்வானத்தை எடுத்து வைத்தாள். அது ‘புஸ்ஸ்ஸ்’ என பெரிய சத்தத்தோடு பொங்கி எழுந்தது. இருவரும், அதன் சத்தத்தையே கேட்டுக்கொண்டிருந்தனர்.கீழிருந்து டி.வி யின் சத்தம் அதிகரித்தது. ஒருவர் மாற்றி ஒருவர், புஸ்வானங்களை விடத் தொடங்கினர். அது தீர்ந்ததும் தரை சக்கரங்கள். ஸ்ருதி மெதுவாக சௌமியாவைப் பார்த்து,’அப்போ, நிஜமாவே அம்மாவும் அப்பாவும் டைவர்ஸ் பண்ணின்றுவாளா?” என கேட்டாள். அதுவரை, அது ஏதோ சௌமியா தான் படிக்கும் கதைப் புத்தகங்களிலிருந்து, தன்னை பயமுறுத்த சொல்லும் கற்பனை என்றே நினைத்திருந்தாள்.
யாகாவாராயினும் நாகாக்க
மனதில் பட்டதை வாயைக் கட்டுப்படுத்த முடியாது அவனறியாமல் சொல்லிவிடுவது வழக்கம். யோசித்து சொல்லலாமா சொல்லக்கூடாதா என்று யோசித்து ஓரளவிற்கு கட்டு்ப்படுத்தி வைப்பான். ஆனால் அடுப்பில் பாலை வைத்துவிட்டு எதையோ யோசித்துக்கொண்டிருக்கையில் கண் முன்னாலேயே பால் பொங்குவது மாதிரி சொல்வது தெரிந்தே கட்டுப்படுத்த முடியாமல் சொல்லிவிடுவான்.
அமைதியின் சத்தம்
ஒரு மயான அமைதி குடிகொண்டிருந்த அந்த வீட்டில் ஏதோ மெல்லிய சத்தம் வந்து கொண்டிருந்ததை உணர்ந்தோம். என்னவென்று திரும்பிப் பார்த்தால், அந்த வீட்டின் மூலையில் ஒரு பாட்டி சாய்வு நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த டிவியின் ஓசைக்கூட கேட்கவில்லை. இப்படி ஒரு சூழலில் என் குழந்தைகள் குதித்தால் மட்டும் இல்லை, வாயு பிரித்தால் கூட ராக்கெட் ஏவும் சத்தம் கேட்கும் அந்த வீட்டில்.
துக்கடா
வீட்டுக்கு வருபவர்கள் குழந்தையை பாட சொல்லி கேட்க “என்னமா பாடறா… இன்னும் கொஞ்ச நாளில் உன்னை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவா” என்பதை வெளியே புன்னகையுடன் எதிர்கொண்டாள். கூட அம்மவுடன் சேர்ந்து காத்தால சாதகம் செய்வாள். நிறைய பாட்டு கேட்பாள், என்ன பாடினாலும் ஸ்வரப்படுத்துவாள்.
ரசிகன்
மங்களம் பாடி எழுந்த போது மிருதங்கத்தான் வயலினானைப் பார்த்துக் கண்ணடிப்பது தெரிந்தது. கேலி செய்கிறான்! அடி அடி யென்று மிருதங்கத்தை விளாசிவிட்டு என்னையே கிண்டல் செய்கிறான். கர்நாடகக் கச்சேரி உலகின் முதல் உண்மை எனக்குப் புரிந்தது. கச்சேரி தோற்றால் பழி பாடியவன் பேரில்தான்.
ஆறில் ஒரு பங்கு
வஸந்த காலம், நிலாப்பொழுது, நள்ளிரவு நேரம். புரசைவாக்கம் முழுமையும் நித்திரையிலிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே. ஒன்று நான்; மற்றொன்று அவள். இன்பமான காற்று வீசிக் கொண்டிருந்தது. மேல் மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து, முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால் வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார். நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
நொண்டிக் குழந்தை
ஓடி ஓடி விளையாடின குழந்தையின் விளையாட்டில் ஈடுபட்ட ஞானம் குதூகலமடைந்தான். துள்ளிக் குதிக்கும் பாதங்களைப் பார்த்துப் பரவசமடைந்து கொண்டே கண்களைத் தன் பாதத்தின் பக்கம் திருப்புவான். அவனுக்கே புரியாத ஒருவித சந்தேகம், தெளிந்து நிலைக்காத ஒரு வேதனை நிழல்போலத் தோன்றும். அடுத்த க்ஷணம் அந்த நினைப்பு அழிந்து விளையாட்டுக் கவனம் வந்துவிடும்.
மலைகள்
அந்த மலைகள் என்னை என்னவோ செய்தன. தினம் தினம் செய்து கொண்டிருக்கின்றன. அவைகளை தூரத்திலிருந்து பார்க்கும் போதெல்லாம் ராம லட்சுமணர்கள் மாதிரி, இரட்டையானைக் குட்டிகள் மாதிரி, வானை முட்டிக் கொண்டு நிற்கும் காளைக் கொம்புகள் மாதிரி இன்னும் என்னவெல்லாமோ தோன்றி மறையும். சில சமயங்களில் அவைகள் மனதில் விபரீதமான பாலுணர்ச்சிகளைக் கிளறி விடுவதையும் நான் உணர்கிறேன்.
ராஜேஷ் கன்னா
ராஜேஷ் கன்னாவை பள்ளி தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்துத் தான் நான் முதலில் கவனித்தேன். இத்தனைக்கும் எனக்கு உடனே முன்னால் இருந்த வரிசையில் தான் இருந்தான். மூன்று நாற்காலிகளும் மூன்று பெஞ்சுகளுமாக ஒவ்வொரு வரிசையும் இருக்கும். நான் நடைபாதையை ஒட்டிய நாற்காலி என்றால், அவன் என் முன் வரிசையில் சுவரை ஒட்டிய நாற்காலி. எங்கள் வரிசைகளே வகுப்பின் ஓரத்தில் இருந்தன. அவனுக்கும் இரு பெஞ்சுகள் முன்னாடி தான் ஜன்னல் இருந்தது என்றாலும், அங்கு பார்க்கும்போது கூட அவனை கவனித்தது இல்லை.
பின்தொடரும் காலம்
பந்தி முடிந்து கைகழுவியபோது குறுக்கே வந்த அவரை மடக்கி முருகானந்தம் எங்கே என நான் நீண்டநேரமாக கேட்க நினைத்திருந்ததைக் கேட்டுவிட்டேன். ஒரு சிறுயோசனைக்குப் பின், அழைத்துச் செல்கிறேன் என்றார். அழைத்து வருகிறேன் என்று சொல்லாமல் அழைத்துச் செல்கிறேன் எனச் சொன்னதில் எழுந்த குழப்பம் கல்யாணம் முடியும் வரையில் இருந்தது.
பரிசு
பாட்னாவில் இருந்து கமிஷனர் வில்லியம் டெய்லர் துரை ஒவ்வொரு முறை லகிசராய் வரும்போதும் கங்கு சிங்குடன் வேட்டைக்குப் போவது வழக்கம். இருவருக்குமிடையே இருந்த வேட்டை ஆர்வம் ஆழமான நட்பை ஏற்படுத்தியிருந்தது. தேர்ந்த ஒவியராகவும் இருந்த டெய்லர் துரை வரைந்த கங்கு சிங்கின் உருவப்படம் வரவேற்பறையை இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. டெய்லர் துரையின் முயற்சியால் முங்கேர் நகரின் கமிஷனரின் கீழ் இருந்த லகிசராய் மற்றும் சுற்றியிருக்கும் இருபத்தி ஐந்து கிராமங்களில் வரி வசூலிக்கும் உரிமை கங்கு சிங்கின் குடும்பத்திற்கு கிடைத்தது.
அப்பா
ராதிகாவின் பொறுப்பில் இருந்த ப்ரொஜெக்டில் பெரிய குளறுபடி ஒன்று ஏற்பட்டு அதனால் எங்கள் நிறுவனத்திற்கும் அந்த செல் போன் கம்பனிக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டது. ராதிகா முகம் சில நாட்களுக்கு பேய் அறைந்தது போல் இருந்தது. அந்த தவறுக்கு அவள் இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பப்படுவாள் என்று பரவலாக பேசப்பட்டது. ராஜ் எங்களுடன் மதிய உணவிற்கு வருவதை நிறுத்தினார். மிகுந்த சோர்வுடன் சென்று கொண்டிருந்த தினங்கள் அவை. குறிப்பாக ராதிகாவிற்கு.
நிர்வாண நடிகன்
அசோகன் தனது சிரிப்பை அடக்கிக்கொண்டு, மனதளவில் பால்சனுடன் ஒரு நெருக்கத்தை எற்படுத்திக்கொண்டு, “பால்சன் நீ வெறும் நடிகன் அல்ல. மிகச் சிறந்த உண்மை நடிகன். அதிலும், மிகச்சிறந்த உண்மை நிர்வாண நடிகன்” என்றார். பால்சனுக்கு அசோகன் கூறியது புரியவில்லை. அசோகன் தொடர்ந்தார். “ரேகாகூட, அங்கீகாரம்தான் ஒரு நடிகனை நடிகனாக தொடரச் செய்கிறது என்றார். ஆனால் நீயோ எந்த அங்கீகாரமும் இல்லாமல், நடிப்பதை விட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டபின்னும், தொடர்ந்து நடிக்கிறாயே, நீதான் உண்மை நடிகன்” என்றார்.
‘ஸீன்’ பிச்சையும், சில மலையாளப் படங்களும்
பிச்சையுடன் மலையாளப் படங்களுக்கு செல்வதே ஒரு சுவையான அனுபவம். ஹீரோ கட்டிலில் படுத்துக்கொண்டு, ஃபேனைப் பார்த்துகொண்டிருப்பான். ’’இப்பப் பாரு… ஃபேன க்ளோஸ் அப்ல காமிப்பான். அப்படியே ட்ரீம் சீன் வரும்…’ என்பான். அப்படியே வரும். கதாநாயகி தனியாக வீட்டினுள் ஓரிடத்தை நோக்கி நடந்துகொண்டிருப்பாள். ‘‘இப்ப பாரு குளிக்கிற ஸீன…” என்று பிச்சை சொல்லிமுடிக்கவும், அவர்கள் குளிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்.
நிலை
அவர், அவனை கூர்மையாக பார்த்தார். “உண்மைதான் தம்பி, பழக்கமான பாதையில் தொடர்ந்து இடைவிடாது போறதில் உள்ள நிறைவு, புதிய பாதையில் கிடைக்காது. ஏற்கனவே பார்த்த இடங்கள், பார்த்த மனிதர்கள், பேசிய பேச்சுக்கள், இதுக்கெல்லாம் உள்ளே புகுந்து பார்க்கும்போது பிடிபடும் விஷயங்கள், புதிய இடத்திலும், புதிய மனிதர்களிடமும் கிடைக்கும் என்று நான் நம்புவதில்லை”.
ராதேஷ்யாம்
வெளியே சற்று குளுமையாக இருந்தது. வாகனங்கள் இரைச்சலும், புகையுமாகப் போனது கூட அவரை எரிச்சல் படுத்தவில்லை. அனுராதாவின் சிறப்பு குணாதிசயங்களை எடை போட்டு இவள் ஏன் ராதையின் அம்சமாக இருக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு விடை தேடிக் கொண்டே நடந்தார். தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட பணிகளை திறம் பட கையாண்டு அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளம், விடுப்பு மருத்துவச் செலவு போன்ற பலதரப்பட்ட பணிகளை தாமதம், மற்றும் பேதமில்லாமல் சிரித்த முகத்துடன் செய்து கொண்டிருந்த அவளும் ராதையின் ஒர் அங்கம்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தார்.
நீரில் கரையாத கறைகள்
ஒரு கட்டத்தில் அம்மா தெரிந்தவர்களின் வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்கப் போனது, ஒரே வாரம் தான், அதற்குள் அப்பாவுக்கு உடல்நிலை சரியாகி அவர் விண்ணப்பித்திருந்த வேலையும் கிடைத்தது, வீட்டு வேலைக்கு சென்று வந்த ஒரு நாளில் அம்மா யாரிடமும் பேசாமல் சாமி விளக்கைப் பார்த்துக்கொண்டே அழுதது என மறையாமல் நினைவில் உறைந்து விட்ட காட்சிகள் மெல்ல நகரும் சலனப்படம் போல் அழிக்கவொட்டாமல், மறக்கவொட்டாமல் மீண்டும் தோன்ற…
நம்பிக்கை
காசியில் கங்கை புரண்டதைப் பார்க்கவும் பாட்டியின் கண்களில் நீர். எதோ இத்தனைக் காலம் பிரிந்த ஒருவரைப் போல்.. பேசவேயில்லை. அங்கும் ஒரு படகுக்காரன். அவன் தான் விளக்கியவாறே வந்தான். சார் இங்கே காக்க கத்தாது, பூ மணக்காது, பொணம் வாடையடிக்காது. கொஞ்சம் காட் லே குளிக்கலாம் மத்த இடம் எல்லாம் பொணம் எரிக்கத்தான் என்று தொடர்ந்தான். படகில் சென்றவாறே பார்த்த போது அவன் கூறுவதின் நிதர்சனம் தெரிந்தது.
மஹாபலியின் வருகை
அறையின் மரத்தடுப்புகளில் பொருத்தபட்டிருந்த கண்ணாடி பேனல்களின் வழியாக கிளையின் ஊழியர்கள் மற்றும் பல கஸ்டமர்களின் முகங்கள் தெரிந்தன. சில முகங்களில் வியப்பு, சில முகங்களில் வருத்தம், சில முகங்களில் கோபம் என்று மாறுபட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள். இவற்றில் எது தன்னை மையப்புள்ளியாக கொண்டது என்று பாலுவிற்கு புரியவில்லை. ஆனால், இனம் புரியாத ஒரு வித அச்ச உணர்வு முதன் முறையாகத் தோன்றியது. இது நாள் வரை இருந்த கலக்கம், அழுத்தம், குழப்பம் எல்லாம் இந்த அச்ச உணர்வின் முன்னோடிகளோ!
ஜன்னல்கள்
காரின் ஏ சி யை அணைக்க வேண்டாம் என்று சொன்னேன். சீட்டில் சாய்ந்து கண்ணை மூடி கிடந்தேன். யாரோ என்னப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரக்ஞை! கண்ணைத் திறந்தால், நேற்று சந்தித்த கிழவனும் கிழவியும் கார் ஜன்னலுக்கு வெகு அருகில் நின்று கண் மூடிக் கிடந்த என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெகுளாமை
பெரியசாமிக்கு இந்தத் துறையில் கிட்டதட்ட பதினோரு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்.`பொய்` அனுபவ வருடங்கள் கலக்காமல் முறையாக கேம்பஸ் இண்டர்வியுவில் நுழைந்து முதல் ஐந்து வருடங்கள் புரோக்ராமராகவே இருந்தார், கடுமையாக, அதிகம் பேசாமல் உழைத்தார். மாடுல் லீட், டீம் லீட், ப்ராஜெக்ட் லீட் என்று படிப்படியாக ப்ராஜக்ட் மேனேஜராக மௌன உழைப்பு. இப்போதா, துறைக்கு வருபவர்கள் இரண்டு, மூன்று வருடங்கள் ஆகிவிட்டால் போதும் லீட் பொசிஷன் எதிர்பார்க்கிறார்கள். கோட் (code) அடிக்க மாட்டார்களாம். வளர்ந்துவிட்டார்களாம். மேற்பார்வைதானாம். ராஸ்கல்கள்!
பைரவன்
அவன் மனம் நாய்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. இந்தப் பயம் தனக்கு எப்படி வந்தது என்று யோசித்தான். அவனின் ஆழ்மனம் முதலில் அந்த இடது முழங்கால் நாய்க்கடி கதையை அவனிடமே சொன்னது. கொஞ்சம் வெறுப்பாய்த் தனக்குள் புன்னகைத்துவிட்டு உண்மையான காரணத்தைத் தன் நினைவுகளில் தேடினான். சரி வர ஒன்றுமே புலப்படவில்லை. அறியாத வயதில் வெகு சாதாரணமாய் என்றோ ஒரு நாள், “சரி நாளையிலிருந்து நாம் நாய்களுக்குப் பயப்படுவோம்” என்று முடிவெடுத்து அதன்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது!
புளியந்தொக்கு
சில நொடிகள் நின்று யோசித்தவன் ஒற்றையடிப் பாதை நோக்கி நடக்கத் தொடங்கினான். மகேஷும் செண்பாவும் ஓட்டமும் நடையுமாய் அவனை பின் தொடர்ந்தார்கள். முட்புதர்கள் தாண்டி தெருவைக் கடந்து மூவரும் செண்பாவின் வீட்டை அடைந்தார்கள். முத்து படிக்கட்டிலிருந்தபடியே மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தான். அவன் அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். உதட்டின் முன் ஆட்காட்டி விரலை வைத்து செண்பாவிடம் சப்தம் ஏழாமல் பின் தொடருமாறு சைகை செய்தான். வீட்டின் பக்கவாட்டிலிருந்த அம்மிக் கல் அருகே சென்றவன் காற்சட்டைப் பையிலிருந்த புளியங்காய்களை எடுத்தான்.
மஷி பேனா
ஆங்கிலமும், வரலாறும் தான் அவர் பாடங்கள். அவர் இந்தியா வரைவது மிக வித்தியாசமாக இருக்கும் கீழே இருக்கும் தெற்குப் பகுதிக்கு ஆங்கிலத்தில் எழுத்தான ஒரு ’வி’ யைப் போடுவார். மேலே இருக்கும் வட இந்தியா ஒரு கெளபாய்த் தொப்பி. அந்த தொப்பியின் ஒரு புறத்தில் இருந்து ஒரு கோடு வரும். அந்த வளைந்த கோட்டில் மிஸோரம், நாகாலந்து, அஸ்ஸாம் மணிப்பூர் எல்லாம் அடங்கிவிடும். மேறகுப் பகுதி அம்போ…
பெண்கள், பெண்கள்!
“பின்னாடி பாத்தீங்களா அந்த மூணு வூடும் கட்டுனது எங்க அப்பாதான். அப்போல்லாம் நான் குட்டிப் பாப்பாவா இருந்தேன். அந்த வீட்டு மாமா மூணு பேருமே ஏரோப்ளேன் ஓடுமே அங்க வேலை பாக்கறாங்க. அந்த வீட்டுல கூட நான் வெளையாடியிருக்கேன்.”, நாங்கள் கேட்கிறோமா என்கிற அக்கறையின்றி அவள் சொல்லிக் கொண்டே போனாள்.
கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்னகதை
பதற்றமும் பயமும் அதிகரிக்க அம்மாவின் வசைகளுக்கு நடுவே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தான் என தெரியாமல் மீண்டும் உள்அறைக்கு சென்று அமர்ந்துகொண்டான். ஏன் பதற்றம் அதிகரிக்கிறது என சட்டென புரியாமல் போனது. தன்னையறியாமல் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். புத்தகத்தை விரித்ததும் அதில் தெரிந்த எழுத்துக்கள் நீரில் ஓடும் மலர்கள் போல ஒடியதில் அவன் கண்கள் கண்ணீரில் மிதப்பதை உணர்ந்தவனாக லேசான கோணல் வாயுடன் கவனித்தான்.
சிறுகதை
ஓ!! அந்த வீட்டுக்குள் கதை நுழைந்தே விட்டது. போர்வையை நனைத்தது வியர்வை…வாய் ஒட்டிக் கொண்டது. பேய்க்குப் பயப்பட்டால் கூடத் தாயத்தோ, திருநீறோ, மந்திரமோ…கதைக்குப் பயப்படுவதை என்ன சொல்லிப் புரிய வைக்க.. என்ன செய்து தடுக்க முடியும்.
ஒற்றை ரோஜாச்செடி
பூத்திருந்த ஒரு ஜோடி மலர் உதிர்ந்த பிறகே அடுத்த ஜோடி மலர் பூத்தது. ஒரே சமயத்தில் ஒரு ஜோடிக்கு மேல் பூப்பதில்லை. செடியில் மலர்கள் இல்லாத நாட்களில் வண்ணத்துப்பூச்சிகள் மொய்ப்பதில்லை. அத்தனை வண்ணத்துப்பூச்சிகளும் எங்கு போகின்றன, எப்படி ரோஜாக்கள் மலர்ந்தவுடன் தோன்றுகின்றன என்பது பெரும் புதிராக இருந்தது.
பிச்சி
சட்டென ஒரு எண்ணம் தோன்றியது. எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தேன். இலேசாகத் திடுக்கிட்டு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தாள். வியர்வையில் கலந்த மெல்லிய மல்லிகை மணம் அவள் மேல் இருந்து வீசியது. அது சுர்ரென நாசியில் ஏறி மூளைக்குள் புகுந்தது. தலை இலேசாகக் கிறுகிறுத்தது. நானும் அவளும் மட்டுமே தனியாக இருப்பது போன்ற ஒரு உணர்வு. என் உடலில் ஒரு நடுக்கம்.
விடுதலையாதல்!
அப்பாவுக்கு பக்கவாதம் என்று சொன்னார்கள். குழறிக் குழறிப் பேசினார். வலது பக்கக் கையும் காலும் உணர்ச்சியற்றுப் போயின. இடது பக்கத்தில் உணர்ச்சிகள் இருந்தன. ஆனால் மருத்துவர்கள் அதற்கு மருந்துகள் உண்டு என்றார்கள். கொஞ்ச காலம் ஆனாலும் பேசுவார், நடப்பார் என்றார்கள். அதெற்கெல்லாம் ஏராளமாகப் பணம் வாங்கிக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப சில நாட்களில் அப்பா தெளிவாக இருந்தார். ஓரிரு வார்த்தைகள் பேசினார். அசையவும் புரளவும் செய்தார். அவள் நம்பிக்கைகள் வேர் பிடிக்கத் தொடங்கும்போது மீண்டும் சாய்ந்து விடுவார். ஆறு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்தார்.
திரவ ஒளி தேவதை
நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய கருப்பு திட்டு மண்தரையிலிருந்து மேலெழும்பி வெளிச்சத்தினூடே அந்தரத்தில் ஊர்ந்து செல்லத் துவங்கியது. பூச்சியோ என்னவோ என்று முதலில் சந்தேகித்தேன். ஆனால் அது உயிரிலி என்பதை என்னால் சீக்கிரத்தில் கிரகித்துக்கொள்ள முடிந்தது.ஒழுங்கற்ற வடிவில் பிய்த்தகற்றப்பட்ட நிலத்துண்டென உருக்கொண்டிருந்த அந்த இருள்திட்டை ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவனைப் போல் நான் பைக்கில் பின்தொடரலானேன்.
சதி பதி
வைகாசி பிறந்தால் மாரியம்மாளுக்கு முளைப்பாரிக் கும்மி. வானம் பொய்த்தால் மழைக்கஞ்சிக் கும்மி. வாழ்க்கையை முழுக்க முழுக்க சந்தோசமாக அனுபவிக்கப் பிறந்தவள் மாதிரி சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தாள். மரம் ஏறித் தேங்காய் பறிப்பவளா இப்படிப் பூக்கட்டுகிறாள் என்று தோன்றும்படிச் சரம் தொடுப்பாள். சாமிக்குக் கலக்கமாகக் கட்டி சடைக்கு வைக்க நெருக்கமாகக் கட்டும்போதே நூலில் ஐந்து முடிச்சுப் போட்டுக் குஞ்சாரமாக்கி விடுவாள்.
பர்த் டே
அந்த வருடத்தில் வந்த ஓவ்வொரு பிறந்தநாளின் போதும் ஓவ்வொருவரும் செய்த புதுமைகள், புதுமைகளாகக் காட்ட முனைந்த சிறுமைகள் என எல்லாம் அன்றைய இரவு சபையில் தாமனால் விவரிக்கப்படும். அதற்கு செவி சாய்ப்பது குடும்பத்தினரின் கடமை. அவன் விழிகள் விரிய ஓவ்வொன்றையும் சொல்லுவான். அதோடு அதனைப் பற்றிய தனது அடிக்குறிப்பையும் சேர்த்துக் கொள்வான்.
எட்டணாவில் உலக ஞானம்
மாற்றான் மனைவியை இச்சித்தல் கூடாது என்பது ராமாயணத்தின் சாரம். அதனால் அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளவேண்டும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் என்பது சார்லஸ் டார்வினின் பரிணாம தத்துவத்தின் சாரம். அதனால் மனிதருள் உஸ்தாதாய் இருப்பது அவசியமாகிறது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் சாரம். இதை வியாஸரோ கிருஷ்ணரோ, யார் சொல்லியிருந்தாலும், நாம் மேற்படி உஸ்தாதாய் அனைவரிடமும் எடுத்துரைப்பது அவசியம். இல்லை கடமையைச் செய்யும் அனைவரும் பலனுக்கு ஆசைப்படுவார்கள்.
மொழியின் கடைசிப்பெண்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஆள் கண்ணில் படவில்லை. கடலில் படகுகள் இல்லை. கடல் நீளமாக இருந்தது. அதன் முடிவு வானம்தான் என்பதுபோல் இருந்தது. கடற்கரை மணலில் நடந்தேன். என்னுள் ஆயிரம் கேள்விகள். எதற்கும் பதில் கிடைக்கவில்லை. தூரத்தில் தென்னை மரத்தின் கிளைகள் தெரிந்தன. மணல் சூடேறியிருந்தது. மெதுவாக நடந்தால் கால்கள் பொசுங்கிவிடும் என்று வேகமாக ஓடினேன்.
நாய்கள் பூனைகள்
தீர்ப்பு வந்த அதே மாலை, போலிஸ் வந்து அஷுவின் வீட்டை தட்டியது. குர்த்தா பைஜாமாவுடன் இருந்தவரை விலங்கிட்டு கைது செய்து சிறைக்கு கூட்டிக்கொண்டு போனது. நிறுவனத்திலிருந்து ஒரு மில்லியன் திர்ஹம் களவாடினார் என்று அஷுவின் மீது பொய்க்குற்றம் சாற்றியிருந்தார் சுலைமான்.
தானம்
நாம் விளையாடித் தான் பார்க்க வேண்டும் வாழ்க்கை விளையாட்டு. பேச வைக்க வேண்டும். சிரிக்க வைக்கவேண்டும். இதெல்லாம் எதற்கு என்பவர்களுக்கு அதெல்லாம் எதற்கு என்பது தான் என் பதில். இப்படிப் பட்டவர்களை தொடாமல் விட்டுச் செல்வது யாருக்கும் நல்லதில்லை. நாமாக முந்திக் கொண்டு எங்கோ திறந்திருக்கும் துவராத்தைக் கண்டு பிடித்து கசிவுண்டாக்க்கி கடலைக் கொண்டு வந்து விட வேண்டும்.
வேசி வீட்டுத் திண்ணை
வேசி ஒவ்வொருவரின் பரிசுப்பொருளையும் பார்த்தாள். ரமணசிங்கா கையிலிருந்த இலவங்க எண்ணெயின் மணம் அந்த இடம் முழுவதும் வீசியது. வேசி எண்ணெய் வாங்கி நுகர்ந்து பார்த்தாள். காரம் கொஞ்சம் இனிப்பும் கலந்த மணம் இருந்தது. அன்றைய தினம் குணசேனா தேர்வு செய்யப்பட்டார். மற்றவர்கள் பரிசுப்பொருட்களை வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர்.
இடும்பைக்கூர் வயிறே…
இந்தியா கேட்.ராஷ்ட்ரபதி பவனைக் கேட்டுக்கு வெளியே இருந்து ஒரு பார்வை. நாடாளுமன்றம். வெளியே இருந்த குரங்குகள், உள்ளே போய்க் கொண்டிருந்த அரசியல்வாதிகள், வட்ட நீர்க் கொப்புளிப்பைச் சுற்றிப் பறக்கும் பறவைகள் ..எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நாங்கள் ரயில் ஏறும் போது தான் உறைத்தது குளிர் மட்டுமல்ல செலவும் நாங்கள் எதிர்பார்க்காததை விட அதிகம் ஆகியிருந்தது. அதிகம் என்ன ஒன்றும் இல்லாமல் ஆகி இருந்தது. ஆசிரியரிடம் போய்க் கடன் கேட்கலாம் என் நினைத்திருந்ததை ஏதோ தடுத்தது. கொஞ்ச நேரத்தில் பசி அந்த ஏதோவைத் தள்ளிவிட்டு அவரிடம் போய்க் கேட்டபோது அவரிடமும் பணம் இல்லை. பரிதாபமாக விழித்தார்.
சாமத்தில் முனகும் கதவு
வாசுகியை நினைக்கும் தோறும் அவன் உடல் இறுக்கம் கொள்வதை அறிந்திருந்தான். அவள் ஸ்பரிசத்தின் மென்மை ஒரு பெண்மையை கையாள்வது இத்தனை எளிதானதா என்ற எண்ணம் ஓடுவதை தவிர்க்கமுடியவில்லை. போகத்தில் ஒவ்வொரு சமயமும் அவள் இளகுவது எந்த உண்மையை அறியும் பொருட்டு என்று கடையின் இருண்ட அறையில் அமர்ந்து யோசித்திருக்கிறான். உச்சத்தில் அவள் கண்களில் தெரிவது வெறிகொண்ட மிருகத்தின் கண்கள் என்பதை பிறகு உணர்ந்து பயந்திருக்கிறான்.
