இந்த திரைப்படத்தில், மற்றப் படங்களில் சாத்தியமில்லாத பல தனித்துவமான காட்சிகளில் ஶ்ரீவித்யா மிக அழகிய அபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அலுவலகத்தில் வேண்டுமென்றே வேணுவை உற்றுப் பார்த்துவிட்டு… பிறகு வேணு அவரைப் பார்க்கும்போது ஒரு கேலிச்சிரிப்புடன் குனிந்துகொள்ளும் ஶ்ரீவித்யாவின் பார்வை… காபி அருந்த அழைத்துச் செல்லும்போது, வேணுவை பார்த்து உருவாகும் கேலிச்சிரிப்பை கைவிரலால் மூடி அடக்கியபடி பார்க்கும் பார்வை…… என்று படம் முழுவதும் விழிகளின் விழா.
ஆசிரியர்: ஜி.ஆர்.சுரேந்திரநாத்
ஹிட்லரின் இறுதி நாட்கள்: திரைப்பட அறிமுகம்
முடிவு நெருங்குவதை உணரும் ஹிட்லர், ஈவா பிரௌனைப் பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார். ராணுவ அதிகாரி மோங்கேயிடம் ஹிட்லர், ”பெர்லினை இன்னும் எவ்வளவு நேரம் காப்பாற்ற முடியும்?” என்கிறார். ”ரஷ்யப் படையினர் சில நூறு மைல்கள் தூரத்திலேயே உள்ளனர். 20 மணி நேரம்தான் காக்கமுடியும்.” என்கிறார் மோங்கெ. ஹிட்லர் தான் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்கிறார். பிறகு தனது பாதுகாவலர் குன்ஸியை((Gunze) ) அழைக்கும் ஹிட்லர், ~~நாங்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு, எங்கள் உடல்கள் ரஷ்யப்படையிடம் கிடைத்தால், அதை மியூசியத்தில் காட்சிப்பொருளாக வைத்துவிடுவார்கள். எனவே எங்கள் உடல்களை உடனே எரித்துவிடவேண்டும்.” என்று தெரிவிக்கிறார். குன்ஷா (Günsche) 200 லிட்டர் பெட்ரோல் தயார் செய்து வைத்துக்கொள்கிறான்.
இங்கிலீஷ்
ஒரு வெயில் ததும்பிய மதியவேளை. மாணவர்கள் மூன்று, மூன்று பேராக கைகளைக் கோர்த்துக்கொண்டு பள்ளியிலிருந்து நடக்க ஆரம்பித்தோம். எனது இடது கையைப் பிடித்துக்கொண்டு வந்த பையன் யார் என்று நினைவில் இல்லை. ஆனால் வியர்வை ஈரத்துடன் என் வலது கையைப் பிடித்துக்கொண்டு வந்த மாலதி மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறாள். இது ஏன் என்று என் கள்ளங்கபடமற்ற(?) மனதிற்கு இன்றும் புரியவில்லை. நடந்து சென்ற நாங்கள் மருதையாற்றுப் பாலத்தை அடைந்தோம். பாலத்துக்குக் கீழிருந்த மணலில் எங்களை குழு குழுவாக உட்கார வைத்து புளிப்புமிட்டாய் கொடுத்தார்கள்.
‘ஸீன்’ பிச்சையும், சில மலையாளப் படங்களும்
பிச்சையுடன் மலையாளப் படங்களுக்கு செல்வதே ஒரு சுவையான அனுபவம். ஹீரோ கட்டிலில் படுத்துக்கொண்டு, ஃபேனைப் பார்த்துகொண்டிருப்பான். ’’இப்பப் பாரு… ஃபேன க்ளோஸ் அப்ல காமிப்பான். அப்படியே ட்ரீம் சீன் வரும்…’ என்பான். அப்படியே வரும். கதாநாயகி தனியாக வீட்டினுள் ஓரிடத்தை நோக்கி நடந்துகொண்டிருப்பாள். ‘‘இப்ப பாரு குளிக்கிற ஸீன…” என்று பிச்சை சொல்லிமுடிக்கவும், அவர்கள் குளிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்.
தீனித் தின்னிகள்
தினகர் முதலில் காரத்தை சாப்பிடுவான். மிகவும் பொறுமையாக அதை முடித்துவிட்டு, பிறகுதான் ஸ்வீட்டுக்கு வருவான். அதையும் கடகடவென்று சாப்பிடமாட்டான். முனையிலிருந்து சிறிது, சிறிதாக கடித்து சாப்பிடுவான். இதற்கெல்லாம் அவன் கிட்டத்தட்ட இருபது நிமிஷம் எடுத்துக்கொள்வான். இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருக்கும் என்னிடம், கடைசி பிட்டை ‘‘இந்தா…’’ என்று நீட்டுவான். நான் ஆசையாக கையை நீட்டும்போது, டபக்கென்று அப்படியே அவன் வாயில் போட்டுக்கொண்டு சிரிப்பானே ஒரு அயோக்கியச் சிரிப்பு…
கடன்பட்டார் நெஞ்சம்
ஒரு முறை மிகவும் நெருக்கடியான ஒரு சமயத்தில், நான் ஐநூறு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வந்து நிற்க.. என் மனைவி ஒரு வார்த்தைக் கூட கூறாமல், என்னைக் கண் கலங்க பார்த்த பார்வை, இன்னும் எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
காணாமல் போன கனவுக்கன்னிகள்
எனது முதல் கனவுக்கன்னி, இயக்குனர் சத்யஜித்ரே அவர்களால், ‘உலகின் மிக அழகிய பெண்களில் ஒருவர்’ என்று வர்ணிக்கப்பட்ட ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதா. ஆம்… ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாதான். ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்ரதாவோ, ’47 நாட்கள்’ ஜெயப்ரதாவோ அல்ல. ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதா மட்டுமே என் கனவுக்கன்னி. சமீபத்தில் மலையாள இயக்குனர் ப்ளெஸ்ஸியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ப்ரணயம்’ என்ற மலையாளப் படத்தில் ஜெயப்ரதாவைப் பார்த்தபோது, மனம் பழைய ஜெயப்ரதாவையே சுற்றி சுற்றி வந்தது.