வேளை வந்துவிட்டது

இன்னும் பத்தாண்டுகள் இங்கே இருக்கச் சொன்னாலும் கபீர் தயார்தான். அதிலும் குடும்பத்தோடு வருவதென்றால் இன்னும் மகிழ்ச்சி. ஆனால் இந்த நாடு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு மேல் ஹம்பாடியின் தொடர்பு ஏற்பட்ட பின்னர் கபீரின் உலகம் மிகவும் மாறிவிட்டது. இந்த வேலையை விட, குடும்பத்தை விட, உயிரை விட, மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஹம்பாடிதான் கற்றுக் கொடுத்து அவரைப் புது ஆளாக்கினார்.

பூஜாங் பள்ளத்தாக்கு: இலக்கிய ஆதாரங்கள்

மலேசியாவின் வடபகுதியான கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்கு, தமிழ் வரலாற்றில் புகழ்ந்து கூறப்படும் கடாரம் என்பது வரலாற்றாசிரியர்களின் முடிபு. இங்கு நடத்தபட்ட அகழ்வாராய்வுகளில் தோண்டி எடுக்கப்பட்ட அரும்பொருள்களைக் கொண்டு மலேசிய அரசு இங்கு ஓர் அருங்காட்சியகத்தை அமைத்துப் பராமரித்து வருகிறது. இந்தப் பகுதி பற்றி இதுகாறும் தெரிய வரும் உண்மைகள் பற்றி மலேசியத் தமிழரான வீ.நடராஜா “Bujang Valley: The Wonder that was Ancient Kedah” என்னும் தலைப்பில் ஓர் நூல் எழுதியுள்ளார். இந்த நூல் “சோழன் வென்ற கடாரம்” என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது

விடுதலையாதல்!

அப்பாவுக்கு பக்கவாதம் என்று சொன்னார்கள். குழறிக் குழறிப் பேசினார். வலது பக்கக் கையும் காலும் உணர்ச்சியற்றுப் போயின. இடது பக்கத்தில் உணர்ச்சிகள் இருந்தன. ஆனால் மருத்துவர்கள் அதற்கு மருந்துகள் உண்டு என்றார்கள். கொஞ்ச காலம் ஆனாலும் பேசுவார், நடப்பார் என்றார்கள். அதெற்கெல்லாம் ஏராளமாகப் பணம் வாங்கிக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப சில நாட்களில் அப்பா தெளிவாக இருந்தார். ஓரிரு வார்த்தைகள் பேசினார். அசையவும் புரளவும் செய்தார். அவள் நம்பிக்கைகள் வேர் பிடிக்கத் தொடங்கும்போது மீண்டும் சாய்ந்து விடுவார். ஆறு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்தார்.