தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 2

பேச்சு மொழி அவரவர் பிறந்து வளர்ந்து பழகிய வகுப்பு, மதம், வட்டாரம் சார்ந்து மாறுபடும் காரணத்தால், பரிச்சயமில்லாதாருக்கு அது உடன் புரிவதில்லை. ஆனால் பேசுவோருக்கு உயிர் கொடுப்பதும் இயல்பானதும் அது தான். புத்தகங்களில் எழுதப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட இலக்கணம் சுத்திகரித்த மொழி செயற்கையானது, தமிழ் நாட்டில் எங்கும் எந்தத் தமிழனும் பேசாத மொழி அது. தீவிர தமிழ்ப் பண்டிதர்கள் மாத்திரமே நிர்ப்பந்தித்து பொதுவில் பேசும் மொழி. உயிரற்றது. மௌனத்தில் புன்னகை வருவிக்கும் மொழி. தமிழ் நாட்டின் வட்டார பேச்சு உருவங்களோடு, எழுபது எண்பதுக்களுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் அவரவர் இடங்களில் வழங்கும் பேச்சுமொழியையும் நிகழ் காலத் தமிழ் எழுத்துக்குக் கொண்டுசேர்த்தனர். இதன் விளைவாக இன்றைய தமிழ் எழுத்தில் தான் எத்தனை ஃபணீஸ்வர்நாத் ரேணுக்கள்! எத்தனை மைலா ஆஞ்சல்கள்!!

நான்கு நிறக் கணக்கும், கென்னத் ஆப்பெலும்

தமிழ்நாட்டுக்கு, கேரளா,கர்நாடகம் மற்றும் ஆந்திராவுடன் எல்லைகள் உண்டு. எனவே இந்த நான்கு மாநிலங்களுக்கு வெவ்வேறு வர்ணங்கள் இந்திய வரைபடத்தில் முனைந்தால் குறைத்தது மூன்று வர்ணங்கள்தேவைப்படும். அதேபோல் ஆந்திராவும், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஒரியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. தமிழ் நாட்டிற்கு கொடுத்த அதே வர்ணத்தை ஒரியாவிற்கு கொடுத்தால் மூன்று வர்ணங்களே போதுமானதாக இருப்பதைக் காணலாம்.

யாதும் ஊரே

சொந்த ஊர் கோட்டயம் பக்கத்தில் கிராமம், இங்கே காலேஜ் படிக்க வந்திருக்கிறார்களாம். வீட்டில் சமையல் செய்யும் உத்தேசம் எதுவும் இல்லையாம். மெயின் ரோட்டில் கைராளி மெஸ்ஸில் சாப்பிடுவார்களாம். இரவில் டீவீ அலற விடக்கூடாது, குடி எல்லாம் இருக்ககூடாது என்று ஆரம்பிக்கும்போதே, “சேச்சி நாங்கள் படிக்க வந்திருக்கிறோம், மரியாதையான குடும்பம், ஊரில் அப்பா அம்மாவை விட்டு வந்திருக்கிறோம், எங்களுக்கும் பொறுப்பு உண்டு..” என்று நீளமாக, உணர்ச்சியுடன் பேசினான்.

மௌனத்தின் குரல் – ஓர் அறிமுகம்

திருமணத்திற்குப் பின் தன் ரசனைகள், விருப்பு வெறுப்புகள் என எல்லாவற்றையும் உடைத்து கணவனின் எதிர்பார்ப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தன்னை மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டியது பெண்களின் கடமையாகவே நம் சமூகத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு ஆண் வாயைத் திறந்து இதைச் சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை.

விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2

இன்றும் ஒரு அமெரிக்கருக்கு எடிசனைத் (Thomas Alva Edison) தெரியும்; ஆனால் ஃபைன்மேனைத் (Richard Feynman) தெரியாது. எடிசன் எல்லோருக்கும் தேவையான மின்குமிழ் (electric bulb) மற்றும் மின் உற்பத்தி போன்ற விஷயங்களில் ஈடுபட்டவர். ஆனால், ஃபைன்மேன் அப்படி ஒன்றும் சாதாரண வாழ்க்கைக்கு உபயோகமான பொருளை உருவாக்கவில்லை. இன்றுவரை, விஞ்ஞானி (scientist), மற்றும் கண்டுபிடிப்பாளர் (inventor) என இருவேறாகப் பிரித்துப் பார்ப்பது பொது அறிவாக எழவில்லை. இது 19-ஆம் நூற்றாண்டின் தாக்கம் என்றே சொல்லலாம். இந்தியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – சி.வி. ராமன் பெரிய விஞ்ஞானி என்பதோடு நின்று விடுவார்கள். பலருக்கு அப்துல் கலாமுக்கும் (Dr. A.P.J. Abdul Kalam) விண் இயற்பியலாளர் சந்திரசேகருக்கும் (Dr. S. Chandrashekar) உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியாது.

பல்லுயிர்ப் பெருக்கம் (நிலைக்கும் வேளாண்மையின் அறிமுகம்)

மனதிற்கு நிறைவு தரும் பணி என்றாலும் இதன் முக்கியத்துவம் உரிய மதிப்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள விளைபொருள் அங்காடிகளுக்குச் சென்று விலைவாசி நிலவரம், வரத்து, வழங்கல் போன்ற புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வழங்கி பயிர் நிலவரம் மற்றும் உற்பத்தி மதிப்பீடு செய்வதுதான் பணி. அலுப்பு சலிப்பு இல்லாமல் 33 ஆண்டுகள் ஒரே மாதிரியான வேலையிலிருந்து மாறும் திருப்பமாக அவ்வப்போது எழுதும் பணி தோல்விகளுக்கு மருந்தாக அமைந்தது.

மஞ்சள் நதியின் மணல் குளியல்

இது ஃபோட்டோஷாப் அல்ல. முப்பது மில்லியன் டன் வண்டலை தன்னோடு அழைத்து வரும் சீனாவின் மஞ்சள் நதியில் படிவங்களால் நிறைய சிக்கல்கள் குடியேற்றங்களுக்கு நேர்கிறது. அதனால் சில ஆண்டுகளுக்கொரு முறை அவற்றை கடும் வேகத்தில் துளைத்து நீரால் அகற்றுகிறது சீன அரசாங்கம். அப்படி வெடித்துத் துளைத்துப் போகும் வண்டலைப் “மஞ்சள் நதியின் மணல் குளியல்”

சித்திரத்தைப் பின்தொடர்தல்: பஹாடி கலைப் பாரம்பரியத்தின் கதை

முழு இந்தியாவிலுமே அஜந்தாவிற்கு முன் இந்திய ஓவியங்களைப் பற்றி வெறும் இலக்கியக் குறிப்புகளே உள்ளன, சான்றுகளோ எச்சங்களோ இல்லை. அஜந்தாவிற்குப் பிறகு சுவற்றோவியங்கள் இந்தியா முழுவதும் பரவினாலும் சட்டென மறைந்து புதிய வடிவங்களில் பல்வேறு பிராந்தியங்களில் உருமாறித் தலைகாட்ட ஆரம்பித்தன. அதில் ஒரு தொடர்ச்சியைத் தேடினால் முதலில் கிடைப்பது நான்காம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரை வங்காளத்தில் வழங்கி வந்த பாலர் பாணி பௌத்த ஓலைச் சுவடிகள். அஜந்தாவின் அழகியலைச் சுருக்கி சுவடிக்குள் பொருத்தும் அளவுக்கு வடிவங்கள் எளிமைப் படுத்தப் பட்டு விட்டன. அதன் பிறகு மேற்கு மாவட்டங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தான் அதிக அளவில் ஏட்டோவியங்கள் தலை காட்டுகின்றன. எட்டாம் நூற்றாண்டு தொட்டே குஜராத்துடன் வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர் அறிமுகப்படுத்திய காகிதம் அப்பிராந்தியத்தின் ஓவிய மலர்ச்சிக்குக் காரணியாயிற்று.

அயல்நாட்டுக் கவிதைகள்

தனது வேரிட்ட தோட்டத்தையும், பேரக்குழந்தைகளையும், ஒருகாலத்தில்
அவளுடையவளாயிருந்த ஒருகாலத்தில்
கட்டுக்கடங்காத இளைஞனையும் அவள் நேசித்தாள்.

இறுதியில் உறுதி – எம்.எஸ்.தோனி

இது கிரிக்கெட் ஆட்டமில்லை; போக்கர் விளையாட்டு. M.S.தோனி மிகவும் அமைதியாய், அலட்டிக்கொள்ளாமல் அசாத்திய தந்திரத்துடன் இருந்தார். ஏமாற்றினார், ஏமாற்றிக் கொண்டே இருந்தார். ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்துகொண்டிருக்கையிலும் அபாயத்தை அதிகரித்துக்கொண்டு போனார். தன் அதிருஷ்டத்தின் மேல் சவாரி செய்து, ஒரு ரன் அவுட்டிலிருந்து பிழைத்து, இஷாந்த் ஷர்மாவுடன் இரண்டு அபாயகரமான குழப்பங்களிலிருந்து தப்பித்து கடைசியில் ஆட்டத்தை முடித்தார்.

பூங்காக்களின் தொடர்ச்சி: ஹுலியோ கோர்தஸார்

முதலில் பெண் வந்தாள்,ஐயுற்றஞ்சி; இப்போது காதலன் உள்ளே வந்தான், ஒரு மரக்கிளையின் பின்னடிப்பால் கீறப்பட்ட முகத்துடன். மெச்சத்தக்க விதத்தில், குருதியோட்டத்தை முத்தங்களால் அவள் தடை செய்தாள். ஆனால் அவனோ அவளுடைய தைவரல்களை மறுதவித்தான்.

பேச்சொலிகள்

சரளமான பேச்சு! அந்தப் பெண் இறந்ததற்குக் காரணமே அவளால் பேச முடிந்தது, அவள் அக்குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தாள் என்பதா?அவள் கொல்லப்பட்டதற்குக் காரணம் ஒரு கணவனின் புண்ணான புத்தியில் எழுந்த கோபமா அல்லது ஒரு அன்னியனின் பொறாமையால் எழுந்த வெறியா?

மகரந்தம்

ஒரு பக்கம் சீனாவின் ‘வெட்டர் படை’யின் தாக்குதல்கள், இன்னொரு பக்கம் அமெரிக்காவின் ‘தோண்டுவார் படையின்’ தாக்குதல்கள். இதற்குத் துணை போகும் ரஷ்ய அரசின் உளவு நிறுவனங்கள், ரஷ்யாவின் பிரத்தியேக அளிப்பு- உலகுக்கு- குற்றக்கும்பல்களும் அவற்றுக்கு வேலை செய்யும் டெக்கி கும்பல்களும், பின் பிரிட்டிஷ், யூரோப்பிய உளவு நிறுவனங்கள், கொரியாவின் உளவு அமைப்புகள், ஏன் இந்தியாவின் சொத்தை அரசு கூட உளவு பார்க்கிறதாமே?

முயல் காதுகள்

போஸ்ட் ஆபீஸ்க்யூவில் நிற்கும்போது, குடிதண்ணீர் வெண்டிங் இயந்திரத்தில் சில்லறை போட்டு போராடிக் கொண்டிருக்கும்போது,கைக்கொரு பையாக க்ரோசரி சமாச்சாரங்களை அள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி மாடிப்படிகள் ஏறும்போது, என்று எல்லாஇடங்களிலும் ‘டபக்’கென உட்கார்ந்து அவிழ்ந்திருக்கும் ஷூ லேஸ்களை முடிபோட ஆரம்பித்துவிடுவார். ‘பன்னி இயர்,பன்னி இயர்….’.கூடவே நானும் செஸ் விளையாட்டில் ‘செக்’ வைக்கப்பட்ட ராஜாவைப் போல அத்தனை வேலைகளையும் அந்தரத்தில் விட்டுவிட்டு..

குறுகத் தரி

இன்று பல நானோ பொருட்கள் ஆய்வுப் பட்டறையிலிருந்து தெருவுக்கு வந்துவிட்டன. வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ ஸி போன்ற நுகர்வு பொருட்களில் நானோ சில்வர் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கொலுசு வடிவில் வெள்ளி பெண்களின் பிரியமான தோழன். நானோ வடிவில் நல்ல கிருமி நாசினி. வாஷிங் மெஷினில் உள்ள சில்வர் அயனிகள் அழுக்குத் துணிகளில் உள்ள பாக்டீரியாவை கொல்கின்றன. இந்த அயனிகள் துணிகளின் மீது ஒரு மெல்லிய படலமாகப் படிந்து ஒரு மாத காலம் வரை பாக்டீரியாவுடன் தொடர்ந்து போராடி ஒரு பாதுகாப்பு வளையத்தை அளிக்கின்றன. .ஃபிரிட்ஜ் மற்றும் ஏ ஸி யில் உள்ள சில்வர் நானோ கோட்டிங் பாக்டீரியாவைக் கட்டுபடுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களில் உள்ள நானோதுகள்கள் ரசாயனங்களை பொதி போல சுமந்து சென்று சருமத்தின் அடியில் உள்ள செல்களுக்கு போஷாக்கை அளிக்கின்றன…

பாலியல் வன்முறை – தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருப்புமுனை

இந்தியாவில், வன்புணர்வுக் குற்றம் குறித்து பெண்கள் புகார் செய்கையில், பெரும்பாலும், குற்றத்துக்கு அவர்களே பொறுப்பு என்று பழி சுமத்தப்படுகிறது. தப்பித் தவறி அந்தப் புகார் செவிமடுக்கப்பட்டாலும், அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வந்து கொண்டிருக்கையில், வெகு தாமதமாகவே கேட்கப்படுகிறது. மன அதிர்ச்சியிலிருந்தும், உடல் நோவிலிருந்தும் வெளிப்படுவதற்கே மிகுந்த தைரியமும், உளவியல் ஆலோசனை சேவைகளும் தேவைப்படும். வசதியற்ற கீழ்மட்ட சமூகங்களின் பெண்களுக்கு இத்தகைய உதவிகள் கிடைக்க என்ன செய்யப்பட்டிருக்கிறது? அவர்களுக்கு எங்கே போகவேண்டும் என்றும் தெரியாது, தரமான சேவைகளைப் பெறப் பணம் செலவழிக்கவும் இயலாது.

டேவிட் ஃபாஸ்டர் வாலெஸ் (1962-2008) – எழுத்தாளர் அறிமுகம்

இவர் படைப்புக்களின் வடிவம், அதில் உள்ள உத்திகளில் ஜான் பார்த், பிஞ்சன், காடிஸ் போன்றோரை சற்றே நினைவு படுத்துவார். வாசகன் அப்படியே கதைக்குள் மூழ்கி விட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகளுக்கு நேர்மாறாக, ஆசிரியர் இடையிடையே வாசகனுடன் உரையாடி அவன் ஒரு கதையைத் தான் படித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வை ஏற்படுத்துவது, நாவலுக்குள் இன்னொரு நாவலோ அல்லது சிறுகதையோ ஒரு கதாபாத்திரத்தால் எழுதப்படுவது, அடிக்குறிப்புக்கள், அடைப்புக்குறிகள் பயன்படுத்துவது என பல யுத்திகள் இவர் படைப்புக்களில் உண்டு.

சிறகடிக்கும் நினைவலைகள் -அம்ரிதா ப்ரீதம் கவிதைகள்

ஆனால் நினைவு
வலுவான நூல் இழைகளால் நெய்யப்பட்டது
நான் இந்த இழைகளை எடுத்து
நூல்களாக்கி நெய்து
நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்

அஞ்சலி: கர்நாடக சங்கீதக் கலைஞர் அனந்தலக்ஷ்மி சடகோபன்

கேள்வி ஞானத்தில் பாடத்துவங்கிய அனந்தலக்ஷ்மி, எம். எஸ். சுப்புலட்சுமியின் திரைப்பாடல்களை வீட்டில் பாடிக்காட்டுகையில், “பாப்பா அப்படியே குஞ்சம்மாவைப் போலவே பாடுகிறதே” என்று சண்முகவடிவு உச்சிமுகர்வாராம். ஹிந்து நாளிதழில் 2006இல் அளித்த பேட்டியில் அனந்தலக்ஷ்மி இதைக் குறிப்பிட்டுள்ளார். 1939இல் தன் முதல் மேடைப்பாட்டை வழங்கிய அனந்தலக்ஷ்மி, தொடர்ந்து பன்னிரெண்டு வயதில் சென்னை வானொலியில் பிரதானமான பாடகியாய் ஸ்தாபித்துக்கொண்டார். 1943இல் ‘மியூசிக் அகடெமி’ நடத்திய போட்டியில் நடுவர்களான ஜி. என். பாலசுப்ரமணியன் மற்றும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பதினைந்து வயதான அனந்தலக்ஷ்மிக்கு எச். எம். வி. நிறுவனத்தின் தங்கப்பதக்கத்தை பரிசளித்தனர்.