திருக்கூத்து

அந்த கோயில்ல பூசன பண்ணின பண்டாரங்களால வாய்மொழியா சொல்லப்பட்ட கதைகளும் பாடல்களும்தான் பண்டார நூலா இன்னக்கி இருக்கு. அந்த நூல தொகுத்தவர் சின்னப் பண்டாரம். அவர் அந்த நூலுக்கு இட்ட பெயர் திருநடம். ஆனா பண்டார நூலுங்குற பெயர்தான் நெலச்சிருக்கு. அந்த நூல் பெருவெள்ளங்களப் பத்தி பேசுது. மொத்தம் நூற்றியெட்டு தடவ அங்க வெள்ளம் வந்து ஊர நீர் சூழ்ந்திருக்கு. ஒவ்வொரு முறையும் உச்சிகால பூஜையோட மழை வலுத்து வாரங்களுக்கு தொடர்ந்திருக்கு.

வரைபடத்தில் இருக்கும் இருண்ட வெளிகள்

ஆனால் நீங்கள் அவரைப் பற்றி ஏதும் எதிர்மாறாகச் சொல்லப் போவதில்லை, ஏனெனில் அப்படிச் சொல்லும்படி துலக்கமாக ஏதும் இல்லை. உங்களுக்குத் தெரிகிற வரை அவர் யாருக்கும் ஏதும் கெட்டது செய்யவில்லை.

தாய்மொழிகள்

உன் இதயம் ஒரு துடிப்பை இழந்து மறுபடி செயல்படுகிறது. அது லிலியனின் கல்லூரிச் செலவு மொத்தத்தையும் சமாளிக்கும், அதற்கு மேலும் கொஞ்சம் மிஞ்சும்- அது ஒரு கவர்ச்சிகரமான தொகை.

தானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்

ஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.
ராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.
 “அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.
 “ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்!” என்று வேண்டினாள் அரசகுமாரி.
 “அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்?” அது கேட்டது.
 “நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”
“அது என்ன சாவி?”
“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”

பேச்சொலிகள்

சரளமான பேச்சு! அந்தப் பெண் இறந்ததற்குக் காரணமே அவளால் பேச முடிந்தது, அவள் அக்குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தாள் என்பதா?அவள் கொல்லப்பட்டதற்குக் காரணம் ஒரு கணவனின் புண்ணான புத்தியில் எழுந்த கோபமா அல்லது ஒரு அன்னியனின் பொறாமையால் எழுந்த வெறியா?Butlerவியாதியின் பேரலைக்குப் பின் பிறந்திருக்க வேண்டும். அப்படியானால் அந்த வியாதியின் வெள்ளம் ஓய்ந்து விட்டதா? அல்லது இந்தக் குழந்தைகள் வியாதிக்கு எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்களா?