ஆசையாய் இன்னொன்று கேட்ட
குழந்தைக்கு பூசை கொடுக்க
வந்த தோசையம்மாவிடமிருந்து
ஜீப்ராவில் ஏறி
காட்டுப்பூக்கள் வழி
அவசரகதியில் ஹாலுக்கு
தப்பிச்சென்ற குழந்தை,
இந்தமுறை
ஒரு பெரியக்கோடு போட்டு
குச்சிக்குச்சியாய் கைக்கால்களிட்டு
தானே அம்மாவாகி
“அம்மாவுக்கு நாலு .. இப்போ என்ன பண்ணுவீங்க”
Category: கவிதைகள்
ரகசியமானது காதல்
இப்பாடலுக்கு மறுமொழியாக இப்புலவர் இயற்றியது “ஓஷிமா மீனவர்களின் உடையைவிட அதிகமாக நனையும் அளவுக்கு என் கண்ணீர் வற்றாமல் இருக்கிறது” என்பது. இப்பாடலின் இறுதி அடியில் கைப்பகுதியின் வண்ணம் மாறியிருக்கிறது என்று வருகிறது.
அருண் பாண்டியன் கவிதைகள்
எந்தத் திரைப்படங்களிலும்
காட்டப்படாத வன்முறைகள்
எந்நேரம் வேண்டுமானாலும் நடக்கும்
அப்படித்தான் ஒருநாள்
அப்பமொன்றை சப்பிக்கரைக்கும் நிமித்தத்தில் ஏதேதோ நிகழ்ந்து விட்டிருந்தது
ஒற்றைப் பள்ளிச் சிறுவனை
பத்து வாலிபர்கள் கூடித் தாக்கும் பேரவலம் அது
இரு கவிதைகள்
நினைவின் தடங்கள்
மெல்ல மெல்ல அழிய
முன்பு போல
சலசலப்பில்லை
சமுத்திரத்தில்…
இப்போதெல்லாம்
சடலத்தை துக்கமின்றி
அணுகும் மருத்துவனைப்
போல் சலனமின்றி
கடக்க முடிகிறது
அருண்பாண்டியன் கவிதைகள்
அச்சத்தில் ஆடை நனைந்து உலராமல் ஊமைவாடையடித்தால்
களைந்து நிர்வாணமாகிவிடுவோம் மரங்களோடு மரங்களாக
ஈச்சம் முட்களைப்போல்
உன் ரோமங்கள்
நீட்டிக்கொள்ளும் அளவிற்கு
என் உதடுகளை உன் கழுத்தில் பதிக்கிறேன்
அன்னம் பூவின் அடிக்கிழங்கைப்போல்
வெளுத்த உன் தேகம்
தூவானமும் வெண்வானமும்
நாணல் தண்டின் ஒரு கணுவின் வெட்டப்பட்ட சிறு பகுதியும் துளிர்த்து வளர்ந்து பரிசலுக்கு நீர்மட்டம் காட்டும் கோலைச் சூழ்ந்து மறைப்பதுபோல் ஓர் இரவு மட்டும் நிகழ்ந்த நமது சந்திப்பு குறுகியதாக இருப்பினும் அந்நினைவுகள் வளர்ந்து வாழ்வில் குறுக்கிடுகின்றன.
வருணன் கவிதைகள்
யாவரும் உறங்குவதைப் பார்த்துப் பார்த்து
சலித்துப் போயிருந்தது அவ்வீட்டின் இரவுக்கு
மழலையின் சிணுங்கலும் அழுகையும்
கேட்கத் துவங்கிய நாள்
உடைதல்
இருட்டு தைரியத்தில்
நெருங்கினோம்
மின்னலுக்கு திடுக்கிட்டு விலகினோம்
கை நழுவிய தேநீர் கோப்பை
டிட்டினாங்…கென்று
விழுந்து உடைகிறது
இனி
கோப்பை உதவாது
தேநீரும் உதவாது
தனிமைக்குப் பிரபஞ்சம் என்றும் பொருள்
குடுவைக்கு வெளியே நீந்துபவை
கடல் நட்சத்திரங்களெனக்
காலத்துக்கும் நம்பிடும்
தொட்டி மீன்
கடலையே பார்த்ததில்லை
உள்ளத்தில் உள்ளேனா?
வானத்தில் வட்டநிலா என்னை அழச்சொல்கிறது. இல்லையில்லை. அழவைப்பது என் உள்ளத்தின் நினைவுகளே. கண்ணீர் பெருக்கெடுப்பதற்கு நிலவைக் குறை கூறுவானேன்?
கோசின்ரா கவிதை
குடித்த பின்புதான்
அவருக்கு அதிகதிகமான தாகம் எடுக்கிறது
காதலியின் தந்தை கேட்கிறார்
தம்பி நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா
கடவுள் விழுங்கிய படி பதில் சொன்னார்
இல்லையென்றார்
கு.அழகர்சாமி கவிதைகள்
யார் முந்தி
யார் பிந்தி
என்றெல்லாம் இல்லை.
பறவைகள் தமக்குள்
போட்டி போட்டுக் கொண்டா
பறக்கின்றன?
ரவி அல்லது கவிதைகள்
பொருளீட்டலின்
பொருட்டான
பிரிதலில்
துய்த்த நேசம்
வாய்க்காது போகிறது
தற்செயலாய் வாழ்க்கை
இரவின் அமைதியில் எங்கோ ஒலிக்கும் ராஜா
எதிர் ஜன்னலில் கையசைக்கும் யாரோ ஓர் குழந்தை
குதித்துக் குதித்து புவியீர்ப்பு விசையை சோதித்து பார்க்கும் குழந்தைகள்
கோடையின் வருகையை அறிவிக்கும் மரத்தில் சில மாம்பூக்கள்
மதிய வேளையில் அசரீரியாய் காக்கைகள்
துயரறுத்தலே துயரமோ?
வாழ்வின் துயரங்களிலிருந்து விலகியிருக்க விரும்பினாலும் மலைக்குடிலுக்குத் தொலைவில் கேட்கிறது அடிபட்ட மானின் துயரக்குரல்.
மைக்குழற் செறிவன்ன காதல்
மே மாதங்களில் ஹொதொதொகிசு என்றொரு குயிலினம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வலசை வரும். மே மாதம் என்பது ஜப்பானில் வசந்தகாலம் முடிந்து கோடை தொடங்குவதற்குச் சற்று முன்னர் என்பதால் இக்குயிலின் முதல் கூவல் கோடையின் வரவை அறிவிப்பதற்கானது என்று ஜப்பானியர்கள் காத்திருப்பார்கள். இப்படித்தான் இப்பாடலாசிரியரும் அவ்வாண்டின் முதல் கூவலைக் கேட்டுக் குயிலைக் காண ஆவலோடு ஓடிவந்து பார்த்திருக்கிறார்.
ஊடக வெளிச்சம்
அட்சய திருதியை தங்கம் விற்பனை
25,000 கிலோ அறிவீரா?
இன்னும் இன்னும் இதுபோல் செய்திகள்
தன்மானத் தமிழன் அறிவு பெருக்கும்
ஆற்றல் வளர்க்கும் ஆன்ம ஒளிதரும்
நெரிசல்
ஒரு நொடிக்குள்
யுகத்தை அடைத்து வைத்து-
ஒன்றுமில்லையில்
முடிவிலியை
அடைத்து வைத்து-
புறப்படும் புள்ளியில்
இலக்கினை
அடைத்து வைத்து-
ஒரே
நெரிசல்!
குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்
வாடாதே கொடியே
வாடாதேயெனத்
தினமுரைத்தேன்
சில நாட்களில்
வீட்டிற்கு
எங்கள் பாப்பா வந்தாள்
அவள் அருகில் சென்று
என் விரல் கொடுத்தேன்
அருண் பாண்டியன் கவிதைகள்
முந்தி பிறந்தவள்
முதுநூல் தரித்தவள்
முள் மரத்தில் கூர் பிடுங்கி
மூக்கு குத்திக் கொண்டவள்
காய்ந்த களிமண் வெடிப்புகளை அள்ளி
முகத்தில் பூசிய கரிசல் நிலத்தின் சொந்தக்காரி
கற்களால் பாதம் தைத்து
பூண்டுச் செடிகளால்
பாவாடை புனைந்தவள்
கலியபெருமாள் கலித்தேவன் கவிதைகள்
அலைக்கழிக்கப்பட்டவனின் துயரம்
மருந்தடைக்கப்பட்ட வெடிகுண்டென
கையில்.
வீசி எறியுமுன்னே அதியற்புத புன்னகையோடு மனக் காட்சி
இன்னாரு வாய்ப்பு
அரா கவிதைகள்
வலப்பக்க தோள்பட்டை மச்சம்
இடப்பக்க தோள்பட்டை மச்சத்தோடு மடங்கி
உறவாடும் முன்பே
சதையின் புள்ளிகள் பிய்த்தெறியப்பட்டன
தரைத்தளத்திற்கும் கீழிறங்கி
அடக்கமாகச் செல்லும் பெட்டி
தன் விளக்குகளையெல்லாம்
வண்ணம் பிடுங்கி ஆட்டத்துடன் ஒளிர்கிறது
வேணு வேட்ராயன் கவிதை
உயிர்களில் உன்னதம்
மலர் என்றேன்.
உனைநான்
சொல்லாமல் நீங்கினேன்.
நாஞ்சில் நாடன் கவிதைகள்
பத்தொன்பதாவது பிரபஞ்ச மூத்தமொழிச் சம்மேளனம்
செவ்வாய்க் கோளில் நடத்தத் திட்டம்
அரசியல்வாதிகள் அவரடியார்கள்
தம்மின அறிஞர் துதிப் பேராசிரியர்
கூத்தாட்டு மன்றம் பிரசங்கியர்
பாதுகை சுமக்கும் பாவலர் பங்கேற்பர்
கலந்து கொண்டு கட்டுரை படிப்போர்
ஆய்வுச் சுருக்கம் அறுபத்தேழு சொற்களில்
அனுப்பி வைக்கவும்
வருணன் கவிதைகள்
மனதின் மதகுகளை துல்லியமாய்
திறக்கத் தகுந்த
தருணங்களில்
அடைத்து விடுகிற செய்நேர்த்தி
இடம்பெயரும் புள்ளினங்காள்!
புதினத்தின் நாயகன் கென்ஜி, சுமா என்னும் ஊரில் தங்கியிருக்கும்போது கடற்பறவைகள் இரைதேடிக் கிளம்பும் ஒலியைக்கேட்டுத் துயிலெழுவார். இப்பாடலும் புதினமும் சமகாலத்தவை. 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்ட பல இலக்கியங்களில் கென்ஜியின் கதையில் வரும் நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றன
நா. சந்திரசேகரன் கவிதை
அலைகளின் இடைவெளியில்
விரைந்து வளைபுகும் சிறுநண்டுகள்.
அப்போதுதான் உணர்ந்தேன்
அலை கொணரும் வரிகள்
வேறு வேறென!
ஆமென்று ஆர்ப்பரித்து
ஆடை நனைத்துச் சென்றது ஓரலை
துள்ளிவரும் வெள்ளலையே!
நதியின் ஓட்டத்தில் எதிர்ப்படும் பாறை நதியின் பாதையை இரண்டாகப் பிரித்தாலும் பாறையைத் தாண்டியபின் ஒன்றாகக் கூடுவதைப்போல் இப்போது பிரிவை எதிர்கொள்ளும் நாமும் பின்னர் ஒன்று சேர்வோம்.
சாய்ந்து அழ ஒரு தோள்
குழந்தைப் பருவத்தில் இருந்த
என் அன்னையை இன்னொரு உலகில் சந்தித்தேன்.
கை கோர்த்து கடற்கரையில் நடந்தோம்.
உலகில் அவள் நேசித்த
அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் பேசினாள்.
ஆயிரம் அங்கதங்கள்
ச. சக்தி அழகு – கவிதைகள்
அரசமர நிழல்
தனிமையில்
விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தையின் நிழல்
ஆசைகளற்ற ஒரு புத்தனின் சாயல்
ஆர். வத்ஸலா கவிதைகள்
என்ன சாக்கு சொல்வது
எண்ணெய்க் குப்பியுடன்
எனக்கு அம்மாவாகி
எதிரில் நிற்கும்
எனது ஐம்பது வயது மகளிடம்
தமிழ்மணி கவிதைகள்
பட்டினியான நாட்களை அடிக்கடி
கடந்து விரைபவன் அவன்
அன்றைக்குத்தான் புதிதாக பசியை உணர்ந்த ஒருவர் கைகளை நீட்டினார்
தற்போதைக்கு பசியாற்றும் தேநீரை
வாங்கிக்கொண்டு வந்தவனைப் பார்த்து
உன்னைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் தம்பி
இந்த உலகம்
அழகாய் இருக்கிறது என்றார்
கோடைக் கவிதைகள் – 3
காட்டு யானைகளைப் போல
மறைந்து ஒளிந்தன மேகங்கள்.
நாடகம் சட்டென முடிந்தது.
சுஜய் ரகு கவிதைகள்
கதவைத் திறந்த போது
அரூபம் நின்று
புரட்டுவதைப்போல
திறந்தும் மூடியுமிருந்தது
மேசை மீதிருந்த
புத்தகத் தாள்கள்
பாரிய காதல்
மகிழ்ந்த பொழுதின்
நினைவுகளின்
சாரம் தின்று
உடற்க்கூட்டில்
உயிரென ஒன்று
வாழ்ந்து.
ஒவ்வொரு முறை
வீடு மாற்றும்போதும்
ஒடித்து
உருவாக்கிய
ஒற்றைச்
செம்பருத்தி செடி
உருமாற்றிவிட்டது
சோழன் கவிதைகள்
காரிகை
வேழாழி மணலில்
தன் பாதங்களை எடுத்து
தொட்டு தொட்டு
அலைகளிடம் சென்றாள்
கருமை நிறம் கொண்ட
மணிகள் நனைந்தன
கேட்டதும் கிடைத்ததும்
இப்பாடலின் ஆசிரியர் முன்பு தனது காதலியின் வெறுப்பைக் குறைக்கப் போதிசத்துவரிடம் வேண்டியிருக்கிறார். ஆனால் அது குறையாமல் வளர்ந்துகொண்டே வருவதைக்கண்டு அடுத்தமுறை இக்கோயிலுக்கு வந்தபோது இப்பாடலை இயற்றினார். வளர்ந்துகொண்டே வரும் காதலியின் கோபத்தை அதிகரித்துவரும் மலைக்காற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.
மௌனம்
எத்தனை ஆண்டுகளுக்குப் பின்
சந்திக்கிறோம் நாம்
முதன்முறையாக பார்த்தது போல
அதே பட்டாம்பூச்சி
காலம் கொஞ்சம் கனிந்திருக்கலாம்
இரங்கி வந்து தணிந்திருக்கலாம்
ஆற்றுப்படுதலின் குளிர்மையும் சூடேற்றிவிடும் சொற்களும்
கீறலில்
பீறிடும் வார்த்தைகள்
சிதைக்கும்
தருணத்தில்
பழைய
களிம்பைத்தான் தடவுகிறீர்கள்
தவறுகள்
என்னுடையதென.
தலை துண்டிக்கப்பட்ட புத்தர்
சப்தமில்லாததால்
நிசப்தமாய் இருக்கும்
நிசப்தமாய்
இல்லாது
நிசப்தமாய் இருக்கிறதால்
நிசப்தமாய் இருக்கிற
நிசப்தத்துக்குள்
என்னிரு விழிகள் செவிமடுக்க-
மேனியுலர்ந்து
பழுத்துக் கொண்டே இருக்கும்
பேரன்பின் பிசாசு
வாழ்வது நானென்று
ஆனாலும்
செல்வது உன் வழியில் !
சேர்வது உன் மடியில்!
கோடைக் கவிதைகள் – 2
ஓயாத ஒளிமழையில்
நிழல் முளைத்து ரீங்கரிக்கிறது
எல்லாமும்.
தாத்தா
வளர்ந்தாலும்
எப்போதும்
தனது குழந்தையென
தாத்தாவின் காலடிகளை
நெஞ்சில் சுமக்கிறாள்
பூமித்தாய்
உள்ளும் புறத்தும் தனிமையே!
தனிமையின் வெறுமையை விளக்கும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரில் பல பாடல்கள் தனிமை குறித்தனவாக இருக்கின்றன. பல பாடல்கள் துணையைப் பிரிந்த காதல்வலியையும் சில பாடல்கள் காதல் குறித்த சுட்டலின்றித் தனிமையை மட்டும் குறிக்கின்றன.
சக்தியின் கவிதைகள்
கோடை வெயிலின் தாக்கத்தால்
தன்னுள் பொதிந்து
பாதுகாத்து அடைகாக்கிறது
மழை நீரால் உயிர்பெற்ற
ஆற்று மணல்
சுகந்தம் கூட்டும் சொற்குவியல்
உருகித் திளைக்கும்
காதல் வரிகளில்
உள்ளம் பூரிக்கிறது
நேசத்தில்
நெகிழும் நெஞ்சத்தை
ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது
உன்னோடு
விழியிலிருந்து நினைவுக்கு
கவிஞர்களை இரு வரிசைகளில் எதிரெதிரே அமர்த்தி இருவர் இருவராகக் கவிதைகள் புனைந்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. கவிஞர் யுய்யே எழுதிய பாடலுக்குப் போட்டியாகப் புனையப்பட்ட இப்பாடல் பரிசை வென்றது. இரு பாடல்களும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் அவ்விடத்தை அழகுபடுத்துவதாகப் புனையப்பட்டவைதான்.
கோடைக் கவிதைகள்
இக்கணம்,
விழுகிறான் சூரியன்.
பெரிய சிவப்பு உருண்டை.
பகல் கனிந்த இனிப்புடன்,
மென்காற்றின் இதத்துடன்.
குறுங்கவிதைகள்- கு.அழகர்சாமி
மற்ற தெருக்கள் முறையிட்டும்
ஒரு தெரு வழியே தான்
நிதம் நடை செல்கிறேன்-
ஆனால்
ஒருவர் கூட
இன்னும்
சிநேகிதமாகாமல்
இரா. இராகுலன் கவிதைகள்
உடல் உள்ளத்தைப் பார்த்துக்கொள்வதற்கு
அது இங்கிங்கு இருக்க வேண்டும்
அதற்கு இதிது வேண்டுமென
எதையெதையோ செய்கிறேன்
உடல் உள்ளத்தைச் சுற்றி
இவரிவர்கள் இதிது
இருக்க வேண்டுமென
