பட்டினியான நாட்களை அடிக்கடி
கடந்து விரைபவன் அவன்
அன்றைக்குத்தான் புதிதாக பசியை உணர்ந்த ஒருவர் கைகளை நீட்டினார்
தற்போதைக்கு பசியாற்றும் தேநீரை
வாங்கிக்கொண்டு வந்தவனைப் பார்த்து
உன்னைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் தம்பி
இந்த உலகம்
அழகாய் இருக்கிறது என்றார்
Author: தமிழ் மணி
ஜம் என்று இருக்க வேண்டும்
தினச் சம்பளத்தின்
கசங்கிய தாள்களை அம்மாவிடமும்
கசங்காத தாள்களை என்னிடமும் பார்க்கலாம்
வீடடைய நடுச்சாமம் ஆகுமென்பதால்
சோறெடுத்துச் செல்லும்
வயர்கூடையில் டார்ச்லைட் இருக்கும்
எடுத்துப்போக மறந்துவிட்டேனென்று
தமிழ்மணி – கவிதைகள்
தனிமையைப் பற்றிய
உங்களது அளவுகோல்
புகைப்படக்கருவியை எடுத்துக்கொண்டு
காடு, மலை, அருவி தேடிப்போவது
