உன் நிலவைத் தூக்கிக் கொண்டு
நள்யாமம், என் வானைத் தேடுகிறேன்
என் நிலவு காணாமல்.
ஆசிரியர்: கு.அழகிரிசாமி
தேரிகாதா- மூத்த பெளத்தப் பெண் துறவிகளின் கவிதைகள்
துறவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி வித்தியாசம் இருக்க முடியும்? ஏன் மெய்மை தேடும் பயணத்தில் ஓர் ஆண் பெண்ணை இடைஞ்சலாகக் கருத வேண்டும்?. ஏன் பட்டினத்தார் போன்ற துறவிக்கே ’கண் காட்டும் வேசியர் தம் கண் வலையில் சிக்கி மிக அங்காடி நாய் போல் நெஞ்சம் அலைய’ வேண்டும்? ஏன் ஏக நாதனின் இறையடி இறைஞ்ச போக மாதரைப் போற்றுதல் ஒழிய வேண்டும்? காமம் கடைசி வரை தெரு நாயாய்த் துரத்தும் போலும். ஏன் பின் காமத்தை வெல்லும் தன் இயலாமையாய்ப் பாடாமல் பெண் மேல் ஏற்றி பழித்துப் பாட வேண்டும்? மனம் கடந்து மெய்மை தேடும் பயணத்தில் ஆணென்ன? பெண்ணென்ன? பட்டினத்தார் பெருந் துறவி. ‘பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிது’ என்பார் தாயுமானவர். பெண்ணைப் பெண்ணென்பதற்காகப் பழிப்பது பட்டினத்தார் நோக்கமாக இருக்க முடியுமா?
கவிதைகள்
மின்சாரம் இல்லை
நொடிக்கு நொடி
புழுக்கம் அதிகமாகிறது
உடலெங்கும்
வியர்வையின் ஈரம்
கொசு என்னை உணவாகக்
கொள்கிறது
கவிதைகள்
சுற்றி வரும்
ஈக்கு விசிறியபடி
எருமை இறங்கியது
நீருக்குள்..
ஒரு குளத்தங்கரைப் பகல்
சதா
இறங்கியும் ஏறியும்
ஏறியும் இறங்கியுமாய் வெப்பில் மூச்சிளைக்கும் படிகள்.
வேர்த்து
விறு விறுத்திருக்கும் நீர்க்குளம்.
கவிதை
இரவையே கத்தரித்து எங்கிருந்தோ ஒரு பறவை
கீச்சிடும்.
கவிதைகள்
முழு வேகமாய் வெளி கிழித்துச் செல்லும் கருமேகக் காகத்தைக்
கடல் துரத்தி
கரை மோதிச் சிதறும்.
சிதறியதில்
ஒரு சிறு நண்டு தப்பிக் கரையொதுங்கி
சிங்கப்பூர் சென்ற மகன்
“கிழவிக்கு மனக்கஷ்டம் தாங்கவே முடியவில்லை. இரவு எல்லோரும் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கிய பிறகும் காவேரிப்பாட்டிக்குத் தூக்கம் வரவில்லை. பத்து வருஷங்களுக்குப் பிறகு ஏராளமான சம்பாத்தியத்துடன் மகன் திரும்பி வருகிறான் என்றும், செட்டியாருடைய பேரனுக்கு இரண்டு பவுன் அரைஞாண் கொடியைக் கொண்டுவந்து கொடுக்கப்போகிறான் என்றும் சொல்லியும்கூட, அவர்கள் அதை வேண்டுமென்றே காதில் வாங்கிக்கொள்ளாமல் அப்பால் நழுவுவதை நினைக்கும்போது அவளுக்கு அவமானமாகவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.”
கவிதைகள்
சில்லரையைச்
சாவதானமாய்த்
தேடிக் கொண்டிருக்கையில்
’சிக்னல்’ வழிவிட்டது தான் தாமதம்
சட்டெனப் பேருந்து விரையும்.
கல்லறைத் தோட்டம்
ஏதோ எட்டிப் பார்த்து வந்தது போல்
ஒரு சின்னஞ்சிறு செடி முளைத்திருக்கும்
இடிந்த கல்லறை
அவன் தேடும் கல்லறையா?
கவிதைகள் – கு. அழகர்சாமி
காடும் நிலா விளக்கைக்
கூடத் தூக்கிக் கொண்டு
முன் விரையும்.
கவிதைகள்
இரவு இறங்கியிருக்கும்
இந்தப் பூங்காவில்
எத்தனையோ மரங்களில்
எந்த மரம் சலித்திருக்கும்?
அருங்குணச் செல்வன் காருகுறிச்சி
அருணாசலம் நாகஸ்வரம் வாசிப்பது போலவே வாய்ப்பாட்டும் அற்புதமாகப் பாடுவார். பாடும்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாட்டையோ, ராகத்தையோ நிறுத்தி, “இந்த இடத்தில் எங்கள் வாத்தியார் அற்புதமாக வாசிப்பார். அவர் வாசித்துக் கேட்க வேண்டும்” என்று பரவசத்தோடும், பக்தியோடும் சொல்வார். ஒரு ராகத்தைப் பாடி முடிக்கும் முன் ஐந்தாறு தடவைகள் இவ்வாறு கூறிக் குருவின் மேதாவிலாசத்துக்குப் புகழ்மாலை சூட்டி வணங்குவார். குருவே அருணாசலத்துக்கு உயிரும், தெய்வமும் என்று சொல்லி விடலாம்.