கரையைத் தொடாத அலையின் பாடல்

காட்சியின் உச்சத்தில் ஆடியடங்கி
மையத்தில் செத்து வீழ்கிறாள்
உன் சிரிப்பு அடங்குகிறது
பிரவாகிக்கும் இசையுடன் திரையிறங்க
அகத்துள் துவங்குகிறது நாடகமொன்று

வருணன் கவிதைகள்

சமரசங்கள் மீதமின்றி
தீர்ந்து போய்விட்டதொரு பொழுதில்
உன் மீதான
அதுவரையிலான அன்பை
சட்டகமிட்ட நினைவுச்சின்னமாய்
மாற்றிக் கொண்டேன்.