கோடைக் கவிதைகள்

இக்கணம்,
விழுகிறான் சூரியன்.
பெரிய சிவப்பு உருண்டை.
பகல் கனிந்த இனிப்புடன்,
மென்காற்றின் இதத்துடன்.

பிரார்த்தனைகள்

கடலலைகளாக
புரளும் மனம்
உருண்டோடி உன் பாதக்கரையை
அடைந்த தருணம்,
என் தலைமீது மாற்றினாய்
அழகிய உன் பிறை நிலவை.

மினுங்கும் பொழுதுகள்

‘நிழல்கூட அளவாக விழுமாறு எழுப்பபட்ட பிரம்மாண்ட’ கட்டிடத்தின் முன்னுள்ள புங்கை மரம் எப்படி தப்பித்தது என்பது குறித்த வியப்பும் (‘என் கடவுளின் சாமரம்’), வேலை முடிந்து திரும்புகையில் தற்செயலாக தென்படும் ‘இளம்பழுப்பு’ நிலவும் (‘இரவின் ஒளி’), ‘வீடும் வெளியும்’ பகுதியின் வெளிச்சத்திலிருந்தும், வாழ்வியலிலிருந்தும் நகரம் வெகு தொலைவில் வந்துவிட்டதை சுட்டுகிறது.

கவிதைகள் – பானுமதி ந. , அனுக்ரஹா ச.

யாரும் உடன் இருக்கையில்
அது பேசுகிறது தன் மொழியில்
யாருமற்ற போது அதன்
இரைச்சல் பேரலைகள் போல்
அதன் கூக்குரல் விழுங்கும்
உலகனைத்தையும்;பின்னரும்
பசிக்கும் அதற்கு. நீ வந்து
அருகில் அமர அது அடங்கிவிடும்.

மூவர் கவிதைகள்

அண்ணன் புத்தாடையும்
முகப்பூச்சுமாய்
உள்ளேயும்வெளியேயும்நடக்க,
திருந்தா நடையோடும்
இடை உள்ளாடையோடும்,
ஊருக்கு செல்லும் பிடியில்
வாசலில் இருந்த வாளியில்