வருணன் கவிதைகள்

காற்றெனும் இசைஞன்

உடைகளைத் தோரணங்களாக்கி
தானொரு சிறுவனாகி
தாவித் தாவிக் கலைத்து விளையாடுகிறது
காற்று
மீட்டப்படும் ஊளை இசையின்
தாளத்திற்குத் தப்பாமல் தவித்தலைகின்ற விரல்கள்
அதனதனை அதனதன் இடத்தில் அமர்த்திட

Dancing Madhuri By m f husain

உறங்கும் இரவு

யாவரும் உறங்குவதைப் பார்த்துப் பார்த்து
சலித்துப் போயிருந்தது அவ்வீட்டின் இரவுக்கு
மழலையின் சிணுங்கலும் அழுகையும்
கேட்கத் துவங்கிய நாள் முதல்
இரவு உறங்கும் அழகை
கொட்டக் கொட்ட கூடிப் பார்த்தபடியிருக்கிறது
மொத்த வீடும்
இரவுதான் எத்தனை அழகாய் துயில்கிறது!



Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “வருணன் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.