வாலஸ் ஸ்டீவென்ஸின் உன்னதத் தேடல்

சமய உணர்வு மற்றும் சுதந்திர வேட்கை வெளிப்படும் மனநிலையில், அவற்றுக்கு அர்த்தம் இருக்கும் சூழலில், இது போன்ற உன்னத ஏக்கங்கள் இயல்பாகவும் பொருத்தமாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவ்விதமான பரவசங்கள் இல்லாத நிலையில், நம் காலம் போன்ற வறிய காலத்தில், புலப்பாட்டு எல்லைக்குக் கிட்டாத புலப்படாத் தூண்டுதல்களை நிகழ்த்தும் ‘சப்லிமினல்’ விளம்பரங்கள் மனதை மாற்ற யத்தனிக்கும் யுகத்தில், ஒருவன் உன்னத நாட்டத்தை ஆற்றிக் கொள்வதோ, அதை எதிர்கொள்வதோ எவ்வாறு? ‘நவீன காலத்துக்கான உன்னத நாட்டம்” என்று நான் அழைக்கவிருக்கும் உணர்வு நிலையின் ஒரு சன்னலை மகத்தான அமெரிக்க கவிஞர் வாலஸ் ஸ்டீவென்ஸ் கவிதைகளில் நாம் காண இயல்கிறது.

இருப்பது, அல்லது இல்லாதிருப்பது

இந்த தேசத்தில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நான் ஒரு பத்திரிகையாளராக மாஸ்கோ திரும்பினேன், பணி நிமித்தம். நான் அன்னியமாக இருக்கும் என்று நினைத்த ஒரு தேசத்தில் எதிர்பாராதவிதமாக இயல்பாய் உணர்ந்தேன்- தனக்கென்று திறந்திருந்த வெளியொன்றில் என் உடல் தளர்ந்து கொடுத்துக் கொண்டது போல்-, வெளியேறுவது என்ற முடிவில் எனக்கு எந்த தேர்வும் அளிக்கப்படவில்லை என்பது குறித்து எனக்கு அதனால் கோபமும் இருந்தது. நான் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்றேன், கடைசியில் என்னை ஒரு ருஷ்ய மொழி பத்திரிக்கையாளராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி விட்டேன். வெளியேறியிருக்காவிட்டால் இப்படிப்பட்ட வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.

பிருந்தாவனமும் தகடூர் குமாரனும்

சொந்த ஊர் மீது மாறாத பற்றும், பாசமும் கொண்ட கோபி, தகடூர் என்னும் தர்மபுரியின் பழைய பெயரோடு இணைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். குமாரசாமிப்பேட்டையில் அனைவருக்கும் பரிச்சயமான குடும்பம் அவருடையது. கோபியின் தந்தை தணிகாசலம், ஓய்வுபெற்ற ஆசிரியர். திருவள்ளூவர் அறிவகம், அண்ணா அறிவகம் போன்ற பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார்.

கண்கள் செவிக்க மறுக்குமோ? வில்லியம் காஸின் ஐம்பது தூண்கள்

எனவே, மீண்டும் இக்கேள்வி, ஏன் எழுத வேண்டும். காஸின் கனத்த பதில்: “அவன் செய்வது அனைத்தும் எந்தப் பொறுப்புமற்ற ஓர் உள்ளார்ந்த தேவையிலிருந்து எழ வேண்டும்.” பின்விளைவுகள் குறித்து கவலைப்படாத காஸின் இத்தகைய உந்துதலுக்கு நாம் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்- இனி கோழிக்குஞ்சுகள் கொட்டகைக்கும் வேலிக்கும் இடையில், “ட்யூபிலிருந்து பற்பசை போல்” பிதுங்கிச் செல்லலாம், மரமொன்றால் ” உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றாய் அழுக்கை” மாற்ற முடியும் (வாழ்க்கையின் அழுக்கில் வேர்கொண்டுள்ள எழுத்தாளன் அதன் கசடுகளை கலையின் பொன்மூச்சாய் மாற்றும் ரசவாதம் போல்), ஆங்கில மொழியின் இரண்டாம் எழுத்தான பி, “இண்டியானாவில் உள்ள ஒரு வயலோடு பிணைக்கப்பட்ட சிற்றூர்” ஆகலாம், ஊறுகாய்கள் “முதலைகள் போல் உறங்க”லாம், “ரப்பர் ஷூக்கள் அல்லது யாரோ ஒருவனின் இருமல் போன்ற தனிமை” மானுட உணர்வாகலாம். “பளபளக்கும் சிறுமணிகள்” போல் உவமைகள் திரு. காஸில் ஊஞ்சலாடுகின்றன என்பதைச் சொன்னேனா?

பிறந்த நாள்

“இன்று மலையாளச் சிறுகதைகள் ஆங்கில மொழிக்கு மட்டுமின்றி பல உலக மொழிகளுக்கும் போட்டியாக இருக்கின்றன. ஏன் அவைகளை நீங்கள் படிக்கக் கூடாது?” என்றேன்.

ஓ, அவர்கள் சிலவற்றைப் படித்திருக்கின்றனர்.

“பெரும்பான்மையான சிறுகதைகள் வறுமையைப் பற்றிப் பேசுகின்றன. ஏன் அது மாதிரியாக எழுதவேண்டும்?”

நான் எதுவும் சொல்லவில்லை.

“எல்லாக் கதைகளையும் படிக்கும் ஒருவர் உலகில் ஏதோ தவறாக உள்ளது என்று தான் நினைக்க முடியும்,” தங்க பிரேம் அணிந்த நாகரிகமான இளைஞன் சொன்னான்.

இந்த உலகில் என்ன தவறு இருக்கிறது?பெற்றோர்கள் மாதாமாதம் பணம் அனுப்புகின்றனர். அதை வைத்துக் கொண்டு இளையவர்கள் படிப்பது, சிகரெட், டீ,காப்பி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்குரா பவுடர், வாஸ்லைன், விலையுயர்வான ஆடைகள், நல்ல சாப்பாடு, மேகவெட்டை போன்றவைகளுக்கு செலவழிக்கின்றனர். அவர்கள் தான் எதிர்கால சந்ததியினர். எதிர்கால ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்! இந்த உலகத்தில் என்ன தவறு இருக்கிறது?

க்ரேஸ் பேலி – பெரும் கலக்கங்கள்

அவர் புழங்கிய ஆர்வலர் வட்டங்களில், அவர் சந்தித்திருந்த பெண்ணியவாதிகளில் சில இளைஞர்களைப் போல அல்லாது, பேலி தாய் என்னும் நிலையை நசுக்கும் அமைப்பாக ஒரு போதும் பார்த்ததில்லை. குழந்தை வளர்ப்பு என்பதை அவர் ஒரு வகை வேலை என்று புரிந்து கொண்டிருந்தார் – சலிப்பூட்டுவது, ஓய்ச்சலைக் கொணர்வது, நன்றியேதும் கொணராதது, இதை அவருடைய பல கதைகள் வெளிப்படுத்துகின்றன….இருப்பினும், குழந்தைகளைப் பராமரிப்பது என்பது கொணர்ந்த உணர்ச்சிகளையும், மனத் தெளிவுகளையும் அவர் பெரிதும் விரும்பினார். அவருடைய புனைவுகளில், குழந்தை வளர்ப்பின் எழிலையும், சாதாரணத் தன்மையையும் எல்லாம் கவனித்தபடியே, அதைப் பெருமையுள்ளதாகவே சித்திரித்தார். தாய் எனும் நிலை, பேலியைப் பொறுத்து, ஒரு கலவையான ஆசீர்வதிப்பு, மகிழ்ச்சியும் பெரும் சினமும் துக்கமும் கலந்து கிட்டும் ஒரு அனுபவம். அது உலக வாழ்வில் குறைகள் கொண்ட, ஆனால் இறுதியில் பயனளிக்கும் இன்னொரு வழி.

புனைதலும் கலைதலும்

தமிழில் எழுதப்பட்டுள்ள சுயசரிதைகளில் மிக முக்கியமான ஒன்று ஔவை.தி.க.சண்முகம் அவர்களின் ‘’எனது நாடக வாழ்க்கை’’. அவர் அதனை நாடக வாழ்க்கை எனக் கூறினாலும் அது அவரது வாழ்க்கையே தான். ஒரு நாடகக் கலைஞராக அவர் தன் வாழ்க்கையைத் தொகுத்து எழுதும் போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழின் சமூகவியல் ஆவணமாகவும் அந்நூல் மாறுகிறது. மனிதர்களுக்கு உலகியல் நேரடியானதும் மறைமுகமானதுமான எல்லைகளை உருவாக்குகிறது. பலர் அந்த எல்லைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் அமைந்து விடுகின்றனர். சிலர் அந்த எல்லைகளுடன் திருப்தி அடையாமல் அதனைத் தாண்டி பயணிக்கின்றனர். புதிய அனுபவங்களைப் பெறுகின்றனர். புதிய விஷயங்களைக் கண்டடைகின்றனர். அவர்களிடமிருந்து ஒரு புதிய துவக்கம் நிகழ்கிறது. மாற்றத்தை உருவாக்க பணியாற்றியவர்களாகவும் மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும் வரலாற்றில் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன்

தமிழ்ச் சிறுகதைத் துறைக்குப் பெரும் பங்காற்றியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நூற்றாண்டுக் காலத்தில் இவ்விலக்கிய வகைமைக்குப் பங்காற்றியவர்கள் நூறு பேருக்குள்ளாகத்தான் இருப்பர். அதில் ஆளுமையுள்ளவர்களாக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஆ. மாதவன் ஆகிய நால்வரை மட்டுமே குறிப்பிட முடியும். அசோகமித்திரனிடம் படைப்பெழுச்சி மிக்க தருணங்கள் இல்லை. மன நெருக்கடியில் விளைந்த அனுபவசாரம் அதிகக் கதைகளில் இருப்பதால் இவரை முக்கியமான சிறுகதையாளர் ஆக்குகிறது. இளம் எழுத்தாளர்களில் இரண்டுபேரை மட்டுமே சொல்ல முடியும். கறாரான இத்தன்மையில் தி. ஜானகிராமன் நிராகரிக்க முடியாத ஒரு படைப்பாளியாக இருக்கிறார். தமிழன் துரதிருஷ்டம் அவரின் நாவல்கள் பேசப்பட்ட அளவு சிறுகதைகள் பேசப்படவில்லை. அதிலும் ஒரு பாதகம் தி. ஜானகிராமன் நாவல் கலையின் உச்சத்தைத் தொட்டவரல்ல. அவருடைய அபரிமிதமான சாதனை சிறுகதைத் துறையிலேயே நிகழ்ந்திருக்கிறது.

ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி. ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக் கைக்கொண்டனர். கருத்துலகு மீதான விமர்சனம்தான் மார்க்சியம் என்ற சித்தாந்தத்தின் பொதுத்தன்மைகளை…

ஜோசியர்கள், அகதிகள் & காந்தி

ஃபிரெஞ்சு புகைப்படக்காரர் ஹென்ரி கார்ட்யெ பிரசன் (Cartier-Bresson) இந்தியாவில் பல்லாணடுகள் செலவழித்திருக்கிறார். இவர் நம் மகாத்மா காந்தியை படங்களாகப் பதிவு செய்தவை உலகப் புகழ்பெற்றவை. காந்தியைத் தவிர ரமண மகரிஷியின் ஆசிரமம், கதகளி குருகுலத்தின் நடனப்பயிற்சி, காஷ்மீரத்தின் இயற்கை, அகமதாபாத் நகரத்தின் சந்து பொந்துகள் எல்லாம் உண்டு. அவற்றை “ஜோசியர்கள், அகதிகள் & காந்தி”

தணிக்கைமுறை எப்படி வேலை செய்கிறது

எந்த எதிர்ப்பும் இல்லாமல் தம்மைத் தாமே தணிக்கை செய்து கொள்பவர்கள் பல வகைப்பட்ட அறச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் எப்போதுமே எதற்கும் பலியானதில்லை. அவ்வப்போது கண்ணீரைக் துடைத்துக் கொள்வது போல் நாடகமாடினாலும் எப்போதும் பலியாகவும் மாட்டார்கள். அவர்கள் தம் அடிமைத்தனத்தை ஒவ்வொரு முறை வெளிப்படுத்தும்போதும் சர்வாதிகாரிகளின் இதயத்தைக் குளிர்விக்கிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீமை செய்கிறார்கள். முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொள்பவர்களின் நிலைப்பாடு காலப்போக்கில் மக்களிடையே பரவுகிறது. இதுவே நம் சமூகம் அற வீழ்ச்சி அடையவும் அடிப்படை காரணமாகிறது.

இளமூதாக்களும் கழிவுநீரும்: சால் பெல்லோவின் கலை

அன்புள்ள திரு பெல்லோ அவர்களுக்கு,

நீங்கள் நேசிக்கும் நியூ இங்கிலாந்தை இப்போது குளிர்காலம் நெருங்கி விட்டது. “சென்ற வேனிலின் இலைகள்” அளிக்கும் கசப்பும் இனிப்பும் கூடிய அழகு ஒரு புறம் இருந்தாலும், இந்தக் குளிர்காலம் ஒளியற்றதாக இருக்கும் போலிருக்கிறது. இவ்வாண்டின் கோடையில் நான் ஒரு பெருந்தீனிக்காரி போல், நீங்கள் எழுதிய ஏறத்தாழ எல்லாவற்றையும் வாசித்தேன் (மீண்டும் மீண்டும் வாசித்தேன்). ராவல்ஸ்டீன் போலவே நானும் அவற்றின் நுண்மையான இசையில் “எண்ணங்கள் கரைந்து போக” என்னை இழந்தேன். சிந்தனைகள் சுள்ளிகளாய் முறித்துத் தெறித்துச் சுடர் விட்டுக் கனலாய்த் தகிக்கும் ஓர் உள்ளத்தின் வெம்மையில் குளிர் காய்வது போன்ற அனுபவமாய் என் வாசிப்பு இருந்தது. நான் உங்கள் தீவிர வாசகி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா!

நகர்ப்புற அமெரிக்கா குறித்த உங்கள் வர்ணனைகள் அற்புதம், ஒரு லேசர் போல் குவியும் உங்கள் பார்வையில் புலப்படும் புற விவரணைகள் அத்தனையும் (நவீன இலக்கியத்தில் இவற்றுக்கு இணையான வேறொன்று இல்லை) அந்த மடிசஞ்சி நபகோவ், டிக்கன்ஸ் போன்றவர்களுக்கு மட்டுமே உரித்தென்று வைத்திருந்த தண்டுவடச் சிலிர்ப்புக்குத் தக்கவை (மரக்கால் கெர்ஸ்பாக், “ஒரு பரிசல்காரன் போல் நளினமாய் வளைந்து நிமிர்கிறான்” என்பது நினைவுக்கு வருகிறது, ஆனால் அண்மையில் எனக்கு மூர்க்கம் மிகுந்த ஒரு “நிதர்சன-படிப்பினை” அனுபவம் ஏற்பட்டது.

இந்திய அமெரிக்கரின் விதூஷக ராஜாங்கம்

9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை ‘ஒசாமா’ என்று அழைப்பது; பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் நடுப்பகுதியில் உள்ள தெற்கு மாகாணங்களில் இன்றைக்கும் நிலவும் வெள்ளையின உயர் பெருமிதத்தின் எச்சங்கள்; பள்ளியில் பெரும்பான்மையினர் இடையே சிறுபான்மையினராக உலா வரும்போது தோன்றும் இருப்பியல் அபிலாஷைகள் – என்று கலந்து கட்டி தன் வரலாற்றைச் சொல்கிறார் ஹஸன். நடுநடுவே இந்தியக் குடும்பங்களின் பண்பு; படிப்பில் காட்டும் சிரத்தை; திறந்த வெளியாக எதைப் பற்றியும் பேசாத இந்தியக் குடும்பங்களின் சூழல்; சமூகமும் சமயமும் சாராமல் திருமணம் செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் என்று பல இடங்களில் கோர்வையாகத் தாவுகிறார்… நகைச்சுவையாகவும் பேசி சிரிக்க வைக்க வேண்டும். வெறுமனே கேலியாக இல்லாமல் அந்தப் பேச்சில் வாதத் திறனும் இருக்க வேண்டும். வெறும் வாதமாக இருந்துவிடாமல் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் கோர்க்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; அரசியல் சிக்கல்களாக இருக்கட்டும் – ஏன் இந்த முடிவிற்கு நீங்கள் வர வேண்டும் என்பதை சுயவரலாற்றுடனும் சிரிப்புடனும் சொல்ல ஹஸன் மினாஜிற்கு தெரிந்திருக்கிறது.

கனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்

ஐயங்களும் சோர்வுகளும் இல்லாமல் இல்லை பொதுவுடமைக் கட்சியின் வேலையில். அவளுக்கிருக்கும் பயங்களையும் பாரபட்சங்களையும் மீறி வரவேண்டியிருக்கிறது. சிறு வயதில் சிங்கப்பூரில் குண்டு விழுந்தபோது தன்னைச் சிங்கப்பூரில் இருந்த வீராங்கனையாக, எல்லோருக்கும் உதவுபவளாக, தன் தலையில் குண்டு விழுவது குறித்து அஞ்சாத ஒருத்தியாக தன்னைப் பாவித்துக்கொண்டவள் அவள். “அச்சமில்லை, யச்சமில்லை அச்சமென்ப தில்லையே; உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று பரதியார் பாடலைப் பாடியவாறு வீர சாகசம் புரிவதாகக் கற்பனை செய்தவள். ஆனால் ஓர் இளம் வயதுப்பெண்ணாக இருக்கும்போது பலமுறை அவளுக்கு அச்சம் வருகிறது

ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி

கட்ஸுஷிகா ஹொகுசாய் (Katsushika Hokusai – 葛飾 北斎) 1760 முதல் 1849 வரை வாழ்ந்த ஜப்பானிய ஓவியர். அவரின் இறுதி முப்பதாண்டுகளில் வரைந்த சித்திரங்களின் கண்காட்சியை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கவனப்படுத்துகிறது. அவரின் அந்திமக்காலத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்: ”சொர்க்கம் மட்டும் இன்னுமொரு பத்தாண்டுகளுக்கு என்னை வாழ வைத்தால்…” என்று “ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி”

அசோகமித்திரன் அஞ்சலி

மொழி மயக்கத்தில் கட்டுண்டு, பண்பாட்டுப் பெருமிதங்களில் சிறைப்பட்டு, ஆதாரமற்ற- அதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கைக்கொள்ளவும் கைவிடவும் தக்க கருவியாய் பயன்படும் தன்மை கொண்ட – பகைமைகளால் பிளவுபட்டு, இயல்பு நிலை என்னவென்பதை அறியாத காரணத்தால் இலக்கற்ற திசையில் தமிழகம் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சாதாரண மொழியில் சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை உள்ளபடியே எழுத முற்பட்டவர் அசோகமித்திரன். பெருங்கூட்டமாய் உரத்து ஒலித்த ஆரவார கோஷங்களுக்கு இடையில் சன்னமாய், தனித்து ஒலித்த அவரது குரல் முகமற்ற, நாவற்ற தனி மனிதர்களுக்காக பரிந்துரைத்த குரல், அவர்களுக்குரிய நியாயத்தை எடுத்துரைத்த குரல். எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அவர் முன்வைக்கும் விமரிசனத்தை தமிழகம் எதிர்கொண்டாக வேண்டும் – நீதிக்கான தேவை இருக்கும்வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எளிய மனிதர்களின் எளிய வாழ்வை அகலாது உற்று நோக்கிய அசோகமித்திரனின் பார்வைக்குரிய தீர்க்கம் அவர் தலைமுறையில் மிகச் சிலருக்கே இருந்திருக்கிறது. இன்று அவரை நாம் இழந்திருக்கிறோம், ஆனால் இனி அவரது அக்கறைகள் நம்மோடிருக்கும், அவரது எழுத்துக்கும் பொருளிருக்கும்.

சொல்வனம் அசோகமித்திரனின் பங்களிப்பை தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. அதன் நூறாவது இதழை ‘அசோகமித்திரன் சிறப்பிதழ்‘ என்றே கொண்டாடியிருக்கிறது. தொடர்ந்து அவரையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து சொல்வனம் ஊக்கம் பெறும்.

பெண்ணுரிமை பேசிய முன்னோடி வ.உ.சி

வ.உ.சி. க்கு 1895-ல் முதல் திருமணம் நடந்தது. வ.உ.சி. ராமையா தேசிகர் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை வீட்டில் வைத்துப் பராமரிக்கிறார். வ.உ.சி. யின் மனைவியும் தேசிகரை அன்புடன் பராமா¢க்கிறார். அடுத்து, ஊரில் உள்ளவர்கள் ராமையா தேசிகர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சொல்கிறார்கள். வ.உ.சி. க்கு அவரை வீட்டைவிட்டு அனுப்ப மனமில்லை. மனைவியிடம் ஆலோசனை கேட்க செல்கிறார். வ.உ.சி. பிரச்சினை என்னவென்று கூறுவதற்கு முன்பே அவரது மனைவி வ.உ.சி. முன்பு கூறியதையே பதிலாகக் கூறுகிறார்…

தமிழர் முகங்கள் : எனக்கோர் அறிமுகம்

“சீக்கிய வீரனைப் போல் முண்டாசு கட்டியிருந்தார்;வற்றி உலர்ந்த உடம்புதான்;வாடிப் போன கன்னங்கள்தான்; எனினும் மார்பை முன்னே தள்ளித் தலை நிமிர்த்தி ஒரு வெற்றி வீரனைப் போல் உள்ளே நடந்து வந்தார். எந்த போர் வீரனுக்குத்தான் அவ்வளவு காம்பீர்யம் இருக்கமுடியும்? நீண்டு நிமிர்ந்த மூக்கும், அடர்ந்த புருவங்களும், உருண்ட கண்களும் அவற்றின் கூர்மையான வீரப்பார்வையும், பரந்த நெற்றியும், அதன் நடுவிலே குங்குமப் பொட்டும் அந்த வீரம் செறிந்த முகத்தை வசீகரமாக்கிவிட்டன. பித்தான் இல்லாத கிழிந்த ஷர்ட்டு மேலே அல்பாகா கோட்டு ;அதற்கு ஒரே பித்தான்; கோட்டும் காலம் கண்டதுதான். ஆனால் அவ்வளவு வறுமையாலும் அவிக்க முடியாத ஒரு பெருமை-ஒரு பெருமிதம்-ஒரு மாட்சி ஒளி வீசியது அந்த முகத்திலும்,கண்களிலும்-மெல்லிய மேகத்திரைக்குள்ளே ஒளிந்து கொண்ட சந்திர பிம்பம் போலே .

பல்வங்கர் பாலூ – மறக்கப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் திகழ்ந்த ஒருவர் உண்டு. அவர்தான் பல்வான்கர் பாலு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்த முதல் தலித் ஆட்டக்காரர் அவர்தான். ஏன் இவரை முன்னோடி என்றும், சொல்லப் போனால் ஆகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது சாதனைப் புள்ளிவிவரங்களே சாட்சி. … 1876ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தார்வாடில் ஒரு தலித் (சாமர் வகுப்பில்) குடும்பத்தில் பிறந்தவர் பல்வான்கர் பாலு. அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார். அவர் பூனாவின் பார்சி இனத்தவருக்கு சொந்தமான கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அதன் ஆடுகளத்தை பராமரிக்கும் வேலையில் இருந்ததாகவே அவரைப் பற்றிய முதல் தகவல்கள் சொல்கின்றன. அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு பந்து வீசவும் செய்த பாலுவுக்கு மாதம் 3/- ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ட்ரம்பியம் ஆளத் துவங்குகிறது

பருவநிலை மாற்றம் மனிதர்களால் ஏற்படுகிறதா என்று தனக்குத் தெரியாது ஆனால் அதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதன் விளைவுகள் தீவிரமாகவே இருக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னவர், பருவநிலை மாற்றம் குறித்த தவறான கருத்துக்களை எக்ஸான் மொபில் பரப்புவதாக டிம் கெயின் கேட்ட கேள்விக்குப்பதிலளிக்க முடியாமல் தடுமாறவும் செய்தார்!

‘தமிழ்நாட்டில் காந்தி’ – தி. சே. சௌ. ராஜன்

அம்பேத்கருக்கு நேரடியான எதிர்வினை என்றில்லாமல் காந்தியின் அரிஜனத் தொண்டு குறித்து 1944ல் தமிழில் ஒரு நூல் வெளிவந்தது. அது தி. சே. சௌ. ராஜன் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி”. புகழ்பெற்ற புனே ஒப்பந்தத்துக்குப் பின் காந்தி தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாட்டில், மாட்டு வண்டி, கார், ரயில், என்று பலவிதங்களில் பயணம் செயது 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்திக்கிறார். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் அவரை நேரில் பார்க்கவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் செய்திருக்கிறார்கள். சென்ற இடங்களிலெல்லாம் தீண்டாமை ஒழிய பாடுபடுமாறு மக்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார் காந்தி.

அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரியில் காந்தியோடு இந்த பயணத்தில் இணைந்து கொள்கிறார் ராஜன். அங்கு தொடங்கி, காந்தியுடனேயே பயணம் செய்து, அவரது உரைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் செய்கிறார். காந்தியின் நிழல் போல அவரைத் தொடர்ந்து சென்ற அந்தப் பயணத்தின் கதையை மிக சுவாரசியமாய் பதிவு செய்திருக்கிறார் ராஜன்.

ஆறாம் நிலத்தின் அடையாளம்

அவரது சிறுகதைகளை வாசித்தபிறகு ஏற்படும் உணர்வுக் கொப்பளிப்பில் பலமுறை அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.சிலமுறை லேசாக பகடி செய்ததுமுண்டு.ஒரு மூத்த எழுத்தாளரை பகடி செய்யும் துணிவையும் சுதந்திரத்தையும் தந்தது எது? என பலமுறை ஆச்சர்யமடைந்திருக்கிறேன். அது அவரது படைப்பு மொழியும் அது தந்த நெருக்கமும் என பின்னாளில் உணர்ந்துகொண்டேன்.ஒரு வாசகனாக அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது வாசகர்களின் கடிதங்களுக்கும் தாமதமின்றி உடனுக்குடன் பதில் எழுத்துவதைக் கூறுவேன். உண்மையில் வேறு எந்த மூத்த எழுத்தாளர்களும் அவர் அளவிற்கு வாசகர்களுடன் இணங்கி உரையாடுவார்களா என்பது சந்தேகமே.

அ முத்துலிங்கம்: நேர்காணல்

எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் முந்தைய பதிவுகள்: அ. முத்துலிங்கம் நேர்காணல் வாசகர் தேவை : அறிவியல் மறந்துவிட்டீர்களா? : வெ.சா. அஞ்சலி கடவுளை ஆச்சரியப்படுத்து : சிறுகதை வெளிச்சம்: சிறுகதை ஆச்சரியம்: சிறுகதை ஆற்றேன் அடியேன் : இலக்கியம் பற்கள் சாபம்: அனுபவம் கடவுளின் காதுகளுக்கு பாகிஸ்தானில் பறந்த “அ முத்துலிங்கம்: நேர்காணல்”

த்ரிவிக்ரமன்

“வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டு ‘குலேபகாவலி’ எனச் சொல்லும்போது ஒரு சத்தம் வருகிறதல்லவா. அதுதான் அவர் பெயர். நான் எழுத்தில் கொண்டுவர இயலாமல் சாரா என வைக்கிறேன்” (புளிக்க வைத்த அப்பம் ) என சொல்லி அவர் காட்டுவது 3400 வருடங்களாக தொடரும் விரட்டப்பட்ட மக்களின் வாழ்வின் மிச்சங்களை. இவைபோன்று பல உதாரணங்களை அடுக்குவது என் நோக்கமல்ல. இலக்கியவாதிகளில் மிகச்சொற்பமானவர்களே இப்படி மெல்லிய அங்கதத்தின் ஊடே எப்படிப்பட்ட பாரமான பத்தியையும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களில் இவரே தலையானவர் என்றும் சொல்லலாம்.

பயணங்களின் தொலைவு

புத்தகத்தில் என்னை அதிகம் பாதித்த கட்டுரை – “சாவதும் ஒரு கலை”. தற்கொலை பற்றியது. மரணத்தை அதன் வாசனை ஒட்டுகிற தூரம் வரைச் சென்று தொட்டுத் திரும்புகிறவர்கள் இந்த உலகத்திற்கு அல்லது தங்களுடைய சொந்த வாழ்க்கைக்கேனும் குறைந்தபட்சமாக ஒரு கைப் பிடி அளவுக்காவது வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். இதை ஒரு நிரந்தர விதி போல் நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு திரும்பி வந்தபோது இயற்கையின் பேரற்புதத்தை உணர்ந்தவராக திடமான நம்பிக்கையோடு வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைகிறார். ஆனால் சுகுமாரனின் உலகத்தில் தற்கொலைக்கு முன்பும் பின்பும் எந்த மாற்றமும் இல்லை. தவிப்பும் கொந்தளிப்பும் மிக்கதாகவே அது தொடர்கிறது.

சினிமா நடிகர் சோ

அவர் நடித்த மேடை நாடகம் ஒன்று சிவாஜிகணேசன் நடிக்க சினிமாவான பொழுது அவர் நாடகத்தில் நடித்த வேடத்தில் நடிப்பதற்காக சினிமாவுக்கு அழைக்கப் பட்டார். தன் வீட்டுக்குத் தெரியாமலும் தயக்கத்துடனுமேயே சினிமாவுக்குள் நுழைந்த சோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் புகழ் பெற்ற ஒரு நடிகராகவே தொடர்ந்தார். கணீரென்று தனித்துவமான குரல், சமயோதிடமான நையாண்டி, போகிற போக்கில் செய்யும் கேலிகள் தவிர்த்து அவர் ஒரு நல்ல ஸ்லாப்ஸ்டிக் காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நிலை பெற்றார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நூற்றுக்கணக்கான சினிமாக்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். எம் ஜி ஆரின் கட்சியான தி மு க வை அவர் கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் கூட எம் ஜி ஆரின் பல படங்களில் தொடர்ந்து காமெடி ரோல்களை சோ செய்து வந்தார்.

2016இல் மறைந்த இலக்கியவாதிகள்

தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் கடந்த வருடத்தில் யாரெல்லாம் மறைந்தார்கள்? ஞானக்கூத்தன், வே.சபாநாயகம், குமரகுருபரன், கே.ஏ.குணசேகரன்… இங்கே மேற்கத்திய உலகின் ஜாம்பவான்களைப் பட்டியலிடுகிறார்கள். 2016ல் சொல்வனம் இதழில் அஞ்சலி செலுத்தப்பட்டவர்கள்: எழுத்தாளர் உம்பர்த்தோ எக்கோ நாடகாசிரியர் சோ கவிஞர் ஞானக் கூத்தன்  

சோ

அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், துறை வல்லுனர்கள் முதலியவர்களுக்கு இடையில் சாதாரண மக்கள் மத்தியில் இருந்து கருத்துருவாக்குகிறவர்களாக, அவர்களை வழிநடத்துபவர்களாக சிலர் தோன்றுகிறார்கள். அவர்கள் பின்னால் இயக்கங்களோ, ஸ்தாபனங்களோ, பண/ஜாதி/இன பலங்களோ இருப்பதில்லை . எனக்கு முந்தைய தலைமுறையிலிருந்து, இன்றைய தலைமுறை வரை அரசியல் சமுதாய நிலைப்பாடுகளில் எவை நல்லவை என்று உடனடியாகவும், தெளிவாகவும் சுட்டி வழி நடத்திய, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் சோ முதன்மையானவர்

சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு

தன் அபத்த நாடகங்களை மீறி உண்மையான நாடகக் கலைகளை எல்லாம் அவர் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தத் தவறியதில்லை. உடையப்பா தேவரின் தெருக்கூத்து பாணி நாடகங்களை பலரிடமும் கொண்டு சேர்த்தவர் சோ. … சோவின் நாடகங்களை கிரேக்க நாட்டின் பண்டைய நாடக ஆசிரியரான அரிஸ்டோ ஃபனோசுடன் ஒப்பிடுகிறார் எழுத்தாளர், விமர்சகர் ஆர் வி சுப்ரமணியன். நாடகத்தை தன் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகக் கருதினாரே ஒழிய அவற்றை கலையம்சம் உடைய ஒரு கலையாக அவர் கருதியதில்லை. அது ஒரு வேடிக்கையான உத்தி என்ற விதத்தில் மட்டுமே கையாண்டார். நடிப்பு, மேடை உத்திகள், பெரிய செட்டுகள், படாபடோபமான ஒப்பனைகள் உடைகள் மாயா ஜாலங்கள் என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை.

ஆடு பாம்பே! – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அதிபர் தன்னிச்சையாகவா எல்லா முடிவையும் எடுப்பார், அவருக்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்தும் வட்டம் இருக்காதா என கேட்கும் நல்லவர்களும் இருக்கிறார்கள். ட்ரம்பின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களோ ட்ரம்பை விட ஆபத்தானவர்கள்… கருவை சுய அபார்ஷன் செய்து கொண்ட பூர்வி படேல் என்ற இந்திய வம்சாவளி பெண் 20 ஆண்டு சிறை தண்டனை தரப்பட்டார். Pro-life என்று வேறு பெயரில் அழைத்தாலும் அதன் வேர் கிறித்துவ அடிப்படைவாதம்தான். பர்தா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதங்களை கிண்டல் செய்துகொண்டே கருக்கலைப்பு போன்றவற்றை தீவிரமாக நம்பும் பாசாங்குத்தனமும் புதிய நிர்வாகத்தின் செயல்திட்டங்களில் இருக்கிறது.

அசிங்க அரசியலின் வெற்றி

ஆரம்பித்ததிலிருந்து ட்ரம்ப் ஒரு கோமாளியாகத்தான் பார்க்கப்பட்டார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், எதிராளியைத் தாக்கும் முறைகளும், அரசியல் பண்பாடு அறவே அற்ற, முன்யோசனை இல்லாத கருத்துக்களும் இந்தியாவுக்குப் புதிது அல்ல. நம் அரசியல்வாதிகள் நம்மை அதற்குப் பழக்கியிருக்கிறார்கள். ஆனால் மேற்குலகில் அரசியல் சாக்கடை இருந்தாலும் பொதுவில் நாகரீகம் இருக்கும். ஆனால் ட்ரம்ப் அதைப் பறக்கவிட்டு தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பாணியில் பிரச்சாரம் செய்தார். அவர் கடசியினரே அவரை ஓரம் கட்டினர். ஆனால் மர்மமான முறையில் எல்லா முக்கியமான கட்சி உள்தேர்தல்களில் ட்ரம்ப் முதலிடம் வந்தார். வேறு வழியே இல்லாமல் குடியரசுக் கட்சி அவரை அதிபர் வேட்பாளராக்கியது. எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?

இதற்குத்தானா ஆசைப்பட்டது அமெரிக்கா?

மைனாரிட்டி இன மக்கள், பெண்கள், இளம்வாக்காளர்கள், கறுப்பர்களை குறிவைத்து அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஹிலரி பேசி வந்ததை வெள்ளை இன மக்கள் குறிப்பாக ஆண் வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன…செனட் மற்றும் காங்கிரஸில் மெஜாரிட்டி பெற்றிருக்கும் ட்ரம்ப் கட்சியினர் நீதித்துறையையும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விட்டால் அரசியல் சட்டங்களையும் தங்கள் விருப்பப்படி மாற்ற இயலும். அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் அவர்களை தடுக்கும் சக்தி ஜனநாயகக் கட்சிக்கு இல்லை என்பதும் கவலைதரும் செய்தி.

அ. முத்துலிங்கம் நேர்காணல்

ஆங்கிலேயர்களில் ஒரு வழக்கம் உண்டு. வைன் குடிப்பதற்கு ஒருவித கிளாஸ். சாம்பெய்னுக்கு வேறு ஒரு கிளாஸ். பியர் என்றால் கைப்பிடி வைத்த பெரிய கிளாஸ். விஸ்கிக்கோ, பிராந்திக்கோ வேறொன்று. எந்தப் பாத்திரத்தில் குடித்தாலும் சுவை ஒன்றுதானே. ஆனாலும் எப்படி பருகுவது என்பதற்கு ஒரு முறை உண்டு. கதை மனதில் உருவாகியவுடன் ஒரு சிக்கல் வரும். யார் கோணத்தில் சொல்வது? ஒருமையிலா, பன்மையிலா? தன்மையிலா படர்க்கையிலா. இவற்றை தீர்மானித்தபின்தான் வடிவத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஒரு சிறுகதை மனதில் தோன்றிய பின் அதை எப்படியும் சொல்லலாம். ஆனால் சரியான வடிவத்தில் அது வெளிப்படும்போது உயர்வு பெறுகிறது. படைக்கும் பொருளே வடிவத்தையும் தீர்மானிக்கிறது

ஷோபாசக்தியுடன் ஒரு மாலை

வெகு இயல்பாக உரையாட ஆரம்பித்த சக்தியின் கண்கள் அலைபாய்ந்தபடியே இருந்தன. கைகளில் தேநீர் கிளாசை எடுப்பதும் உறிஞ்சுவதும்கூட ஒரு பதட்டத்திலேயே நடந்ததுபோலத்தான் எனக்குத்தெரிந்தது. அது அவரது புலிவாழ்க்கையின் எச்சமாக இருக்கக்கூடும் என்பது என் ஊகம். இங்கு தேநீர் மட்டும்தான் கிடைக்கும் என்று எம்கே குமார் சொன்னபோது புரிந்துகொண்டவர் தான் பகலில் குடிப்பதில்லை என்றார். ஹேங் ஓவருக்காக அடுத்தநாள் காலையில் கொஞ்சம் குடிப்பது கணக்கில்வராது என்பது அவர் கருத்து. அதை எங்க ஊரில் ‘தெளிதண்ணி’ என்போம் என்றேன் நான். கேட்டு சிரித்துக்கொண்டார்.

ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்

This entry is part 39 of 72 in the series நூறு நூல்கள்

இன்னாரை நேரில் கண்டு உரையாடப் போகிறோம் என்றால், அவர்களின் எழுத்தில் மூழ்கி அமிழ்தலைத் துவங்குவேன். ஒருவரைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தால் ஒரு வாரத்திற்குள் அவரின் பெரும்பாலான புத்தகங்களையும், இணையத்தில் எழுதிக் குவித்ததையும், விமர்சனங்களையும், வம்புகளையும் படித்து முடித்துவிடுவேன். சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று எழுதிக் குவித்த வஸ்தாதுகளைக் கூட இந்த சட்டகத்தினுள் அடக்கி, ஒரு பருந்துப் பார்வை பார்த்து, அந்த ஒரு துளி அரிசியில் இருந்து முழு சோறும் எப்படி வெந்து இருக்கும் என்பதை உணர்ந்தாவது விடுவேன். எல்லோருக்கும் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று உணரும் நேரம் வரும். அது அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா வருகிறார் என்றவுடன், அவரின் எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவும் தேடவும் அவர் கொடுக்கும் மேலதிக விபரங்களுக்குக்கான குறிப்புகளின் …

வ.உ.சி.யின் திருக்குறள் பற்று

“சில தினங்களுக்கு முன்பு கோயம்பத்தூர் சென்ட்ரல் ஜெயிலில் இருக்கும் ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையை அவருடைய மனைவி, மக்களும் அவரது ஆப்தராகிய ஸ்ரீ வள்ளி நாயக சாமியாரும் வேறொரு நண்பரும் பார்வையிடச் சென்றார்கள். அந்த சந்திப்பில் நடந்த சம்பாஷணையினிடையே ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையவர்களின் வாக்கிலிருந்துதித்த சில வசனங்கள்…….தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” .. .. .. 1910-ஆம் ஆண்டு கோவைச் சிறையில் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் வ.உ.சி. கூறிய இக்கூற்று வ.உ.சி. திருக்குறள் மீது கொண்டிருந்த மதிப்பை உணர்த்துகிறது.

ஒளி இடுக்கி-கண்டு பிடித்த இயற்பியலாளர் ஸ்டீவன் சூவுடன் ஒரு பேட்டி

இயற்பியலில் கண்டு பிடிப்புகளுக்காக 1997 இல் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் சூ, கலிஃபோர்னியா பல்கலையின் பெர்க்லி நகர வளாகத்தில் தொலைக்காட்சி நிகழ்வொன்றுக்குக் கொடுத்த பேட்டி இது. ஸ்டீவன் சு சீன வம்சாவளியைச் சேர்ந்தவர், ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து கல்வி பயின்றவர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி “ஒளி இடுக்கி-கண்டு பிடித்த இயற்பியலாளர் ஸ்டீவன் சூவுடன் ஒரு பேட்டி”

வினைத்திட்பம் + மனத்திட்பம் = லெப்ரான் ஜேம்ஸ்

எல்லோரும் கல்லூரி முடித்த பிறகுதான் என்.பி.ஏ. அணிகளுக்கு ஆடப் போவார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் இருந்து நேரடியாக, வெறும் 19 வயதில் அதிரடியாக க்ளீவ்லாந்து கவாலியர் அணிக்கு லெப்ரான் ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்தான் ரட்சகர், நமக்குக் கோப்பையைத் தரப் போகும் நாயகர் என்று க்ளீவ்லாந்துக்காரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். லெப்ரான் ஜேம்ஸும் ஏழாண்டுகளாக க்ளீவ்லாந்து கவாலியர்களுக்காக ஆடிப் பார்த்தார். மற்ற அணிகளின் பணவீச்சுக்கு முன்னால், இவரின் திறமை எடுபடவில்லை. என்னதான் அர்ஜுனன் போல் உயிரைக் கொடுத்து ஆடினாலும், பக்கபலமாக பீமன் தேவை. ரதசாரதியாக கிருஷ்ணர் தேவை. நேரம் பார்த்து நாள் குறிக்க சகாதேவன் வேண்டும். தலைமைப் பொறுப்பெடுத்து வழிகாட்ட தர்மர் வேண்டும்.

சாப்பாட்டுக் கடை

திருநவேலியில் தேடித் தேடி சாப்பிட்டது போக, சென்னையில் சாப்பிட்ட சாப்பாட்டுக் கடைகளின் பட்டியல் புதிய கடைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகச் வளர்ந்து கொண்டேதான் வருகிறது. அந்த வகையில் பழையன கழிந்து புதியன பல புகுந்து விட்டன. சாலிகிராமத்திலிருந்த ‘முத்துலட்சுமி பவன்’ ஹோட்டலை கழுகுமலை அண்ணாச்சி மூடி விட்டார். சுடச் சுட இட்லியும், பருப்பு சாம்பாரும், ரகசியமாக எனக்கு மட்டும் (ஊர்ப்பாசம்) கெட்டிச் சட்னியும் கொடுப்பார். அவர் கொடுக்கும் உணவையும், உபசாரத்தையும் மறப்பதற்கில்லை. ‘ஸார்! வாருங்கோ! சும்ம இருக்கேளா?’ என்று …

ஆய்லர் – ஓர் அறிமுகம்

அவர் ருஷ்யாவில் இருந்த காலத்தில் இயக்கவியல் பற்றிய “மெக்கானிகா” மற்றும் எண்கணிதம் குறித்த “அரித்மெடிகா” புத்தகங்களை எழுதினார். பொது வாசகர்களுக்காக பல அறிவியல் கட்டுரைகளை எழுதினார். குறிப்பாக நியூட்டனின் இயல்பியல் மற்றும் காபர்னிகஸின் கதிரவனை மையமாகக் கொண்ட வானியல் பற்றி எழுதி அவற்றை பிரபலப்படுத்தினார். பூமியின் வடிவம் குறித்த சர்ச்சையில், பூமி துருவங்களில் தட்டையாக ஆரஞ்சு போல் இருக்கும் என்ற நியூட்டனின் கருத்தை உறுதி செய்தார். நாட்காட்டிகளைக் குறித்து அறிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். இந்தியாவில் சூரிய நாட்காட்டி கிரிகேரியன் நாட்காட்டியை விட 23 நிமிடங்கள் அதிகம் இருந்ததையும் கண்டறிந்தார்.

தேம்ஸில் தொடங்கி வோல்காவிலிருந்து கங்கை வரை

’ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமது மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் வலிமையால் தம் ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட பண்பாடுகளை தம் பார்வையிலிருந்து நோக்கி உருவாக்கிய’ அறிதல் புலம் அது. அவர் இந்த பார்வைகள் அனைத்துமே குறுகிய காலகட்டங்களில் மட்டுமே இயங்கியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார். ”காலனிய மானுடவியல் முறை என்பது உருவாகி நானூறு ஆண்டுகளே ஆகியுள்ளது. அதற்கு மேல் அது வாழ முடியவில்லை. சோவியத் மானுடவியல் முறையோ உருவாகி நாற்பதாண்டுகளே ஆகியுள்ளது. அது எத்தனை ஆண்டுகள் இன்னும் தாக்குப்பிடிக்குமென்பது தெரியாது.” என்று சொல்லும் ஹால்டேன் மார்க்சிய மானுடவியலில் காலனியக் கூறுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

கண்ணனின் அன்பில் கரைந்த கவிமனம்: ரஸ்கான்

ரஸ்கான் குறித்து எழுதப் படும் சில ஆங்கிலப் பதிவுகளில் அவரை ஒரு சூஃபி என்பதாக சித்தரிக்கிறார்கள் (ஹிந்தியில் அவ்வாறு எழுதினால் அது நகைப்புக்குரியதாகக் கருதப் படும்). இதைவிடவும் மோசமாக, கிருஷ்ணபக்தி என்பது சூஃபியிசத்தின் ஒரு பிரிவு என்று தொனிக்கும் வகையில் Krishnite Sufi என்று அடைமொழி வேறு கொடுக்கப் படுகிறது. இது மகா கொடுமை. பக்த சிரோமணியான ரஸ்கான் கோஸ்வாமி விட்டலதாஸரிடம் வைணவ தீட்சை பெற்றவர். அவரது ஆன்மீக வாழ்வு முழு முற்றாகவே வல்லப சம்பிரதாயத்தின் கிருஷ்ணபக்தி மரபுக்குள் வருவது. அதில் சூஃபியிசத்தின் நிழல் கூடக் கிடையாது.

ஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை

இந்த திரைப்படத்தில், மற்றப் படங்களில் சாத்தியமில்லாத பல தனித்துவமான காட்சிகளில் ஶ்ரீவித்யா மிக அழகிய அபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அலுவலகத்தில் வேண்டுமென்றே வேணுவை உற்றுப் பார்த்துவிட்டு… பிறகு வேணு அவரைப் பார்க்கும்போது ஒரு கேலிச்சிரிப்புடன் குனிந்துகொள்ளும் ஶ்ரீவித்யாவின் பார்வை… காபி அருந்த அழைத்துச் செல்லும்போது, வேணுவை பார்த்து உருவாகும் கேலிச்சிரிப்பை கைவிரலால் மூடி அடக்கியபடி பார்க்கும் பார்வை…… என்று படம் முழுவதும் விழிகளின் விழா.

யஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை

ஐ எஸ் ஸின் கொடூரம் ஏதோ வாய்ப்பு கிட்டியதால் நடந்த ஒரு நிகழ்வல்ல. . ஐ எஸ் ஸை சேர்ந்தவர்கள் இவ்வாறான கொடூரங்களை அரங்கேற்ற முன் திட்டமிட்டே வந்திருந்தனர். கற்பழிப்புகள், கட்டாயமாகச் சிறுவர்களைத் தம் படையில் சேர்த்தல், அவர்கள் கைப்பற்றிய புனித்தலங்களை தரைமட்டமாக்கி அழித்தல், குறிப்பாக யாஸிதி பெண்களையும், சிறுமிகளையும் கற்பழிப்பு மூலம் சிதைத்து அழித்து அவர்கள் ஒருபோதும் சாதாரணமான, இயல்பான வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் ஆக்குவது ஆகிய வன்முறைச் செயல்கள் மூலம் யாஸிதி இனமக்களின் அடையாளத்தைச் சுத்தமாக ஒழிப்பதே அவர்கள் திட்டம்.

நெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’

தான் மிகவும் நம்பியவர்கள் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவது காந்திக்கு மிகவும் வேதனையளிப்பதை நேரிடையாகவே பார்த்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார் மிலி. தெரியாமல் செய்யப்பட்டது எனச் சொல்லப்படும் பொய்க்காரணத்தை ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் காந்தியின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலேயே, அவர் அடைந்த ஏமாற்றங்களும் அதிக அளவில் இருக்கின்றன என்பது மிலியின் கருத்து. ஆனால் காந்திக்கு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதில் மிகவும் தயக்கம் இருக்கிறது. ஒருமுறை தான் ஏமாற்றப்பட்டதை வேதனையுடன் காந்தி விவரித்த சமயத்தில் அவரை அமைதிப்படுத்தும் விதமாக ‘ஒருவேளை அவள் தெரியாமல் அதைச் செய்திருக்கலாம்’ என்று மிலி சொன்னபோது அதை ஒரு பேச்சுக்காகக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் காந்தி. ஒரு தீங்கை தெரிந்தே செய்பவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தான் செய்யும் செயல் தவறென்றே தெரியாமல் தீங்கு செய்பவர் நல்லவராக மாற வாய்ப்பே இல்லை. ஒருவருக்கு நல்லது கெட்டது தெரியவில்லை என்றால், நன்மையையும் தீமையையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை என்றால், அவருக்கு தனக்குள் இருக்கும் கடவுளைத் தெரியவில்லை என்று பொருளாகிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கும் மேய்ச்சல் நில விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தொடர்ந்து சொல்கிறார் காந்தி.

பதாகை சிறப்பிதழ்

ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.

எட்டாண்டு ஒபாமா ஆட்சி – ரிப்போர்ட் கார்டு

அடுத்த தேர்தலும் வாசற் கதவை தட்ட, மீண்டும் ஒரு முறை அவரே ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட, அவர் மேல் கொண்டிருந்த நம்பிக்கையில் மக்கள் அவரையே தேர்ந்தெடுத்தனர். அமெரிக்காவில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் கொள்ளையர்களிடமிருந்து எளியவரை காக்க அவர் கொண்டு வந்த திட்டத்தை தீவிரமாக எதிர்த்த எதிர்க்கட்சி அதை செயலாக்க விடாமல் அவரை எதிர்த்துக் கொண்டே இருந்தது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி பல மில்லியன் டாலர் செலவழித்து ஒபாமாகேர் வந்து விட்டது. இன்றும் அதனுடைய பயன்கள் எப்படி சாமானியர்களுக்கு உதவப் போகிறது என்று தெரியவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிகளும் மருத்துவர்களும் ஒபாமாகேரில் நாட்டமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி

இந்திய தத்துவம், பண்பாட்டு வரலாறு ஆகியவை குறித்த அவரது ஆழ்ந்த அறிவு இந்திய எதார்த்தத்தின் பல தள இயக்கத்தை எளிதாகக் கைப்பற்றி படைப்புலகக் கருப்பொருளாக அமைக்க உதவியிருந்தது. இதனால் அவரது புனைவுகளில் அவை புராணத் தன்மை கொண்டதாக அமைந்தன, ஆனால் தொன்ம குணம் கொண்டு அமையவில்லை. அவருடைய வாழ்வு நெடுக இருந்த பரிணாமத் தன்மை கொண்ட தேடலை எந்த சக்தி உந்தியது என்று பார்க்க முயன்றோமானால், அது அவருடைய விசாலமான பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வரும்.

தான்ஸானியாவின் தேர்தல்

அந்த ஞாயிறு தேர்தலின் போதே வன்முறை வெடிக்கும் என்றார்கள். மாலை வரை ஒன்றும் நடக்கவில்லை. கை பேசியில் எல்லோருமே இதை உறுதி செய்தார்கள். பின்னர் திங்கள் முதல் வாக்கு எண்ணிக்கைகள் துவங்கும். திங்கள் மாலையிலிருந்து வன்முறை துவங்கலாம் என்றார்கள். அலுவலகத்தில் மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தோம். முதல் முடிவுகள் செவ்வாய் மதியவாக்கில் துவங்கியது. சிசிம் முன்னிலை என்றார்கள். மெல்ல மெல்ல முடிவுகள் வரத்துவங்கின. வியாழன் காலை மகுஃபுலி தான் என்று முடிவாகியது. முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என, லோவாஸா, அன்று மாலை நான்கு மணிக்கு, தலைநகர் டார் எஸ் ஸலாமில் பெரும் பேரணி நடத்துவார் என்றார்கள். அலுவலகத்தில் பலரும் மதிய உணவுக்குப் பின் கிளம்பி விட்டார்கள். நானும் வீட்டுக்குச் சென்றேன். ஊர்வலம் நடக்கவில்லை. மாலை அருகிலுள்ள சாலையில் அமைந்திருந்த பேக்கரிக்குச் சென்றேன். பெரும் ஊர்வலம். சிசிஎம்மின் வெற்றி ஊர்வலம். சிறு சிறு வண்டிகள், பைக்குகள், ஓட்டை கார்கள் என ஊர்வலம் செல்ல.. பலர் – அதிக அளவில் பெண்கள் உற்சாக நடனமிட்டுச் சென்றார்கள். இம்மக்களின் நடனத்தின் போது, அவர்கள் உடல் மொழியில் வெளிப்படும் உற்சாகமும், சக்தியும் நம்மைத் தொற்றிக் கொள்பவை.. பார்த்துக் கொண்டிருந்த போது…

அறிவிப்புகள்

ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” பரிசுத்தொகை : முதல் பரிசு – 15,000, இரண்டாம் பரிசு – 10,000, மூன்றாம் பரிசு – 5,000. கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.