என் அறையில் நான். உறாலில் அவள். உள் அறையில் அவன். வீடே ஒரு நூலகமாய்த் தோன்றுகிறது. ஏகாந்த அமைதி. பல மணி நேரங்கள் இந்த வீடு இப்படி இருப்பதற்கு அனுபவப்பட்டிருக்கிறது. என் வீட்டிற்குப் பெயா; சாந்தி இல்லம். அது என் மனதை ஈர்த்த ஒரு ஏழைப் பெண்ணின் ஞாபகமானது. முட்டி முட்டிக் கேட்டிருக்கிறாள் சத்யா அது யார் என்று? அது என்னோடு தோன்றி என்னிலேயே அழியக் கூடிய ரகசியம்.
ஆசிரியர்: ushadeepan
நகரும் வீடுகள்
எங்களின் சிறு வயதிலிருந்து பார்த்த பொறுமையும், அடக்கமும், மரியாதையும் இன்னும் இம்மியும் குறையவில்லை அப்பாவிடம். பகலில் கட்டிலிருக்குக் கீழே அமர்ந்துகொண்டு பாட்டியிடம் சமாச்சாரம் பேசிக் கொண்டிருப்பார் அப்பா. எதுவானாலும் தன் அம்மாவிடம் சொல்லியாக வேண்டும் அவருக்கு. பாட்டியிடம் சொல்லும்போது அம்மா கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.