‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இக்கட்டுரைகளில் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு விதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரணம் வந்து போகிறது. தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை எந்தப் பாசாங்கும் இல்லாமல், நேரடியாகச் சொல்லிச் செல்லும் எளிமையும், ஆன்மிக நாட்டமும், தீவிர இலக்கிய வாசிப்பும், வெகுஜன இலக்கியவாதிகளிடம் நாம் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள். ஒருவேளை ஸ்டெல்லா புரூஸ் வெகுஜன இதழ்கள் பக்கம் செல்லாமல், தீவிர இலக்கியம் பக்கமே நின்றிருந்தால், தமிழுக்கு ஒரு சிறந்த இலக்கியவாதி கிடைத்திருப்பாரோ என எண்ண வைக்கிறது இப்புத்தகம்.
ஆசிரியர்: நந்தன்
மலைவெளியில் விழுகின்ற நீர்த்துளிகள்
எங்கோ ஓடும் கங்காருவோ, கத்தும் குக்கா புர்ராவோ எத்தனை அதிசயமோ, அத்தனை அதிசயம்தான் தினம் பார்க்கும் காக்கையும். பார்க்கப் பார்க்க எத்தனையோ புதிய விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. ஜானகிராமனின் இயற்கை பற்றிய வர்ணனைகளும் அப்படித்தான். அவர் தினம் பார்க்கும் மரங்கள், செடிகள், பறவைகள், கிராமத்து அழகு – அத்தனையும். நமக்கு சாதாரணமாகத் தோன்றும் விஷயங்கள். ஆனால் அவை ஜானகிராமன் கண்களில் வியப்பும், ஆனந்தமுமாகக் கொட்டிக்கொண்டிருக்கின்றன.
‘மரணம் மற்றும்…’ கன்னடச் சிறுகதைகள்
இக்கதைத் தொகுப்பில் பாராட்டப்பட வேண்டியது அதன் சரளமான அம்சம். சரளம் என்றால் தன்னிஷ்டத்துக்கு மொழிபெயர்த்து மூலக்கதையைக் காணாமலடிப்பது அல்ல. தீவிரமான கதைகளில் உரையாடல்களைத் தூயத் தமிழிலும், கொஞ்சம் இறுக்கம் தளர்ந்த கதைகளில் ‘இயல்பான’ பேச்சுத் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார் நஞ்சுண்டன். கெளடர் என்பதாலேயே கொங்குநாட்டுக் கவுண்டர் வட்டாரவழக்கில் உரையாடல்களை அமைத்துவிட்டு அதை ‘மொழிபெயர்ப்பாளனின் சுதந்திரம்’ என்றெல்லாம் நஞ்சுண்டன் சொல்லியிருக்கலாம்.
புத்தகப் பரிந்துரைகள் – 2011
சென்னையில் வருடந்தோறும் நடைபெறும் புத்தகக்கண்காட்சி இந்தமுறையும் சென்ற வாரம் ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து நாளை மறுநாள் 17-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. கண்காட்சியைச் சுற்றியதிலும், நண்பர்களின் பரிந்துரையின் பேரிலும் கிடைத்த சில குறிப்பிடத்தக்க படைப்புகளின் பட்டியல் இது. கடைசி இரு தினங்களில் கண்காட்சிக்குச் செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் மிக மிக நிறைவான விஷயம் தேர்ந்த இலக்கியவாதிகளின் சில புத்தகங்கள் நல்ல முறையில் விற்பது.
வழித்துணை நாய்கள்
கண்பார்வை இழந்த வீரர்களுக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்த ஒரு மருத்துவர் ஒரு நாள் ஒரு பார்வையிழந்த வீரருடன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரோ கூப்பிடவே தன்னுடைய நாயை அந்த வீரருக்குத் துணையாக விட்டுவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்க்கையில் அவருக்கு மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில், அந்த நாய் போர் வீரரைப் பள்ளம்-மேடு பார்த்து ஜாக்கிரதையாக ‘வாக்கிங்’ கூட்டி சென்று கொண்டிருந்தது.
ப்ளூம் பெட்டகம்- ஒரு பொக்கிஷப் பெட்டகமா?
பத்து வருடங்களுக்கு முன், நாஸாவுக்கு ப்ராஜக்ட்டுகள் செய்துவந்த அரிஸோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Dr.K.R.ஸ்ரீதரன் தனியாக “ப்ளூம் எனர்ஜி” என்றொரு நிறுவனம் ஆரம்பித்து இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் படு ரகசியமாகவே இருந்து வந்தன. அதன் காரணமாகவே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இந்நிறுவனத்தைச் சுற்றி இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 24-ஆம் தேதியன்று கலிபோர்னியா மாநில ஆளுநர் அர்னால்ட் ஷ்வாட்ஸ்நேகரின் உற்சாகமான வரவேற்புடன் ப்ளூம் பெட்டகத்தை (Bloom Box) உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதரன்.