இரண்டு குளங்கள் மற்றும் சில கவிதைகள்

இரண்டு குளங்கள்

கல்விழ
துளிகள்தெறித்து
அலைந்தடங்கும்
ஓர் குளம்.

விழாத கல்
எழாத அலை
உறைந்த குளம்.

kann

இமையற்ற கண்

காற்றில் அசைகிறது
ஒற்றைக்கொடி
பிடி தளர
பறந்து போகும்
பறந்தவாறே
எதிர்க்கும் பொழுதில்
மரித்து விழும்
காற்றுலவ
நிழல் மேவா நிலமென
கிடக்கையில்
இமையற்ற கண்ணொன்று திறக்கும்.


rekkai

பெரும்பொறுப்பு

பிரக்ஞையற்ற பொழுதுகளில்
பறந்து போகிறது
ஒரு சொல்
அல்லது
ஒரு செய்கை.
சிறகால் வருடலாம்
நகங்கொண்டும் கீறலாமெனில்
கூடுகிறது கவனம்
பிரசவித்த பொறுப்பிற்காக.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.