“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்

“ஆனால் பூஷண் ஸாஹ் புது நாகரிகத்தைச் சேர்ந்தவன் இங்கிலீஷ் படித்து வெகு சுத்தமாகப் பேசுவான், துரைமார் சேரிகளில் செருப்புப் போட்டுக்கொண்டே நுழைவான். அத்துடன் தாடியும் வளர்த்தான். இதனால் துரைமார் இவனைக் கர்வியென்று சொல்லி இவனுக்கு யாதொரு நன்மையும் செய்யமாட்டார்கள். அவனைப் பார்த்தால் உடனே தெரியும், இவன் புது வழியைச் சேர்ந்த வங்காளி யென்று. வீட்டிலேயும் அவனுக்கொரு ஸங்கடம். அவன் பெண்டாட்டி அழகாக இருப்பாள், காலேஜ் படிப்பு ஒரு புறம், அழகுப் பெண்டாட்டி மற்றொரு புறம்; புராதன ஆசார அனுஷ்டானங்கள் அவன் வீட்டிலே நிற்க இடமுண்டா ?”

கற்பனையின் சொகுசு

“தெரியல. ஏதோ போராட்டத்துல கலந்துக்கறானாம். நாம கூலிக்கு ஏத்த சம்பளம் தரதில்லையாம்” என்று சற்றே ஓருக்களித்தவாறு பதிலளித்தாள்.

மின்னல் சங்கேதம் – 1

This entry is part 1 of 12 in the series மின்னல் சங்கேதம்

டினு டியோர் ஏழெட்டு மீனைப் பிடிச்சான். பிராமண தானமா எனக்கும் ஒண்ணு கொடுத்தான். நல்ல பெரிசு இல்ல? ஓய் பொட்லா, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க? காலங்காத்தால வீட்டுப்பாடம், படிப்பு எதுவும் இல்லையா?”

ஆத்மஜன்

சிற்றுண்டி நேரத்தில் நான் கேரம் ஆடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் ஆபீஸ் நேரத்துக்குப்பின் பொழுதுபோக்கு அறைக்குள் நுழைவது சாத்தியமில்லாமல் போயிருந்தது. சற்றே தாமதமாய் வீடு சென்றாலும் சுப்தி நச்சரிப்பாள்- நான் இந்த வீட்டில் ஒரு கைதி போலிருக்கிறேன், நீங்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்…

பத்து ரூபாய் மட்டும்

எப்போதும்போல நாள்கள் ஒடின. ஒரு வாரம் கழிந்தது. பிதுபாபு ஒருநாள் காலை மீண்டும் நிகில்பாபுவின் வரவேற்பறையில் தலைகாட்டினார். மூன்று மாதங்களுக்குமுன், பிதுபாபு பத்து ரூபாய் அவனுக்குக் கடன் கொடுத்தார், “நாளை பணத்தை திருப்பி தருகிறேன்” என்று அவன் வாக்குக் கொடுத்திருந்தார்.

ஹீங்க் கொச்சூரி

குஸும் தினம் மாலையில் அழகாக உடுத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, முகத்தில் மாவு போன்ற ஏதோ பொடியையும் பூசிக் கொள்வாள். சிகையலங்காரமும் அவளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் என்னை அறையில் இருக்க அனுமதிக்கமாட்டாள். ’வீட்டுக்குப் போ.. என் பாபு வர நேரம் இது’ என்பாள்.

தொலைந்துபோன புயல்

மனிதனின் ஆவி அவனைவிட்டுப் பிரிந்ததும் புவியீர்ப்பு அவன் நகர்வைக் கட்டுப்படுத்தவதில்லை. சிலரின் கூற்றுப்படி, மரணம்கூட மனிதனை இப்புவியிலிருந்து விடுவிக்க முடியாது, ஏனெனில் ஆவிகள்கூட பிரம்மஞான சபையின் கட்டளைகளுக்குட்பட்டுத்தான் அலைய முடியும்.

ரூபா

உங்களுக்கு என்மீது எரிச்சலாக இருக்கும். ஒரு மனிதன் உங்கள் அனுதியைப் பெறாமலே தனது கதையைக் கொட்ட ஆரம்பித்தால் அப்படி இருப்பது இயல்புதான். ஆனால் என்ன பிரச்சினை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தன்னிரங்கல்

அபினாஷ் வழக்கமாக ரொட்டியையும் உருளைக்கிழங்கு கறியையும் தன் காலையுணவாக எடுத்துக் கொள்வார்; அவருடைய மகன்கள் பூரியும் இனிப்பும் உண்பார்கள்; அவருடைய பேத்திகளால் பெரிய பூரியை வேகமாகச் சாப்பிட முடியாது, அதனால் அவர்களுக்கு விழுங்குவதற்குச் சுலபமானவை எதையாவது கொடுக்க வேண்டியிருக்கும்.

படகோட்டி தரிணி

தரிணி சொன்னது சரிதான். மயூராக்ஷி தனது வேகமான நீரோட்டத்திற்குப் பெயர் போனவள். ஓர் ஆண்டில் ஏழு ,எட்டு மாதங்கள் அந்த ஆறு ஒரு பாலைவனம்தான்— ஒன்று ஒன்றரை மைல் வரை கரைக்குக் கரை மண் பரவிக் கிடக்கும். ஆனால் மழை வந்துவிட்டால் அவள் அசுர பலம் பெற்று நான்கு, ஐந்து மைல் வரை விரிந்து, ஆழமான சாம்பல் நிற நீரால் எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுவாள்.

நான் கிருஷ்ணாவின் காதலன்

கீழ்மாடியில் இருந்த என் வீட்டில் முன்பு குடியிருந்தவன். நான்கு மாத வாடகையைப் பாக்கி வைத்ததோடு, என் மனைவியையும் அவனுடன் இழுத்துக்கொண்டு போய்விட்டான். அதுவும் சகல நகை நட்டுகளுடன். போதாக்குறைக்கு, அலமாரியில் இருந்த நாற்பதாயிரம் ரொக்கத்தையும் வழிச் செலவுக்காக எடுத்துக்கொண்டான்.

காதலும் அந்த பைத்தியக்காரனும்

அந்தப் பெண் மல்லி சித்தப்பாவிடம் அவர் அனைத்துப் பறவைகளையும் விடுவித்தால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லியிருந்தாள். அவரிடம் நான்கு காதற்கிளிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. மூன்று மஞ்சள் ஒரு நீலம். ஆனால் இதைப் படத்திலிருந்து உங்களால் சொல்ல முடியாது. அவை எல்லாம் கருப்பு வெள்ளை.

ரத்தப் பாசம்

அவர்களோடு வந்த மூத்தவரான ஷிவ்ஷங்கர் “நீங்களே டாக்டர்ங்கறதாலே உங்க மகனை இங்கே கொண்டுவரச் சொன்னேன். ரொம்ப மோசமாக அடிப்பட்டிருக்கான். மற்ற ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியில் போலீஸ் பார்த்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…” என்றார்.

வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்

This entry is part 4 of 13 in the series வங்கம்

வங்காளி என்ற சொல்லுக்கு, ஒரு மொழிக்குழுவின் அடையாளம் என்ற நிலையைத் தாண்டி, ஒரு வசீகரத் தொனியைக் கொண்டு வந்ததற்குக் காரணமாக, 1890-1910 கால இடைவெளியில் வங்காளத்தில் கிளைத்தெழுந்த காலனிய எதிர்ப்பு நோக்கம் கொண்ட, புத்தெழுச்சிக் கற்பனையுடன் உருவான தேசியம் என்ற பெரு நிகழ்வுதான். அதன் உச்சகட்டம், ஸ்வதேஷி இயக்கம் (1905-08) என்று அழைக்கப்பட்ட திரட்சி.

ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்

ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.

கிருஷ்ணா பாஸு கவிதைகள்

அம்மா, நீங்களாவது என்னிடம் சொல்லுங்கள்
என்னுடைய வீடு என்பது எங்கே?
பெண்கள் தங்களுடையது என்று ஒரு வீட்டை
எங்கேனும் கோர முடியுமா?

காஜி நசருல் இஸ்லாம் கவிதை

ஓ மாண்புமிகு நீதிபதியே, உயர்த்திப் பிடியுங்கள்
உங்களது நீதித்துறையின் கைச்சுத்தியை;
மகான்கள் இன்று மகான்களாய் இருக்கிறார்கள்
எளியவர்களின் செல்வத்தைக் களவாடிக் கொண்டு.
கொள்ளை, திருட்டு, வஞ்சகம், சுரண்டல் ஆகியன
எவ்வளவுக்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ
அவ்வளவு உயருகிறது இப்போது சமூக அந்தஸ்து !

கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை

ஹெரால்டு பிண்ட்டர் தனது நோபெல் உரையை இப்படித் தொடங்குகிறார்: ”எது நிஜம் எது நிஜமில்லை என்பவற்றுக்கு இடையில் உறுதியான வித்தியாசங்கள் இல்லை. அதேபோல் எது உண்மை எது பொய்மை என்பவற்றுக்கு இடையேயும் இல்லை. உண்மை, பொய்மை என்ற இரண்டில் ஒன்றாகத்தான், ஒன்று இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது உண்மை பொய்மை என்ற இரண்டாகவும் இருக்கலாம்.”

ஹையரில் அன்வார் கவிதைகள்

இதுதான் வாழ்வு ஆனால்
அது
தோல்வியை தள்ளிப்போடுவது
இளமையினுடைய கட்டுப்பாடற்ற காதலிலிருந்து
உருவாகித் தழைத்த ”அந்நியமாதல்”

அமைதியின் அழிப்பு

“அழிப்புன்னா, என்ன அர்த்தத்துல?”
“அதைச் சூறையாடறதா. கொள்ளை அடிக்கிறதா புரிஞ்சுக்கணும். அதை ஒரு கவிதையில படிச்சேன். நம் தலைமுறை எப்படி ‘அமைதியின் சூறையாடலை,தேவாலயங்கள் வெறுமையாவதை, குதிரைப்படை கடந்ததை, உணர்ச்சிக் குழப்பத்தோடு பார்த்தோம்.’ …….
“ஊருக்குள்ளே குதிரைகள் இருந்ததெல்லாம் எனக்கு நினைவு இருக்கு.”
“ஆ, எனக்கும்தான் நினைவு இருக்கு. வண்டிகளை இழுத்துப் போகும் குதிரைகள். காலில் நிறைய முடியோடிருக்கும் க்ளைட்ஸ்டேல் குதிரைகள். எப்போதும் ஜோடிகளாகவே இருக்கும். … எல்லா உற்பத்தியும் தொழில் மயமாவதற்கு முன்பு நாம் எத்தனை நல்ல காலத்தை அனுபவித்தோம்.”

அமிழ்தல்

அக்கா, முன்பு நீ தேடிக்கொண்டிருந்த சுட்டுப் பெயர்; உன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றுகின்றவற்றில் அதுவும் ஒன்று. நீ வார்த்தைகளைப் பெறப் போராடுகிறாய்; ஆனால் அந்த அமிழ்த்தி உனக்குக் கொடுப்பவை எல்லாம் நடுவாந்திரமாக, தொடர்பறுந்த வகைச் சுட்டுப் பெயர்களாகவே உள்ளன, அவற்றில் ஒன்று உனக்கு உள்ளுணர்வால் உடனே தெரிகிறது, தவறான சொல் என்று – அதை வெளிதேசத்தவரும், அன்னியரும்தான் இந்த மாதிரிச் சூழல்களில் பயன்படுத்துவார்கள். “அக்கா,” நீ அந்தச் சுட்டுப்பெயரை, இறுதியில், திரும்பச் சொல்கிறாய், ஏனெனில் உனக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

பலகை அடித்த ஜன்னல்

மர்லாக், மர வீட்டைக் கட்டி முடித்தபின், வலிமையுடன் மரங்களைக் கோடரியால் வெட்டி வீழ்த்திப் பயிரிடும் நிலத்தை உருவாக்கிக் கொண்டான்- துணைக் கருவியாகத் துப்பாக்கியும் வைத்திருந்தான். அப்போது அவன் இளமையும் கட்டுடலும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்பும் கொண்டிருந்தான். கிழக்கு தேசத்திலிருந்து வந்தபோதே அவ்வூர் வழக்கப்படி அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

மனக்கோட்டை – லூயீஸ் க்ளிக் கவிதை

அதுவே ஓர் துவக்கம்தான்.
ஒவ்வொரு நாளும் அடக்கத் தலத்தில்,
புதிய விதவைகள் பிறக்கிறார்கள்
புதிய அனாதைகளும். அவர்கள்
கைகள் கட்டி அமர்கிறார்கள்,
இந்தப் புதிய வாழ்வைப் பற்றி யோசிக்க.

இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு

மற்ற படுக்கைகளில் மூச்சு விடும் அந்த மனிதர்கள்
அரிதாகவே புரிந்து கொள்ள முடியும்.
திரையினூடே இரா வானில்
நிலவு தேய்வதையும் வளர்வதையும் கவனித்தேன்.
ஒரு புனிதப் பணிக்கு நான் பிறப்பெடுத்தேன்:
மகத்தான மர்மங்களுக்கு
சாட்சியாய் இருக்க.
இப்போது நான்
பிறப்பு இறப்பு, இரண்டையும் கண்டிருக்கிறேன்.
இருண்ட இயல்புக்கு
இவை ஆதாரங்கள்
மர்மங்களல்ல என்றறிகிறேன்.

இந்தோநேசியக் கவிஞர்-சபார்டி ஜோகோ தமனோ

பருவகாலங்கள் என்னுடைய கண் இமைகளில்
சாம்பலாகப் படிகின்றன
வானத்தின் குறுக்கே முடிவில்லாத
அலைகளின் தெறிப்பைக் கேட்கிறேன்
இங்குதான் தீராத இச்சையும்
ஒளிவு மறைவற்ற உணர்வுகளும் இருக்கின்றன
நட்சத்திரங்கள் ஓய்ச்சலின்றித் தழைக்கின்றன

அறிவுசார் மனிதர்கள்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு

மூன்று புரட்சிகளின் வாயிலாக மனிதர்களின் வரலாற்றை அறிவியல் முறையில் அறிவுசார் மனிதர்கள் (‘ஹோமோ சேபியன்ஸ்’) பார்க்கிறது. யுவால் நொவா ஹராரி எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவாற்றல் புரட்சியிடமிருந்து தன் நூலைத் தொடங்குகிறார். பிறகு 12,000 வருடங்களுக்குமுன் நிகழ்ந்த விவசாயப் புரட்சி பற்றிச் சொல்கிறார். இறுதியாக 500 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த விஞ்ஞானப் புரட்சியை, உருவரைக் கோடுகளின் மூலம் காட்டுகிறார். இன்றைய மனிதர்களையும், நம்முடைய கோளையும், இன்றைய நிலையில் உருவாக்கியவை இந்த மூன்று புரட்சிகள்.

இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்

நாங்கள் வெளியில் இருந்து வரும்போது எங்கள் கால்களில் ஒட்டிக் கொண்டு வரும் தூசியும் புழுதியும் பிஸ்கெட் தயாரிக்க பயன்படுத்தும் மாவோடு சேர்ந்து நாற்றமெடுக்கும். அந்த நாற்றத்தோடு சூடாக இருக்கும் அந்த குறுகிய பேஸ்மெண்ட்டில் நாங்கள் மாவை இழுத்துப் பிசைந்து பிஸ்கட் வடிவில் வெட்டுவோம். எங்கள் வியர்வை கூட அதோடு சேர்ந்து வடிவமைக்கும். எங்களுக்கு அந்த வேலை மீது எத்தனை வெறுப்பு, அசிங்கம் என்றால், எங்கள் கையால் செய்த அந்த பிஸ்கட்டுகளை நாங்கள் ருசி பார்ப்பதற்காகக் கூட தின்ன மாட்டோம்.

போர்ஹெஸ்ஸின் செயலாளர்

எங்களது விளையாட்டு எப்போதும் பேசப்படாததாகவும் மௌனம் சாதிப்பதாகவும் எந்தப் புள்ளியிலும் அதை விளையாடுவதாக நாங்கள் ஒத்துக் கொள்ளாததாகவும் இருந்தது. வரும் நாட்களில் எனது கட்டுரைகளில் சிறப்பான மாற்றங்களை அவள் ஏற்படுத்துவாள் என்ற நம்பிக்கையில் நான் அவளைப் போல பொறுமையாகக் காத்திருக்க முடிவு செய்தேன். இருந்தபோதிலும் அவள் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

கல்யாணி ராஜன் கவிதைகள்

நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுடன் கலந்து
புது சூத்திரங்களைப் படைக்கிறது
அது ஓடியபடி இடையிடையே நிறுத்தங்களை உண்டாக்குகிறது.
அகவயமாக புறவயப் பார்வையைச் சிந்தவைக்கிறது
குறைந்த அளவு மின்தேக்கி மூலம் அதிக அளவு சக்தியை
அது உந்த முயலும்போது
அதன் குறிக்கோள்கள் தடுக்கிவிழத்தான் செய்கின்றன.

தபால் பெட்டி

பாட்டி மாற்றமில்லாமல் வெண்ணிற ஆடைகளையே அணிந்தார். வயதான பெண்களிடம் சிவப்புச் சேலைகள் இருக்காதா என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொள்வேன். ஒருநாள் பாட்டியின் பெட்டியைத் திறந்து அதன் உள்ளடக்கத்தை ஆராய்ந்தேன். அதில் வெண்ணிற ஆடைகளைத் தவிர வேறெதுவும் இல்லை. வெண்ணிற ஆடைகள் மிகத் தூய்மையானவையாகத் தோற்றமளிக்கின்றன. அந்நாளில் மக்கள் எவ்வாறு தூய்மையைப் பேணிக் காத்தனர் என்பது அற்புதமான விஷயம்.

பித்தலாட்டக்காரன்

எப்படிப்பட்ட மனிதன் இத்தகைய ஒரு போலித்தனம் நிறைந்த இறுதிச் சடங்கென்ற பேரில் ஒரு கேலிக்கூத்தை உருவகித்து, நடிக்க முடியும் – ஒரு வெறியனா? துக்கத்தால் வாடுபவனா? பைத்தியக்காரனா? ஒரு இழிவான வஞ்சகனா? என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

சுதந்திர பூமியில்… (In the Land of the Free)

“பொழுது விடிந்துவிட்டது. போய்க் குழந்தையை அழைச்சுட்டு வா” என்றாள். கூறுவதற்குள் அவளுக்குத் தொண்டையை அடைத்தது….
“இன்னும் நேரம் ஆகவில்லை” என்றவன் மீண்டும் படுக்கையில் தலையைச் சாய்த்தான்.
“இன்னும் நேரம் ஆகலையா? ஐயோ…! நேற்றுவரை நான் வாழ்ந்த நேரம் எல்லாம் சேர்த்தால்கூட நான் பெற்ற பிள்ளையை என்னிடமிருந்து பிரித்து எடுத்துச்சென்ற நேரம் இருக்காது.” லேசூ முகத்தை மூடிக்கொண்டு கட்டில் அருகில் கீழே அமர்ந்தாள்.

என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு

மீண்டும் லின்னைப் பார்த்தபோது அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தபடி ஓர் ஆர்வலர் மட்டும் இருந்தார். அதன்பின் அவரும் வெளியே கூடத்தில் இங்கும் அங்குமாய் நின்றுகொண்டிருந்த தன் தோழர்களைத் தேடிப் போனார். தான் உயிருடன் இல்லை என்பது லின்னுக்குத் தெரிந்திருந்தது என்பது அந்தக் கணத்தில் எனக்குத் தெரிந்துவிட்டது. என் இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது, என்றார். அது இப்போது இல்லாமல் போய்விட்டது. இங்கு ஏதோ சரியில்லை என்று எனக்குப் பட்டது. லின் புற்று நோயால் இறந்தார்; மாரடைப்பால் அல்ல. அதீத கனம் என் மேல் கவிவதை உணர்ந்தேன்.

ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்

1.    அன்றாடப் பணி காரண காரியம் உருப்பெருவதன் வழி ஒரு சாய்சதுரம் அசைவது போல் நிகழ்கிறது, என் அன்றாடப் பணி   அற்புதமான ஒரு சூரிய அஸ்மதனதிற்கு எதிரே துப்பறிவாளனைப் போன்ற துணிகரமான பார்வை. இனி நிகழப்போகும், என்னால் காணமுடியாத ஓர் இனிய நாளின்மீது உடனடியாக எழுதப்படும் வேகமாக “ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்”

யாருக்கு இந்த துணிச்சல் வரும்?

பதினாறிலிருந்து பத்தொன்பது வயதிற்குள் மெக்ஸிகோ நகரத்தில் திருடியவையும்  எனக்கு இருபது வயது இருக்கும்போது ராணுவப் புரட்சி தொடங்கிய முதல் சில மாதங்களில் சீலேவில் வாங்கியவையுமே  என் நினைவை நீங்காத புத்தகங்கள்,. மெக்ஸிகோவில் ஒரு அபாரமான புத்தகக்கடை உள்ளது. அதன் பெயர் “கண்ணாடி புத்தகக் கடை”. அது அலமேதாவில் இருந்தது. “யாருக்கு இந்த துணிச்சல் வரும்?”

சென்சினி

இச்சிறிய எழுத்துலகம் ஆபத்தானது, அதே நேரத்தில் அபத்தமானது என்று எழுதியிருந்தார். கூடுதலாக அவர் சொன்னார், ஒருவரின் கதை ஒரே நீதிபதி முன் இருமுறை வந்தாலும் அதில் ஆபத்து குறைவுதான். ஏனென்றால், அவர்கள் வரும் கதைகளைப் பொதுவாகப் படிப்பதில்லை அல்லது மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலும் “குதிரை வீரர்கள்” கதையும், “கவலைகள் இல்லை” கதையும் வெவ்வேறு அல்ல என்பதை யார்தான் சொல்லக்கூடும், தலைப்புகளிலேயே அதன் தனித்தன்மைகள் தெளிவாக உறைந்திருக்கும்போது? ஒற்றுமைகள் உண்டு, அதிக ஒற்றுமைகள் உண்டுதான், ஆனாலும் அவை வெவ்வேறு.

ஜெயில் பறவைகள்

தொடக்கத்தில் நான் அதிகாரத்தை எதிர்ப்பவர்களுடனும், தீவிர பெண்ணியவாதிகளுடனும் சுற்றிக் கொண்டிருந்தேன். அதனால் நான் படித்த புத்தகங்களும், அவர்களது சிபாரிசை ஒத்தே இருந்தன. ‘ஹெகலின் மீது துப்புவோம்’ என்பது அப்படிப்பட்ட ஒரு புத்தகம், அதை எழுதியது ஒரு இத்தாலிய பெண்ணியல்வாதி. ஒரு நாள் மதியம் அதை சோஃபியாவுக்கு இரவல் கொடுத்தேன். நன்றாக இருக்கும், படித்துப் பார் என்றேன். அடுத்த நாள் சோஃபியா நல்ல மனநிலையில் இருந்தாள்; அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த போது, ஒரு அறிவியல் புனைவாக அது நல்ல புத்தகம் தான், ஆனால் அதைத் தவிர அதில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை என்றாள்.

துப்பறிவாளர்கள்

“எந்த மாதிரியான ஆயுதங்கள் உனக்குப் பிடிக்கும்?” “எதுவென்றாலும் பரவாயில்லை, பிளேடைத் தவிர.” “கத்திகள், ரேஸர்கள், டாகர்கள், கோர்வோஸ், சுவிட்ச் பிளேட்ஸ், இல்ல பேனாக்கத்திகள், இந்த மாதிரியான ஆயுதங்களா?” “ஏறக்குறைய, அந்த மாதிரிதான்” “என்ன சொல்கிறாய், அந்த மாதிரி இந்த மாதிரின்னு?” “கேனக்கூதி, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன், இது “துப்பறிவாளர்கள்”

ரொபெர்த்தோ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள்

நான் நன்றாக, ஆழமாக தூங்கினேன்; கனவு கண்டிருந்தேன் என்றால், என் கனவுகளை மறந்து விடும் மனப் பக்குவமும் எனக்கிருந்தது. தாமதமாக எழுந்தேன்- இது ஒரு பழக்கமாக ஆரம்பித்திருக்கிறது-, குளித்து முடித்தபின் டிபன் சாப்பிட ராவூலின் கபேக்குப் போனேன். காத்திருக்கும் நேரத்தில், யாரோ டேபிளில் விட்டுப் போயிருந்த காலை தினசரியை “ரொபெர்த்தோ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள்”

ரொபெர்த்தோ பொலான்யோ குறு மொழிகள்

ஒவ்வொரு நூறடிக்கும் உலகம் மாறுகிறது. நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என அறியாத போதிலும், எப்படித் தேட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நிலா செழிப்பாக, இரவுக் காற்று அவ்வளவு தூய்மையாக, உண்டுவிடலாம் போல. கவிதை ஒன்றுதான் மாசுபடாது இருக்கிறது. அது விளையாட்டின் பகுதியன்று. உலகம் உயிர்ப்போடு இருக்கிறது; வாழ்பவைகளுக்குத் “ரொபெர்த்தோ பொலான்யோ குறு மொழிகள்”

விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க்

“நான் வேண்டுமானால் இன்னுமொரு நூறாண்டுகள் காத்திருக்கிறேன். அதுவரை தொந்தரவு இல்லாத ஓரிடத்தைத் தேர்வு செய்து என்னை உறக்கத்தில் ஆழ்த்தி உறைய வைத்தோ அல்லது ஏதாவது ஒரு வகையில் பாதுகாத்து வைத்திருங்கள். அதை உங்களால் செய்ய முடியும் என்பதை அறிவேன்” என்றார்.

தர்ம சங்கடம்

“அம்மா காலைத் தொட்டு வணங்கறப்ப அஞ்சு ரூபா காணிக்கை வைத்தும் கூட விளக்கமா ஏதும் சொல்லலே. ‘இருள்-வெளிச்சம் இரண்டும் சேர்த்து நெய்யப்படுகிறது மானுடர்களின் எதிர்காலம் என்ற மாயத் திரை. இருந்தாலும் இருட்டின் உபாதையிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியும் உண்டு,’ அப்படீன்னாரு.”

காயம்

பணீஷ்வர்நாத் ரேணு / தமிழாக்கம்: ரமேஷ் குமார் பணீஷ்வர்  பீகாரிலுள்ள  அரரியா மாவட்டத்தில் உள்ள ஃபாபிஸ்கஞ்ச்  அருகில் உள்ள ஔராஹி ஹிங்னா எனும் கிராமத்தில் 4 மார்ச் 192l அன்று பிறந்தார் . இப்போது அந்தக் கிராமம் பூர்னியா மாவட்டத்தில் உள்ளது . அவர் இந்தியாவிலும நேபாளிலும் பயின்றார். “காயம்”

சென்டிமென்ட்

யாராவது தலைவர்களோ தலைசிறந்த மனிதர்களோ இறந்து விட்டால் பள்ளியையும் ஆபீஸையும் மூடிவிட்டு என்ன சாதிக்கப் போகின்றது அரசாங்கம்? ….
இந்த விடுமுறை நாளில் இவர்கள் செய்வதெல்லாம் இது போன்ற பயனற்ற சினிமாக்கள் பார்ப்பதும் பகலில் உறங்கி சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்வதும்தான். எந்த மனிதரின் இறப்பால் இந்த விடுமுறை கிடைத்ததோ அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவருடைய ஆதர்சமான கொள்கைக்கு விரோதமான செயல்களையே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் செய்கிறார்கள். அதற்கு பதில் இரண்டு நிமிடம் மௌனம் வகித்து

கைச்சிட்டா – 2

This entry is part 2 of 8 in the series கைச்சிட்டா

அமெரிக்காவில் பாதகமான விஷயங்களைச் சொல்வதற்கு முன் இரண்டு நல்ல நடவடிக்கைகளைச் சொல்லிவிடுவார்கள்; அதன்பின் மாற்றம் தேவைப்படும் விஷயத்தை நாசூக்காக முன் வைப்பார்கள்; அதன் பின் முத்தாய்ப்பாக “நன்றாக வேலை செய்கிறாய்!” என்னும் சம்பிரதாயச் சொற்றொடரோடு பேச்சை முடிப்பார்கள். இதற்கு பர்கர் அணுகுமுறை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ரொட்டிக்கு நடுவே கோழிக்கறி அடைபட்டிருப்பது போல் இரண்டு பக்கமும் அசத்தல் குணநலன்களைச் சொல்லி, நடுவில் குற்றங்களைச் சொல்லுதல் மாண்பு. பிரான்ஸில் இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கோழிக்கறியில் இறங்குகிறார்கள். “இது உன்னிடம் சரியில்ல! இப்படி நடந்தால் வேலை போயிடும்!” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

நோயாளி எண் பூஜ்யம்- 2

This entry is part 2 of 2 in the series நோயாளி எண் பூஜ்யம்

தேசத்தந்தை, உயிரிகள் பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்கிய பிறகு, தேசக் கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ள இதயமின்பதிவுத் தொழில்நுட்பம் தேவை. யாரும் கார்பன் உணர்விகளைத் தம் உடலில் பொதிந்து கொள்ள அச்சப்படவில்லை, அவை இதயத்தின் மின் அதிர்வுகளை வரைபடமாகக் கொடுத்து அவற்றைத் தகவல் மையங்களுக்கும் ஒலிபரப்பின. அவற்றை உடலில் பொருத்துவது சுலபம், ஆனால் மூளைப் புரணிகள் அவற்றை அவ்வளவுத் திறமையாக ஏற்றுக் கொண்டு விடுவதால், அகற்றுவது கடினமாகி விடுகிறது. என்னுடைய அந்த நுண்கருவிகளை அகற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றியே இருக்காது. ஃபாங்கின் இருப்பிடத்தில் இருந்த ‘ஸ்டோன் ஆஃப் மேட்னெஸ்’ ஓவியம் என் நினைவில் எழும்பியது, அந்த ஓவியம் இப்போது எனக்கு சதி வேலையாகத் தெரிந்தது.

நோயாளி எண் பூஜ்யம் -1

This entry is part 1 of 2 in the series நோயாளி எண் பூஜ்யம்

“நீங்கள் நம்பாத மூலப்பொருள் எது?”
“சிலிக்கான் தான், வேறென்ன! பிராணவாயுவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இருப்பதும் அதுதான்; அது இல்லையெனில் ட்ரான்ஸிஸ்டர்களோ, ட்ரான்ஸ்ஃபார்மர்களோ இருக்காது. அது புதுவகைக் களிமண், செயல்பாட்டுக்குத் தக்கபடி உரு மாற்றப்படக் கூடிய பொருள். இன்று ஒரு மதம் கொண்டுவரப்பட்டால், அதில் கடவுள் சிலிக்கானிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்று சொல்வார்கள்.”

டெம்பிள் க்ராண்டின்: பேட்டி

சிலருக்கு, அவர்கள் படிக்க முயல்கையில், அச்செழுத்துகள் பக்கங்களில் குலுங்குவது போல உணர்வார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘எழுத்துக் கோர்வைக் குழப்பம்’ (டிஸ்லெக்ஸிக்) உள்ளவர்களாக தரம் பிரிக்கப்பட்டு விடுவார்கள். இதில் விஷயம் என்னவென்றால், இந்த அச்செழுத்து குலுங்கும் பிரமையை, சில சமயம் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நிறத்தை மாற்றினால் போதும், நீக்கி விடலாம். வேறு வெளிர் நிறக் காகிதங்களில், உதாரணமாக, வெளிர் லாவெண்டர், வெளிர் சாம்பல், வெளிர் நீலம் என்று பலவகை வெளிர் நிறக் காகிதங்களில் அச்சடித்தால் இந்தக் குறை ஏற்படுவதில்லை. இது ஏன் வேலை செய்கிறது என்பதை நான் அறியேன்.

சின்ன உயிர் நோகாதா

சொல்கிறேன் டாக்டர்! அவன் ரொம்ப சுயநலக்காரன். எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. இரண்டு பேரும் சாப்ட்வேரில் பணிபுரிகிறோம். அவர்கள் வீட்டில் ஆண்கள் வீட்டு வேலை செய்ய மாட்டார்களாம். அப்படியே வளர்ந்து விட்டான். எப்போது பார்த்தாலும் தன் வேலை, தன் சம்பளம், தன் பொழுதுபோக்கு, தன் நண்பர்கள்… அவ்வளவுதான்! அவனுடைய தேவைக்காக நான்! வீட்டு வேலை எதிலும் பொறுப்பெடுத்துக் கொள்ள மாட்டான்…

நண்பன்

என்னைக் கேட்டால் அலெக்ஸியேவிச் வகை அ-புனைவு படிப்பதற்கு புனைவு அளவுக்கே நன்றாக இருக்கும் படைப்புகளைத் தருகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. உண்மையைக் கண்டடைய கற்பனை நன்கு உதவி செய்கிறது என்று நினைத்த டோரிஸ் லெஸ்ஸிங் போன்றவர்கள் சொல்வதுதான் என்னளவில் சம்மதமாக இருக்கிறது. யதார்த்தத்தை விவரிக்கும் சக்தி புனைவுக்கு இல்லாமல் போய் விட்டது என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.