சின்ன உயிர் நோகாதா

சொல்கிறேன் டாக்டர்! அவன் ரொம்ப சுயநலக்காரன். எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. இரண்டு பேரும் சாப்ட்வேரில் பணிபுரிகிறோம். அவர்கள் வீட்டில் ஆண்கள் வீட்டு வேலை செய்ய மாட்டார்களாம். அப்படியே வளர்ந்து விட்டான். எப்போது பார்த்தாலும் தன் வேலை, தன் சம்பளம், தன் பொழுதுபோக்கு, தன் நண்பர்கள்… அவ்வளவுதான்! அவனுடைய தேவைக்காக நான்! வீட்டு வேலை எதிலும் பொறுப்பெடுத்துக் கொள்ள மாட்டான்…

பிரகாஷை காணவில்லையாம்!

காலையில் வேலை மும்மரத்தில் சுஜாதாவிடம் பேசாமலேயே வந்து விட்டேன். இப்பொழுது சீக்கிரமாக வேலைகளை முடித்துக்கொண்டு, சலபதியின் வீட்டுக்குச் சென்று, பிரகாஷ் வருவதாகச் சொன்னால் என்னுடன் அழைத்து வரலாம் என்று நினைத்தேன். அவன் வராவிட்டாலும் காலையில் போனது போல் கடமைக்கு விசாரிக்காமல் கொஞ்சம் சாவகாசமாக உட்கார்ந்து அன்பாக நாலு வார்த்தைகள் பேச வேண்டும் என்று தோன்றியது.