மாங்காச்சாமி

முன்பு இம்மாத சனிக்கிழமைகளில் வாசலில் சமராத்தனைக்காக பிச்சைக்கேட்டு நிறைய பேர் வருவார்கள். சின்னப் பையனாக நானும் தங்கை சுதாவுடன் ஒட்டுத் திண்ணை தூணைப் பிடித்து கொண்டு தெருவை இருபக்கமும் பார்த்தபடி இருப்போம். அரிசியை யார் போடுவது என்று இருவருக்குள் சண்டைகள் வரும். கொடுக்கும் அரிசியில் ஒவ்வொரு கோஷ்டியில் உள்ள நபர்களுக்கு சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும். அதிகம் குறைவாகப் போட்டாலோ கடைசி நபருக்கு இல்லை என்றோலோ அது பெரும் குற்றமாகிவிடும். யாருக்கும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கிருஷ்ணன் பாடல்கள், கீர்த்தனைகள் என்று இருக்கும் ஒவ்வொரு கோஷ்டியிலும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நபர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர் தனியாக வருவார்.

கடவுளை ஆச்சரியப்படுத்து

ஒருநாள் மறுபடியும் மனேஜரிடம் போனான். ‘அவள் என்னை நிராகரித்துவிட்டாள். ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை அதிகம். என் வேலையைத் திருப்பித் தாருங்கள்.’ மனேஜர் ‘உன் வேலையா?’ என்றுவிட்டுச் சிரித்தார். தையல்காரர் அங்கம் அங்கமாக அளவெடுப்பதுபோல அவனை உற்றுப் பார்த்தார். ‘இனிமேல் உனக்கு வாடிக்கையாளர்களுடன் பேசும் வாய்ப்புள்ள வேலை கிடையாது. சாலட் பாரில் வேலை செய். இங்கேயிருந்து ஒருவர் துரத்தப்பட்டால் அவரை மீண்டும் வேலைக்கு எடுப்பதில்லை. உன்னை மன்னித்திருக்கிறேன். இனிமேல் ஒரேயொரு தவறு செய்தாலும் உன்னை நிரந்திரமாக வெளியே அனுப்பிவிடுவேன்.’

காகங்கள் சுட்ட வடைகள்

பசி வயிறைக் கிள்ள ஆரம்பித்தது. வடைப் பொறித்து எடுக்கும் சப்தமும் வாசனையும் ஒருங்கே கலந்து வர, இவர்கள் அனைவரும் வடைப்பாயசம் சாப்பிடப்போவதை நினைத்து சப்புக்கொட்டினார்கள். மணி இவனைப்பார்த்து சொன்னான்:
”தம்பி, வடைப்பாயசம் வாங்குனவுடன, நம்மவூட்டுக்கு எடுத்துட்டுப்போய் திங்கலாண்டா. நேத்துத் தம்பா(இவர்களது எதிர்வீட்டுப்பையன், பெரியப்பள்ளிக்கூடத்தில் படிப்பவன்) எனக்கு முட்டாயி தராம காமிச்சு காமிச்சித்தின்னான். இன்னைக்கி நாம அவனுக்கு வடைப்பாயசம் தராம காமிச்சு காமிச்சித் திம்போம், என்ன?”

சலவை

சாந்திக்கு ஒரு ‘சிவில் என்ஜினீயர்’ 20000 மாத சம்பளத்தில் திருச்சியில் திண்டாடுவது பிடிக்கவில்லை. சவுதியால் நம் திருமணம் தள்ளிப் போகும் என்று கூட மிரட்டிப் பார்த்து விட்டான். அவள் மசியவில்லை. இந்த நிறுவனத்தில் தன்னை மரியாதையாக நடத்துகிறார்கள். கொஞ்சம் அனுபவம் பெற்றால் சென்னையில் பெரிய ‘பில்டர்’ நிறுவனங்களில் வேலைக்குப் போகலாம். சவுதி போனால் இப்படி மலைக் கோட்டை ரயிலில் ஏறி மறு நாள் காலை அப்பாஅம்மாவை , மாலை சாந்தியைப் பார்க்க முடியுமா?

Ecce Homo (இவன் மனிதன்!)

ரெடிமேட் டைக்களைத் தூக்கி எறிந்துவிட்டு டை கட்டிக் கொள்ளும் கலையை மணிக்கணக்காகப் பழகினான். கடிகாரம் கட்ட தங்கத்தாலான இரட்டைவடச் சங்கிலி வேண்டுமென்று லக்ஷ்மி அண்ணனுக்கு கேட்டெழுதினான். ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்களுக்கு பெரிய கண்ணாடியொன்றிற்கு முன் நின்று  கொண்டு டையையும் தலை வகிடையும் சரி செய்து கொண்டான்.
பேச்சுக்கலையில் தேர்ச்சி பெறுவதற்காக பெல்லின் Standard Elocutionist என்ற பாடப் புத்தகத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஓர் அசரீரியைப் போல் அவனுக்குள் ஒரு எண்ணம் ஒலித்தது. “ஆங்கிலத்தில் பெரிய பேச்சாளராகி எனக்கு என்னவாகப் போகிறது. நடனத்தால் அல்ல எனது ஆளுமையால் மட்டுமே நான் கனவானாக முடியும். வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கும் பணத்தை நானிங்கு ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டிருக்கிறேன். இங்கு படிக்க வந்தேன், அதை ஒழுங்காகச் செய்வதே என் கடமை” என்று தனக்குத் தானே புத்திமதி கூறிக் கொண்டான்.

காதலாகி…

சின்னாளில் அவனுடன் பணிபுரிந்த மார்வாடிகளும், மராத்தியரும், பீஹாரிகளும், பெங்காலிகளும் அவன் உறவாகிப் போயினர். அங்குதான் அவன் ஒரு சிவராத்திரியன்று பாங் என்ற அதிபோதை பானத்தை முதலில் ருசிபார்த்ததும். பகாசுரப்பசியில் உண்டுவந்து சுருண்டுறங்கிய ஞாபகம். உடல் என்ற கிளிக்கூண்டை விட்டு உலகைச் சுற்றிவந்த அற்புத அனுபவத்தை அடுத்தநாள் கிருஷ்ணாவிடம் தொலைபேசிப் பகிர்ந்து கொண்டபோது அன்றுமாலை மனைவியுடன் அவனைப் பார்க்க வருவதாய்ச் சொன்னான் கிருஷ்ணா.

வருகை

புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக‌ இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில் சந்திப்பது என்பதை அவன் நினைத்துகூட ப் பார்த்தது இல்லை. இதுவரை அது எப்படிப்பட்ட அதிர்ச்சியாக இருக்கும் அதிலிருந்து எப்படித் தப்பிக்க முடியும் என்று சிந்தித்ததும் இல்லை. இரவு விளக்கு மட்டும் எரியும் அந்த மெல்லிய இருட்டில் பலமாக மூச்சுவிடக்கூட பயமாக இருந்தது அவனுக்கு. தும்மலோ இருமலோ வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனமாகக் கடவுளை வேண்டிக் கொண்டான். ஒரு குழந்தை போன்று எந்தக் கவலையும் இன்றித் தூங்கும் அதனிடம் மெல்லிய குறட்டைஒலி வருவது போலிருந்தது.

பவளமல்லி

எது என்னைத் தடுத்ததென்று தெரியவில்லை.சொல்லவில்லை. மீண்டும் நினைவுகளின் அலைக்கழிப்பு. இந்த முறை அம்மா அதிகமாக வந்து போனாள். ஜன்னல் வழியே பார்வையை ஓட விட்டேன். மழை வரும் போலிருந்தது. ஒரு காபி இதமளிக்கும் போல் தோன்றியது. ஓயாமல் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் மீது கம்பளி போர்த்தினாற் போல் அடக்க ஒரு காபியால் முடியக் கூடும்.

ருஷ்யன் சர்க்கஸ்

பிப்லப் முகர்ஜியை நான் முதல் முறையாகச் சந்தித்தது ஒரு ஞாயிறு நண்பகலில் எங்கள் ஊர் கோயிலில். என்னைப்போன்ற மாணவர்கள், மற்றும் கல்யாணமாகாத தனியர்கள் வாரக்கடைசியில் கோயிலுக்கு வருவதற்கு ஸ்ரீகணபதியின் தரிசனத்தை தவிர வேறு சில காரணங்களும் உண்டு. அவற்றுள் முக்கியமானது கோயில் கேண்டீனில் கிடைக்கும் தென்னிந்திய சாப்பாடு.

செல்லம்மாவின் குறுக்குவலி

ஜன்னல் இடுக்கிலிருந்த சாராயக்குப்பியில் செய்திருந்த மண்ணெண்ணெய் விளக்கை பற்றவைத்துவிட்டு மெல்ல எழும்பி வெளியே வந்தாள்.கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.அடுப்பில் சோற்றை வைத்துவிட்டு “ஏல சோத்தப் பாத்துக்கிடு.இந்தா வாறேன்”என்று கிளம்பினாள்.வடக்கு முனையிலுள்ள அவள் வீட்டிலிருந்து ஊரின் பிரதான தெருவை அடைய சிறிது தூரம் நடக்க வேண்டும்.வலிக்கு கடையில் மாத்திரை வாங்கிப் போடலாமா?அல்லது தெக்குத்தெரு மூக்கியிடம் காத்துக்குத்து பிடிக்கலாமா என்று யோசனையில் அருகிலிருந்த முருங்கமரத்தைப் பற்றி நின்றாள்.

துணை

விஷ்க் என்று காதுப்பக்கம் சுத்திக்கொண்டிருந்தது ஒரு ஈ. காலையில் விழிப்பு வந்ததில் இருந்து இந்த ஈ ஒரு பண்டம் போல அவனை மொய்த்துக்கொண்டிருந்தது. விலகிக்கிடந்த போர்வையின்வழி காலில் அமர்ந்து கூசியது. காலை அசைத்தான்.
மெல்ல அசங்கியபடி பறந்து அடுத்த காலில் அமர்ந்தது.
கீழ்வீட்டின் நாயைப் பார்த்து வீட்டுக்காரர் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார்.

மூன்று களவாணிகள்

மூவரும் ஏதோ தீர்மானித்தவர்களாய் குளத்துக்கரை கடந்து செட்டியார் தோப்பு வேலிக்குள் பட்டு நின்ற கள்ளியை முறித்து பாதை செய்து நுழைந்தனர். நுழைந்த இடத்தில் கடலைச்செடிக்கு அப்போதுதான் நீர் பாய்ச்சப்பட்டிருந்தது. பாத்திக்குள் மிதிக்காமல் வரப்பையடைந்து அருகிலிருந்த பெரிய மாமரத்தின் அடியில் அமர்ந்துகொண்டனர். காட்டுப்பூச்சிகள் நிசப்தம் கலைத்தன.

வள்ளியும் நானும்

ஊருக்கு மேற்குப் பக்கமுள்ள பரும்புக்காட்டில் இந்த நடுநிசியில் நின்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இடப்பக்கமுள்ள புளியமரத்திலிருந்து ஆந்தை ஒன்று இப்போதுதான் அலறி முடித்தது. கையில் இரண்டு லுங்கிகளும்,ஒரு மேல்பனியனும், சட்டையும் பொதியப்பட்ட ஜவுளிப்பை உள்ளது.ஊருக்குள் நாய்கள் குரைப்பது கேட்கிறது. கிளம்பி விட்டாள் போலும்.

கனவின் பயணம்

இந்த ரினிவலோடு என்ன பாடு பட்டாவது கார் வாங்க வேண்டும் என்ற தன் கனவு விதையை முளைக்க வைத்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டான். இந்தியாவில் இருந்து எடுத்து வந்த அந்தக் கனவு விதையை மீண்டும் கனவு விதையாகவே இந்தியாவிற்கு கொண்டு செல்லக் கூடாது என முடிவு செய்தான். ஊருக்குப் போகும் முடிவை ஒத்தி வைத்து விட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு அனுமதிக்கு விண்ணப்பித்து வாங்கினான். இந்த இரண்டாண்டு சம்பாத்தியம் அக்காவுக்கு நகையும், தனக்கு காரும் வாங்க மட்டுமே என திட்டமிட்டுக் கொண்டான்.

வாசகியாயிருத்தல்

ன் இந்த பயணம் என்றும், ஒரு எழுத்தாளனை சந்திக்கத்தான் வேண்டுமா என்றும் யோசனையாக இருந்தது, என்றாலும் வாசிப்பின் மீதான விருப்பத்தின் ஆழம் தான் இந்த பயணத்திற்கு என்னைத் தூண்டியது. வாசிப்பு இன்றைக்கு நேற்று ஆரம்பித்த பழக்கமில்லை, முதன்முதலில் நூலகத்திற்கு சென்றபோது எனக்கு எத்தனை வயதென்று நினைவில்லை, 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்.

காளிங்க நர்த்தனம்

மாணிக்கத்திற்கு முப்பதோ முப்பதைந்தோ வயதிருக்கலாம். இந்திரா சவுந்தரராஜன் கதைகளின் வழியாக சித்தர்களின் உலகம் அவனுடைய பதின்ம வயதுகளில் பரிச்சயமானது. அங்கிருந்து கோடு பிடித்தாற்போல் மேலேறி ஜோசியம், சித்த மருத்துவம், யோகம், தியானம், யக்ஷி வசியம், ரசவாதம் என எதையெதையோ எங்கெங்கோ சென்று பயின்று வந்தான். புத்தகங்களைப் படித்து அவனே என்னென்னவோ முயன்றும் பார்த்தான். மண்டையோடுகளை வீட்டுக்குள் கொண்டு வந்தவன் ஏதோ வலிப்பு நோய்க்கு பற்பம் செய்கிறேன் என்று கிளம்பியது வரை ராமலிங்கப் பிள்ளை அவனை பெரிதாகக் கண்டித்ததில்லை

பாதாம் மாமி

பருப்பு நன்னா திடமா இருக்கு. அப்பாவும் இப்படிதான்.எது உசத்தியோ அதைத்தான் தருவிப்பார். நகை,துணி,பண்டம் பாத்திரம் எல்லாம் அவருக்கு உசத்தியா இருக்கணும். குங்குமப்பூ காச்மீரத்திலிருந்து நேரா வீட்டுக்கு வரும். கண்ணில இமை காப்பதுமாதிரிதான் என்னையும் எங்கக்காவையும் அவர் வாழ வச்சார். இதுக்கு அதுக்குன்னு எல்லாத்துக்கும் பணியாட்கள் இருந்தாலும் சமைக்கறது மட்டும் நானும் எங்கக்காவும் மட்டும்தான். அம்மாவுக்குக் கூடமாட ஒத்தாசை செஞ்சே சமையல் பழகிடுத்து. தீபாவளி வந்துட்டா நாந்தான் பாதாம் ஹல்வா கிளறணும். அப்பெல்லாம் படி கணக்குத்தானே. இத்தனை படின்னு கிளறினா சோழவந்தான் முழுக்க வாசனையா இருக்கும்.பண்ணையாட்கள் எல்லோருக்கும் தீபாவளி ஸ்வீட் என்னோட பாதாம் ஹல்வாதான். “

பார் மகளே பார்

அனுராதா முன்னும் பின்னும் கால் மாற்றி மாற்றித் தவித்தது. மாடா இருந்தா என்ன மனுஷியா இருந்தா என்ன வலி ஒண்ணுதான அம்மா பெருமூச்சு விடுகிறாள். நான்கு பிரசவங்களைக் கடந்த பெண்மையின் வலியன்றோ அது. நிலவு அரைவட்டமாய் தலைக்கு மேலே, குளிரில் மணலில் அமர்ந்திருக்கிறோம். அன்று பெத்லகேமில் உதித்த தச்சனின் மகன் வரவிற்காய் காத்திருந்த சீமோனைப் போன்று நம்வீட்டுக் கொட்டிலில் பிறக்கப்போகும் கன்றிற்காய் பார்த்திருக்கிறோம். அன்பு மகளே அனுராதா வலியில் கால் இடறி…

கரடி வேட்டை

தனக்குத் தீங்கு செய்யாமல் ஒதுங்கிப் போன பிறகும் கூட மூர்க்காவேசத்துடன் விரட்டி விரட்டி அந்த மிருகத்தை அழித்துத் தீர்த்த பிறகே அடங்கும் அவனது வெறியை அப்பட்டமாக முன் வைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதியிருக்கும் ‘கரடி வேட்டை’என்னும் சிறுகதை. விலங்கு – மனிதன் என்னும் இரு நிலைகளை எதிரெதிரே வைத்து உண்மையில் யார் விலங்கு என்னும் தேடலுக்குள் இட்டுச் செல்கிறார் டால்ஸ்டாய். இந்தப் படைப்பில் விவரிக்கப்படும் சம்பவம், டால்ஸ்டாய் தன் வாலிபப் பருவத்தில் நேரடியாகவே கண்டுணர்ந்த வேட்டை அனுபவம் எனவும் இது நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் வேட்டையாடுவதை அவர் நிறுத்தி விட்டார் என்றும் குறிப்புக் கிடைக்கிறது.

முடி

சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா, அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன். மற்ற விளம்பரங்கள் அனைத்திலும் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருப்பேன். கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதுவும் ஃபான்டா விளம்பரத்தில் எனது பின்னந்தலை மட்டுமே தெரியும். அந்தத் துணிக்கடை விளம்பரத்தில் முக்கியமான இரண்டு மாடல்களில் நானும் ஒருவன். துணிக்கடையினர் கெல்லீசில் ஒரு மாபெரும் விளம்பரப் பலகை ஒன்றை வைந்திருந்தார்கள். அந்த விளம்பரத்திலும் என் முகம் தெரியாது.

சீமைக் காரைச் சாலை

“அது என்ன எளவுல?படம் கிடம் எடுக்கானுவளா? மயிறு மாதி கெடக்கத் தெருவ கோட்டிக்காரப்பயலுவ என்ன நோண்டிக்கிட்டு நிக்கானுவ?” நீண்டு கிடந்த சாணி மொழுகிய வெளிப்புறத் திண்ணையில் அமர்ந்து,பல்குத்திக்கொண்டு நின்றிருந்த காளிமுத்துவிடம் வினவினார் கோளவடியார். எதிர்ப்புற சின்னமணி வீட்டிலிருந்து ஒரு சீரற்ற காட்டாற்றுத் தடம் போல் கருந்திட்டாய் கொசுமொய்த்து நெளிந்துகொண்டிருந்தது சாக்கடை.

நேருக்கு நேர்

“வரலாறு மனித எண்ணங்கள் அனைத்தையும் வடிவமைக்கிறது” என்று அந்தப் பருவத்தின் தொடக்க விரிவுரையிலேயே வரலாற்றுப் பாட விரிவுரையாளர் வகுப்பில் கூறியிருந்தார். அந்த வரி ஒரு முழக்கவரியைப் போல ‘நச்” என்று உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது. அடிக்கடி என்னை யோசிக்கவும் வைத்தது. ஆம்! எந்த ஒரு நாடும் அதன் முன்னோர்களைப் பற்றிய வரலாற்றைப் படிப்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்ளும். இந்தோனீசியா, வியட்னாம், இந்தியா, ஜப்பான் போன்ற பல நாடுகளின் வரலாறுகளை – வரலாற்றுத்தலைவர்கள் மிகப் பலரைச் செல்வம் போலப் பெற்றிருந்த அந்த நாடுகள் சிறந்திருந்ததைப் படித்தபோதெல்லாம் எப்படியும் எனக்குள்ளும் பேருவகை பிறந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன்.

கசாப்புக்காரர்

‘கறுப்புச் சூரியன்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஆஷாபூர்ணா தேவியின் கதைத்தொகுப்பின் விமரிசனத்தில் திரு வெங்கட் சாமிநாதன்: ஞானபீட விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் வங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணா தேவி. இச்சிறுகதை ,வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண் நிலை பற்றியது இது. தான் பெண்ணாக இருந்தபோதும் பெண்ணின் எதிர்த்தரப்பை எடுத்துக்கொண்டு இதில் நடுநிலையோடு பேசியிருக்கிறார் ஆசிரியர்; பெண்ணின் மீட்சி அவளிடமிருந்துதான் வர வேண்டும் என்பதையும் கழிவிரக்கம் தேவையில்லை என்பதையும் உணர்த்தும் அருமையான படைப்பு இது.

குருவி

எல்லாம் கச்சிதமாய் நேர்த்தியாய் இருக்கவேண்டும் சதாசிவனுக்கு. வீடு பளபளவென்று மின்னவேண்டும், தேடினாலும் சின்ன தூசிக்கூட தென்படக்கூடாது. பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருந்தால் அவை அந்தந்த இடத்தில் இருக்கும் என்பது அவனுடைய சட்டம். தொலைப்பேசி இடதுகையால் எட்டும் இடத்திலேயே இருக்கவேண்டும். அதிலிருந்து ஓரடி இடம் விட்டு சின்ன அலமாரி. இடதுகோடி மூலையில் சின்னதாய் பேனாக்களுக்கான ஸ்டாண்டு. அது ஒரு இஞ்ச் கூட நகர்ந்திருக்கக்கூடாது. அப்புறம் திவான், சோபா. டீப்பாய், பேப்பர் எல்லாம் அளவு எடுத்து கோடுபோட்டு வைத்தது போல அதனதன் இடத்தில் இருக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை…

கர்மயோகம்

ஃபேன் காற்றில் காபி ஆறிபோயிருந்தது. “ஏ கமலம்..இப்படி வா..இத கொஞ்சம் சூடு பண்ணி கொண்டுவா..”. “ராமா ராமா ராமா” என்றவாரே பாடி வந்தாள். சரியாக இந்த நேரத்தில் இப்படியொரு கோரிக்கையை எதிர்ப்பார்த்தவள் போல வந்து காபி டவராவை எடுத்து சமையல் கட்டுக்கு சென்றாள்.

சின்னஞ்சிறு கிளியே

அம்மாவுக்கு பிரச்சனை தான் படிக்காததா அல்லது தன் அழகா, என்றொரு கேள்வி அவளுக்குள் எப்போதுமே இருந்தது. என்னவோ அலங்கரிப்பில் ஆர்வம் போகப் போய்தான் படிப்பைக் கோட்டை விட்டதாகக் கூப்பாடு போடுவாள். தோழி கனகாவின் அக்கா பியூட்டி பார்லரில் வேலை செய்கிறாள். வண்ண வண்ண நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், மஸ்கரா, ஐ ஷேடோ, ஐ லைனர், ப்ளஷ் என அவள் மூலமாக விதம் விதமான அழகுச் சாதனங்கள் அவளுக்கும் தோழிகளுக்கும் அறிமுகமாயிற்று.

வார்ட் 34பி

அவளது பார்வையில் அதுவரை இருந்த வெறுமை உயிர் பெற்று சற்றே சலனங்காட்டியது. பதிலாக ஏதோ சொல்ல வருகிறாளோ என்று நினைக்கும் அளவிற்கு ஒரேயொரு கணம் கண்களில் லேசான ஈரமின்னல் தெறித்து மங்கியது. திறந்த வாயைச் சட்டென்று மூடிக் கொண்டாள். கூர்ந்த என் பார்வையைச் சந்திக்க விருப்பம் இல்லாதவளாகக் கண்களைத் தாழ்த்திக் கொண்டவளின் வாயோரம் லேசான துடிப்பு. எதையோ சொல்லவரும் அசைவாக இல்லாமல் அழுகைக்கு முன்பானதாக இருந்தது. வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்வது தெரிந்தது. “பேச ஆரம்பிச்சா அழுக வரும் அதான்,..”, என்றவள் குரலில் மயில் அகவுவது போன்றதொரு பிசிறு தட்டியது.

நந்துவின் பிறந்தநாள்

அந்தக் காலண்டரின் சீட்டில் தேதிக்கு அடியில், ‘திரயோதசி’, ‘அசுவினி’, ‘சதுர்த்தசி’, ‘பரணி’ என்று இம்மாதிரி எழுதியிருக்கும். அதில் ஒவ்வொரு சீட்டாகத் தூக்கித் தூக்கிப் பார்த்ததில் ஏழாம் தேதி அன்று ‘திருவோணம்’ என்று இருந்தது. “அட! திருவோணமா! அன்னிக்குத்தானே நேக்குப் பொறந்தநாள்?” என்று நந்து சொன்னான். அவன் சொன்னதை ஒருவரும் கவனிக்கவில்லை. அக்கா மாத்திரம், ‘பாவம், தன் பிறந்தநாளைத் தானே பார்த்துக் கொள்ளுகிறது!’ என்று நினைத்துக் கொண்டாள்.

அர்ஜுன்

நாளின் இறுதியில் நான்கு துண்டுகள் — மரத்தை வெட்டினாலும், மனிதர்களை வெட்டினாலும்… இன்னும் சொல்லப் போனால், மனிதனை வெட்டுவது சுலபம் தான். ஏன் யாரும் அவனிடம் அதைச் சொல்வதில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அதனால் அவனுக்கு முழு நான்கு ரூபாய் கிடைக்குமே!

நெடுந்தூர ஓட்டக்காரி

க்ரேஸ் பேலி நியூயார்க் மாநகரத்தில் வாழ்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர் மற்றும் அரசியல் போராளி. தன் வாழ்நாளில் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட க்ரேஸ் பேலி சிறுகதை வடிவத்தின் சாத்தியங்களை விரிவாக்கியவர் என்று கொண்டாடப்படுகிறார். பெண்களின் உலக இருப்பைப் பற்றிய நுட்பமான, ஆழமான பார்வை பேலியின் சிறுகதைகளில் பிரமிக்கவைக்கும் ஒளியுடன் வெளிப்படுகிறது. பெண்களின் உரிமைக்காகவும் போர்களுக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த க்ரேஸ் பேலி, எளிய மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே தன் படைப்புகளைக் கட்டமைத்ததார். இந்த இயல்புகளை ‘நெடுந்தூர ஓட்டக்காரி’ சிறுகதையிலும் காணலாம்.

நாகதேவதை

ஆறு மாதத்திற்கு முன்பு அவன் இந்த இடத்தை பார்க்க வரும் போது தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. சுற்றியுள்ள மற்ற மனைகளை விட இந்த இடத்திற்கு மட்டும் கணிசமாக விலை குறைத்து சொல்லியிருந்தார்கள். காரணம், இந்த மனையின் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய கரையான் புற்று ஒன்று இருந்தது. கூட வந்த தரகர், “எத்தனை முறை இடிச்சு விட்டாலும், மறுக்கா இங்க புத்து உருவாகிருதுப்பா…

கச்சேரி

சில நாட்கள் கழித்து சரண்யா அந்த புது ஐட்டத்தை வீட்டில் பாடிக் காண்பித்தாள். காவடிச்சிந்து போல இருந்தது. ஒவ்வொரு சரணமும் வேறு வேறு ராகம், வேறு நடை. கடைசியில் கண்ட நடையில் உச்சச்தாயியில் ‘தக தகிட, தக தகிட, தக தகிட’ என்று ஜதியை நான்கு முறை சொல்லி ஆவேசமாக முடித்தாள் சரண்யா. வீட்டுக்கு வந்திருந்த ஏ.கே மற்றும் இதர சிஷ்யகோடிகள் பலமாக கைத்தட்டினார்கள். ரொம்ப catchyஆக இருந்தது என்று ஒத்துக்கொள்ளவேண்டும். அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் வாயெல்லாம் பல். பாட்டி மட்டும், “என்ன கண்றாவிடீ இது?” என்று கேட்டாள்.
“நீ எல்லாத்துலையும் குத்தம் கண்டுபிடிப்ப!” என்றாள் சரண்யா.
“யார் பாட்டுடீ இது? இவ்வளவு இரைச்சலா இருக்கு?”
ஏ.கே. பதில் சொன்னான், “மாமாவோட மச்சினர் பண்ண பாட்டு. கர்நாடக இசையும் பரதத்தையும் கலந்து குடுத்திருக்கார்”
“என்ன எழவோ. இதையெல்லாம் யாரவது கேப்பாளா?”

மௌனம்

இசையைப் படைப்பவனுக்கு வயோதிகம் எவ்வளவு கொடூரமானது! முன்னைப் போல் வேகமாக எதுவும் நிறைவேறுவதில்லை. சுயவிமர்சன கண்டனமோ ஸ்தம்பிக்கச் செய்யுமளவிற்கு பூதாகாரமாக வளர்கிறது. புகழ், கைத்தட்டல்கள், அலுவல் சார்ந்த விருந்துகள், அரசாங்கமளிக்கும் பென்சன், விசுவாசமான குடும்பம், கடல்களுக்கு அப்பாலுமுள்ள ரசிகர்கள், இவை மட்டுமே மற்றவர்கள் கண்களுக்கு புலப்படுகின்றன.

புகை

முதல் முறை பார்த்த பொழுது அவளுக்கு 35 வயது. ஆனால் 40 வயதை தாண்டியது போல் இருப்பாள். ஒரு எண்ணெய் நிறுவனத்தின், உதிரிபாகப் பிரிவின்ன் சாதாரண விற்பனைப் பிரதிநிதியாய் அவளைச் சந்தித்தான். சீசர்ஸ் பேலஸ் காசினோவில் ப்ளாக்ஜாக் டேபிளில் முதல் நாள் இரவு சந்தித்தாள். மறுநாள் உதிரிபாக கேட்லாக்கை தூக்கிக் கொண்டு அவனை வந்து கான்ஃபரன்ஸில் சந்தித்தாள். ஒரு நல்ல இரவு அமைந்தது.

ஆவாரங்காடு

மெல்ல எழுந்து சேலையை உடுத்திக்கொண்டாள்.தெருவில் இறங்க தெருவிளக்கு வெட்டிக்கொண்டிருந்தது.ஊளையிட்டு சென்ற நாய் திரும்பி நின்று குரைத்தது.அதோடு இன்னுமிரண்டு நாய்கள் சேர்ந்து கொண்டன.ச்சீசீ என்ற அதட்டலுடன் வடக்கு நோக்கினாள். அடர்கருப்பாய் இருந்தது சாலை.டார்ச்சை அடித்தவாறு நகர்ந்தாள்.அடி வயிறு இளகிவிட்டிருந்தது.இருட்டு மெல்ல விழுங்கிக்கொண்டது.

அவர்கள் இருக்கிறார்கள்

அவர்கள் நம் தலைகளுக்கு மேலேயே அடர்ந்திருக்கிறார்கள். உறங்கும் போது மெல்ல கைதூக்கினால் தொட்டு விடலாம். ஆனால் அவர்கள் உறங்குவதேயில்லை. அவர்கள் இமைப்பதுமில்லை. அவர்களுடைய உடல்கள் ’உடல்கள்’ என்ற நம் வரையறைக்குள்ளேயே வருவதில்லை. மிக மெல்லிய நூல்களைப் பிரித்துச் சேர்த்தவர்கள் போல அல்லது ஒளிக்கம்பிகள் போல பிரகாசமாய் மென்மையாய், இதுவரை பூமிப்பிரதேசத்தின் மீது விழுந்து வாழ்ந்திறந்த அத்தனை கோடானுகோடி லட்சம் கோடி ஜீவன்களும் ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு அங்கே தான் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

சர்வர் சுந்தரம்

என்னை பற்றி புரளி பேசுவதற்கு என்று ஒன்றும் பெரிதாக இல்லை. அந்த ஒரு புரளியை தவிர! ‘பெருசு மாசத்தில திடீர்னு ஒரு நாள் டிப்டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு எங்கேயோ கிளம்பிடராற்பா. எங்க போறார்னு யாருக்குமே தெரியாது.’

பொட்டுப்பாட்டி

அப்போதுதான் மூட்டப்பட்ட செங்கல் சூளையிலிருந்து வெளிவரும் கரும்புகையென அந்த சிறிய ஓலைக்குடிசை கரும்புகையை கக்கிக்கொண்டிருந்தது. அதனூடே இருமல் சத்தமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. கடந்தவாரம் நரியங்குளத்துக் கரையில் பொறுக்கிக் கொண்டுவந்த விறகுக் கட்டின் கடைசி சுள்ளிகள்தான் எரிந்துகொண்டிருந்தன. கறிவைத்து முடிக்கும்வரை இந்த விறகு போதுமா போதாதா என்று குழம்பியவளாய் விறகுக் கட்டையும் அடுப்பையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள் பொட்டுப்பாட்டி.

பொய்க் குதிரை – புதுமைப்பித்தன்

ரஸ்தாவில் ஒரு திருப்பம்; சற்று இருள் படர்ந்த வெளிச்சம்; பாதசாரித் திண்ணையிலே, அல்ல அதன் கீழே ஓர் ஓலைப்பாயின் சுருள்; எதேச்சையாகக் கண்கள் அதன்மீது படிகின்றன. ஓலைப்பாய்ச் சுருளா! ஓர் ஏழைக் குழந்தையின் தொட்டில்; சுருட்டிய பாயில் குழந்தை சுகமாக உறங்கியது. உறக்கமா? சீச்சீ, என்ன நினைப்பு! அதன் தாயின் கஷ்டம் என்னவோ! கமலத்திற்கு ஒரு குழந்தை இருந்தால்..நினைப்பில் என்ன குதூகலம்…!

பங்குச்சந்தை விழுந்திருந்தது

ஆனால், பங்குச்சந்தைக்குத் தோன்றிய வேறேதோ நினைப்பு அப்படியே தன்னை கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணவைக்குமளவு அதை துக்கத்தில் ஆழ்த்தியது: வாரன் பஃபெட் ஒரு வேளை தவறாக இருந்தால் என்ன செய்வது? இந்த நினைப்பே பங்குச்சந்தையை முன்னெப்போதையும் விட நலிவாக்கியது: வாரன் பஃபெட் போன்ற மகோன்னதர், பைசா பிரயோஜனமில்லாத கொடியதான பங்குச்சந்தை மேல் அன்பு செலுத்தித் தன் இதயத்தை வீணடித்திருப்பாரோ என்னும் சிந்தனை தோன்றியது. பங்குச்சந்தைக்கு குற்றவுணர்ச்சியும் கழிவிரக்கமும் தலைதூக்க, அப்படியே மொத்தமாக உருக்குலைந்து போனால் என்ன என்று எண்ணியது. ஆனால், அது செய்யவில்லை. என்ன ஒரு பைத்தியகாரத்தனம், என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு

“வீட்டுல வேலை செய்யும் பெண்ணை நாள் முழுவதும் எனக்குத் துணையா இருக்கச் சொல்லியிருந்தாங்க. அவங்களுக்கு இருந்த அன்பால அதைச் செய்திருக்கலாம். ஆனால் எனக்கு அது கண்காணிப்பு மாதிரி பட்டுது. அது தாங்கலை. போரிவிலி ஸ்டேஷன் போனேன். நான் அடிக்கடி அந்தேரி வருவேன் சாமான்கள் வாங்க அப்புறம் ஸாத் பங்களாவில இருக்கிற கோயிலுக்கு. அதனால ஒரு பாஸ் எடுத்து வெச்சிருந்தேன். ரயில் வந்ததும் சட்டென்று ஏறிவிட்டேன். அந்தேரியில இறங்கினதும் மனசு குழம்பிப் போச்சு. ஒரு அறுபது வயதுப் பெண்மணிக்கு வீட்டை விட்டுப் போனால் தங்க ஏது இடம்? அவளை ஏதாவது ஆசிரமத்துக்குப் போன்னு சொல்லுவாங்க. அங்கேயே ஸ்டேஷன்ல உட்கார்ந்துவிட்டேன். ஒரு பெரிய பாறாங்கல் மாதிரி ஒரு துக்கம் நெஞ்சுல கனத்துது. மனசுல இருக்கும் ஒரு ஆசையச் சொன்னதுக்கு எனக்கு தண்டனை. சொல்லாமல் செத்திருந்தா கொண்டாடியிருப்பாங்க. சுதா, உனக்கு பல ஜன்மங்கள்ல நம்பிக்கை இருக்கா? எனக்கு இல்லை. என் பாபா சொல்லுவார். நரகமும் சொர்க்கமும் மனசுலதான். உயிரோடு இருக்கும்போதுதான். இறந்த பின்னால நாம எல்லாம் காத்து, வெறும் காத்து…”

முகுந்தன்

இவையெல்லாம் படிப்பதற்குக் கஷ்டமாகவே இருக்கும். மகாகொடுமை! ஆனால் இவ்வளவும் உண்மையேயல்லவா? ஏழைத் தீண்டாதாரின் துயரம் இதுதான். உலகத்தில் புண்ணிய பூமியும், தர்ம்ம் என்பதற்குப் பிறப்பிடமுமானது நமது பாரததேசம், அன்பும் தெய்வ பக்தியும், பாவத்தை கண்டு அஞ்சும் குணமும், நம் நாட்டில் வாழும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இயல்பானவை. ஆனால் நீசர் என்று பெயரிட்டு சிலரை ஒதுக்கி வைக்கிறோம். அக்கொடிய வழக்கத்தின் வெப்பத்தில் நமது தர்ம்ம், அன்பு, தெய்வ பக்தி, நல்லொழுக்கம் எல்லாம் எரிந்து சாம்பலாகி வருகின்றன. அவ்வழக்கம் தொலைய வேண்டும், தெய்வம் கொடுக்கும் சுக துக்கங்களை அனைவரும் சமமாகப் பகிர்ந்து அனுபவிப்பதல்லவா தர்ம்ம?சில பேரில் பொறுக்க முடியாத சுமை போடுவது பாவம் அல்லவா?

பெய்யெனப் பெய்யும் மழை

1. ஒப்பு மொழி [compatible language]: கி.பி 2300 வாக்கில் உருவாகி கடந்த நூறாண்டுகளாய் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழி.

2. இந்தக் கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் ஒப்பு மொழியில் பேசப்பட்டதாகும். நமக்கு அம்மொழி பரிச்சயம் இல்லை என்பதால் தமிழில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

கனவு நோயாளி

ஒரு வட்டத்தின் மீது ஓடிக் கொண்டிருந்தான். தொடக்கப்புள்ளி இறுதிப்புள்ளிகளை கண்டறிய முடியாத வட்டம். எந்தப் புள்ளியிலும் நிற்கவில்லை. ஓடி ஓடிக் களைத்துப் போனான். தான் மூச்சு விடும் ஓசை அவனுக்கு தெளிவாகக் கேட்டது. ஒரு வினாடி அல்லது சில வினாடிகள் இருக்கலாம். அவன் நின்றான். ஓடிக்கொண்டிருந்த வட்டம் சதுர வடிவாக மாறியிருப்பதைக் கண்டான். அவன் நின்ற இடம் சதுரத்தின் ஒரு மூலை. சதுரப் பாதையில் மீண்டும் ஓட்டம். சதுரம் விரைவிலேயே செவ்வகமாக மாறியது.

மீட்பு

ஒருவன் ‘பயப்படாதே .உன் பெயர் சகினாவா ?’என்றான்.அதைக் கேட்டு அவள் முகம் வெளுத்தது. தாங்கள் யார் என்று அவர்கள் சொன்ன பிறகே தான் சிராஜுதீன் மகள் சகினா என்று ஒப்புக்கொண்டாள் .

இளைஞர்கள் அவளுக்கு அன்பு காட்டினார்கள்.உணவும் பாலும் கொடுத்து ட்ரக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய ஜாக்கெட்டை கொடுத்து போர்த்திகொள்ளச் சொன்னான்.கைகளால் மார்பை மறைத்து கலவரமடைந்த நிலையில் அவள் நின்றதைக் கண்டு மனமிரங்கி -துப்பட்டா இல்லாதது கண்ணியக்குறைவென்ற உணர்வோடு அவதியுற்றாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

கிட்டு மாமாவின் எலிப்பொறி

“எலிப்பொறிய நல்ல பிராண்டா வாங்கணும் சார். எனக்கு தெரிஞ்ச ஒரு கடை அடையார்ல இருக்கு”. வாட்ச்மேன் சொன்ன விலாசத்தில் கிட்டு மாமா சென்று சேர்ந்தார். கடையில் பட்டையாக திருநீர் அணிந்த ஒரு மெலிய உருவம். டாக்டர் நோயாளியை பார்க்கும் நேசத்துடன் கிட்டு மாமாவிற்கு விசிடிங் கார்டை நீட்டினார். கார்டில் நடு நாயகமாக அந்த பெயர் “எலிப்பொறி நாராயணன்”. நாராயணனின் தொழில் பக்தி கிட்டு மாமாவை கலங்கடித்தது.

ஸ்நேகிதி

நியாயமாய் அவள் பார்வையில் கோபத் தீ பற்றி எரிய வேண்டும். அல்லது வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கவும் செய்யலாம். ஆனால் முன்வரிசைப் பற்கள் பளிச்சிட அழகாய்ச் சிரிக்கிறாள். பெரிய கண்களை இன்னும் விரித்து ஆச்சரியமாய்க் கூவுகிறாள்.

கிராமத்து வீடு

” இதோ இந்த முத்தத்துலேதான் பாண்டிக் கட்டம், தாயக்கட்டை கட்டமெல்லாம் போட்டு விளையாடுவோம். இந்த தூண்களுக்கு நடுவிலே நாலுமூலை தாச்சி என ஒரு விளையாட்டு. அதெல்லாம் ஒரு காலம் .எல்லாரும் போய் சேர்ந்தாச்சு. இப்போ என் காலமும் முடியப் போறது. நம்ம குடும்பத்தோட ஒரோரு சிரிப்பும் அழுகையும் இந்த வீட்டுக்குத் தெரியும். நமக்குத் தெரியாத ரகசியங்கள் கூட இதுக்குத் தெரியும்“.

விக்டோரியன்…

கிட்டதட்ட அச்சு வெல்லம் மாதிரியான ஒரு நினைவுச் சின்னம் அமைந்திருந்தது. அதன் ஒரு பக்கத்தில் இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்த இந்த டவுணைச்சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி குறிப்பு இருந்தது. இன்னொரு பக்கம் முதல் உலகப்போரில் இறந்தவர்களுக்கு. மூன்றாவது பக்கம் என்னவாக இருக்கும் என்ற யோசனை வந்தது. இப்போது வழக்கமான எண்ணம் தலைகாட்ட ஆரம்பித்தது. நான் இன்னொரு பக்கத்தைப் பார்க்கபோகும்போது மற்ற பக்கங்களில் எழுதியிருந்தவை மறைந்துவிடும்…இந்த எண்ணம் வந்தவுடன் என்னுள் பதற்றம் மெல்ல புகையாய் எழுந்தது.

வேளை வந்துவிட்டது

இன்னும் பத்தாண்டுகள் இங்கே இருக்கச் சொன்னாலும் கபீர் தயார்தான். அதிலும் குடும்பத்தோடு வருவதென்றால் இன்னும் மகிழ்ச்சி. ஆனால் இந்த நாடு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு மேல் ஹம்பாடியின் தொடர்பு ஏற்பட்ட பின்னர் கபீரின் உலகம் மிகவும் மாறிவிட்டது. இந்த வேலையை விட, குடும்பத்தை விட, உயிரை விட, மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஹம்பாடிதான் கற்றுக் கொடுத்து அவரைப் புது ஆளாக்கினார்.