சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்

கிளாசிக் பட வரிசையில் “நாயக்” 1966ஆம் ஆண்டு சத்தியஜித் ராய் அவர்களால் வங்க மொழியில் இயக்கப்பட்டு வெளிவந்த கருப்பு வெள்ளை படம். அரிந்தம் முகர்ஜி என்ற மிகப் பிரபலமான வெகுஜன நடிகனின் உள்மனப் போராட்டங்களின் தொகுப்புதான் இந்தப் படம். வங்க மொழியைச் சேர்ந்த உத்தம் குமார் அந்த நடிகர் “சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்”

அமுதசுரபியும் சத்துணவுத் திட்டமும் மலிவு விலை உணவகங்களும்

நமது தமிழ்க் காப்பியங்கள் பசிப்பிணி பற்றி என்ன கூறியிருக்கிறது என்று பார்த்தால் முதலில் நமக்குக் கிடைக்கும் பாடலின் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமோதங்கிழார் என்ற புலவர் நாட்டில் நிலவிய பசிப்பிணியை இரண்டு பாணர்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். புறநானூற்றில் இடம் பெறும் பாடல் இது.

என் பெயரும் கிருஷ்ணன்

“ இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிண்டு வந்து நிப்பா என் பொண்ணுன்னு நான் நினைக்கலை. எனக்கு வியாக்கியானமாகச் சொல்ல வார்த்தை வரலை. இவளுக்குக் கீழே ஒரு தம்பி ஒரு தங்கை இருக்கா. நான் ராமர் கோவில் பட்டர். தெனம் நாலுபேருக்குப் பதில் சொல்றா மாதிரி பண்ணிடாதீங்கோ. இது சரிப்பட்டு வராது. நான் யாரையும் துணைக்கு அழைச்சிண்டு பஞ்சாயத்து பண்ண வரலை. எங்களுக்கு யாரையும் எதிர்க்கும் திராணி இல்லை. எதுக்கெடுத்தாலும் பயம் தயக்கம் உள்ளவா நாங்க. உங்களை அந்தத் தாயாரா நினைச்சிண்டு கேக்கறேன் என் பொண்ணு ஸ்வேதாவிற்கு எங்க மனுஷாளுக்கு நடுவிலேயே மாப்பிள்ளை பார்த்துக்கறேன். விட்டுடுங்கோ “ என்று என் அம்மாவின் கால்களில் பணிய இருந்தவரை அம்மாதான் பதறிப்போய்த் தடுத்து நிறுத்தினாள்.

பாதாம் மாமி

பருப்பு நன்னா திடமா இருக்கு. அப்பாவும் இப்படிதான்.எது உசத்தியோ அதைத்தான் தருவிப்பார். நகை,துணி,பண்டம் பாத்திரம் எல்லாம் அவருக்கு உசத்தியா இருக்கணும். குங்குமப்பூ காச்மீரத்திலிருந்து நேரா வீட்டுக்கு வரும். கண்ணில இமை காப்பதுமாதிரிதான் என்னையும் எங்கக்காவையும் அவர் வாழ வச்சார். இதுக்கு அதுக்குன்னு எல்லாத்துக்கும் பணியாட்கள் இருந்தாலும் சமைக்கறது மட்டும் நானும் எங்கக்காவும் மட்டும்தான். அம்மாவுக்குக் கூடமாட ஒத்தாசை செஞ்சே சமையல் பழகிடுத்து. தீபாவளி வந்துட்டா நாந்தான் பாதாம் ஹல்வா கிளறணும். அப்பெல்லாம் படி கணக்குத்தானே. இத்தனை படின்னு கிளறினா சோழவந்தான் முழுக்க வாசனையா இருக்கும்.பண்ணையாட்கள் எல்லோருக்கும் தீபாவளி ஸ்வீட் என்னோட பாதாம் ஹல்வாதான். “

ஆருடம் பலித்த கதை

எனக்கு ஆருடத்தில் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. வாழ்வின் அடிப்படை நம்பிக்கைகள் தகர்ந்து போய் நிற்கும்பொழுது இது போன்ற பூச்சுற்றல் வேலைகள் எல்லாம் ஒரு வித நடுத்தரவர்க்கத்து பம்மாத்துத்தனம் என்பதுதான் என் முடிவு. எல்லையற்ற சுயநலமே இது போன்ற விஷயங்களை வளர்த்து வருவதாக என் அபிப்பிராயம் .இருப்பினும் நாளிதழில் தனுர் இராசிக்கு இன்று என்ன என்று பார்ப்பதற்கு காரணம் நானும் இது போன்ற ஒரு மத்தியதர வர்க்கம் என்று சமாதானம் செய்து கொள்வேன்.