மூன்று துறவிகள்

‘’ஒருவர் குள்ளமாக முதுகு வளைந்து இருப்பார்; ஒரு மதகுருவுக்குரிய அங்கியை அணிந்திருக்கும் அவர் மிக மிக வயதானவர்;அவருக்கு நிச்சயம் நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.வெண்மையான அவரது தாடியில் கூட இலேசான பச்சை நிறம் படர ஆரம்பித்து விட்டது,அவ்வளவு வயதானவர் அவர்;ஆனால் எப்போதும் ஒரு புன்முறுவலுடனேயே அவர் இருப்பார்; அவரது முகம் அப்போதுதான் சொர்க்கத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த தேவதையின் முகம் போன்ற பிரகாசத்துடன் இருக்கும்.இரண்டாமவர் உயரமானவர்;அவரும் கூட வயதானவர்தான்.அவர் குடியானவனைப் போன்ற கிழிசலான ஆடைகளை உடுத்தியிருப்பார்.அகலமான அவரது தாடி பழுப்புக்கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.அவர் நல்ல வலுவானவர்.நான் அவருக்கு உதவி செய்ய வருவதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தை நிமிர்த்துவதைப் போலத் தனியாகவே என் படகை நிமிர்த்தி வைத்து விட்டார் அவர்.அவரும் கூட அன்பானவர்;கலகலப்பானவர். மூன்றாமவர் உயரமானவர்;பனியைப் போன்ற வெண்மையான அவரது தாடி அவரது முழங்கால் வரை நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.உரம் படைத்த அவரது கண்ணிமைகள் சற்றே முன் துருத்தியபடி தொங்கிக் கொண்டிருக்கும்.;தன் கழுத்தைச் சுற்றித் தொங்க விட்டிருக்கும் ஒரு பாயைத் தவிர வேறு எதையும் அவர் அணிவதில்லை’’

பாம்பு வேட்டை

பழக்கமில்லாத வெய்யிலும் எதையும் கவனிக்காத மனிதர்களும் அவனுக்கு மிக அன்னியமாக இருந்தன. யாருக்கும் நகரத்தின் தெருப்பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக் கண்டடைந்தவுடன் தெரு முனையில் இருந்த பெயர்ப் பலகைகளைக் கொண்டு அவனே தேடி அடையாரில் இருந்த ஒரு சின்னக் கடைக்கு வந்தான். தட்டச்சு செய்து கொடுக்கும் கடைமுதலாளி சிங்காரம் அண்ணன் அவன் நினைத்ததைவிட அந்த நகரத்திற்குப் பொருத்தமில்லாமல் வேட்டியிலும் பனியனிலும் முறுக்கிய வெள்ளை மீசையுடன் பார்க்க‌ ஒரு விவசாயி போல‌ நின்றிருந்தார். அப்பாவின் பால்ய நண்பர். இருவரும் சந்தேகமாக ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல உணர்ந்தான். அவன் அளித்த கடிதத்தைப் பார்த்தது அவர் அடைந்தது மகிழ்ச்சியா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் முகமே அப்படித்தான் எனப் பின்னாளில் புரிந்தது.

ஜெனரலும் அந்தச் சிறிய டவுனும்

அந்தச் சிறிய டவுனில் அவர் பிரபலமானவர். எல்லாச் செய்திகளையும் உடனடியாகப் பரப்புபவர்.கடையில் இருந்த போதும் டவுனில் நடக்கும் எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.எந்தச் செய்தியாக இருந்தாலும் அவருக்கு உடனடியாகத் தெரிந்து விடும்.ஜனங்கள் தமக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்லும் போது “ நாவிதர் சொல்வது போல ” என்றே ஆரம்பிப்பார்கள். எந்தச் செய்திக்கும் நாடகம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பது அவர் வழக்கம். ஏதாவது முக்கியமான விஷயம் அவருக்குத் தெரிந்து விட்டால் அதைத் தன் கடையில் இருந்து கொண்டு சொல்ல மாட்டார். கடையை விட்டு வெளியே வந்து குறுக்குச் சந்துகளில் எல்லாக் கடைகளும் இருக்கும் இடத்திற்கு வந்து நின்று கொண்டு அதைச் சொல்வார்.

அ.முத்துலிங்கம்: "மஹராஜாவின் ரயில் வண்டி"

“கவிதை என்பதை அனுபவங்களில் இருந்து பழக்கத்தின் பாசியை அகற்றும் ஒரு செயல் என்று சொல்வார்கள். முதன் முறையாக ஒன்றை அனுபவிக்கும் போது நமது அகம் அதை முழுவதும் உள்வாங்கிக் கொள்கிறது. பின் வரும் ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கும் அதற்கும் நடுவில் ஞாபத்தின் திரை விழுகிறது. அதை விலக்கி மீண்டும் அந்த அனுபவத்தைப் புதிதாக அடைவது இயல்வதில்லை. ஆனால் முதன்முறை அடைந்த அந்த அனுபவத்தின் பரவசம் மனதில் தங்கி விடுகிறது”

காட்சிப் பிழை

“ சே!சே! பயப் படாதே! பயப்படாதே!! அப்பிடி எதுவும் மறக்காது! இதோ இப்ப தெரிஞ்சுடும்! ரிலாக்ஃஸ் ரிலாக்ஃஸ்!!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு பயத்தைப் புறந்தள்ள முயன்றான்.
சாலையின் இடது புறம் கரும் பச்சையில் ராக்ஷ்ச வளர்த்தியில் நெற் பயிர்கள் ,நெடும்தூரம் வரை.

கடந்தகாலத்தின் எதிர்காலத்தவர்

2100-ஆம் ஆண்டில் மீண்டும் முதன்முதலாக செயற்கைக் கோளை ஏவினோம். 2105-இல் நிலவுக்கும் அதன்பிறகு பிறகிரகங்களுக்குமாக ஆய்வுக்கோள்களை வெற்றிகரமாக அனுப்பி ஆராய்ந்தோம். பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையேதான் அந்த ஏவுதல்கள் நிகழ்த்தப்பெற்றன. புவியளவுப் பேரிடர் நடந்தபோது அதன் தாக்கம், மிக மிக மிக குறைவான அளவில் என்றாலும், மற்ற கிரகங்களிலும் முக்கியமாக சந்திரனில் தாக்கத்தடயங்கள் காணப்பெறலாம் என்ற கணிப்பு இயற்பியலாளர்களிடம் இருந்தது.

பெயர் தெரியாப் பறவையின் கூடு

காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ் குமாருக்கு. மனைவியின் கேலியையும் மீறி அதை ரசிப்பது அவனுக்கு பிடித்திருந்தது. மஞ்சள் நிறம் கொண்ட‌ சின்ன அலகால் வாய்திறந்து தன் தாயின் அலகிலிருந்து வரும் உணவிற்காக மூடிய கண்களோடு நம்பிக்கையோடு அந்த‌ மூன்று குஞ்சுகள் காத்திருக்கின்றன. மரகுச்சிபோன்ற கால்களுடைய‌ தாய் அருகே வந்ததும் மூன்று குஞ்சுகளும் மேலும் அகலதிறந்த அலகுகளுடன் நாக்குகள் துடிக்க பல விசித்திர ஒலிக‌ளை எழுப்ப ஆரம்பிக்கும். இரண்டாவது தளத்தில் இருந்த கருப்பு கண்ணாடி ஜன்னல்கள் மறைத்த‌ அவன் வீட்டிலிருந்து அந்த கூட்டை அவைகளுக்கு தெரியாமல் அவன் காணமுடிந்தது நாளுக்கு நாள் குஞ்சுகள் வளர்வதை காண்பது பெரும் பாக்கியமாக நினைத்தான். ஒருவயது மகனுடன் அமர்ந்துவிடுவான்.

நிலையாட்டம்

கண்ணும் காலும் கையும் ஒத்திசைந்து விளையாடவேண்டிய ஆட்டம். ஏனோ அந்த ஒத்திசைவு என்னில் கூடவே இல்லை. கண்ணும் காலும் ஒத்திசைந்தால் கைகள் சரியான கோணத்தில் இருக்காது. இல்லையென்றால் கால்கள் செட்டரை நோக்கி திரும்பி இருக்காது அல்லது கண்கள் கடைசி வரை பந்தைத் தொடராது. ஒவ்வொரு முறையும் பிரயத்தனப்பட்டு சரி செய்ய முயற்சிக்க ஆட்டம் என்னைவிட்டு விலகிச் சென்று கொண்டே இருந்தது. புத்தியால் ஈடுபடாமல் உடலை ஆட்டத்துக்கு ஒப்புக்கொடுத்திருந்தால் ஆட்டம் வந்திருக்குமோ என்னவோ?

நிழலாடும் நினைவுகள்

‘Hyperthymesia ஒரு அரிய வகை நோய். இது வரைக்கும் உலகத்துல 25 பேருக்கு மட்டும் தான் இந்த நோய் இருக்குறது உறுதி செய்ய பட்டிருக்கு. அனந்தன் 26ஆவது பேஷண்ட்.’
‘இதனால உயிருக்கு ஒண்ணும் பாதிப்பு இல்லையே?’ மகாவின் கைகள் நடுங்கின.
‘நோ நோ. மகா நீங்க பயப்பட தேவ இல்ல. Hyperthymesia வந்தவங்களுக்கு அவங்களோட கடந்த கால நிகழ்வுகள் ஒண்ணு விடாம நினைவுக்கு வரும். அவங்க குறிப்பிட்ட தேதியில என்ன பண்ணிட்டிருந்தாங்க, என்ன கலர் டிரஸ் போட்டுருந்தாங்க, யார் யார் கூட இருந்தாங்க இப்டி எல்லா விஷயமும் துல்லியமா ஞாபகத்துக்கு வரும்.’
‘இத குண படுத்த முடியாதா நிர்மலா?’
‘இத்துக்கான ட்ரீட்மெண்ட் இப்போ தான் டெவலப்மெண்ட் ஸ்டேஜ்ல இருக்கு. அடிப்படையா சென்சிடிவ் ஆகாம பாத்துக்குட்டாலே போதும்.’
‘ஞாபகங்கள் நல்லது தானே டாக்டர்?’ கொஞ்சம் நிம்மதியுற்றவலாய் மகா கேட்டாள்.
‘அது மன அழுத்தத்த குடுக்காத வரைக்கும் நல்லது தான்.’
மகா அனந்தனை நோக்கினாள். நிர்மலா அறைக்கு வெளியில் இருந்த சிறிய தோட்டம் போன்ற அமைப்பினை ரசித்து கொண்டிருந்தான் அனந்தன். அங்கு பூத்திருந்த பூக்களும் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியும் அனந்தனுக்கு இயற்கை தோற்றத்தை அளித்தது. அவன் உதடுகள் மகிழ்ச்சியில் சிரித்து கொண்டிருந்தன.

வேலி

“ ஒண்டு மட்டும் சொல்லுறன் அவள் பூர்வீகம் தீவு. புங்கிடுதீவிலை இருந்து இங்கை வந்து குடியேறினவள். ஆனால் எங்கடை பாட்டன் பூட்டன் எல்லாம் பிறந்து வளர்ந்தது மீசாலையிலை. நாங்கள் இருக்கிற வீடும் வளவும் என்றை அப்பாவுக்கு, அவருடைய அப்பா கொடுத்தது. அதை என்றை அப்பா எனக்கு சீதனமாக எழுதினவர். இனி இந்தக் காணி எங்களுக்குப் பிறகு மகேஸ்வரிக்கு. அதுக்கு முதலிலை காணியை கொஞ்சம் கொஞ்சமாய் பங்கஜம் விழுங்கி போடுவாள் போலக் கிடக்கு. நல்ல காலம் எங்கடை கிணறு பங்குக் கிணறில்லை. இல்லாட்டால் அதிலை வேறு பிரச்சனை வந்திருக்கும்”.
“சரி சரி சரசு. நான் செல்லத்துரையரோடை இதைப்பற்றி பேசுகிறன். அவர் நல்ல மனுசன். நீர் பங்கஜத்தோடை சண்டை பிடிக்கிறதை நிற்பாட்டும்”. பரமு அறைக்குள் சுருட்டொன்றை பற்றவைக்கப் போனான்.

மௌனியின் “அழியாச்சுடர்”

“அழியாச்சுடர் சிறுகதை ஒரு நவீன ஓவியத்தைப்போலவே எழுதப்பட்டுள்ளது. அதன் வடிவம் மட்டுமல்ல அதன் கதைமாந்தர்களும் துல்லியமற்ற சூழலிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பேசும்போது பேச்சு எழுகிறதா எனத் தெரியவில்லை. அவர்கள் அழுகைக்கான காரணங்கள் அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்கள் காணும் காட்சிகளும் உண்மையா அல்லது கற்பனையா என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. அவர்கள் உண்மையில் காட்சிகளை அல்ல அர்த்தங்களை மட்டுமே கண்டுகொள்கிறார்கள். காட்சிகள் மீது அவர்களே ஏற்றிக்கொண்ட ஏதேதோ அர்த்தங்கள். “

காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]

சரோஜா பாட்டி , காளிபரி என்ற இடத்துக்கு முதலில் சென்று காளையைத் தேடிப்பார்த்தாள். நகரத்தின் அந்தப் பகுதியில் காளைக்கு நிறைய பக்தர்களும் ரசிகர்களும் இருந்தார்கள். அவர்கள் அதனிடம் மரியாதை கொண்டவர்கள்;அன்போடு உபசரிப்பவர்கள். அங்கே அதைக் காணாமல் பின்னும் தேடிக்கொண்டு ஆற்றங்கரைப்படித்துறைக்குச் சென்றாள் அவள். காளையின் கூட்டாளிகள் சில பேரை அங்கே பார்க்க முடிந்தது. ஆனால்….அந்தக்காளை மட்டும் எங்கும் தென்படவில்லை.

மூன்றாம் அண்ணனின் இரண்டாம் மகன் மட்டும் இதில் விதிவிலக்கு. ஊருக்கு சென்று திரும்பி வருகையில் வழியில் கிடந்த செத்தப் பாம்பை பார்த்துவிட்டு அண்ணி “பாம்பு, பாம்பு” என்று அலறியபடி கக்கத்தில் இருந்த இவனைத் தூக்கிக்கொண்டு ஓட, அன்று இரவு”ஆம்பூ” என்று அலறி எழுந்து அண்ணியைக் கட்டிக்கொண்டிருக்கிறான். என்னத்தான் நான் அவர்களின் முதல் வார்த்தைகளை உடனிருந்து கேட்காவிட்டாலும், அக்குழந்தைகள் முதன்முதலாக என்னிடம் பேசிய வார்த்தைகள் இரசமானவை. அவை ஞானிகளின் பேச்சுகளைப்போல் மறக்க இயலாதவை.

நூலகத்தில் ஒரு தளபதி

விசாரணைக் குழுவின் மாலை நேர அறிக்கையில் பரிசீலிக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கையில் இவை நல்லவை இவை கெட்டவை என்ற பாகுபாட்டுக் கணக்குகள் இருக்கவில்லை. பெடீனாவின் முத்திரை ஒய்வெடுத்துக்கொண்டிருந்தது. சில சமயம் தன் துணையதிகாரியின் வேலையை சரி செய்யும் போது “இந்தக் கதையில் தவறேதும் இல்லை என்று எப்படி முடிவெடுத்தீர்கள்? இது படைவீரர்களை அதிகாரிகளைவிட சிறந்தவர்களாகக் காட்டுகிறது ! இந்த ஆசிரியருக்கு அதிகாரக் கட்டமைப்பின் மேல் மரியாதை இல்லை” என்று …

குதிரை வட்டம்

சற்றுநேரம் மின்னல்கள் நதிப்பரப்பில் சிறுபிள்ளைகள் போல ஒன்றையொன்று துரத்திப் பிடிப்பதைப் பார்த்தவாறு நாங்கள் நின்றிருந்தோம்.கடைசியில் ஒரு பெரிய சட்டாம்பி மின்னல் வந்து எல்லாரையும் விரட்டியடித்தது அதன்பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்ட ஒரு விளையாட்டரங்கம் போல வானம் அமைதியுற்றது.மழை சொட்டித் தீர்ந்தது.சிறிய ஓடைகளின் கொலுசுச் சப்தம் கேட்க ஆரம்பித்தது.சோடியம் வேபர் விளக்கு திடுமென்று ”இனி நான் பணி நோக்கட்டே ?”என்பது போல எரிந்தது

அவர்களுக்கிடையே

அப்போது அந்தச் சந்தில் ஒரு பெண் தன் பைக்கோடு போனாள். தாத்தா காறித் துப்பினார். அது வண்டியின் கேரியரில் பட்டது. இந்த மாதிரி துல்லியமாக துப்புவதில் தேர்ந்தவர்.
சாப்பாடு முடிந்தது.சிறுவன் தலையில் குல்லா அணிந்து கொண்டு ஓடினான். ஓடிய வேகத்தில் பாட்டியின் கால்களை மிதித்து விட்டான். “நீ குருடா? “ பாட்டி கோபத்தில் கத்தினாள்.
“செத்து ஒழி ” தாத்தாவும் கத்தினார்.
அதற்குள் சிறுவன் சிட்டாய்ப் பறந்து விட்டான்.பள்ளிக் கூடம் மிகவும் அருகில்தான்.

மந்திரமாவது….

இனி பேசி பிரயோஜனமில்லை. அமைதியாக இருக்க ஆரம்பித்தான். வண்டி மெதுவாக ஊர்ந்து செல்ல தொடங்கியது. வாந்தி வருவது போல நாறியது. தார் நெடி. முகத்தை சுளித்துக் கொண்டான். ரயிலடிலிருந்த மெயின் ரோட்டின் நடுவே இருந்த குழியை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ரொம்ப நாளாகவே அது அப்பிடியே தான் இருக்கிறது. இப்போதாவது மாற்றுகிறார்களே என நினத்துக் கொண்டான். அவர் மேலும் ஏதோ கேட்டு கொண்டிருந்தார். முகத்தை திருப்பி வெளியே பார்த்தான். இப்போது எதுவும் பேச வேண்டாம் என சங்கல்பம் செய்து கொண்டான். மனம் அலை பாய்ந்தது. தட்டு தடுமாறி எண்ணப் பள்ளத்தாக்குகளின் இடுக்குகளில் மாட்டிச் சிந்திச் சிதறியது. சத்தமில்லாமல் மனதிலேயே எண்ணிக் கொண்டான்.

நீரூற்று

குழந்தையை இழந்த அந்தப் பெண் ஓலமிட்டாள். பார்வீஸுக்கு அது வக்கிரமான முறையில் பிரசவ வலியில் ஒரு பெண் கத்துவது போல இருந்த்து. அந்தப் பாவமான பெண் சாவைப் பிரசவித்துக் கொண்டிருந்தாள். அவர் மில்லிஸெண்ட்டிடம் உண்மையைச் சொல்லத்தான் வந்திருந்தார். தேநீர் விடுதியின் படிக்கட்டுகளிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் கதையை அவரால் எழுத முடியாது, ஏனெனில் அரசாங்கம் தண்டிக்கும் என்பது காரணம். கண்காணிப்பாளர்கள் இருந்தார்கள், வலைத்தளங்களை நாள் பூராவும் சலித்து, வெளியிடப்படக் கூடாத செய்திகளைத் தணிக்கை செய்வதற்கு அவர்களுக்கு ஊதியம் தரப்பட்டது. கனவான் மாவ்லியனோவிடமிருந்து அவரை வேலையிலிருந்து நீக்குவதாகச் சொல்லி மிக ஆத்திரமான ஒரு தொலைபேசி அழைப்பு வரும். வசந்தகாலத்துச் சூரிய ஒளியில் ஒரு பூங்காவில் பார்த்த ஒரு காட்சி அவருக்கு நினைவு வந்தது. ஒரு திருமணம். தன் வெள்ளை ஆடையில், படமெடுப்பதற்காக பல கோணங்களில் நின்று கொண்டிருந்த முவ்ஸானா மிகவும் துன்புற்றுத் தெரிகிறாள். அவளுடைய சோகத்தின் காரணமோ இன்னும் இரட்டிப்பாக ஆகி இருந்தது. அவள் மாருஃபை மணக்க விருப்பமற்று இருந்தாள், அவளுடைய அப்பாவோ காணாமல் போய் விட்டிருந்தார். இந்தக் காட்சி பார்வீஸின் மனதை மாற்றியது. அவருடைய நம்பகத் தன்மை அற்ற புத்தி இன்னொரு புதிரான தாவலை நிகழ்த்தியது.

காமத்தில் திளைத்த இரவு

புத்தகத்தை மூடி கட்டிலுக்கடியில் வைத்துவிட்டு சோம்பல் முறித்தான்.தனக்கும் அவர் பேசியதுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பது போன்ற ஒரு பார்வையை வீசிவிட்டு தெருவிலிறங்கி வடக்கு குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.மனம் முழுவதும் ஒருவித பயமும்,விரக்தியும்,கோபமும் காமத்தை விழுங்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தன.இதயத் துடிப்பின் வேகம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு வேகமெடுத்திருந்தது.இடுப்பில் ஒரு குடத்தோடும்,தலையில் ஒரு குடத்தோடும் தெருவிளக்கு மங்கிய வெளிச்சத்தில் தோன்றி மறைந்தாள் தெற்குத்தெரு விஜயா.விளக்கு வெளிச்சத்தில் அவள் கடந்த அந்த நிமிடங்கள் அப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது இருட்டிற்குள் பீடியைப் பற்றவைக்கையில்.

ஒரு கணத் தோற்றம்

எத்தனை கட்டுப்படுத்தினாலும் மனம் இனம் புரியாத எதிர்பார்ப்பில் தவித்தது..அந்த சில நிமிட சந்திப்புக்காய் மனதின் ஓரத்தில் ஒரு விதமான எதிர்பார்ப்பும் ஏக்கமும் படர்ந்தாற் போல் உணர்ந்தது கண்டு எனக்கே கொஞ்சம் விசித்திரமாய் இருந்தது. இன்றோடு இங்கு வந்து இரண்டு மாதமாகிறது.. இந்த நாட்களில் எண்ணிச் சில முறையே வீட்டிற்கு ரங்கு வந்திருக்கிறான்.ஆனால் வந்து சென்ற பிறகும் அவன் அன்பின், அக்கறையின் இருப்பு வீடெங்கும் நிறைந்திருக்கும். நானாக அவனை அழைப்பதில்லை. இன்று லேசான காய்ச்சலில் உடம்பும் மனமும் கொஞ்சம் பலவீனமானது போல இருந்ததால் …

காணாமல் போனவன்

என் தம்பி சதா பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று வீட்டில் இருந்து ஓடிய பிறகு அவன் ஒரு ஹீரோவாக ஆனான். சிறுவயதில் கடைசி பென்ச் நண்பர்களின் சகவாசத்தில் படிக்காமல் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் திரிந்து வந்தான் அவன். “அவிழ்த்து விட்ட கழுதை” “உதவாக்கறை” என்றேல்லாம் பட்டப் பெயர்கள் தாங்கி உலவினான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து விலகி எங்கோ சென்று விட்டான். அவன் காணாமல் போனதும் வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டனர். ஊரெங்கும் அவனைத் தேடி நானும் என் தந்தையாரும் அலைந்தோம். தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தோம். “பையனைக் கரித்து கொட்டியே வீட்டை விட்டு துரத்தியடிச்சுட்டீங்களே!” என்று அம்மா அப்பாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

விசும்பின் துளி

மனைவியின் காது மூக்கு ஓட்டைகள் ஓட்டையாகவே இருக்க தென்னவிலக்கமாறு சீவுகள் காவல்காக்கிறது. தொண்டை ஓட்டையை மூட ஏதாவது ஒரு குச்சி இருந்தால் வயலெல்லாம் எதற்கு? தோடும் மூக்குத்தியும் அடகுவைத்து விதை வாங்கி விதைத்த விதைகால் நிலம் இது. விதை பழுதில்லை வயலும் பழிவாங்கவில்லை. பால் இல்லா மார்பை எத்தனை முறை சப்பினால் என்ன? வயல் பாலில்லா தாய்போல தவித்துக் கிடக்கிறது. குட்டிக்குட்டி பச்சப்பிள்ளைகள் தண்ணீர் இன்றி காய்ந்து சுருள்கின்றது. பாளம் பாளமாய் சூட்டில் வெடிக்கும் வயல் மார்வலியில் கேவும் தாயின் வாய்புண்போல வெடித்துக்கொண்டே போகிறது

தீட்டு

‘இருபத்தொன்று…இருபத்திரெண்டு…இருபத்தி மூன்று..ஊகூம். முடியாது. நகரவே முடியாது. உடல் நடுங்கியது. கம்பை இறுகப் பிடித்துக் கொண்டார். ரொம்பத் தாகமாயிருந்தது. ஒரு சொம்புத் தண்ணீராவது வறண்ட நாக்குக்குக் குடித்துவிட்டு வந்திருக்கலாம். இருபத்தி நான்கு…இருபத்தி ஐந்து…’ கால்கள் பலமே இல்லாமல் நடுங்கின. தள்ளாடினார். கம்பை இறுகப்பற்றியபடி உடல் எடை காலில் தங்காமலிருக்க முயற்சி செய்தார். பிடிமானம் தவறி அப்படியே முன்னால் விழ நடு நெற்றி நங்கென்று தார் ரோட்டில் முட்டியது. இரத்தம் சுற்றுலா வந்த் கூட்டம்போல படர்ந்தது. ‘அப்பாடி. இனி கடைக்குப் போக வேண்டியதில்லை. ஆ….சிகரெட்’. நெஞ்சு நிறைய காற்றை இழுத்து ஊதினார்.

ரயிலுக்கு வெளியே

இரும்பு நாற்றத்துடன் ரயில் மெதுவாக வந்து நின்றது. ரயில் பாகங்கள் உள்ளே விலகி அமையும் ஓசையும், அழுத்தங்களை வெளியிடும் ஓசையும் கேட்டது. டீ வியாபாரிகள் ரயிலருகே சென்று விற்க தொடங்கினார்கள். வழக்கம் போல் என் கண்கள் பெண்களைத் தேடின. என் முன்னிருந்த ரயில் பெட்டியின் ஒரு பகுதியில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று குடும்பங்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பெண்கள் கட்டியிருந்த புடவைகளைப் பார்க்கும் போது எங்கோ கல்யாணத்திற்குச் சென்று திரும்புகிறார்கள் என்று தோன்றியது. குழந்தைகள் கூட முழித்திருந்தார்கள். அவர்களுக்குச் சற்று பின்னே ஒரு இளம் ஜோடி ஒரே படுக்கையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். அவன் ஏதோ வாங்க இறங்கி ஓடினான். அவள் தூக்க விழிகளுடன் ரயில் நிலையத்தைப் பார்த்து கொண்டிருந்தாள். அவள் அழகி. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கும் அது தெரிந்திருக்கும். ஆனால் அவளுக்குத் தெரியுமா அவள் இருக்கையின் நேர் கீழே வெட்டப்பட்ட தலை உருண்டுகிடப்பது?

What a wonderful world

நகரச் சதுக்கத்தைத் தாண்டியபின் மறுபடியும் சைக்கிளில் ஏறி நகர தேவாலயத்தை ஒட்டிய பெரும் கற்கள் பாவித்த தெருக்களில் சற்று வேகமாக மிதித்தோம்.
இரு புறங்களிலும் உயர உயர நூற்றாண்டுகள் தாண்டிய சுவர்களுக்கும் நடுவில் தெருவே குறுகிய கால்வாயாகத் தோன்றியது. எதிரில் இன்னொரு சைக்கிள் வந்தால் கூட உரசும் அபாயக் கால்வாய். ஐரோப்பிய முடுக்கு என்ற வார்த்தை இந்த ஊருக்கு மாறி வந்த போதே தோன்றி இருக்கிறது. அன்று போலவே இன்றும் சிரிப்பு வந்து விட்டது.
தெரு முடிவில் திரும்பி இன்னொரு சற்றே பெரிய கால்வாயில் கலந்தோம்.

ஃபிரைட் ரைஸ்

“போன மாசம் அவன் ஃபிரேண்ட் ஆத்துக்கு விளையாட போனும்னு கொண்டு போய் விட்டுட்டு வந்தேளே, அன்னைக்கு அவா ஆத்துல திடீர்னு ஏதோ சைனீஸ் ஹோட்டலுக்கு போயிருக்கா. இவன் இருந்தான்னு இவனையும் கூட்டீண்டு போயிருக்கா. அவால்லாம் கார்ல போறாளேன்னு இவனும் ஆசப்பட்டு போயிருக்கான். அங்க போயி இவனுக்கும் சாப்ட வாங்கித் தந்திருக்கா..”

கல்லும் நாராகுமே

கிருஷ்ணமூர்த்தி பக்கத்திலேயே நின்று என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து மாலா “உன் மாப்ளே ஒரு வழியா கம்பெனி செலவில எங்களுக்கு ஒரு பெங்களூர் ட்ரிப் அரேஞ்ச் பண்ணிட்டார்ப்பா. நாளைக்குக் கிளம்பி மண்டே திரும்பி வந்துடுவோம்” என்றாள். கிருஷ்ணமூர்த்தி “ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டார். “ஆமா, அவருக்கு மட்டும்தான் ட்ராவல், ஹோட்டல் எல்லாம் ஏற்பாடு பண்ணுவோம், ஃபேமிலிக்கே பண்ணமாட்டோம்னு சொன்னாளாம். இவர் ஏதோ பேசி எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாராம்” என்றாள். “அதானே! ரமேஷா கொக்கா? மனுஷன யாரும் பேச்சில ஜெயிச்சுக்க முடியாது. கல்லுல நார் உரிச்சுடுவார்!” என்று வியந்துகொண்டார். மாலா “அது என்னவோ உண்மைதான். பேசிப் பேசியே எல்லாரையும் கரச்சுடுவார்” என்றாள்.

ஊமை வலிகள்

இதனால் அடிக்கடி அவனுக்கு வயிற்றில் வலி வந்துவிடுகிறது. பாமா தியேட்டர் ரோட்டில் உள்ள இரண்டாவது சந்தில் ஒரு பாட்டி தொக்கம் எடுத்துவிடும். எலும்புத் துண்டுகளும், முடியுமாய் வந்து விழும். முடிக்கொத்தைப் பார்க்க முதலில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அது ஒரு பெண் தலைவாரி முடித்தவுடன் சுருட்டிப்போடும் முடிகள் அளவுக்கு இருந்தது. ஒருமுடியானாலும் தொண்டையில் தட்டிவிடுமே எப்படி இவ்வளவு முடி வயிற்றுக்குள் போனது என்று ஆச்சரியம். எப்படியோ வயிற்றுவலி நின்றுபோனதால் அந்தப் பாட்டியை நம்பினான்.

மனிதக் குணம்

சிதம்பரம் அய்யாதான் அந்த அரண்மனையின் உரிமையாளர். ஆமாம், அதை ஹோட்டல் என்றோ, விடுதி அல்லது ரிஸார்ட் என்றோ சொல்லி கொச்சைப்படுத்த முடியாது. பெரிய கல்யாண மண்டபம் மாதிரி. அதில் தங்கி இருந்தவர்களும், சுற்றிப் பார்க்க வருபவர்களும், சாப்பிடுபவர்களும், எப்போதும் கல்யாணக் களைதான். தன்னுடைய பூர்வீக வீட்டை சுற்றுலா ஹெரிடேஜ் ஹோம் என்று ஆக்கி இருந்தார். காம்பவுண்டுக்குள் நுழையும் போதே அசந்து நிற்க வைக்கும் முகப்பு. பூவாக தண்ணீர் சிந்தும் ஃபௌண்டன், பெரிய அலங்கார மரங்கள், வாசல் வராந்தாவில் ஏறியவுடன் நீள பெஞ்சு – சுமார் இருபதடி இருக்கும், ஒரே மரப் பலகையில் செய்தது, பளபள என்று அமர அழைத்தது.

பிரகாஷை காணவில்லையாம்!

காலையில் வேலை மும்மரத்தில் சுஜாதாவிடம் பேசாமலேயே வந்து விட்டேன். இப்பொழுது சீக்கிரமாக வேலைகளை முடித்துக்கொண்டு, சலபதியின் வீட்டுக்குச் சென்று, பிரகாஷ் வருவதாகச் சொன்னால் என்னுடன் அழைத்து வரலாம் என்று நினைத்தேன். அவன் வராவிட்டாலும் காலையில் போனது போல் கடமைக்கு விசாரிக்காமல் கொஞ்சம் சாவகாசமாக உட்கார்ந்து அன்பாக நாலு வார்த்தைகள் பேச வேண்டும் என்று தோன்றியது.

திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும்

இவர்கள் அல்லாமல் நடைமேடைக்கான நிரந்தரக் கதாபாத்திரங்கள் சிலர் ஒவ்வொரு நடைமேடையிலும் டீ,காபி, இட்லி, வடை விற்றுக் கொண்டும், மூட்டை இறக்கி ஏற்றிக் கொண்டும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடைமேடைக்கு அதிகாரப்பூர்வமான சொந்தக்காரர்கள். இவர்களும் அல்லாமல் வெறும் அனுபவப் பாத்தியதையை மட்டுமே நம்பி நடைமேடைகளில் ஒதுங்கி, கண்களுக்குப் புலப்படாமல் வாழும் நடைமேடை மனிதர்களும் எல்லா நடைமேடைகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே பிச்சைக்காரர்கள் இல்லை. இவர்களில் ஒரு சிலர் வாழ்வில் ஏதோ ஒரு ரயிலில் இருந்து இறங்கி மற்றொரு ரயிலுக்கு மாறுவதற்காக இந்த நடைமேடைக்கு வந்தவர்கள் தான்.

ரெகோ

[ரெகோ] யோசனையாக அரியணையின் மேல் கை வைத்து நின்றான். பின் மெல்லத் திரும்பி நடந்து அந்த மெல்லிய இரும்புத் திரையை விலக்கிக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான். அவனுக்கு யோசிக்க அவகாசமும் தனிமையும் தேவையாக இருந்தது.
வெளியே வந்தவனை மனைவி முறைத்தாள். வெகு நேரமாகக் கதவைத் தட்டியபடியே இருப்பதாகவும் அவன் கதவைத் திறக்காமல் எரிச்சல் மூட்டியதாகவும் சொல்லி முகத்தை சுருக்கினாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். தலை குனிந்திருந்தது. பின் அவன் கையில் ஒரு வயர் கூடையைத் திணித்து ஒரு தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் கொஞ்சமும் அவள் அம்மாவுக்கு கால் விரலிடுக்குகளில் அரிப்பிருப்பதால் சைபாலும் வாங்கி வரச் சொல்லிப் பணித்தாள்.

ரஞ்சனி

நீலக்குழல் விளக்கொளி அறையெங்கும் பரவி இரவின் முழுமையை ரஞ்சனியின் மனதில் நிலைத்தது.கதவில் தொங்கிய மாவிலைகள் அசையும் நிழலையேப் பார்த்திருந்தாள். எழுந்து வெளியே போகமல் ஏன் இப்படியே இருக்கிறேனென்று எண்ணிக் கொள்கிறாள். சீனுவின் சீரான மூச்சொலி, குழந்தைகள் புரண்டு படுக்கும் அசைவு எல்லாவற்றையும் உணரமுடிகிறது. ஆனால் அவள் அப்பெரும் வெளியில் நிற்கிறாள். வெள்ளிநிறத்தில் மின்னும் மணலும், நிலவொளியில் அசைந்தோடும் தண்ணீரின் அசைவும், குளிர் வாடையும்…

காண்பதும், கேட்பதும்

“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்கிறார்கள். இந்த விசாரிப்பது என்கிற விஷயம்தான் பிரச்னை. அதற்காக, காண்பது, கேட்பது ஆகிய விஷயங்களில் பிரச்னை இல்லை என்று இல்லை. இந்த விசாரிப்பதில் யாரை விசாரிப்பது, என்ன விசாரிப்பது, எப்படி விசாரிப்பது என்று ஆரம்பத்திலேயே விவகாரம் துவங்கி விடும்.
வெளி விஷயங்களுக்கு இந்த விசாரிப்பு ஓரளவு உதவலாம். உள் விஷயங்களுக்கு நாம் யார் யாரையோ விசாரிப்பது பிரயோசனம் அற்றது. நாம் நம்மையேதான் விசாரிக்க வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து விவகாரங்களிலும், விஷயங்களிலும் சந்தேகம் இருந்தாலும் அவை அனைத்தும் சேர்ந்தும் நம் மீது நமக்கு இருக்கும் சந்தேகத்துக்கு இணையாக மாட்டா. உங்களைப் பற்றித் தெரியாது. என்னளவில் சொல்கிறேன்.
வெளி விஷயங்கள் பற்றி விசாரிப்பதில் அவை பற்றி கிட்டத் தட்ட தெரிந்து கொள்ளலாம்.
கோவையிலிருந்து

இருத்தல்

கீழ்வீட்டைக் கடக்கும் போது சின்னதாய் ஒரு தயக்கம்; ஸ்ரீலஸ்ரீவெங்கடகிருஷ்ணனை தரிசித்து விடக் கூடாது; இல்லையானால் மூன்றுமாத வாடகை பாக்கியிலிருந்து, பாகவதம், ஞானம் என்று போய்விடுவார். வீட்டுக்காரர் என்பதற்காக அவர் சொல்லும் “நேதி நேதி “ – இது இல்லை இது இல்லை- என தேடும் வேத விசாரணைகளில் மாட்டிக் கொள்வது அவனுக்கு உதறலாய் இருந்தது. ஆனால் இன்று அவரிடம் மாட்டிக்கொள்வது ஓரளவு உறுதியாகி விட்டிருந்தது. வாசலிலேயே உட்கார்ந்திருந்தார். பட்டையாய் இருந்த சந்தன கீற்றின் நடுவே குங்குமம் வைத்திருந்தார். பஞ்சகச்சம் இல்லாமல் வெள்ளை வேட்டியை நீளமாக உடுத்தி இருந்தார். வெற்றிலையை குதப்பிய வாயை ஊதுவது போல் குவித்து மென்று கொண்டே பேசிக் கொண்டிருந்தார். இடை இடையே ஜீவன், ஆத்மா, மனம் என்று பேசுவது கேட்டது. பக்கத்தில் வேறு யாரோ ஒருவர் உட்கார்ந்து …

சித்தன் போக்கு

“மலையத் தோண்டியா…அதுவும் இந்த மலையையா…” என்று சத்தமா சிரிக்க ஆரம்பிச்சார் அவர். எங்களுக்கெல்லாம் ஒரே எரிச்சலாப் போச்சு. “எதுக்குய்யா இப்படி சிரிக்கிறீங்க” அப்படின்னு என்னோட அசிஸ்டெண்ட் கேட்டான். சிரிப்பை நிறுத்தி எங்களை கூர்ந்து பார்த்த அவர், “கோரக்கர் மச்சமுனின்னு அம்புட்டு பேரு வந்து போற மலையை நீங்க தோண்டி ஆராய்ச்சி பண்ணப் போறீகளோ” என்று ஒருவித கேலியுடன் எங்களை பார்த்து சொன்னபடி பெருங்குரலில் பாட ஆரம்பிச்சார். அந்த அத்துவான பிரதேசத்துல, கொட்டுற மழையில, அந்த பூமிலேந்து குப்புன்னு கிளம்புற வாசத்துல, அவரோட குரலும் சேர்ந்து அப்படியே என்னமோ மயக்கமா கிறங்கடிச்சுச்சு…

நிஜத்தின் நிழல்

“இப்போது நான் சுகப்படும்படியாக சில காரியங்களை நீ செய்யப் போகிறாய்,” என்று கூறியபடி அவன் உதடுகள் அவள் உதடுகளை நோக்கி இறங்கின. கொடுங்கனவொன்றை அழிக்க முயற்சிப்பது போல் கண்களை இறுக்க மூடியிருந்தாள், பற்கள் கீழுதட்டைக் கவ்வியிருந்தன. முகத்தில் வழிந்த வியர்வையை அவன் நக்கியதால் ஏற்பட்ட அருவெறுப்பின் உந்துதலால் முட்டியை சட்டென உயர்த்தி அவன் குறியை பலம் கொண்ட மட்டும் தாக்கினாள். “பிட்ச்” என்று அலறியபடி அவள் உடலிலிருந்து சரிந்து வலப்பக்கம் உருண்டான்.

ஹாட்டின் ராணி

படுத்துக் கிடந்த பிர்ஜூ ஆட்டுக்கிடாயைப் பிரம்பால் அடித்தான். பிர்ஜூவின் அம்மாவின் கோபம் அவன் பக்கம் திரும்பியது. எழுந்து போய் அதே பிரம்பினால் அவனை நையப் புடைத்து அவன் தலையில் ஏறி இருக்கும் பேயை விரட்டலாமா என்று எண்ணினாள். ஆனால், இதற்குள்ளாக வேப்பமரத்தடியிலே தண்ணீர் எடுக்க வந்த பெண்களின் பேச்சரவம் கேட்டு பிர்ஜூவை அடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவனைப் பார்த்துச் சொன்னாள்-“இரு, இரு! உங்கப்பன் உன்னைக் கைமிஞ்ச வச்சுட்டாரு, யாரைப் பார்த்தாலும் கைமிஞ்சறே! இரு பார்த்துக்குறேன்!”

ஒரு எக்ஸும் ஒரு ஒய்யும்

இதுபோலச் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த சிந்தனைக் கிளியின் கழுத்தை யாரோ சொலுக்கென்று திருப்பினார்கள். அவர் தான் தலையைத் திருப்பி வேகமாகக் கீழே அமிழ்த்து வைத்தார். லேசாக வலித்தது.

முழுக்கு

”சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக் குடிச்சிட்டு கெளம்பறோம். ஆறரை மணிக்கெல்லாம் சமயபுரம். அங்கே ஆத்தாளக் கும்பிடணும். அதுக்கப்புறம் சீரங்கம். அங்க பெருமாளச் சேவிக்கறோம். ராத்திரி அங்கியே தங்கிட்டு காலைல திண்டுக்கல் போறோம்”
“இல்ல கோவிந்து, அவங்க ரெண்டு பேரும்தான் வராங்களே?”
கோவிந்தன் சிரித்துக் கொண்டே “இருந்தாலும் ஒரு எழுத்தாளரு, அதுவும் இலக்கியவாதி கூட வந்தா…

காரியாலயம்

வந்திறங்கிய முதல் நாள் வாட்டமாக ஒரு அறை தேடி அடைந்து கொள்ளவே சரியாகப் போய்விட்டது. மறுநாள் மதியமே முகூர்த்தம். மெட்ரோ வரைபடம் ஒன்றை வைத்துக் கொண்டு சுலபமாகக் காரியாலயத்தை அடைந்து விட்டேன். சரியாக என் உள்ளூர் நண்பரும் அவரின் குழுவோடு வந்து விட்டார். காரியாலய வாசலில் அகழி முதலைகளாகத் துப்பாக்கிகளோடு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளிப் பக்கத்திலேயே கோவில் வாசலில் தேங்காய் பொறுக்கும் கூட்டம் போல ஒவ்வொரு செய்திச் சேனலும் ஆண்டெனா வைத்த வண்டி ஒன்றோடு வரிசையாக நின்று கொண்டிருந்தது. பல முக்கிய இலாகாக்கள் இயங்கும் காரியாலயம் என்றாலும் வெளியில் இருந்து பார்க்க ரொம்பவே சாதுவாக இருந்தது. என் நண்பர் ஒரு துப்பாக்கி ஏந்திய முதலையிடம் …

தேம்பும் சுனைக்குச் செல்லும் சாலை – லி யூவான்

மலைகளின் வழி தொடரும், கோபி பாலைவனத்தின் ஏறி இறங்கும் நிலப்பரப்பின் ஊடே செல்லும், குண்டும் குழியுமாய் வளைந்து நீளும் அந்தப் பாதை முழுதும்; காலங்கள்தோறும் விரியும் அந்தச் சாலை; பண்டை தாகங்களோடும் துயரங்களோடும் ஊடுருவிச் செல்லும் பாதை; காலத்தின் மந்தகதியோடும் அச்சத்தின் ஆழத்துடனும் சுயமரியாதையின் ஆழத்துடனும் செல்லும் அந்தப் பாதை, கைவிடப்பட்டது. பாலைவெளியில் அது யாருமற்று திறந்து கிடக்கிறது, முடிவற்ற பசியாலும் தாகத்தாலும் நிறைந்து கிடக்கிறது.

ஆத்ம சாட்சி

கறுத்துப்போன அலுமினிய ஏனத்தை அடுப்பில் ஏற்றி விட்டு கணபத் அடுப்பை எரிய விட்டான். பிறகு உருளைக்கிழங்கை உரிக்கலானான். உருளைக்கிழங்கு மசியலும், சுடச்சுடச்சோறும் கணபத்தைப் பொறுத்தவரையிலும் இதைவிட மேலான பதார்த்தம் உலகில் வேறு எதுவுமே இல்லை. குஸூமி சில நேரங்களில் அவனை ‘சோற்றுப் பண்டாரம்’ என்று கேலி செய்வாள்.

குணமும் குடிமையும் குற்றமும்

ஒரே முன் பல் மட்டும் தெரிய “அந்த அழகு மலை பசங்க கூட இன்னி உன்னப் பார்த்தேன்? ” என்று நான் பக்கத்தில் சைக்கிளை வைத்துக்கொண்டு நிற்கும் போதே பாஸ்கியை நோக்கி உறுமிய குரலை ஒரு காலத்தில் கேட்டு கேட்டுப் பழகிவிட்டு இப்போது, “நல்லா இருக்கிங்களா தம்பி?” என்ற குரலைக் கேட்கும் போது அத்தனை சங்கடமாக உணர்ந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டேன். நன்கு குழைந்த சாதம் போலிருந்தது.

அளவாய் வேண்டுதல்

ஒன்றிரண்டு வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை ஊரே சேர்ந்து “எங்கள் கிராமத்துக்கு சர்க்கார் நல்ல ரோடு போட்டுத்தர வேண்டும்” என எழுதித் தொங்கவிட்டியிருந்தார்கள். அடுத்து ஒராண்டுகள் பார்த்துவிட்டு அது நடக்காது என ஊரில் உள்ள அனைத்து சாதி மக்களும் “சாலை மறிப்பு போராட்டம்” செய்தார்கள். இப்போராட்டம் ஊடகம் முழுக்க பரவ அது செய்தித்தாள், டி.வி என வந்துவிட்டது. அதற்க்கப்புறம் நல்ல தார்சாலை போட்டுக்கொடுக்கப்பட்டது. மக்களில் பல பேர் அளவு ஆத்தாவை நம்பவில்லை என்றாலும், சில பேர் இவ்வாறு பேசிக்கொண்டார்கள் “என்ன தான், ஆத்தாவால, ரோடு போட்டுக் கொடுக்க முடியலைன்னாலும், ஊர்ல உள்ள எல்லா சாதி மக்களையும் ஒண்ணா சேர்த்து போராட வைச்சிருக்கா. அது போதும்.”

புட்டுக்குழல்

“அப்பிடி எந்தா செலவு”
“நல்லா கேட்டிய.நா வாரேன்னு தெரிஞ்சாலே என் வீட்டுக்காரிக்கு மொதல்ல தெங்காசிக்கு போயி சாப்புடணும்.படம் பாக்கணும்.பெறவு பஜார்ல போயி சப்பு சவர்னு அள்ளிக் கெட்டிக்கிடுவா.வீட்டுக்கு வந்ததும் சீட்டு,வாரவட்டி,மஞ்ச மசால் எல்லாம் முடிஞ்சதும் மிச்சம் இருக்கத சரக்கெடுக்க கொண்டு வரலாம்னு பாத்தா ஊர்ல கெடக்க அவ்ள படுக்காளிப்பயலுவளும் குடிக்கணும்பானுவ.வேங்கி குடுக்காம இருக்க முடியுமா? பெறவு சரக்கெடுக்க எவன்ட்டயாது கடந்தான் வாங்கணும்.நல்ல வேளக்கி இந்ததடவ கொஞ்சம் பழய பித்தள கெடந்துது”

நினைவுகளால் ஆனது

தன் பெண் வீட்டில் தங்கியிருப்பவர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். ஊர்க் கதைகள் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் வீட்டை விலைக்கு வாங்கிய பாய் பற்றிக் குறிப்பிட்டு ஏதொ சொல்ல, வீடு, இரவில் சப்தமின்றி அறைக்குள் புகும் சர்ப்பம் போல் எங்கள் பேச்சினூடே நுழைந்து விட்டது. “எங்காத்தைப் போய் பார்த்தேளா” என்று அப்பா சிரித்துக் கொண்டே கேட்டார். அந்தச் சிரிப்பு அவரைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண, சில நொடி மௌனத்தை நிரப்ப கேட்கப்பட்ட கேள்வி மட்டுமே என்று அறிவித்தது.

பந்தயக்குதிரை

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் நுழையும் போது மணி நான்கு. உடனே பேருந்து கிடைத்தால் எப்படியும் விடிவதற்குள் ஊருக்குப் போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டான். எதிர்பார்த்தது போல, பேருந்து நிலையத்தில் எந்தவித அசம்பாவிதத்திற்கான அறிகுறியும் இல்லை. தொலைக்காட்சி செய்தி சேனல்களின் அசுர வாய்க்கு எப்போதும் பெருந்தீனி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. சிறு சலசலப்பைக் கூட பூதாகரமாக்கி பிரளயம் போல் பிரகடனப்படுத்தி விடுகின்றனர். அதையொட்டிய வதந்திகளுக்கு கைகால் முளைத்து ஊரெங்கும் பரவி விடுகின்றன.

கிடா வெட்டு

பண்டிகைக் காலங்களில் ஆட்டுக்கறியோ, மாட்டுக்கறியோ, கோழிக்கறியோ கண்டிப்பாக வீட்டில் இருக்கும்.ஒன்றுமே இல்லையெனில் அப்பா மாலையில் வலையுடன் கிளம்பிப்போய் அடுத்த நாள் காலையில் காடை,கௌதாரி மற்றும் காட்டுக் கோழிகளைப் பிடித்துக்கொண்டு வருவார். சில சமயம் கறி மிகும் போது உப்புக் கண்டம் போட்டு, தினம் கொஞ்சமாக பொறித்துத்தின்றதும் உண்டு. இப்பொழுது அப்பா இல்லை. மாடுகள் இல்லை.

ஷ்யாம லீலா

விலை: லிட்டருக்கு 23 ருபாய். மார்க்கெட் விலை – 18 ரூபாய். வாங்கும் அளவு மாதம் 5 லட்சம் லிட்டர். நிறுவனத்துக்கு நஷ்டம் வருடம் : 3 கோடி. (அன்று சென்னை கோட்டூர்புரத்தில், ஒரு கிரவுண்ட் 15 லட்சம் விலை). மும்பை நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார். அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து, உங்களிடம் இருந்து வாங்கும் மெழுகெண்ணெயின் கொள்முதல் விலை ரூ.18 என நிர்ணயிக்கப் படுகிறது.
இருக்கையில் இருந்து குதித்தே விட்டேன். “சார், ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது”, என்று பதறினேன்.