என் மகன் ஆதித்யா பாடிய கல்யாணி நினைவுக்கு வருகிறது. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். “தல்லி நின்னு நேர” என்கிற கல்யாணி ராகப் பாட்டை அநாயாசமாகப் பாடினான். அப்போதுதான் அப்பாடலை முதன் முதலில் கேட்கிறேன். அவன் அந்தப் பாட்டை யார் பாடிக் கேட்டான் எப்போது கற்றுக் கொண்டான் என்பதெல்லாம் எனக்குப் புரியாத புதிர்தான் இன்று வரை. அந்தக் கச்சேரியில் அவன் பாடிய பாடல்களை அதற்கு முன் நான் கேட்டதில்லை. அப்போதெல்லாம் ‘அவன் பாடும்போது அந்தப் பாட்டு உண்மையிலேயே வாக்கேயக்காரர்களால் பாடல் பெற்றதா அல்லது இவன் இட்டுக் கட்டிப் பாடுகிறானா’ என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. இவனுடைய பாடல் தொகுப்பைச் சொல்ல வேண்டுமென்றால் இவன் எப்படி இவற்றைக் கற்றுக் கொண்டான் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன் இவன் வளர்ந்த விதத்தைச் சொல்ல வேண்டும். அதற்கு இவன் பிறந்த சூழ்நிலையைச் சொல்ல வேண்டும்.
Category: கட்டுரை
தேனீக்களும் நம்மைப் போன்றவையே
முழு ஒப்புதல்: ட்ரோன் ஈயின் ஆண்குறி முனை பிய்த்துக் கொண்டு ராணித் தேனீயின் யோனிக்குள் வீழ்கிறது. மனித இனத்தில் இவ்வாறு நிகழ்வதில்லை. இருப்பினும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளன. கலவிக்கென மட்டுமே தயாராகவிருந்து,வேறு வேலை வெட்டியேதுமின்றி, டீவி பார்த்துக்கொண்டு, வானைத் தொடும் உச்சக்கணத்திற்காக காத்திருக்கும் ஒரு சில ஆண்களைப் போலவே. கலவிக்குப் பிறகு ஆண் தேனீக்கள் இறந்து போகின்றன. (ஆண்குறி விபத்து பற்றி மேற்கூறியுள்ளதைப் பாருங்கள்).
மேலும் குடும்பத்தின் மீதான விசுவாசத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்! தாய் தேனீயின் ஆர்ப்பாட்டமான அந்த ஒரு இரவுக்குப் பிறகு, காலனி மொத்தமும் அவளை ராஜ மரியாதையோடு நடத்தும். சந்தேகமேயின்றி, நம்மில் பலர் தம் தாயார்களை நடத்துவதைக் காட்டிலும் சிறப்பாகவே கவனிக்கும்.
மகரந்தம்
1. அச்சுப் பத்திரிகைகளின் அந்திம காலமா இது?
2. போக்குவரத்துச் சந்தடியால் நரம்பு இழி நோய் வருமா?
3. காற்றாலை மேடைகளின் அதிசய உடன் விளைவுகள்
சமூக ஊடகங்களும் அநாதைகளாக்கும் ஆர்ப்பாட்டங்களும்
2010ஆம் ஆண்டு. துனிசியாவில் மொகமது பவசிசி என்ற சாலை வியாபாரி கடன் வாங்கிக் கொள்முதல் செய்த பொருட்களுடன், வழக்கமாய் வியாபாரம் செய்யும் இடத்துக்கு வந்தார். காவல்துறைக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் லஞ்சம் கொடுக்க அன்று அவரிடம் பணமிருக்கவில்லை. இதுவே அவரது விதியைத் தீர்மானித்தது. அவரது கைவண்டியில் இருந்த சாமான்கள் காவல் துறையினரால் வீதியில் வீசப்பட்டன, அவரது எடைபார்க்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தாக்கப்பட்டார், காறித் துப்பி அவமானப்படுத்தப்பட்டார். அதன் பின் தன் எடை பார்க்கும் கருவியை திரும்பப் பெற அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. அரசு அலுவலர்கள் யாரும் அவரைப் பார்க்கவோ, அவரது புகாருக்கு செவி சாய்க்கவோ தயாராக இல்லை. இதனால் மனமொடிந்த மொகமது அரசு அலுவலகம் முன், சாலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறந்தார். அரபிய வசந்தத்தின் முதல் பொறி அது.
குரங்கில் இருந்து பிறந்து…
படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம்…
நிலாக்காலம் – முதுதந்தை கி.ராஜநாராயணன் அவர்களை வணங்கி..
இந்த இடத்தில்தான் கி.ரா. வின் கதைகளுக்கான தேவை இன்னும் இருக்கிறது. என்றும் தேவைப்படும் வாழ்வின் அடிப்படைகளைப் பேசுதல் இவற்றின் செறிவு. பெரிய நெருக்கடிகள் இல்லாததும், இலக்குகள் அற்றதும், எல்லா லட்சியவாதச் செயல்பாடுகளும் அபத்தமாகத் தெரிவதுமான காலம் என்று சொல்லப்படும் சமகாலத்தில்தான் இலக்கியம் தன் அத்தனை வலுவான கரங்களாலும் மானுடத்தைத் தழுவி ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை அதிகமிருக்கிறது.
வாசிப்பனுபவம் – ஆரோக்ய நிகேதனம்
மஞ்சரியை திருமணம் செய்யும் கனவிலிருந்த ஜீவன் உடைந்துபோகிறார். அவர் கவனம் தந்தையிடம் பரம்பரை வைத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் திரும்புகிறது. அவருக்கு மஞ்சரியுடன் மணம் குறித்திருந்த நாளில், ஆத்தர் அவருக்கு மனைவியாகிறாள். ஆத்தருக்கு, மஞ்சரியைப் பற்றியும் ஜீவனின் காதலைப் பற்றியும் தெரியும்; அதனால் ஜீவனிடமிருந்து தனக்கு என்றைக்கும் தூய்மையான அன்பு கிடைக்கப்போவதில்லை என்று அவளாகவே முடிவுசெய்து கொள்கிறாள்.
உடல் மிகு தடிப்பு – காரணங்கள், விளைவுகள்
நான் சென்னையில் வளர்ந்த சமயம், குளிர் சாதனப் பெட்டி உள்ள வீடுகள் மிகக் குறைவே. அதனால், நினைத்தபோது எல்லாம்- பசித்தபோது அல்ல- உணவோ சிற்றுண்டி வகைகளோ கிடைக்காது. சுகாதாரம் பற்றாததால், வெளியுணவுகளைப் பெரும்பான்மையோர் தவிர்த்தனர். பெரிய உணவகங்களில் உண்ணும் பழக்கம் பணப்புழக்கம் அதிகமாக உள்ள ஒரு சிலரிடமே இருந்தது. உடல் வீக்கமும் பண வீக்கமும் சேர்ந்தே இருந்தாலும், அவ்வாறு இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்றைய சூழ்நிலையைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம்
ஒரு நொடிச் சிந்தனை
இந்த எச்சரிக்கை உணர்வு, முதலில் தயக்கமாக உள்ளிருந்தது. தகவல்களை உள்வாங்கும்போது அவை வெளிவராது, ‘ஏதோ சரியில்லை’ என்ற உணர்வாக உள்ளே பரிணமித்து, பய உணர்வாகவே நின்றிருக்கும். தகவல்கள் அவற்றிற்குச் சாதகமாக இருப்பினும், அதிக உறுதியுடன் முடிவெடுக்க முனையாதிருக்கும். தருக்க நிலையில் வெளிக்காட்டப்படாத உணர்வு பூர்வமான அசொளகரிய நிலையாகவே இருப்பதால், பொதுவெளியில் தங்களது பய உணர்வைப் பகிர்ந்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள்.
விஞ்ஞான வளர்ச்சியினால் உங்கள் வேலை போகுமா?
முதலில் நடக்கக்கூடிய சமுதாய மாற்றம், தானோட்டிக் கார்களால், வாகனம் ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம். ஆண்டு முழுவதும் எளிதாகப் பயணிக்கவல்ல பகுதிகளில் இவ்வகைச் சரக்குப் போக்குவரத்து தானோட்டி லாரிகளுக்கு மாறும் வாய்ப்புள்ளது, இதே பகுதிகளில், ஊபர் மற்றும் சில டாக்ஸிச் சேவைகளும் தானோட்டிக் கார்களுக்கு மாறலாம். அரசாங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள் என்று மிகவும் சிக்கலானப் பிரச்னையாக, இது மாறலாம். லாரி நிறுவனங்கள் மற்றும் ஊபர் போன்ற அமைப்புகளுக்கு, வாகனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சரியான மேலாண்மையுடன், ஒவ்வொரு மணி நேரமும் காசு பண்ணலாம். தொழிலாளர்க் கொந்தளிப்பு இதனால், பல வருடங்கள் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது. தானோட்டி வாகனங்களால், நிறைய லாபம் இருப்பதால்,
பாலர் , இளம்பிராயத்தினரின் உறக்கமும் உறக்கமின்மையும்
6 மணிக்கும் குறைவான அளவு உறக்கமுள்ளவர்களிடையே 8 மணி நேர உறக்கத்தையுடையவர்களோடு ஒப்பிடும்போது அகால மரணத்தை தழுவும் ஆபத்து 13 சதவிகிதம் அதிகமாக உள்ளது..உறக்கம் குறைவாக உள்ளவர்களினால் 40,000த்திற்கும் மேலான சாலை விபத்துகள் நிகழ்கின்றன.இதனால் வருடந்தோறும் 1,500 பேர் உயிரிழக்கிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல் சரியான அளவு உறக்கம் கொள்வதை சிறுவயதிலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒழுக்கக் கட்டுப்பாட்டில்சேர்ந்த ஒன்று. சரியான அளவு உறக்கம் கொள்வதை சிறு வயதிலேயே பழக்கிக் கொண்டு விட்டால் பெரியவர்களான பின் உறக்கப் பற்றா குறையையும் அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றே நான் நம்புகிறேன். அதனால்தான் இக்கட்டுரை சிறுவயதினரிடையே உறக்கத்தின் அருமையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
குறிப்பிற் குறிப்புணர்வார்
தமிழ் நிலத்தின் வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ; இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது? எப்படி அடையாளப்படுத்துவது? நண்பர் சா.பாலுசாமி, நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது. தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி : “சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ ….. வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச் (இந்திய) ஒழுங்கமைவு” என முன்வைக்கும் குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.
குளக்கரை
உலகுக்கு அற போதனை செய்வதில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சிறுவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தடையேதும் இல்லையாம். 13, 14 வயதினர் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். அதுவும் சில நேரம் 14 வயதுப் பெண்கள் அவர்கள் வயதைப் போல இரட்டை மடங்கு மூத்த ஆண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்கிறார்களாம். அதோடு முடிந்ததா கதை, ஒரு (வயதால் மூத்த) ஆண், சிறுமியை வன்புணர்வு செய்து அவள் கர்ப்பமானால், அவளை அந்த ஆண் திருமணம் செய்து கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம். இதைப் பற்றிப் பலமான விவாதங்கள் சட்ட சபைகளில் சில மாநிலங்களில் நடந்திருக்கின்றன. கிருஸ்தவம் இந்தியாவில் மேலோங்கி வரும் இந்நாளில் இந்து சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சிக்க அவர்களுக்குப் பிரச்சாரத்துக்கு நிதி உதவியைக் கொட்டும் நாடுகளில் அமெரிக்கா ஒன்று. இப்படி ஒரு மாநிலமான டெக்சாஸில் மட்டும் கடந்த 14 வருடங்களில் 40,000 சிறு பிராயத்தினர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தேறேன் யானினி
அதிர்ச்சியின் அடுத்த நிலை , தற்காப்பிற்காக தாக்குதல், அல்லது தப்பியோடுதல். இரண்டும் கிடைக்காத நிலையில் , மூளை தடுமாற, அது அமிக்டெலாவின் ஆளுமையிலேயே இருப்பதால், இயலாமை, மற்றொரு உணர்வின் வடிவெடுக்கிறது. கோபம். “எனக்கு ஏன் இந்த நிலை?” என்ற கோபம், வேலையை விட்டுப் போகச் சொல்லப்பட்ட இளைஞனை, “இப்படி முடிவெடுத்த அந்த மேனேஜரை… மவனே, போட்டுத் தள்ளணும்” என்றோ “ போர்க்கொடி பிடிக்கிறேன்” என்றோ பேசவும் இயங்கவும் செய்ய வைக்கிறது. அதன் விளைவுகள் எப்படியிருப்பினும், தோற்றுவாய் கோபம் , அதன் முன்னான அதிர்ச்சி. சங்கரி “அந்தக் கடவுளுக்கு ஈவு இரக்கமே கிடையாதா?” என்கிறாள். இந்த உணர்வுக் கொந்தளிப்பு நிலை 20 நிமிடங்கள் நீடிக்கலாம். பெரும்பாலும் 10 நிமிடங்களில் மூளையின் தருக்கப்பகுதி தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிடும். அமிக்டெலா, கொந்தளிக்க வைத்து, கற்கால மனிதனை ஓட வைத்த நிம்மதியில், அடங்கிவிடும்.
தணிக்கைமுறை எப்படி வேலை செய்கிறது
எந்த எதிர்ப்பும் இல்லாமல் தம்மைத் தாமே தணிக்கை செய்து கொள்பவர்கள் பல வகைப்பட்ட அறச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் எப்போதுமே எதற்கும் பலியானதில்லை. அவ்வப்போது கண்ணீரைக் துடைத்துக் கொள்வது போல் நாடகமாடினாலும் எப்போதும் பலியாகவும் மாட்டார்கள். அவர்கள் தம் அடிமைத்தனத்தை ஒவ்வொரு முறை வெளிப்படுத்தும்போதும் சர்வாதிகாரிகளின் இதயத்தைக் குளிர்விக்கிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீமை செய்கிறார்கள். முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொள்பவர்களின் நிலைப்பாடு காலப்போக்கில் மக்களிடையே பரவுகிறது. இதுவே நம் சமூகம் அற வீழ்ச்சி அடையவும் அடிப்படை காரணமாகிறது.
உப்பும் உடல் நீரும்
உணவில் உப்பு அதிகரித்தால் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பது உண்மையானாலும், இது அருந்திய நீரின் அளவு உடலில் அதிகரித்தலாலும் இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் நினைவிற் கொண்டால் ரத்த அழுத்த மாத்திரையை அதிகரிப்பதற்கு பதிலாக இந்த நீரை சிறுநீரகங்கள் மூலமாக வெளியேற்றும் மாத்திரையை அதிகரிக்க இயலும். மேற்சொன்ன எனது மருத்துவ நண்பரின் ரத்த அழுத்தத்தைக் குறைத்தது நீரையும் உப்பையும் சேர்த்து வெளியேற்றும் மருந்தேயாகும் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். நீர் வீக்கத்தை தடுக்க வைத்தியர்கள் பிணியாளர்களின் தினசரி எடை அதிகரிப்பு, ஒரு கிலோவிற்கு மேல் சென்றால் நீரை வெளியேற்றும் மருந்தை அதிகரிக்கச் சொல்வது வழக்கமாய் உள்ளது. இது சிறந்த நிவாரணம். ஏனென்றால் அதிக அளவு உப்பு உணவில் சேர்ப்பது தொடர்ந்து நீடித்தால், இரண்டாவது வாரத்தில் எடை குறைய வாய்ப்பு இருப்பதால் அது நீர் வீக்கம் அதிகரித்திருப்பதை மறைத்து விடலாம்.
ஐபிஎல் -10 : க்ரிக்கெட் கோலாகலம்
200, 230 என்றெல்லாம் அணிகளின் ஸ்கோர்கள் தவ்விய கதைகளைப் பார்த்தால் போதுமா? நூறுக்கும் கீழே அணிகள் நொறுங்கிவிழுந்த ஐபிஎல்-இன் அபத்தக்கதைகளைப் பார்க்கவேண்டாமா? போனவருடம் கீழ்வரிசையில் இருந்த பஞ்சாப் இந்தவருடம் முதல் நாலுக்குள் வரக் கடும் முயற்சி செய்தது. மும்பைக்கெதிராய் 230 போட்டுக் கலக்கிய இந்த அணி, டெல்லியையும் ஒருகை பார்த்தது
வானம் வசப்படும், நீலக்கடல்
அடிமை வணிகத்தைப் பற்றி விரிவான வரலாற்றைத் தந்திருப்பதன் மூலம் இந்தியப்பெருங்கடல் நிலங்களின் வணிக மூலதனங்களையும், கரும்பு, வெல்லம், பனங்கட்டி, மல்லாட்டை போன்ற உற்பத்தி பொருட்களின் சந்தையும், உபரிகளின் மூலம் வணிக வளர்ச்சிக்குத் தேவையான நகர்புற கட்டுமானப்பெருக்கங்களையும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் புனைவுனூடாக நமக்குக் கிடைக்கிறது. இதன் ஊடாட்டம் மக்களின் வாழ்க்கையிலும், அவர்களது திரளான பயணம் மூலம் வளர்ச்சியடையும் நிலங்களின் வளமையிலும் நடத்தும் நாடகம் உயிர்ப்போடு காணப்படுகிறது. ஒரு கதவைத் திறந்து அடுத்த அறைக்குச் செல்லும் தூரத்தில் அந்த நிலம் இருக்கிறது. கற்பனை பாத்திரங்களும் வரலாற்று மாந்தர்களைப் போல ரத்தமும் சதையுமாக வளர்கிறார்கள், தேய்கிறார்கள், மறைகிறார்கள்.
எங்கேயும் எப்போதும் எல்லாமே தானாகவே இயங்கும் – ஜென்கின்ஸ்
உங்களது நிரல், எதில் வேண்டுமானாலும் எழுதப்பட்டதாக இருக்கட்டும். எங்கே, யாரிடம் வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை இயக்கி, முடிவுகளை சரியானவர்களிட்ம் சேர்ப்பிக்கும் அஞ்சலக பணியாளர் பணியைத்தான் ஜென்கின்ஸ் செய்கிறது. இதென்ன கட்டண சேவையா? இல்லை. உரிமம் வாங்கவேண்டுமா? தேவையே இல்லை. முழுவதும் இலவசம். கட்டற்ற சுதந்திரம்! எத்தகைய அடியையும் தாங்கிக்கொண்டு அசராமல், அசுரகதியில் உழைத்துக்கொண்டே இருக்கும் அடிமாடுதான் ஜென்கின்ஸ்.
நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்
நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளே துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார்.
கற்கால உணவும் தற்கால மனிதர்களும்
ஆதி கால மனிதர்கள் உட்கொண்ட பொட்டாசியம் உப்பின் அளவு 15000 மில்லிகிராம் என்று தெரியவரும்போது, நமது உணவில் பொட்டாசியம் வெகுவாகக் குறைந்து விட்டது என்று தெரிகிறது. மேலும் நமது உணவில் சோடியம் குளோரைடு என்று சொல்லப்படும் சாதாரண உப்பின் அளவு பொட்டாசியத்தை விட மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது. ஆதிவாசிகள் உப்பை மிகக் குறைந்த அளவே உபயோகித்துள்ளனர். அவர்கள் உணவில் பொட்டாசியம், உப்பைவிட ஏழு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. இதற்கு காரணம் ஆதி மனிதர்களின் உணவில் பிரதானமாக இருந்தவை காய்,கனி, பச்சையிலை, கிழங்கு வகைகளே. இவையெல்லாவற்றிலும் பொட்டாசியம் சத்து மிக அதிகம் உப்புச் சத்து மிகக் குறைவு. தற்போதைய உணவு இதற்கு எதிர் மாறு…..
எடை அதிகரிப்பு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கல், எலும்புத்தேய்வு போன்ற நீண்ட நாள் வியாதிகளுக்கு உப்பு அதிகமாகவும் பொட்டாசியம் குறைந்தும் உள்ள தற்கால உணவிற்கு பெரும் பங்கு உள்ளது. ..
பொட்டாசியம் சேர்க்கை ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது; பொட்டாசியம் குறைவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்பதை பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிப்படுத்தியுள்ளன.
திபெத் எப்படி நசுக்கப்படுகிறது- தலாய் லாமாவின் வாழ்நாளிலேயே
திபெத்தில் எதிர்ப்பாளர்களை வெளி உலகில் அர்த்த புஷ்டியோடு ஆதரிக்கும் ஒரு குரலாக ஓஸரின் குரல் இருக்கிறது. அதே போல, தனக்கு மிக்க ஆபத்து வரும் என்ற போதும், சீனாவின் ஒரே நோபெல் அமைதிப் பரிசை வென்றவரான லியு ஷியாஓபோ வை சிலாகித்துப் பேசி இருக்கிறார். ஒருக்கால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார அடுக்கில் இவருக்கு இருக்கும் யாரோ சில சக்தி வாய்ந்த ஆதரவாளர்களால்தான் இவர் சிறையில் அடைக்கப்படாமல் தப்பி இருக்கிறாரோ என்னவோ.
கனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்
ஐயங்களும் சோர்வுகளும் இல்லாமல் இல்லை பொதுவுடமைக் கட்சியின் வேலையில். அவளுக்கிருக்கும் பயங்களையும் பாரபட்சங்களையும் மீறி வரவேண்டியிருக்கிறது. சிறு வயதில் சிங்கப்பூரில் குண்டு விழுந்தபோது தன்னைச் சிங்கப்பூரில் இருந்த வீராங்கனையாக, எல்லோருக்கும் உதவுபவளாக, தன் தலையில் குண்டு விழுவது குறித்து அஞ்சாத ஒருத்தியாக தன்னைப் பாவித்துக்கொண்டவள் அவள். “அச்சமில்லை, யச்சமில்லை அச்சமென்ப தில்லையே; உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று பரதியார் பாடலைப் பாடியவாறு வீர சாகசம் புரிவதாகக் கற்பனை செய்தவள். ஆனால் ஓர் இளம் வயதுப்பெண்ணாக இருக்கும்போது பலமுறை அவளுக்கு அச்சம் வருகிறது
மின்னணு வன்முறை
ஆகவே உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில்படிக்கவேண்டும் ,அவர்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து முடிவு செய்யும் நீங்கள் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் சற்றே கவனியுங்கள்.
இவ்வகை விளையாட்டுகளின் தொழில்நுட்பத்தில் கவரப்பட்டு மின்னணு விளையாட்டுகளின் மீதான ஒரு தீரா மோகத்தையும் விளையாடியே ஆகவேண்டும் என்ற பிடிவாத குணத்தையும் ஏற்படுத்தும். இவைகளில் இருந்து அவர்களை மீட்பது கடினம் எனினும் புதிர்விளையாட்டுகள் ,ஓட்டம் மற்றும் சாகச விளையாட்டுகள் , கிரிக்கெட் , கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் மூலம் தற்காலிகமாக அவர்களை திசை திருப்பலாம். இவையும் ஒரு அளவுடன் இருந்தால் நலம் ,ஏனெனில் மின்னணு விளையாட்டுகள் அனைத்துமே மூளையை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டவையே.
உலகமயமாக்கல் – முடிவை நோக்கி?
எழுபதுகளிலும்,எண்பதுகளிலும் உற்பத்தி துறையில் (தயாரிப்பு சந்தை) உலகமயமாக்கல் பெருமளவில் ஏற்பட்டது ; பல மேலாண்மை வகுப்பறைகளில் பகிரப்பட்ட நிகழ்வு – “ஃபோர்ட் கார்களின் கதவுகள் பார்சிலோனாவிலும், குஷன்கள் புடாபெஸ்டிலும்,கியர்பாக்ஸ் பாரீஸின் புறநகரிலும்,ம்யூசிக் சிஸ்டம் ஒசாகாவிலும் தயாரிக்கப்பட்டு, ஷாங்காயில் ஒருங்கிணைக்கப்பட்டு தாய்லாந்தில் காராக விற்கப்பட்டது. இதில் அமெரிக்க பங்கு என்பது எங்கே? இது நாடு கடந்தது – புவியியல் வரம்புகளுக்கு அப்பாற்பட்டது; எனவே உலகளவில் சிந்தியுங்கள் – உள்ளூரளவில் செயல்படுங்கள்” என்று சொன்னார்கள். ’Glocal-க்ளோகல்’ என்ற…
தானோட்டிக் கார்கள் – சமூகத் தேவை மற்றும் மனித ஓட்டுதல் பிரச்னைகள்
எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கும் ஒரு தேவை இருந்தாலே அது வெற்றி பெறுகிறது. தொலைதூரப் பயணம் என்பது மனிதர்களுக்குக் கால்நடையாகச் செல்வது அதிக நேரம் மற்றும் உடல் சோர்வு உண்டாக்குவதால், விலங்குகளில் ஆரம்பித்து (குதிரை, யானை), சைக்கிள் என்று முன்னேறி, கார் வரை தேவையானது. கடல் தாண்டிச் செல்ல கப்பல் மற்றும் விமானம் தேவையானது. தானோட்டிக் கார்களுக்கு என்ன தேவை? … நாம் பெட்ரோல் விலை அதிகமானால் சீறுகிறோம். அரபு சர்வாதிகாரிகளைத் திட்டுகிறோம். கார் செலுத்துவதன் பிரச்னைகளில், பெட்ரோல் ஒரு சின்னப் பங்கே வகிக்கிறது. மேலே உள்ள படம், ஒரு மைல் பயணத்திற்குச் சமூகம் தரும் விலையைப் பட்டியலிடுகிறது. நம்முடைய பாக்கெட்டிலிருந்து பெட்ரோல், கார் பராமரிப்பு மற்றும் காப்பீடு – இந்த மூன்றே செலவுகள் தான் என்று நினைக்கிறோம். சமூகத்திற்கு, இன்னும் பல செலவுகள் உள்ளன.
பொருந்துதல்
அது ஒரு வாகன விபத்து. அதில் அடிபட்டு இறக்கிறார் ஒரு பெண். அந்த வழக்கில், இறந்த பெண்ணின் குடும்பத்திற்குத் தர வேண்டிய காம்பன்சேசன் தொகையைக் கணக்கிட வேண்டி வந்தது. அப்பெண் வெளி வேலை செய்து பொருள் ஈட்டவில்லை. ஹவுஸ் ஒய்ஃப். எனினும், அப்பெண் வீட்டில் செய்யும் வேலைக்கு பிரதியுபகாரமாக ஒரு தொகையாக ரூபாய் 5000, நிர்ணயிக்கப்பட்டு அதை அவள் சம்பளம் போல குறிப்பிட்டு காம்பன்சேசன் கோரப்பட்டது. (பின்னர் குறைவான தொகை பெறப்பட்டது) அதை ஒட்டி, வழக்கறிஞர்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஒரு பெண் தாயாக, குழந்தைகளை கவனிப்பது முதல், கணவன், குடும்பம் என அனைத்தையும் கவனிப்பதற்கான தொகை அது. அத்தொகை சரிதானா என பேசிக்கொண்டிருக்கையில், அவளுக்கான கூலியா அது?
புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்
சயந்தனின் ஆதிரை அண்மையில் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நாவல். நாற்பது ஆண்டுகளுக்குமேலான ஈழத்துப்போராட்ட வாழ்க்கையை அழகியலோடு சொல்லிய நாவல் ஆதிரை. அதுவே ஆசிரியர் ஏற்படுத்துகின்ற நாவலின் மையப்புள்ளியுமாகும். ஆனால் ஆசிரியரின் மரணம் அந்நாவலின் மற்றமைகளை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும். மலையகத்தமிழரையும் உள்வாங்குகின்ற அந்த நாவலில் முஸ்லிம்கள் என்பவர்கள் மற்றமையாகவே அதில் தெரிவர். அதன் அரசியல் நாவலாசிரியரின் சொந்த அரசியலைப்போலவே எல்லா விமர்சனங்களையும் எல்லாப்பாத்திரங்களினூடு கடமைக்குப் பதிவுசெய்துவிட்டு தமிழ்த்தேசியத்தின் மீதும் புலிகள்மீதும் ஒருவித உறவு கலந்த கரிசனையை வலிந்து ஏற்படுத்தும். இது சயந்தனை விலத்தி ஆதிரையை அணுகும்போது சாத்தியப்படும் மாற்று மையங்கள்.
பிற குதிரைகள் எதற்கு
அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும், அவர் எப்படிப்பட்ட அனுபவத்தையும் அங்கதத்துடன் எழுதி ஒரு புள்ளியில் படிப்பவர்களைத் துணுக்குற வைப்பார் என்று. அனுபவங்களா, புனை கதைகளா என்று வரையறுக்க முடியாத எழுத்து அவருடையது. ’ஒன்றுக்கும் உதவாதவன்’ புத்தகத்தின் முன்னுரையிலேயே அ.முத்துலிங்கம் சொல்லி விடுகிறார் “இந்த நூலில் நான் எழுதியிருப்பவை என் சொந்த அனுபவங்களைத் தான். சமையல் குறிப்புகளில் ‘உப்பு தேவையான அளவு’ என்றிருக்கும். அது போல் ‘கற்பனை தேவையான அளவு’”. தமிழ் எழுத்தாளர்களில் முத்துலிங்கம் அளவு உலகைச் சுற்றி வந்தவர்கள் வேறு யாருமில்லை என்று உறுதியாகச் சொல்ல்லாம். அவரது கட்டுரைகளில் ரஷ்ய உடற்பயிற்சி நிபுணர் முதல் கிரேக்கத் துப்புரவு பணிப்பெண் வரை, வியட்நாமில் உடல் எரிந்த சிறுமி முதல் நாட்டியப் பேரொளி பத்மினி வரை பலரும் வருகிறார்கள்.
த்ரிவிக்ரமன்
“வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டு ‘குலேபகாவலி’ எனச் சொல்லும்போது ஒரு சத்தம் வருகிறதல்லவா. அதுதான் அவர் பெயர். நான் எழுத்தில் கொண்டுவர இயலாமல் சாரா என வைக்கிறேன்” (புளிக்க வைத்த அப்பம் ) என சொல்லி அவர் காட்டுவது 3400 வருடங்களாக தொடரும் விரட்டப்பட்ட மக்களின் வாழ்வின் மிச்சங்களை. இவைபோன்று பல உதாரணங்களை அடுக்குவது என் நோக்கமல்ல. இலக்கியவாதிகளில் மிகச்சொற்பமானவர்களே இப்படி மெல்லிய அங்கதத்தின் ஊடே எப்படிப்பட்ட பாரமான பத்தியையும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களில் இவரே தலையானவர் என்றும் சொல்லலாம்.
மனிதர் ஓட்டாத கார்களில் பயணிக்க நாம் தயாரா?
கார் தயாரிப்பாளர்களுக்கு உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனங்களான Delphi மற்றும் Continental போன்ற நிறுவனங்கள், எப்படி உணர்விகளைக் கார்களுக்கான கரடு முரடுப் பயன்பாட்டிற்காகத் தயாரிப்பது என்பதில் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கின்றன. … காப்பீடு நிறுவனங்கள், தானோட்டிக் கார் வந்தால் தங்களுடைய தொழில் என்னவாகும் என்று கவலையில், பல புதிய அணுகுமுறைகளையும் முன் வைத்து வருகிறார்கள். அரசாங்கங்கள் பொதுவாக, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று செயல்படும் அமைப்புகள். ஆனால், பல அமெரிக்க மாநிலங்கள், இவ்வகைக் கார் தயாரிப்பு தன்னுடைய மாநிலத்தில் நிகழ வேண்டும் என்பதால், அவசரமாக, தானோட்டிக் கார்களைப் பொது சாலைகளில் சோதிக்க முந்துகின்றன. இந்தப் புரட்சியில் பெரும் தாக்கத்தைச் சந்திக்கப் போகும் மூன்று வகை அரசாங்க அமைப்புகள் 2016 –ல் வெறும் பேச்சளவில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
பயணங்களின் தொலைவு
புத்தகத்தில் என்னை அதிகம் பாதித்த கட்டுரை – “சாவதும் ஒரு கலை”. தற்கொலை பற்றியது. மரணத்தை அதன் வாசனை ஒட்டுகிற தூரம் வரைச் சென்று தொட்டுத் திரும்புகிறவர்கள் இந்த உலகத்திற்கு அல்லது தங்களுடைய சொந்த வாழ்க்கைக்கேனும் குறைந்தபட்சமாக ஒரு கைப் பிடி அளவுக்காவது வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். இதை ஒரு நிரந்தர விதி போல் நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு திரும்பி வந்தபோது இயற்கையின் பேரற்புதத்தை உணர்ந்தவராக திடமான நம்பிக்கையோடு வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைகிறார். ஆனால் சுகுமாரனின் உலகத்தில் தற்கொலைக்கு முன்பும் பின்பும் எந்த மாற்றமும் இல்லை. தவிப்பும் கொந்தளிப்பும் மிக்கதாகவே அது தொடர்கிறது.
உலகம் இன்று நம் கையில்
ஒரு சாதுரியத் தொலை பேசி இருந்தால் ஏதாவது நாட்டில் நடக்கும் ஏதோ ஒரு வினோத சம்பவத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓய்வாக அமர்ந்து யோசிப்பது என்பது இல்லாததாக, செய்ய முடியாததாகக் கூட ஆகி விட்டது. சிகரெட் குடிப்பவர்களுக்குக் கையில் அது இல்லாது நிற்கக்கூடத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள், அதே போலக் கையில் ஏதோ ஒரு காட்சிக்கருவி இல்லாது நடக்க, இருக்க முடியாத மக்களாகிக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். அடுத்து மூச்சு விடக் கூட ஏதேனும் கருவி தேவைப்படும் நிலைக்கு வருவார்களோ என்னவோ. இப்படிப்பட்ட கருவிகளில் நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய உலக சம்பவங்களில், அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் நேற்றைய வினோதம். அங்கு ஒரு புது அதிபர் நாடாளும் பதவியை நேற்று ஏற்றார். அவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை. திடீர் மழையில் முளைத்த காளானா என்றால் அத்தனை புது நபர் இல்லை, … டானல்ட் ட்ரம்ப் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர்.
தானோட்டிக் கார்கள் – ஒரு பருந்துப் பார்வை
வெறும் 2,500 பேர் வசிக்கும் சின்ன ஊரில் 3 கார் டீலர்ஷிப்கள்! இதுவே அமெரிக்க வாழ்க்கை முறை. கார் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது. வட அமெரிக்காவை GM Country என்று சொல்வதுண்டு. கார் இல்லாமல் இங்குக் காலம் தள்ளுவது வெகு சில நகரங்களில் மட்டுமே சாத்தியம். கார்களின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்திலும் வட அமெரிக்கப் பங்கு மிகவும் முக்கியமானது.
மெய்ம்மை-கடந்த உலகில் உண்மை குறித்து…
நாம் எல்லாரும் தரவுகளைத் தெரிந்து கொள்வதிலோ, அவற்றின் உண்மையை உறுதி செய்து கொள்வதிலோ ஒரே அளவு ஆர்வம் காட்டுவதில்லை. நம் பார்வையை வலுவாக்கும் செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம். அவற்றை விரும்பி பகிர்ந்து கொள்வதால் அவை கூடுதல் ஆற்றல் பெறுகின்றன. இணையம் உண்மையை அறியும் சாதனம் என்ற நிலையை எட்டாமல், எல்லாரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் சாதனமாகி விட்டது. நிறைய பேர் பேசிக்கொள்ளும் விஷயங்களே கவனம் பெறுகின்றன, உண்மைக்கு இங்கு மதிப்பில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் களப்பணியாளர்களும் நிறுவன அமைப்புகளும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தகவல்களையும் பரப்புவது இரண்டாம் சிக்கல். உண்மையறியும் சல்லடை இல்லாத உலகில்…
ஆடு பாம்பே! – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அதிபர் தன்னிச்சையாகவா எல்லா முடிவையும் எடுப்பார், அவருக்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்தும் வட்டம் இருக்காதா என கேட்கும் நல்லவர்களும் இருக்கிறார்கள். ட்ரம்பின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களோ ட்ரம்பை விட ஆபத்தானவர்கள்… கருவை சுய அபார்ஷன் செய்து கொண்ட பூர்வி படேல் என்ற இந்திய வம்சாவளி பெண் 20 ஆண்டு சிறை தண்டனை தரப்பட்டார். Pro-life என்று வேறு பெயரில் அழைத்தாலும் அதன் வேர் கிறித்துவ அடிப்படைவாதம்தான். பர்தா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதங்களை கிண்டல் செய்துகொண்டே கருக்கலைப்பு போன்றவற்றை தீவிரமாக நம்பும் பாசாங்குத்தனமும் புதிய நிர்வாகத்தின் செயல்திட்டங்களில் இருக்கிறது.
கணங்களில் தளிர்க்கின்ற ஜீவிதம் – சுப்பிரமணியன் ரமேஷ் கவிதைகள்
குழந்தைகளின் உலகம் கவிஞர்களுக்கு பிரமாதமான கச்சாப்பொருள். சிறு சொப்புச்சாமான்களோடு விளையாடிய குழந்தை பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டதாக ப்ளே திங்க்ஸ் கவிபாடிய தாகூரின் உலகம் ஒரு பக்கம். அவை அன்றாட நிகழ்வுகளிலிருந்து உருவாகும் அசாத்திய தரிசனங்களை நமக்குக் காட்டுபவை. அதில் ஒரு ஆன்மிக அனுபவம் உள்ளது. கவிஞர் ரமேஷ் எதிர்கொள்ளும் குழந்தை உலகம் ஆச்சர்யத்தை அடக்கிய அதே வேளையில் அக ஸ்தம்பிப்பையும் உருவாக்கிவிடுகிறது.
ஹம்பி: நிலவைக் காட்டும் விரல்
மானுடம் கண்ட மகத்தான கனவு விஜயநகரம். இன்று நாம் காணும் ஹம்பி என்பது நூற்றாண்டுகளுக்கு முன்னால் அங்கு எவ்விதமான வாழ்வு நடந்திருக்கும் என கற்பனை செய்து பார்ப்பதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. விஜயநகரம் இன்று கற்பனையால் மட்டுமே கண்டடையக் கூடிய ஒரு பிரதேசம். மாமனிதர்கள் மானுடம் குறித்த மகத்தான கனவுகள் மூலமாகவும் கலைஞர்கள் தங்களின் கலையின் வழியாகவும் மதியாளர்கள் தங்கள் திட்டமிடல் மூலமாகவும் வணிகர்கள் வாய்ப்புகளின் சாத்தியங்களின் வழியாகவும் பொறியாளர்கள் பணி மேலாண்மை மூலமாகவும் வீரர்கள் போர் நுணுக்கங்கள் மூலமாகவும் சாமானியர்கள் பெருவியப்பினூடாகவும் மட்டுமே அந்நகரை கற்பனை மூலம் அடைய முடியும். அப்பிராந்தியம் கற்காலம் தொட்டு அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டிருக்கிறது. இராமாயணம் குறிப்பிடும் கிஷ்கிந்தை விஜயநகரமாக இருந்திருக்கக் கூடும்
"என் பெயர்”
முன்பெல்லாம் கிராமங்களில் ‘பொட்டல்’லேர்ந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள்” எனும் தகவல் சொன்னால் போதும். அந்த ஊரில் இருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். இன்ன மாதத்தில் வந்திருப்பதால், விவசாயத்திற்கு மடை திறந்து விடச்சொல்லி கேட்க வந்திருக்கிறார்கள் என அனைத்தும் புரிந்துவிடும். ஏனெனில் அப்போது அநேகரும், ஊரை பிரதிநிதித்துவப்படுத்தினர். பின்னிட்டு, ஊர் பெயர் போதாது. குடும்பப் பெயர் சொன்னால் விளங்குவதாக இருந்தது. இப்போது குடும்பப்பெயரை விட சொந்தப்பெயரே அடையாளத்திற்குப் பயனாகிறது. அதற்கு முகவரியாகவே குடும்பப் பெயர். இதிலும், பெண்களிடம் செய்த சர்வேயில்…
அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்
நவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை. ஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவில்…
இதற்குத்தானா ஆசைப்பட்டது அமெரிக்கா?
மைனாரிட்டி இன மக்கள், பெண்கள், இளம்வாக்காளர்கள், கறுப்பர்களை குறிவைத்து அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஹிலரி பேசி வந்ததை வெள்ளை இன மக்கள் குறிப்பாக ஆண் வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன…செனட் மற்றும் காங்கிரஸில் மெஜாரிட்டி பெற்றிருக்கும் ட்ரம்ப் கட்சியினர் நீதித்துறையையும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விட்டால் அரசியல் சட்டங்களையும் தங்கள் விருப்பப்படி மாற்ற இயலும். அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் அவர்களை தடுக்கும் சக்தி ஜனநாயகக் கட்சிக்கு இல்லை என்பதும் கவலைதரும் செய்தி.
கென்யா – குறுங்குறிப்புகள் – 2
பகலில் எங்கு சென்றாலும், மாலை ஏழு மணிக்குள் வீடு திரும்பி விடுவது அல்லது தாமதமானால் நண்பர்கள் வீட்டில் தங்கிவிடுவது வழக்கம்.எப்போதும் பயணிக்கும்போதோ அல்லது வீட்டிலோ கொஞ்சம் பணம் வைத்திருப்பது நல்லது; திருடர்களோ, வழிப்பறியோ – நாமாக பணத்தைக் கொடுத்துவிட்டால் நல்லது (உயிருக்கு உத்தரவாதம்!); பணமில்லையென்றால் கோபமாகி விடுவார்கள் (பெரும்பாலும் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்).
ஸெரங்க்கெட்டியில் மூன்று நாட்கள்
தொலைவிலேயே குன்றுகளென மத்தகங்கள் தென்பட்டன. அந்த இடத்தில் நிலப்பரப்பு கொஞ்சம் சரிந்து, ஒரு நீர்நிலை உருவாகியிருந்தது. 20-25 யானைகள் இருக்கலாம். சாலையில் வாகனம் மெல்லச் சென்றது. சாலையும், அச்சரிவில் இறங்கியது. அந்த நீர்நிலையைத் தாண்டிச் செல்ல ஒரு சிறு பாலம்.. வண்டி மெல்ல இறங்கத் துவங்கியதும், நெடுநெடுவென வளர்ந்திருந்த புல்லின் பின்னால் ஒரு தாய் யானையும் குட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு வித்தியாசம் – இங்கே பெண்யானைக்குக் கொம்பிருந்தது. கொஞ்சம் சிறிது. வண்டியை நிறுத்தினார் ஜெர்ரி.. புஸ் புஸ் என மூச்சின் ஒலி மிகத் தெளிவாகக் கேட்டது.. குட்டியானை சமத்துச் செல்லமாக சிறு புட்களை மேய்ந்து கொண்டிருந்தது.. இரண்டும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை.
சவுதி அரேபியாவின் ஏற்றுமதி
கீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை. 1. சதுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால். 2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால். 3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால். 4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால். 5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்!
ஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை
இது போன்ற விவாதங்களில் முதலில் கவனிக்கப்படும் அம்சம் போட்டியாளர்கள் தங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கின்றனர் அவர்களின் உடல்மொழி எத்தகையது என்பதுதான். இந்த சுற்றில் நிச்சயமாக ஹிலரிதான் வெற்றியாளர். ஆரம்பம் முதல் இறுதிவரை அமைதியான தன்னம்பிக்கை கூடிய புன்னகையுடன் கேள்விகளை, தாக்குதல்களை எதிர்கொண்டார். தன்னுடைய பதில்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சரியான சந்தர்ப்பங்களில் ட்ரம்ப்பை மட்டம் தட்டுவதிலும் வெற்றிகண்டார். மாறாக ட்ரம்ப் ஆரம்பம் முதலே கடுகடுப்பு முகத்துடனும், பதட்டம் நிறைந்த குரலுடனும் இருந்தார். எதிராளியை பேசவிடாமல் இடைமறித்து பேசியதை யாருமே ரசிக்கவில்லை. இந்தப் போக்கினை ட்ரம்ப் அடுத்த இரண்டு விவாதங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கின்றனர்.
கென்யா – குறுங்குறிப்புகள்
ஒரு கிராமத்தில் குறைந்தது மூன்று சர்ச்சுகள்); அடுத்து முஸ்லிம்கள் – சிறுபான்மை (பெரும்பாலும் ‘மொம்பாசா’ போன்ற கடற்கறை நகரங்களில்). … பழமைவாதம்தான் – ஒரு சில குறுங்குழுக்களில் மட்டும்தான்; அலோபதி மருந்துகளுக்கும், மருத்துவர்களுக்கும் அலர்ஜியாவது(!), கிறித்தவத்தின் ஒரு குறுங்குழுவான “mukurino”க்கள்; மற்றுமொரு குழுவான் “ஜெகோவா விட்னஸ்” மற்றும் சில “ஏழாம் நாள்” குழுக்கள், வாரத்தின் முதல் நாள் ஞாயிறு என்கின்றன; ஏழாம் நாள் ஓய்வு என்பதால் சனிக்கிழமைகளில் எந்த வேலையும் செய்வதில்லை; அவர்களின் சர்ச்சுகளின் பிரார்த்தனைக் கூட்டங்கள், சனிகளில் தான்.
தேசிய கல்விக் கொள்கை – 2016
சுதந்திர இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்கான மூன்றாவதாக அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஏப்ரல்-30, 2016 -ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் அளித்திருக்கிறது. இதன் அடிப்படையில் அமைச்சகம் அதன் கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும். அதன் முன்பாக, வரைவுக் கொள்கையை வெளியிட்டு பொதுமக்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறது. விருப்பமும், உபயோகமான பரிந்துரைகளும் இருந்தால் ஆகஸ்ட்-16 ம் தேதிக்கு முன் அளிக்கலாம்… இக்குழுவின் அறிக்கையின் இரண்டாவது அத்தியாத்தின்படி, குழு அமைப்பதற்கு முன்பாகவே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேலே கூறப்பட்ட பிரமிடின் முதல் ஆறு நிலைகளிலும் ஆலோசனைகளைப் பெற்று தொகுக்கும் பணியை முடித்திருக்கிறது. இந்தத் தொகுக்கப்பட்ட ஆவணங்களிலிருந்துப் பெறப்பட்டத் தகவல்களை…
லு ஷாடலியெ கோட்பாடு
அகத்தியர் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் சீர்காழியாரின் குரலில் ‘உலகம் சமநிலை பெறவேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்’ என்னும் அழகான பாடல் வரும். அந்தப் பாடல் படத்தில் வரும் இடம் நமக்குத் தெரியும்தானே. கயிலையில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்கையில் எல்லாரும் வடபகுதிக்குப் போய்விட வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்கிறது. அந்தச் சமநிலையை மீட்க அகத்தியரை, நானே பொதியை மலைக்கு ஹனிமூன் வருகையில் காட்சி தருகிறேன் எனத் தாஜா செய்து அனுப்பி வைக்கிறார். அவரும் பொதியைக்கு வந்து சமநிலையை மீட்கிறார். ஆக ஒரு சமநிலையில் ஒரு மாற்றம் உருவாகும்போது, அந்தச் சமநிலையானது, மாற்றத்தை எதிர்த்து நகர்கிறது, தன் சமநிலைத்தன்மையை மீட்டெடுக்க முயல்கிறது. இதைத்தான் வேதியியலில் லு ஷாடலியெ கொள்கை என்கிறார்கள்.
வினைத்திட்பம் + மனத்திட்பம் = லெப்ரான் ஜேம்ஸ்
எல்லோரும் கல்லூரி முடித்த பிறகுதான் என்.பி.ஏ. அணிகளுக்கு ஆடப் போவார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் இருந்து நேரடியாக, வெறும் 19 வயதில் அதிரடியாக க்ளீவ்லாந்து கவாலியர் அணிக்கு லெப்ரான் ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்தான் ரட்சகர், நமக்குக் கோப்பையைத் தரப் போகும் நாயகர் என்று க்ளீவ்லாந்துக்காரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். லெப்ரான் ஜேம்ஸும் ஏழாண்டுகளாக க்ளீவ்லாந்து கவாலியர்களுக்காக ஆடிப் பார்த்தார். மற்ற அணிகளின் பணவீச்சுக்கு முன்னால், இவரின் திறமை எடுபடவில்லை. என்னதான் அர்ஜுனன் போல் உயிரைக் கொடுத்து ஆடினாலும், பக்கபலமாக பீமன் தேவை. ரதசாரதியாக கிருஷ்ணர் தேவை. நேரம் பார்த்து நாள் குறிக்க சகாதேவன் வேண்டும். தலைமைப் பொறுப்பெடுத்து வழிகாட்ட தர்மர் வேண்டும்.
கருவிகளின் இணையம் – பாதுகாப்புப் பிரச்னைகள்: பகுதி- 20
தரவு நஷ்டப் பாதுகாப்பு (data loss prevention) – எந்த ஒரு கருவி இணைய அமைப்பும், புதிய உணர்விகள் சேர்த்த வண்ணம் இருக்கும் என்று நம்பலாம். புதிய உணர்விகளைச் சேர்த்தவுடன், பழைய கருவிகள் அனுப்பும் தரவுகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கருவி அனுப்பும் தரவும், இன்ன கருவி அனுப்பியது என்று சரியாகச் சொல்லும் வழி இருப்பது அவசியம்
தரவுத் திரள்வுப் பாதுகாப்பு (data aggregation security) – கருவி இணைய உலகில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு விஷயம் இது.
