சீனப் பெண் கவிஞர்களின் ஐந்து கவிதைகள்

யாரிடம் சொல்வேன்
இறந்தோருக்கான எனது
நிரந்தர சோகத்தை?
இந்த வேகத்தில்
மலைகளையும் நதிகளையும்
மட்டுமே கண்டேன்.
என் ஆடையிலிருந்த
உதிரத்துடன் சேர்ந்தது என் கண்ணீர்.

ஆடுகளம்

முரளிக்கு பொதுவாகவே விளையாட்டுகளில் ஆர்வமில்லை. சிறுபிள்ளையிலிருந்த அப்படித்தான். நாடே கொண்டாடும் கிரிக்கெட்டைக் கூட அவன் அதிகம் பார்த்ததில்லை; விளையாடியதுமில்லை. இதுவரை அவன் வாழ்க்கையில் மூன்றே முறை தான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறான். மற்ற விஷயங்களில் எல்லாம் சகஜமாக பழகுபவன், விளையாட்டு என்று வரும் போது ஒதுங்கிவிடுவான். சில நேரங்களில் ஒதுக்கிவிடுவார்கள். அப்போது மட்டும் கொஞ்சமாய் வலிக்கும்.

இருப்பு

அண்ணனின் மாமனாருக்கும் அவரது அண்ணனுக்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம். இறக்கும் தறுவாயில் தன் அண்ணன் இருக்கும் போது எழுபத்திரண்டு வயது தம்பி சொன்னாராம். ‘நீ தைரியமா முன்னால போ. நான் பின்னாலேயே வாரேன்’ என்று. கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் பெருக சிறிது நேரத்திலேயே காலமாகிவிட்டாராம் பெரியவர்.

செல், பேசாதே!

கார் ஓட்டும்போது செல்பேசியை உபயோகித்தால் ஆபத்து என்று சரமாரியாக ஆய்வு முடிவுகள் வர ஆரம்பித்த பிறகு கூட அவர்கள் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை. கன்ஸ்யூமர் பாதுகாப்பு சங்கங்கள், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என்று பல தரப்பினரும் உள் நாக்கு தெரியக் கத்தியதால், பல மாநிலங்கள் காரில் மொபைல் போன்களைத் தடை செய்ய சட்டம் கொண்டு வர முயற்சித்தன. செல்போன் கம்பெனிகள் தங்கள் லாபி இயந்திரம் முழுவதையும் முடுக்கி விட்டு, பணத்தை டாக் டைம் போலச் செலவழித்து சட்டத்தைத் தடுத்து நிறுத்தின.

வியட்நாம் போர் – 35 ஆண்டுகளுக்குப் பின்

சென்ற மே நான்காம் தேதியோடு வியட்நாமில் கெண்ட் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வியட்நாம் யுத்தத்தை உச்சத்துக்குக் கொண்டு வந்து நாற்பது வருடங்கள் ஆகின்றன. வியட்நாம் யுத்தமும், அதில் அமெரிக்காவின் தலையீடும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மிக அதிக அளவிலான உயிரிழப்புக்குக் காரணமானது. 1955-இலிருந்து 1975 வரை “வியட்நாம் போர் – 35 ஆண்டுகளுக்குப் பின்”

மூன்று கவிதைகள்

பொழுது போகாத நேரத்தில்
அவன் கிறுக்கி வைத்திருந்த ஓவியங்கள்
தாத்தா தன் நிலையிலிருந்து
கைத்தடியுடன் இறங்கி நடந்தார்
அப்பா எப்போதும்போல் ஏதோ யோசனையுடன்
தாத்தாவும் அப்பாவும் பார்த்துக்கொள்ளும்போது
பாட்டி தன் ஓவியத்திலிருந்து கீழிறங்கினாள்

அரை செஞ்சுரி துல்லியம்

இது லேசர் தொழில்நுட்பத்தின் ஐம்பதாவது வருடம். அறிவியல் சமூகம் லேசர் தொழில்நுட்பத்தின் 50 வது பிறந்த நாளை மிகவும் விரிவாக இவ்வாண்டு முழுவதும் கொண்டாடுகின்றது.உலகெங்கிலும் லேசர் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கங்களும், கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு லேசர் தொழில்நுட்பத்தையும், பயன்பாடுகளையும் விளக்கும் சிறப்புக் கட்டுரையை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

மகரந்தம்

நாம் நம் அணுசக்தி நிலையங்களின் கழிவுப் பொருட்களை என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எங்கே புதைக்கிறோம்? யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். தில்லிப் பல்கலைக் கழகத்தின் அணுக் கழிவுகளால் சமீபத்தில் உயிரிழந்த பலரைப் பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள். அது குறித்த ஒரு பகிரங்க விசாரணையோ, அந்த மாதிரி மோசமான முறையில் கதிர்வீச்சு நிறைந்த பொருட்களை விட்டெறிந்த அலுவ்லர்கள், அறிவியலாளர்கள், பொறியியலாளர்களை இந்த மரணங்களுக்குப் பொறுப்பேற்கவைக்க ஏதும் முயற்சி செய்யப்பட்டதா? அல்லது அப்படி கழிவுப் பொருட்களை நிர்வகிக்க அரசு ஏதும் நடைமுறைகளை இன்னமுமே உருவாக்கவில்லையா?

இறந்து கொண்டிருக்கும் இயற்கையின் அற்புதங்கள்

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்று சங்காலத்தமிழன் இலக்கணம் சொன்னான். மலையைப் பார்த்த ஒரு அமைச்சரின் புதல்வன் நினைப்பது வேறு. குறிஞ்சியாவது உறிஞ்சியாவது இம்மலையை வெடிவைத்துத் தகர்த்தால் எவ்வளவு கல் அறுக்கலாம்? அறுத்த கற்களை ஏற்றுமதி செய்தால் எத்தனை தேறும்? மலை மீது சந்தனம் உண்டு. தேக்கு உண்டு. தான்றி உண்டு. வெட்டி விற்றால் எவ்வளவு லட்சம் தேறும்? நேரிடையாகத் தான் சம்பந்தப்படாமல் மரக்கடையுடன் ஒரு பேரமே முடிந்து விடுகிறது.

எல்லோரும் சந்தன மரத்தைக் கடத்த முடியாது. வேலா மரத்தை வெட்டி விற்றால் கூட சில ஆயிரங்கள் உண்டு. விறகு விலை ஒரு டன் 3000 ரூபாய். மண்ணாசைக்கு மேல் மர ஆசையும் வந்துவிட்டதே. இறைவா?

சிங்கப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்

ஜெயந்தி சங்கரின் கதைகளில் சிங்கப்பூரின் மாறி வரும் சமூக மதிப்புகளையும், வாழ்க்கையின் சலனங்களையும் பார்க்கிறோம். பல சிங்கப்பூரில் வாழ்வதால் தமிழர் எதிர்கொள்ள வேண்டி வருபவை. பல் தமிழகத்திலும் நடக்கக்கூடும் என்றாலும், அவற்றின் ரூபமும் தீவிரமும் சிங்கப்பூரின் சமூக மாற்றத்தால் விளைபவை.

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2010

20-20ல் உலகக்கோப்பை வெல்லுவோமா மாட்டோமான்னு இந்தியா முழுவதும் காலைல காபி குடிச்சதுல இருந்து இரவு படுக்கையை போடற வரை பேசிக்கொண்டிருக்க, சத்தமேயில்லாம நம்மூரு விசுவநாதன் ஆனந்த் வெற்றிகரமா தன்னோட செஸ் உலக சாம்பியன் பட்டத்தை மற்றொரு முறை தக்க வச்சிட்டிருக்கார். இன்னுமொரு இரண்டு வருஷத்துக்கு ஆனந்த்தான் சேம்பியன். ஒரு டோர்னமென்ட்லயும், இரண்டு மேட்சிலயும், அதுவும் இரண்டு பெரிய ஆட்களுக்கு எதிரா விளையாடி ஜெயிச்ச ஆனந்தின் இந்த உலக சேம்பியன் பட்டம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.

லீனா ஹார்ன் (13.06.1917 – 09.05.2010)

சென்ற ஞாயிற்றுக்கிழமை (மே 09, 2010)  தன்னுடைய  92 வயதில் மரணமடைந்த லீனா ஹார்ன் (Lean Horne) ஒரு சிறந்த அமெரிக்க ஜாஸ் இசைப்பாடகி. நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்தில் அதைத் தகர்த்தெறிந்து தனக்கென தவிர்க்க முடியாதொரு இடத்தை அடைந்தவர் லீனா ஹார்ன். வெள்ளை மேலாண்மையைத் தகர்த்து ஹாலிவுட்டில் “லீனா ஹார்ன் (13.06.1917 – 09.05.2010)”

ஹாலிவுட் பேயோட்டிகளும், உண்மைக் கதைகளும்

எக்ஸார்ஸிட்டுக்குப் பிறகு பல படங்கள் அதன் தொடர்ச்சி என வந்தாலும், உண்மையான அடுத்தப் பகுதி திரைப்படம் எமிலி ரோஸின் எக்ஸார்ஸிஸம் (பேயோட்டல்) என்கிற பெயரில் 2005-இல் வெளியானதுதான். எக்ஸார்ஸிஸ்ட் படத்தை விட இப்படம் ஒரு விதத்தில் முக்கியமானது. உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டதாக இது கூறப்படுகிறது. இத்தகைய பெரும் வெற்றி பெறும் ஹாலிவுட் திரைப்படங்களும், அதனைத் தொடர்ந்து அவற்றை பிரதியெடுக்கும் இந்திய திரைப்படங்களும் ஏற்படுத்தும் விளைவுகள் படுமோசமாக இருக்கும்.

கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்

கலாப்ரியா பேசத் துவங்கும்போதே தனக்கு இது மகிழ்ச்சியாகவும், சற்று கூச்சமாகவும் இருப்பதாகச் சொன்னார். தனது நேர்காணல்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில்(Pattern) இருப்பதாகச் சொன்னவர், இந்தக் கூட்டத்தில் சற்று வித்தியாசமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறதா என்று முயல்வதாகக் குறிப்பிட்டார். தனது குடும்பத்தில் ஒன்பது பேர்களில் தான் மட்டுமே கல்லூரி வரை சென்றதாகவும் அதில் தனக்குக் கிடைத்த சுதந்திரம் மிக முக்கியமானதாகவும் இருந்ததாகச் சொன்னார். ஆனால் தனக்குள் உள்ளூர இருந்த அறம் சார்ந்த கட்டுப்பாடு அல்லது பயம் காரணமாக தனக்கான ஒரு எல்லைக் கோடு தொடர்ந்து இருந்தது என்றார்.

வெட்டுப்புலி

பலநாட்கள் தயாரித்த, ஆய்வுசெய்த அறிக்கைகளை அன்று மக்கள் முன்பு கொள்கைவிளக்கமாகக் கூட்டங்களில் பேசுவார்கள். மக்களைக் கூட்டம்சேர்க்கும் கழைக்கூத்தாடி டமடமவென்று தொடக்க மேளச்சத்தம் எழுப்புவதுபோல, கலைநிகழ்ச்சி போர்வையில் அரிதாரம் பூசியவர்கள் பின்னர் அரங்கேறலாயினர். நாளடைவில் இவர்கள் இருந்தால்தான் கொள்கையே பேசமுடியும் என்கிற அளவுக்கு மேடைகள் தலைகீழாயின.

சமூக வளர்ச்சி குறித்து ப்ரிட்ஜாப் காப்ரா

ப்ரிட்ஜாப் காப்ரா பிரபல அமெரிக்க எழுத்தாளர். கிழக்கத்திய தத்துவங்களுடனான நவீன அறிவியல் முடிவுகளின் ஒத்திசைவை தன்னுடைய பல நூல்களில் பதிவுசெய்திருக்கிறார். “இயற்பியலின் தாவோ”(Tao of Physics) இவருடைய பிரபல நூல்களில் ஒன்று. மனித சமூகத்தின் இன்றியமையாத கூறான “வளர்ச்சி” குறித்து காப்ரா பேசுகிறார். இயற்கையின் வளர்ச்சி செயல்பாடானது எண்ணிக்கை “சமூக வளர்ச்சி குறித்து ப்ரிட்ஜாப் காப்ரா”

வெளிப்பாடுகளின் திரைப்படங்கள்: சைத்தானின் அரசியல்

அறிவியல் மற்றும் நவீனத்துவத்துக்கான ஒரு முக்கியமான எதிர்வினையாக புரோட்டஸ்டண்ட் மதமும் அதன் இறையியலும் இருந்தன. அடிப்படைவாதமும் தூய கிறிஸ்தவ வாதமும் அதன் முதுகெலும்பாக அமைந்தன. அமெரிக்க பூர்விகக் குடிகளின் அழிவை “வாக்களிக்கப்பட்ட பூமியாக” அமெரிக்காவையும் காலனிய குடிகளாக பூர்விகர்களையும் சித்தரித்து அவை நியாயப்படுத்தின அம்மட்டில் இம்மதம் அமெரிக்க பண்பாட்டுக்கு உறுதுணையாக அமைந்தது.

கோமாளி

கோமாளி என்று என்னைக் கூப்பிடுவது சிரமமாக இருக்கிறது கோமு என்று கூப்பிடுகிறேன் என்று ஜெ. ஊர்மிளா என்னிடம் வேண்டிக்கொண்டாள். முதல் ராங் வாங்கும் உஷா என்னை ஒரு நாள் அழைத்து ஊர்மிளா எதாவது சொன்னால் அல்லது அடித்தால் நன்றாகத் திருப்பிக்கொடுத்துவிடு என்று கோபமாகச் சொன்னாள். நான் அவளிடம் இருந்து நோட்டு பென்சில் எதுவும் வாங்கினதேயில்லையே எதை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்றேன். தலையில் அடித்துக்கொண்டு உனக்கு கோமாளி பெயர் பொருத்தம்தான் என்றாள்.

கந்த கானாமுதம்

ஒவ்வொரு ராகமாகக் கையைப் பிடித்து இழுத்து வந்து “இதோ பார்த்துக்கொள்” என்று காட்டும் அனுபவம் எஸ்.ராஜம் அவர்கள் பாடி ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘கந்த கானாமுதம்’ என்ற இசைத்தொகுப்பைக் கேட்டால் கிடைக்கிறது. மொத்தம் 72 ராகங்களை இத்தொகுப்பில் ஒரு சிறு ஆலாபனையாகவும், ஒரு எளிய கீர்த்தனையாகவும் பாடியிருக்கிறார் எஸ்.ராஜம். தேர்ந்த ஓவியரும், மிகச்சிறந்த பாடகருமான எஸ்.ராஜம், ஒவ்வொரு ராகத்தைக் குறித்தும் ஒரு தெளிவான, அழுத்தமான சித்திரத்தைத் தன்னுடைய ராக வெளிப்பாட்டில் தருகிறார்.

பூச்சி உலகில் மர்ம மரணங்கள் !

தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்துகொண்டார்கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது

நியூசிலாந்தும் நிலக்கோட்டையும்

புதியதொரு நகருக்கு அவள் வந்து சேர்ந்தாள். ஊரைச் சுற்றிப் பார்த்தாள். மக்களை நெருக்கமாகக் அவதானித்தாள். அவர்கள்மேல் இன்னதென்று சொல்லமுடியாத ஆனால் அழுத்தமான ஈர்ப்பு உண்டாவதை அவள் உணர்ந்தாள். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் காதலரைப் பற்றிய விவரங்களை அக்கறையுடன் சேகரிப்பதைப் போல , அவள், அந்த மக்களின் தோற்றம், நடை உடை, பழக்க வழக்கங்களைக் கண்டு மனதில் பதிந்து கொண்டாள்.

மழை

மழை ஆனந்தம். காயங்களையும் சூட்டையும் எரிமலைகளையும் ஆதரித்து அரவணைக்கும் அரு மருந்து. மழை தாய். மழையின் நாதம் சுகம். மழையில் எல்லா பயத்தின் கங்குகளும் நனைந்து போய் விடுகின்றன. அப்பாவும் அவனும் எல்லா வீட்டுக்கும் பொதுவான மொட்டை மாடியில் எத்தனையோ தரம் மழையில் ஆடி இருக்கிறார்கள். அந்த வாசனை. அதன் வண்ணம். கண்களை மூடிக் கொண்டு மழையின் வாசனையை அனுபவித்துக் கொண்டு அதன் சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

மகரந்தம்

இறந்த உடலில் உயிருக்கான ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என பார்த்தார்கள். அவளது மூச்சை மீண்டும் கொண்டு வர முடியுமா என முயற்சி கூட செய்து பார்த்தார்கள். அன்றைய இரவு முழுவதும் அவளது மகள் அவள் உடலுடனேயே இருந்தாள். மறுநாள் அவள் உடலை சுத்தம் செய்தாள்….அட ஒரு சாவில் இதெல்லாம் சகஜம் தானே என்கிறீர்களா? ஆப்பிரிக்க சிம்பன்ஸிகளின் சாவு ஒன்றினைத் தொடர்ந்து அவர்களின் நடத்தைகளை ஆவணப்படுத்தியுள்ள ஒரு ஆய்வு சொல்லும் விஷயங்கள் இவை.

முதலாளித்துவத்தின் மூலம் வறுமையை ஒழிக்க நினைத்த இந்திய மனம்

பிரஹலாத் முன்வைத்தது சமுக சேவை செய்வது எப்படி என்ற சிந்தனையை அல்ல. வறுமையை, லாபகரமான வியாபாரம் செய்வதன் மூலம் எப்படி ஒழிப்பது என்பது தான். அவர் உலத்தின் வியாபாரிகளுக்கு அது வரை யாரும் கவனிக்காத ஒரு சந்தையை காட்டினார். அந்த சந்தைக்கு சேவைகளையும் பண்டங்களையும் எப்படி லாபகரமாக தயார் செய்து விநியோகம் செய்யலாம் என்று காட்டினார். உலகின் ஏழை சமுகம் என்பது வேகமாக கீழ் மட்ட நடுத்தர வர்க்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்த உலகத்தின் கடைசி ஏழைக்கும் வாழ்வாதார தேவைகளை எந்த தடையுமின்றி பூர்த்தி செய்து கொள்ளும் காலம் விரைவில் வரும். அதைப் பார்க்க பிரஹலாத் இல்லாது தான் சோகம். இவரது மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல மேலாண்மை சமுகத்திற்கே மிகப்பெரிய பெரிய இழப்பு.

தோசை

எப்போதும் போல அன்று பள்ளிக்கு சென்றேன். எல்லோரும் ஏதோ பரீட்சைக்கு படித்துக்கொண்டு இருந்தார்கள். ஸ்கூல் மணி அடித்த போது தான் இயற்பியல் வகுப்பு தேர்வு என்று முந்திய வாரம் வாத்தியார் சொன்னது என் மண்டையில் ஒலித்தது. வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்றால் முடியாது. மயக்கம் வந்தால் தான் அனுப்புவார்கள். மயக்கம் வருவதற்குள் தேர்வு ஆரம்பித்துவிடும்!

முதலியத்தை விமர்சிக்கும் மர்ம நாவல்கள்

பல நாடுகளிலும் துப்பறியும் நாவல்கள், மர்மக் கதைகள் சமூக விமர்சனத்துக்குக் கருவியாகப் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து போன்ற ஸ்காண்டிநேவிய நாடுகளில் சமீபகாலமாக மர்ம நாவல்கள் நிறைய வெளிவருவதோடு, அவை மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில மொழி உலகில் பரவலாக விற்பதும், அவை எல்லாமே ஒரு விதமான சமூக விமர்சன நோக்கோடு வெளிவருவதும் கவனிக்கத் தக்கன.

நோலிவுட் – நைஜீரிய திரைப்பட உலகம்

நோலிவுட். அப்படித்தான் நைஜீரிய திரையுலகம் தன்னை அழைத்துக் கொள்கிறது. இந்தியத் திரை உலகத்தைப் பல கோணங்களில் நினைவுப்படுத்தும் நைஜீரியாவின் திரையுலகம். தன்னை குறித்த மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள், தன் ஆளுமை மீதான அடிப்படையற்ற மமதை இன்னும் பல. இந்த புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். இந்திய திரையுலகத்தையும் மேற்குலகம் “நோலிவுட் – நைஜீரிய திரைப்பட உலகம்”

உங்கள் காலடி உலகில்..

தன் வறுமை நிலையையும்,
தன் உடலின் நிலையாமையையும்.
ஆடி மகிழ்ந்தான்,
தன் வாழ்வின் வேதனைகளில்.
இச்சுதந்திரச் சிறகுகள்,
நம்புங்கள்,
ஒரு நூலளித்தப் பரிசு!

சாம்சனின் கதவு

ஒரு சாதாரண மனிதன் இறைவனின் அற்புத வரத்தால் செய்ய முடிந்த சாகசங்களைக் குறித்து எடுத்துக்கூற எங்களிடம் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. உங்களின் சாம்சனையே எடுத்துக்கொள்வோம். கடவுளால் அருளப்பெற்ற சாம்சன் ஒரு கழுதையின் தாடை எலும்பைக்கொண்டு தன் எதிரிகளைத் துவம்சம் செய்ததாகவும், கோட்டைக் கதவுகளைத் தன் தோளில் சுமந்து சென்றதாகவும் கதைகள் உண்டு. அது இறைவனால் அருளப்பட்ட ஒரு சக்தி என்று போற்றி மகிழ்கிறீர்கள். ஆனால் சாம்சனை, ஹிந்துக்கள் வணங்கும் ஹனுமனுக்கு இணையாக கூற இயலாது.

எல்லாக் கோடையும் ஒரே நாளில்

ஏழு வருடமாக மழை பெய்கிறது; ஆயிரமாயிரம் நாட்களையும் கூட்டிக் குவித்தால் எல்லாம் மழை, ஒரே நீர்த்தாளம், பீறிக் கொண்டு ஓடும் நீரொலி, அவ்வப்போது இனிமையாக மணிமணியாகச் சிதறும், சில நாள் புயலாக மழை பெய்து பெரும் சுவர்களைப் போல எழுந்து அலைகள் அந்தத் தீவுகளை அறையும். ஆயிரம் காடுகள் மழையில் அழிக்கப்பட்டு, ஆயிரம் காடுகள் மறுபடி எழுந்து மறுபடி அழிந்திருக்கின்றன.

உ.சு.வா

உரிமைக்குரல் பார்க்க காலையில் அப்ஸரா பார்பர் ஷாப்பில் தினத்தந்தி படிக்கும் போதே முடிவு செய்து விடுவான். ‘என்னைக்கு பரிட்சைக்கு போகாம படகோட்டிக்கு போனானோ, அன்னைக்கே இந்த தாயளி வெளங்க மாட்டான்னு நான் முடிவு பண்ணிட்டெம்லா?’ தனது தகப்பனார் லெட்சுமண பிள்ளையின் வழக்கமான ஏச்சுக்கள் கபாலி மாமாவின் காதுகளில் மோதி மறுபடியும் பத்திரமாக அவரிடமே திரும்பிச் சென்றன. கபாலி மாமா நாளுக்கு நாள் எம்.ஜி.ஆரிடம் நெருங்கிக் கொண்டேதான் இருந்தான்.

காகித உலகம் – அனிமேஷன் படம்

பராகுவேயைச் சேர்ந்த ஜோக்வின் பால்ட்வின் (Joaquin Baldwin) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அனிமேஷன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது உருவாக்கிய Papiroflexia என்ற அனிமேஷன் குறும்படம் இது. இயந்திரமயமாகி வரும் உலக வாழ்க்கையை வெகு அழகாகக் காட்சிப்படுத்திய இப்படம் யாருமே எதிர்பாராத வகையில் 2008-ஆம் ஆண்டின் கான் திரைப்படவிழாவின் இறுதிச்சுற்றுக்குச் சென்றது. “காகித உலகம் – அனிமேஷன் படம்”

அட்டவணையில் இடம் கோரும் குண்டுத்தனிமம்

திடீரென்று இப்படி ஒரு கட்டுரையை சொல்வனத்தில் எழுதுவதற்குக் காரணம், ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று ஒரு ஆராய்ச்சிக்குழு சொல்லியிருக்கிறது. அந்தப் புதிய தனிமத்தின் அணு எண் 117. அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக வேலை செய்த இந்தக் குழு, ரஷ்யாவில் இந்த கண்டுபிடிப்பை நடத்தியிருக்கிறது.

அகிரா குரோசவா – நூற்றாண்டுக் கலைஞன்

அகிரா குரோசாவின் திரைப்படங்களின் மிகவும் முக்கியமான சிறப்பம்சம் காட்சிகளின் அமைப்புகள். அவரது காட்சியமைப்புகளில் இரண்டு பிராதன அம்சங்கள் – ஒன்று நிலப்பரப்பு குறித்த காட்சியமைப்பு; இரண்டாவது ஒரு கதாபாத்திரம் போலவே வந்து போகும் காலம்.

மகரந்தம்

போர்க்காலத்தில் இரு தரப்பினரும் தமிழர் வாழ் பகுதிகள் முழுதும் எங்கெல்லாமோ கண்ணி வெடிகளைப் புதைத்து இருந்தனர் என்பது நமக்கு ஒரு தகவலாகத் தெரியும், ஆனால் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவை அன்றாடத் தாக்குதல்கள், பெரும் பயம் தரும் ஆபத்துகள், அவர்களைத் தம் வீடுகளருகேயோ, வயல்களிலோ சுதந்திரமாக நடமாடவோ, அவற்றில் உழைத்து வாழ்வாதாரம் தேடுவதோ சாத்தியமில்லாமல் ஆக்கும் பயங்கரங்கள்.

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம். மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல. அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள். அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது. அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.

பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீரங்கம் வி. மோஹனரங்கன்

நாற்பது வருடங்களுக்கும் மேலாக கவிஞர்களாக உலா வருகிறவர்கள், விருதும் பாராட்டு விழாக்களுமாகத்தான் உலா வருகின்றனர். கவிதை எனச் சொல்லத் தக்க எதுவும் எழுதியறியாதே. அவை கவிதை இல்லை என்று நான் தர்க்கித்து நிறுவ முடியாது. தர்க்கித்தல் விதிகள் சார்ந்தது.

மேல்கோட்டையில் ஒரு நாள்

ராஜவீதி என்னும் கடைத்தெருவில் திருவிழாக் கூட்டம். முதலில் என் கண்களில் பட்டது இனிப்புக்கடைதான். செங்கலை விடக் கொஞ்சம் பெரிசாக மைசூர் பாக் இருப்பதைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவரிடம் ஒரு மைசூர் பாக் என்ன கிலோ இருக்கும் என்று கேட்க நினைத்துக் கிட்ட போக உடனே அவர் நான் ஏதோ வாங்க வந்திருக்கும் கஸ்டமர் என்று நினைத்து, நம்ப மாட்டீர்கள், ஒரு பாதி மைசூர் பாக்கை என்னிடம் சாம்பிளுக்குச் சாப்பிடக் கொடுத்தார். பயந்து கொண்டு ஓடிவிட்டேன்.

2012 – இல்லாத அறிவியலும், இருக்கும் இறையியலும்

இந்த 2012 உலக அழிவு குறித்த வதந்திகள், கதைப்பின்னல்கள் இத்திரைப்படத்தைக் காட்டிலும் பழமையானவை. அவற்றின் சரடுகள் (pun intended) படு-சுவாரசியமானவை. சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துப் பலகைகளிலும் அப்பண்பாட்டின் சித்தரிப்புகளிலும் ஒரு மர்மமான கிரகம் குறித்து சொல்லப்பட்டிருப்பதாகவும் அது 2003 இல் தோன்றி உலகத்தில் பேரழிவை உருவாக்குமெனவும் பரவலாக நம்பப்பட்டது.

கன்னி வெடி

மனித வெடிகுண்டு தாக்குதலில் பெண்களை உபயோகிப்பது நல்ல பலன்களை(?!) அளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு ஆண் மனித வெடிகுண்டு சராசரியாக 13 மனித உயிர்களை மட்டுமே கொல்கிறான். ஆனால் ஒரு பெண் மனித வெடிகுண்டு சராசரியாக 21 மனித உயிர்களை கொல்கிறாள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.

பூச்சுகளற்ற எதார்த்தம், இடரில் நகைப்பு- போலிஷ் கவிதைகள்

இவருடைய பல கவிதைத் தொகுப்புகளும், படித்தவர் மனதில் ஸ்டாலினிய காலத்து அடக்கு முறை ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துன்பங்களையும், யூரோப்பின் இருண்டகாலம் எனப்படும் அந்த வருடங்களையும் ஒருக்காலும் மறக்க் முடியாமல் பதிப்பன எனச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் பரபரப்பான முழக்கங்கள் நிறைந்த, ஆரவாரிப்புகள் உள்ள கவிதைகள் அல்ல இவருடையவை. அவை அரசியல் கவிதைகளே அல்ல, கவனமான உளவியல் பார்வை கொண்டவை.

துயரில் விளைந்த ஜனநாயகம் – போலந்து

சென்ற வார இறுதியில் – சனிக்கிழமையன்று, போலந்து நாட்டின் அதிபர் லெஹ் கசின்ஸ்கியும், அவருடன் சுமார் 95 போலிஷ் தலைவர்களும், பல முக்கியஸ்தர்களும் பயணித்த ஒரு விமானம் ரஷ்யாவில் ஒரு விமானதளத்தில் இறங்க முயற்சித்தபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தார்கள். போலந்தின் தற்போதைய அரசின் பல முக்கிய தலைவர்கள் இதில் இறந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த போலிஷ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா ஏதோ சதி செய்து தம் அதிபரைக் கொன்றதாகப் போலிஷ் மக்கள் கருதுகின்றனர் எனத் தெரிகிறது. இது குறித்து மாஸ்கோ டைம்ஸ் என்கிற ரஷ்யப் பத்திரிகையே கூட ரஷ்ய அரசு ஏதோ சதி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டு, அந்த சம்பவம் திறந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று சொல்கிறது.

போலந்தில் சமீபத்தில் ஷேல் எனப்படும் மண்ணடுக்குகளில் எரிவாயு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. யூரோப்பின் எரிவாயுச் சப்ளை மீது ரஷ்யாவுக்கு இன்று இருக்கும் இரும்புப்பிடி பயனற்றுப் போய்விடும்.

இணையத்தின் திடீர் சாமியார்கள் – அந்தரங்கம் யாவுமே

விபூதி கொடுத்து உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று கிடைத்ததை சுருட்டும் சாமியார்களை பற்றி அறிந்து இவர்களை தவிர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். ஆனால், இணையத்தில் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பெறத் துடிக்கும் மோசடிக் கூட்டம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

அங்காடித்தெரு – ஒரு பார்வை – பகுதி 2

இதைப் பார்க்கையிலேயே நமக்குத் தோன்றும் முதற்கேள்வி, இவ்வளவு எளிதாகக் காணக் கிடைக்கும் ஒரு பெரும் சோக நாடகத்தை ஒரு திரைப்படமாக்க தமிழ் சினிமாவுக்கு ஏன் இத்தனை பத்தாண்டுகள் ஆயிற்று என்பதுதான். இப்போதுமே நம் மக்கள் இத்தகைய சினிமாவைப் பார்த்து முழு ஈடுபாட்டுடன் அதைக் கவனிப்பார்களா என்பது குறித்தும் எனக்கு ஐயம் உண்டு.

பட்டம்

இது மூட நம்பிக்கை என்று கருதப்படக் கூடும். எனினும், முழுக்கவும் காரணங்களில்லாமல் இவ்வாறு நம்பப்படவில்லை என்பதே சீனத்தில் பலரும் சொல்கிறார்கள். மைதானத்தில் இறங்கி நல்ல காற்றைச் சுவாசித்துக் கொண்டு பட்டம் விட்டால் உடல் நோயும் மனநோயும் விலகி உற்சாகம் பிறக்கத்தானே செய்தது…