மீன் பிடிக்கும் வலையில்
ஒளிபிடிக்க முயன்ற பேதமை புரிந்து
கடற்கனவில் இருந்து விழித்துக் கொண்டவன்
இப்போது மறந்துபோக முடியாத பாடல் ஒன்றைத்
தேடிக் கொண்டிருக்கிறான்
ஆசிரியர்: ஆனந்த்
முதல் மழைத்துளி
கோயில் கோபுரத்தின்
இரண்டாயிரத்தைந்நூறு சிற்பங்களில்
ஒன்றை மட்டும் காட்டி
இதோ பாரதிசயத்தை என்று
காட்டிவிட்டுக் கைகட்டி நின்றான்
‘ஒளி வரும் வரை’ – கவிதைகள்
….கோயில் தூண்களில் சேரும் உடல்கள்
காலத்தின் வாசனை கோயிலுக்குள் மணக்கிறது
கற்பூரம்போல…..