இப்போது குழந்தைகள் தாமே ரயில் விட ஆரம்பித்தன. கோதைதான் எல்லோருக்கும் முதலில் வழக்கம்போல் நின்று கொண்டிருந்தாள். அவள் தெருக் கோடி வரை போய் விட்டு திரும்புகையில் அவள் முன் தாடியும், மீசையும் பரட்டை முடியும் அழுக்குப் பஞ்ச கச்சமுமாக ஒரு கிழவர் தோன்றினார். குழந்தை நிமிர்ந்து பார்த்தது. அவர் அதை வாரி அணைத்துத் தூக்கிக் கொண்டார். கண்களில் நீர் பெருக அதை இறுக்க அணைத்துக் கொண்டார்.
Category: இதழ்
கலர்க் கனவுகள்
அனுமாருக்கு பார்டர் எல்லாம் போட்டு கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் அறையில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலைகோத்து சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணையை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் கொடுத்த செந்தூரத்தை அந்த காலெண்டர் அனுமார் மீது தடவ புதிதாக அந்த அனுமாருக்கு ஒரு தேஜஸ் கிடைத்து, ஆஞ்சநேயர் ஆகிவிட்டார். பல வருடங்களாக இருந்த அந்தப் படம் வெள்ளை அடிக்கும் போது எங்கோ போய்விட்டது. ரொம்ப நாள் மலையைச் சுமந்தவருக்கும் ரெஸ்ட் வேண்டாமா?
‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல் – பகுதி 2
என்னை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஆள், அமெரிக்காவுக்கு அடிக்கடிப் போய் வருகிறேன் என்றெல்லாம் 1994-95களிலிருந்தே கூறி வருகின்றனர். கோவை ஞானி மட்டுமே, ”ஏன் இப்படியெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாராம். அதற்கு இவர்கள், ‘அவர் அமெரிக்கக் கைக்கூலியாக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி எழுதியதால் இனிமேல் அமெரிக்காவிலிருந்து பணம் வருவதாக இருந்தால் அது வராமல் தடுத்து விடும் இல்லையா?’ என்றார்களாம்.
எண்ணெய்ச் சிதறல் பற்றி : சில எண்ணச் சிதறல்கள்
முதலில் “இது ரொம்பச் சின்ன விபத்து. கவலையே வேண்டாம்” என்று சாதித்தார்கள். பிறகு கிணற்றிலிருந்து பத்து மைல் நீளம், மூன்று மைல் அகலத்தில் ராட்சச எண்ணை ஊற்று பீச்சி அடிக்க ஆரம்பித்தது. சேற்றையும் சிமெண்ட்டையும் கொட்டித் துளையை அடைக்கப் பார்த்தார்கள். பெரிய டப்பாவைக் கவிழ்த்து மூட முயற்சித்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டு இரண்டு மாதமாக எண்ணெய் உற்சாகமாகக் கொப்பளிக்கிறது. இனி யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. “அமெரிக்க அரசாங்கம் அங்கே ஒரு அணு குண்டைப் போட்டால் கடலடிப் பாறைகள் உருகிக் கிணறு அடைத்துக் கொள்ளும்” என்று கூட ஒரு ஐடியா வந்தது. அடைத்துக் கொள்வதற்கு பதிலாக ஓட்டை இன்னும் பெரிசாகிவிட்டால்?
வாசகர் மறுமொழி
பத்து நாள் பயணம் போய் எழுதுகிற டூரிஸ்ட் எழுத்து இல்லை நான் சொல்வது. பால் தொரொ செய்வது அதைத்தான். அவருடைய கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் தில்லி – சென்னை பயணக் கட்டுரையைப் படித்தால் புரியும். தி கிரேட் ரயில்வே பஜார் புத்தகத்தில் உள்ளது. பார்த்ததை நாடகீயத் தன்மையோடு சொல்ல அவர் கற்பனை உரையாடல்களையும் கலப்பார் என்று கேள்விப்பட்டேன். இன்னொரு பயண எழுத்தாளரும் நகைச்சுவையாளரும், அறிவியலாருமான பில் ப்ரைஸன் சொன்னதாக நினைவு.
எழுத்தாளர்கள் என்னும் மனிதர்கள் – ஜோசே சாரமாகோவை முன்வைத்து
தன்னுடைய ‘பார்வையின்மை’ நாவலை, ‘அடக்குமுறையைப் பற்றிய என் விமர்சனம் இந்த நாவல். பல பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டி மேலும், மேலும் அவர்களை ஏழ்மையாக்குவதைக் குறித்த என் மன வருத்தத்தை என் நாவல் வழியே முன்வைக்கிறேன்” என்கிறார் சாரமாகோ. அப்படிப்பட்டவர் இரண்டு சர்வாதிகாரங்கள் மறைந்து ஒரு ஜனநாயகம் மலர்ந்த தினத்தை ‘இருண்ட நாளாக’ ஏன் பார்க்கிறார்? தான் அதிகாரத்தில் அமர்ந்த ஒரே ஒரு முறை (பத்திரிகையாசிரியர்), கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை ஏன் நெறித்தார்? தான் நம்பும் கொள்கைகளுக்காக எந்தவிதமான சர்வாதிகாரத்தையும் சகித்துக் கொள்ள ஏன் அவர் தயாராக இருந்தார்?
மனிதனாக விரும்பிய இயந்திரர்கள்
அஸீமோவ்வின் “Robots as pathos” என்பதன் ஒரு உச்சமாகவே இந்த திரைப்படத்தை நாம் கருதலாம். இத்திரைப்படத்தின் ஊடாக ஒரு சிறிய பரிணாம வளர்ச்சியைக் காணலாம். திரைப்படத்தின் தொடக்கத்திலேயேமொரு முக்கிய கேள்வி எழுப்பப்படுகிறது. உணர்ச்சிகளை உள்ளடக்கிய ரோபாட்களை -செயற்கை நுண்ணறிவை – உருவாக்கினால் அத்தகைய உருவாக்க்கங்களுடன் மானுடத்தின் கடப்பாடு என்னவாக இருக்கும்?
விண்வெளி ஒளிப்படக் கலைஞர்
ஜப்பானிய விண்வெளி வல்லுநர் சோய்ச்சி நோகுச்சி ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஒரு விண்கலத்தில் பொறியாளராகப் பணியாற்றி மீண்டும் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். சிறந்த புகைப்படக்கலைஞராகவும் இருந்த இவர் விண்வெளியிலிருந்து பல அரிய புகைப்படங்களை எடுத்து நேரடியாக விண்வெளியிலிருந்தே இணையம் வழியாக டிவிட்டரில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இவர் எடுத்த சில அற்புதமான “விண்வெளி ஒளிப்படக் கலைஞர்”
மகரந்தம்
அண்டார்க்டிகா என்ற பகுதியைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கு நீர் என்று தனியாகக் கிடையாது, ஏனெனில் உலகின் மிகக் குளிரான சில பகுதிகளில் இது ஒன்று. அங்கு எங்கும் கிட்டுவது பனிக்கட்டி. தரைப்பரப்பு முழுதும் பல மைல் உயர பனிக்கட்டிகளே அடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பகுதியில் மனிதர் என்ன விளைவித்து எப்படிச் சாப்பிடுகிறார்?
எண்ணெய்ச் சிதறல் – என்ன நடக்கிறது?
விபத்து மூலம் வெளியேறி கடலில் கலந்துவிடும் எண்ணெயினால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று: முக்கியமான மீன் வளங்களும், நீர்வாழ் உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்படுதல். குறிப்பாகச் சொல்வதென்றால், மிக நுண்ணிய படிநிலைகளை கொண்ட மீனின் வளர்ச்சிக் காலகட்டங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. மீனின் முட்டைகளும், லார்வாக்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன.
ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று
ஜி.என்.பி. காலத்தில் ஷண்முகப்பிரியா ராகத்தில் முக்கால் மணிநேரம் இருந்திருக்கிறது. இன்று இத்தெம்பு இள வித்வான்கள் பலரிடம் இல்லை. அப்படியே ஒரு 15 நிமிடம் உழைத்துப் பாடினாலும் ரசிகர்கள் சிலரிடமே ஒருமுகப்படுத்தி கேட்கும் தெம்பும் இருக்கிறது. தலை ஆடுவது நின்று, கால் ஆடி, பிறகு கை நடுங்கி, வாவ், ஃபுல் ஸெட் மா என்று எஸ்ஸெம்மெஸ்ஸிக் கொள்கிறார்கள். இல்லை தரஸ்தாயியில் ஆசுவாசிக்க பாடகர் சற்று மூச்சுபிடித்து நின்றால், அவசரமாய் கைதட்டி நடுக்கத்தை குறைத்துக்கொள்கிறார்கள்.
ஐரோப்பாவிலிருந்து அங்காடித்தெரு வரை – 2
அநீதியும் சுரண்டலும் எக்காலத்திலும் இல்லாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஆனால் அவற்றை எதிர்த்து சமூகத்திலும், சட்டரீதியாகவும் குரல் எழுப்ப முடிகின்ற அரசியல் சூழல் அமைந்து விட்டால், அநீதியும் சுரண்டலும் அதிக காலம் ஓரிடத்தில் நீடிக்கவும் முடிவதில்லை. அப்படிப்பட்ட குரல் எழுப்ப இயலுகின்ற சூழல் உருவாக ஜனநாயகமும், சுதந்திர நீதித்துறையும், ஊடகங்களும் அவசியமானவை, இவை எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இயங்க முடிகிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வலுப்பெறுகின்றது.
ராஜ்நீதி, ராவண்: கசக்கியெறிந்த காவியங்கள்
ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக்கதைகளை எடுத்தாள்வதில் ஒரு சௌகரியம் உண்டு. ‘ஓஹோ ‘ ப்ரொடக்ஷன் நாகேஷ் போல் ‘கதை’ க்காக அலையவேண்டியதில்லை. ராமாயணம் என்றால் கதாநாயகியை வில்லன் கடத்துவது, மகாபாரதம் என்றால் குடும்ப-அரசியல் தகராறு என்று ஒரு மெல்லிய கதையை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் எடுத்துவிடலாம். இந்த இருபெரும் காவியங்களில் வரும் ஒவ்வொரு சின்னச்சின்ன பாத்திரமுமே அதற்கென்ற தனித்தன்மையுடனும், ஆழத்துடனும் இருக்கும். ஆனால் உங்கள் திரைவடிவக் கதையில் அதை எவ்வளவு எளிமையும், மலினமும் செய்யமுடியுமோ அவ்வளவு செய்துவிடலாம்.
ஐரோப்பாவிலிருந்து அங்காடித்தெரு வரை
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் பல தொழிலாளர் விவரணைகளைப் படிக்கையிலும் இரக்கத்தை விட மேலோங்கி நிற்கும் ஆசிரிய உணர்ச்சியாக இரண்டு விஷயங்களை நம்மால் எளிதாக இனம் காண முடியும்: எரிச்சல் மற்றும் எதிர்பார்ப்பு (”எப்போது புரட்சியாய் வெடிக்கப்போகிறது”) ஆகியவையே அவை. மார்க்ஸும் ஏங்கெல்ஸும் அன்றைய ஐரோப்பிய தொழிலாளர் வாழ்க்கையின் பரிதாபச்சரிவை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கினர் என்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம்.
நட்சத்திரம் பார்த்தல்
லூஸ் மோகன், குண்டு கல்யாணம், பிந்துகோஷ், ராக்கெட் ராமனாதன் போன்ற நடிகர்களைப் பார்க்க முடிந்தது. வருடாவருடம் விழா நடக்கும். ஒவ்வொரு வருடமும் மேற்குறிப்பிட்ட நடிகர்கள்தான். இத்தனை நட்சந்திரங்களுடன் பழக்கம் உள்ள கர்வம் கொஞ்சமும் இல்லாமல் வேலாயுதம் அண்ணன் நெல்லைவாழ் மக்களுடன் எளிமையாகவே பழகி வந்தார்.
கதைக்களன் – ஓர் உரையாடல்
ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை அவன் வாழும் இடத்திலிருந்து இடம்பெயர்க்கப்படுவதுதான். அப்படி இடம்பெயரும்போது, படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண் திடீரென்று அடைக்கப்பட்டதுபோல் பெரும்பாலான படைப்பாளிகள் உணர்வார்கள். ஒரு எழுத்தாளனை நாடு கடத்துவது அவனைக் கொல்வதை விட சித்திரவதையளிக்கும் தண்டனை.
க.நா.சுப்பிரமணியன் பற்றிய புதிய நூல்
க.நா.சு தொகுத்து வெளியிட்ட நூல்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய விரிவான அறிமுகக் கட்டுரை இருக்கும். இலக்கியக்கட்டுரைகள் என்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் ஏற்பட்டுவிட்டது. க.நா.சு இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல் அனைவரும் அந்த
விவாதத்தில் பங்கு பெறவேண்டும் என்று நினைத்தவர். ஆதலால் எளிய நடையில் அவருடைய கட்டுரைகள் இருக்கும்.
‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல்
வெங்கட் சாமிநாதன் எழுத ஆரம்பித்து இந்த வருடத்தோடு ஐம்பது வருடங்களாகின்றன. இத்தருணத்தில் வெ.சா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, தில்லி வாசம், இலக்கிய நண்பர்கள், தமிழக அரசியல், இலக்கியம் எனப் பல விஷயங்களைக் குறித்தும் பேசும் விரிவான பேட்டியை, சொல்வனத்தின் இரண்டாமாண்டு சிறப்பிதழில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்:
“இங்கே தமிழ் வாழ்க்கை பாட்டும், நடனமும் கலந்தது; அதனால்தான் ‘கல்யாணம் கட்டிக் கிட்டு ஓடிப்போலாமா?’ என்று பாட்டும் டான்ஸும் கட்டாயம் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள் இல்லையா? அதற்குக் காரணம் நம் தமிழ் வாழ்க்கைதான் என்கிறார்கள் இல்லையா? இதே பாட்டும், நடனமும் கலந்த வாழ்க்கைதான் வங்காளிகளினுடைய வாழ்க்கையும். ஆனால் அவர்கள் சினிமாவில் அப்படி மசாலாக்கள் அவர்கள் சேர்ப்பதில்லையே, ஏன்?”
மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து
நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது
மரங்கள் இல்லாத நிலம் பயங்கரமானது
ஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ஆம் தேதி ‘உலக சுற்றுச்சூழல் நாளாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்ற வாரம் அனுசரிக்கப்பட்ட இந்த நாளை முன்னிட்டு மரங்கள் பற்றியும், இயற்கையுடனான மனிதர்களின் உறவு பற்றியும் ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுகளில் சிலவற்றை இங்கே திரு.வ.ஸ்ரீனிவாசன் மொழிபெயர்ப்பில் தருவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.
கர்ட் வானகட் – இலக்கிய நிகழ்வு
பிரபல எழுத்தாளர் கர்ட் வானகட் எழுதிய அறிவியல்-புனை கதைகள் உலகப் புகழ் பெற்றவை. அவருடைய எழுத்துக்கள் சமூக அவலங்களை எள்ளலுடன் கூடிய கூர்மையோடு விமர்சிப்பவை. இலக்கியம் குறித்தும், தன்னுடைய எழுத்துக்கள் குறித்தும் வானகட் பேசுகிறார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வானகட் போர் அவர் மீது நிகழ்த்திய பாதிப்பு “கர்ட் வானகட் – இலக்கிய நிகழ்வு”
சுரண்டல்
அம்மாவிடமும், மனைவியிடமும் செருப்புத் தோலைக் காட்டினான். ‘இதை எதுக்கு வாங்கிண்டு வந்தே’ என்றாள் அம்மா. ‘கொடுத்தாங்க. வாங்கிண்டு வந்தேன். எல்லாம் வழக்கமா தரதுதான். அவனவன் ஆயிரம் பண்றான். இது வெறும் செருப்புத்தோல். நூறு இருநூறுதான் இருக்கும். எங்காபீஸ்ல இதெல்லாம் எல்லாருக்கும் கிடைச்சிண்டுதான் இருக்கு’ என்றான்.
ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை
கடைசியாக நீங்கள் வானில் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் உள்ளவரா? என்றாவது ராத்திரி மேலே பார்க்கும் போது அதிசயமாக ஏதாவது பார்த்தால் கடவுள் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். அது கழிவாக கூட இருக்கலாம். 2009-ல் வானில் ஒளித்தோற்ற அதிசயம் ஒன்றைப் பார்த்தார்கள். பார்த்தவர்களுக்குத் தெரியாது அது மேலே சென்ற விஞ்ஞானிகளின் சிறு(நீர்த்)துளிகள் என்று!
எந்தக் கடையில் வாங்கின மூக்கு?
ஒரு பக்கம் செயற்கை உயிர், அது இது என்று உதார் விட்டுக்கொண்டு அந்தப் பதினைந்து நிமிஷப் புகழ் மழையில் செயற்கையாக நனைந்துவிட்டு, ஈரம் உலர்ந்தவுடன் மறக்கப்படுகிற விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் மருத்துவ இயலில் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் மற்றொரு பக்கம் ஓசைப்படாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக டிஷ்யூ எஞ்சினியரிங் என்ற இயலைச் சொல்லலாம்.
பாகிஸ்தானிய ஆங்கில இலக்கியம் – ஒரு பார்வை
தானியால் முயுனுதீன் மேற்கத்திய மீடியாவில் ஆர்.கே.நாராயணனோடு ஒப்பிடப்படுகிறார். இருவரின் கதைகளிலும் எளிய நகைச்சுவை, அறம் சார்ந்த கேள்விகள் இருக்கும். இருவருமே பெரும் அகச்சிக்கல்களையோ, சமூக அரசியல் குறித்தோ பேசுவதில்லை என்பது குறையாகப் பட்டாலும், இத்தகையான எளிய நேர்மையான எழுத்தே பாகிஸ்தானிய ஆங்கில எழுத்தில் படிக்கக் கிடைப்பதில்லை என்பதால் தானியாலின் எழுத்து முக்கியமான ஒன்றாகிறது. அது மட்டுமில்லாமல், பாகிஸ்தானின் நிலப்பரப்புகளைக் குறித்த நுணுக்கமான வர்ணனைகள் தானியாலின் எழுத்துகளில் படிக்கக் கிடைக்கின்றன.
இரண்டாம் ஆண்டில் சொல்வனம்
இந்த ஒருவருடத்தில் நாங்கள் கற்றுக் கொண்டவை ஏராளம். வலை வடிவமைப்புத் தொழில்நுட்பத்தையே கூட முதல் இதழுக்கு வடிவமைக்கும்போதுதான் கற்றுக் கொண்டோம். எந்த குழுப் பின்புலமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழைத் தமிழின் தேர்ந்த எழுத்தாளர்கள் ஆதரித்து உற்சாகப்படுத்தினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக வாசகர்களின் தொடர்ந்த வருகையும், எதிர்வினைகளும் உற்சாகமூட்டுபவையாகவும், வழிநடத்துபவையாகவும் இருந்தன.
காட்டுத் தீ
இயற்கையின் ஐம்பெரும் சக்திகளில் ஒன்றாக அக்னியை வணங்கிய கலாச்சாரத்தின் ஏதோ ஒரு புள்ளியை தினமும் தொட்டபடி வாழ்பவர்கள் நாம். அதை போற்றிப்பாடிய நாம் அவ்வப்போது அதன் கோர தாண்டவத்தையும் கண்டிருக்கிறோம். உலகம் நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த காட்டுத் தீ விபத்துகளின் புகைப்பட தொகுப்பு ஒன்றை இங்கே காணலாம். “காட்டுத் தீ”
கார்ட்டூன் – இதழ் 27
எலெக்ட்ரீஷியன் நவாப்தீன்
உடைந்த ரேடியோக்களை வாங்கி அவற்றை சரிசெய்து மீண்டும் விற்றான். கடிகாரங்களை ரிப்பேர் செய்யும் தொழிலைச் செய்யக் கூட அவன் தயங்கவில்லை. ஆனால் அத்தொழில் அவன் செய்த தொழில்களிலேயே மிகப்பெரிய தோல்வியைக் கண்டது. வாழ்த்துகளைக் காட்டிலும், வசவுகளையே அதிக அளவில் பெற்றுத்தந்தது. ஏனென்றால் அவன் சரி செய்த கடிகாரங்கள் அதன்பின் எப்போதுமே சரியான மணியைக் காட்டியதில்லை.
ஆச்சரியம்
கோப்புகளின் மேல் மட்டையில் ‘அவசரம்’ ‘மிக அவசரம்’ ‘உடனே’ போன்ற ஒட்டுப்பேப்பர் குறிப்புகளை அவரே ஒட்டி அனுப்புவார். அவருடைய கட்டளைகளை ஊழியர்கள் அவர் விதித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டுமானால் அவர்கள் அன்று வீட்டுக்கு போக முடியாது. அடுத்தநாளும் முடியாது. அவர்கள் கோப்புகள் கைகளில் கிடைத்ததுமே ஒட்டுப்பேப்பரை அகற்றிவிடுவார்கள். உடனே அவை சாதாரண கோப்புகளாக மாறிவிடும்.
ரோபோட்கள்: ஞான உச்சமாகவும் விலக்கப்பட்ட கனிகளாகவும்
செயற்கை மனித இயந்திரத்தை உருவாக்குவது மானுட அகங்காரத்தின் வெளிப்பாடாக காணப்பட்டது. …மானுடனை ஆன்மாவுடன் உருவாக்குவதென்பது கடவுளால் மட்டுமே முடிந்த ஒன்று. எனவே மனிதன் உருவாக்கும் செயற்கை மனிதன் ஆத்மா இல்லாத ஒரு வக்கிரமே. எனவே ஒரு செயற்கை மனிதனை உருவாக்குவதே தீமையில் தான் முடியும் ஏனெனில் மனிதன் அறியப்படக்கூடாத இரகசியங்கள் இருக்கின்றன என்பதே மீண்டும் மீண்டும் (புனைவுகள் மூலமாக) உபதேசிக்கப்பட்டன.
கடவுள் நமக்குத் தேவையா?
இஸ்லாமிய நாடுகளில் கல்வித்திட்டத்தின் மீது மத ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு அமெரிக்காவிலும் மத ஆதிக்கம் இருக்கிறது. தொழிற்வளம் முன்னேறிய (இஸ்லாமிய) நாடுகளில் நம்மை துருக்கியுடன் ஒப்பிடலாம். சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைவிடவாவது நாம் சில படிகள் மேலே இருக்கிறோம் என்றே நான் நினைக்க விரும்புகிறேன்.
மகரந்தம்
பல ஆசிய நாடுகளில் கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆர்ஸெனிக் என்னும் கொடும் விஷம் கலந்த நீர்தான் கிடைக்கிறது. இந்த நீரை அருந்தும் ஆசிய மக்கள் பலவகை நோய்களுக்கு உள்ளாகிறார்கள். இந்தியா, வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இந்தப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. இமயமலை சார்ந்த வெளிகளில் அடிமண்ணில் உள்ள பண்டைக்காலக் கரியடுக்குகளில் இருந்துதான் இந்த நஞ்சு கசிகிறது.
கடவுளுக்கு வி.ஆர்.எஸ்!
வேறொரு விதத்தில் சொல்ல முயன்றால், நாம் ஒரு பாட்டு. அ,டி,க,ஸ என்று நாலே ஸ்வரங்களால் ஆன ட்யூன். நாலு ஸ்வரங்களில் இயற்கை எத்தனை கோடி ட்யூன் போட்டிருக்கிறது.இப்போது விஞ்ஞானிகள் இதே நாலு ஸ்வரங்களில் தாங்களாகவே இயற்கையின் முழுப் பாட்டு ஒன்றை வாசித்திருக்கிறார்கள். நாலு ஸ்வரங்களில் இயற்கை எத்தனை கோடி ட்யூன் போட்டிருக்கிறது.
மகரந்தம்
அமெரிக்க ராணுவத்தில பணியாற்றியதாகச் சொன்னால் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு அந்நாட்டுத் தேர்தல்களில் வெல்லுவது கொஞ்சம் எளிது. ப்ளூமந்தால் என்ற ஒரு அரசியல்வாதி இப்படித்தான் வியத்நாம் போரில் தாம் பங்கெடுத்ததாகப் பொய் சொல்லித் தேர்தலை வெல்லப் பார்த்தார், சமீபத்தில் மாட்டிக் கொண்டார். அவரிருந்த ராணுவக் குழு, அமெரிக்காவை விட்டுப் போனதே இல்லை
அரபு இலக்கியம் – அரசியலும், அகவெளியும்
கனவும், நடைமுறை வாழ்வில் இருக்கும் கட்டுக்கோப்பான சமூக அமைப்பின் தடைகளையும் பிரித்துப் பார்க்க இயலாத புனைவுகளே அரபு இலக்கியத்தின் பிரதான கருவாக வெளிவருகின்றன. சொல்லப்படும் கதைகளும் தனியொரு மனிதனின் போராட்டங்களை மையமாக கொண்டுள்ளன. பெண்களுக்கான அதீதக் கட்டுப்பாடுகள், சமூகத்தில் உலவும் சர்வாதிகார ஆண்கள்/ஆட்சியாளர்கள், மதத்தின் பெயரால் அடையாளங்கள் உருவாக்கி தனிப்பட்ட மனிதனிடம் திணிக்கும் மதவாதிகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர். மேலும் சமூக ஏற்றத்தாழ்வு, மதப்பற்று, பெண்களின் ஊமைக்காயங்கள் ஆழமான விவரணைகளால் வெளிப்படுகின்றன.
மார்ட்டின் கார்ட்னர் என்றொரு மாயப்புதிர்
‘சயிண்டிஃபிக் அமெரிக்கன்’ பத்தி ஒரு புரட்சியையே செய்தது எனலாம். அதில் அவர் ஒவ்வொரு இதழிலும் ஒரு புதிரைக் கேட்பார். அப்புதிர் கணிதம் தொடர்பானதாகவோ, ஜியாமெட்ரி தொடர்பானதாகவோ, வார்த்தை விளையாட்டாகவோ இல்லை வித்தியாசமான யோசிப்புமுறையைக் கோருவதாகவோ இருக்கும். அப்புதிருக்கான விடையை அதற்கு அடுத்த இதழில் வாசகர்கள் எழுதி அனுப்புவார்கள். புதிருக்கான விடையை கார்ட்னரும் விளக்கி பதிலெழுதுவார்.
நஞ்சாகும் கடல்
கடந்த இருபது வருடங்களில் பலமுறை கடலிலிருந்து பெட்ரோல் எடுக்கும் கப்பல்களில் விபத்து ஏற்பட்டு, சுத்திகரிக்கப்படாத கரி எண்ணெய் கடலில் கலந்திருக்கிறது. இது கடல்வாழ் உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் பெருமளவில் பாதிக்கும் ஒன்று. இந்த வருடம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) நிறுவனத்தின் எண்ணெய்க் கப்பல் ஒன்று பெரும் விபத்துக்குள்ளானது. ஒரு நாளைக்கு “நஞ்சாகும் கடல்”
புவியீர்ப்புவிசையின் வரலாறு
புவியீர்ப்புவிசை எவ்வாறு கண்டறியப்பட்டது, அதைக்குறித்தத் தொடர்ந்து அறிவியல் ஆய்வுகள் இவற்றைக் குறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ப்ரையன் க்ரீன் (Brian Greene) என்ற இயற்பியலாளர் சுவாரசியமாக விளக்குகிறார்.
கார்ட்டூன் – இதழ்26
காற்றில் கரைந்த கரஹரப்ரியா
சென்ற டிசம்பர் சீஸனில் ஒரு சபா விழாவுக்கு, டாக்டர்.ஜெகத்ரட்சகனைத் தலைமை தாங்க அழைக்கிறார்கள். அவர் மேடையேறி, ‘மிருதங்க வித்வான் டி.என்.கிருஷ்ணன் அவர்களே!’ என்று முழங்குகிறார். டி.என்.கிருஷ்ணன் என்ற அந்த 81 வயது “வயலின்” மேதை முன்வரிசையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எதற்காக ஒரு இசை விழாவுக்குத் தலைமை தாங்க, வித்வானின் இசைவகையைக் கூட அறிந்திராத ஒரு அரசியல்வாதியைக் கூப்பிட வேண்டும்? அப்படி என்னவிதமான சூழ்நிலைக் கட்டாயம்?
மொழிபெயர்ப்பு கவிதைகள்
வார்த்தைகளால் அடைய முடியா இடத்தில் அது தொங்கியது
வெளிச்சம் செல்ல முடியா இடத்தில் அது உறங்கியது.
அதன் வாசனை பாம்பைப் போலவோ எலியைப் போலவோ இல்லை,
புலன்நுகர்ச்சியாகவோ புலனடக்கமாகவோ இல்லை.
சீனா – கடலில் விரியும் அதிகார வலை
சீனா கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பத்து சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக அதன் சமூகம் மிகுந்த துடிப்புடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்கிறது. ஒரு நாடு வளர வளரத் தனக்கான புதிய தேவைகளை உருவாக்கிக் கொள்ளும். இந்தத் தேவைகள் தம்மைப் பல வடிவங்களில் விரிவாக்கிக் கொள்ளத் துடிக்கும். கடந்த 30 வருடங்களாக தன்னுடைய எல்லைக்குள் தன் ஆளுமையை பலப்படுத்திக் கொண்ட சீனா, தற்போது உலகளவில் தனக்கான ஆளுமையை நிறுவ எத்தனிக்கிறது. இதன் முதல் கட்டமாக தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு, தன் பார்வையை மொத்த உலகத்தின் மீதும் திருப்பியிருக்கிறது.
கரும்பறவையைப் பார்க்க பதிமூன்று வழிகள்
நீண்ட சாளரத்தின்
கரடு முரடானக்
கண்ணாடியில்,
நீர் உறைந்து நிறைந்தது.
அதன் குறுக்கும் நெடுக்குமாய்
கரும்பறவை நிழலாக நகர்கிறது.
பஸ் ஸ்டாண்ட்
எந்த ஊர் சென்றாலும் அவ்வூரின் பஸ் ஸ்டாண்டை தாண்டி அவன் சென்றதில்லை. சினிமா பார்ப்பதற்காக வெளியே செல்வான், அதிகபட்சம் அவ்வளவுதான். மீண்டும் வந்துவிடுவான். ஒரு ஊரில் கிடைக்கும் நண்பன் அந்த ஊரோடு சரி. அவன் எந்த ஊர் சென்றாலும் வாழ்விடமாக எப்போதும் நினைப்பது பஸ் ஸ்டாண்டைதான். வாழ்வில் காணும் சுகதுக்கங்கள், ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் பஸ் ஸ்டாண்டிலே கண்டுவிட முடியும். ஒரு நல்ல அனுபவத்தை தேடும் ஒருவன் பஸ் ஸ்டாண்டை புறக்கணிப்பதில்லை என்பது அவன் கண்டுபிடிப்பு.
அரை செஞ்சுரி துல்லியம் – பகுதி 2
இக்கட்டுரையில் அதிகமாக உபயோகிக்கப்பட்டுள்ள சொல் ‘துல்லியம்’. லேசரென்றாலே துல்லியம்தான் முதலில் மனதுக்கு வருகிறது. லேசர் பல தரப்பட்ட மக்களுக்கும் பல உதவிகள் கடந்த 50 ஆண்டுகளாக செய்து வந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு லேசர். 21 ஆம் நூற்றாண்டின் லேசர் போட்டியாளர் எதுவோ? இன்று பல லேசர் உபயோகங்களை நாம் பார்க்கிறோம். ஆனால், இது இன்னும் பலவாறு அதிகரிப்பது மிக சாத்தியமான ஒன்று.
இரண்டு கவிதைகள்
மீன் பிடிக்கும் வலையில்
ஒளிபிடிக்க முயன்ற பேதமை புரிந்து
கடற்கனவில் இருந்து விழித்துக் கொண்டவன்
இப்போது மறந்துபோக முடியாத பாடல் ஒன்றைத்
தேடிக் கொண்டிருக்கிறான்
புதுக்கூடு
வீட்டுக்குப் போனதும் சொல்ல வேண்டியிருக்கிற சமாதானங்கள் குறித்து இப்போதே அவன் மனதிற்குள்ளாக கோர்வையாக்கி வைத்துக் கொண்டான். அவனது பொய்கள் எளிதாக வெளிப்பட்டுவிடும். பொய் சொல்வதற்கேயுரிய சாமர்த்தியமும், மனதின் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டாமல் இருப்பதும் அவனுக்கு வாய்க்கவில்லை.
கார்ட்டூன் – இதழ் 25
வாழ்க்கையின் அர்த்தம்
நசிக்கு சமீபகாலமாக வாழ்க்கையில் அதிருப்தி. மற்றவர்களின் விருப்பத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக எதாவது செய்ய ஆசை. ஆனால், அன்றுகாலை விழித்ததிலிருந்தே அது நடக்கவில்லை. ‘காப்பகத்திற்கு வரும் மற்ற பெண்கள் பார்ப்பதற்குத் தங்களுடைய அம்மாக்களைப்போல இருக்கும்போது நான் ஏன் வித்தியாசமாக இருக்கிறேன்?’ என்று படுக்கையில் படுத்தபடி யோசிப்பதற்குள் அவளப்பா கிளப்பிவிட்டார். பான்கேக் தின்பதற்குமுன் அதற்குக் கண், மூக்கு, வாய் வைத்து அழகுபார்க்க அவளம்மா நேரம்தரவில்லை.
