புகைப்படங்களின் கதைகள்

நாராயண் ராவ் திருநெல்வேலியில் தன் மூத்த மகனின் வீட்டில் தங்கி இருந்தார். மூத்தமகன் தனது மகன் வீட்டில் தங்கி இருந்தார். அப்படிப் பார்த்தால் நாராயண் ராவ் தன் பேரன் வீட்டில் தங்கி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பேரனுக்கே ஐம்பது வயதுக்கு அருகில் இருக்கும் என்பதையும் இவரது மகன் கல்யாணத்துக்கு நிற்கிறான் என்பதையும் இப்போதைக்கு விட்டுவிடலாம். நாராயண் ராவின் மனைவி இறந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தன் மனைவியின் முகம் கூட சில சமயங்களில் அவருக்கு நினைவுக்கு வராது. அது அவருக்கு ஆச்சரியமாக இருக்கும்

சீடன்

மணிகண்டனை அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்திருந்தார்கள். வீடு விடாகச் சென்று தண்ணீர் கேன் போடும் வேலையைச் செய்துகொண்டிருந்தான். ஆளைப் பார்த்தால் இவனா தினமும் 100 நீர் கேனைத் தூக்குவான் என்பது போல ஒல்லியாக இருப்பான். “12 தோசை தின்னுட்டும் எந்திரிக்கமாட்டாங்க” என்று முருகேசனின் மனைவி ஒரு தடவை சொன்னபோது, “எங்க குடும்ப வழக்கம் அது” என்று முருகேசன் சொல்லிவிட்டான். எத்தனை உண்டாலும் வயிறு என்னவோ உள்ளடங்கியே இருந்தது. முப்பது வயதுக்குரிய அடர்த்தியான மீசையும் அடர்த்தியான தாடியும் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்றிருக்கும் கண்களும் சீரற்ற பற்களும் அவனை வினோதமாகக் காட்டின.

அருவம்

அந்த சனிக்கிழமை இரவைக் எப்படிக் கடப்பது என்று மந்திரமூர்த்தி யோசித்துக்கொண்டிருந்தான். நாற்பது வயதில் நாய்க்குணம் என்று சொல்வதின் பொருள் என்ன என யோசித்துக் கொண்டிருந்தபோது, சண்டை போட்டுக்கொண்டு கனமான தொப்பை மீது ஓடி வந்து விழுந்த பெரிய மகனையும் சிறிய மகளையும் “அங்கிட்டு போய்த் தொலைங்க மூதிகளா” என்று உரக்கச் சத்தம் போட்டு ஏசினான். உள்ளே இருந்து மங்களம் “அவாகிட்ட போகாதீங்கன்னா கேக்குகளா” என்று சொன்னது இவனுக்கு மெல்லக் கேட்டது. “அப்பா ஏம்மா எப்பவும் எரிஞ்சே விழறாங்க” என்று மகன் மங்களத்திடம் கேட்டிருப்பான் என மந்திரமூர்த்தி நினைத்துக் கொண்டான். நாளெல்லாம் எண்ணெய்க்கடையில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து விழுந்தால் இங்கேயும் ஒரு நாதி இல்லை என்று மெல்லச் சொல்லலாமா அல்லது…

வியாழன் இரவு

பிலிப்பனோக்கார கார் டிரைவர் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். காரில் நெருக்கி அடித்து உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு பிரேக் அடிச்சா ஆளுக்காளு முத்தம் கொடுத்துக்கவேண்டியதுதான் என்றான் ஷிராஸ். அய்ய என்றான் சந்தோஷ் மேனன். சந்தோஷ் மேனனின் வழுக்கைத் தலை அவனுக்கு நாற்பது வயதிருக்கும் என்று காட்டினாலும் அவனுக்கு 30 வயதுதான் ஆகி இருந்தது. ஷிராஸ் எப்போதும் அவனை கஸண்டி என்றே அழைப்பான். அவனை வெறுப்பேற்றுவதற்கென்றே தன் தலைமுன்பு வந்து விழும் முடியை அடிக்கடி கோதிக்கொண்டான் சுரேஷ். ‘பின்னே… இவன் ரஜினியல்லே’ என்றான் சந்தோஷ் மேனன். அதுவரை அமைதியாக அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த பிஜூ, “அது கொள்ளாம்” என்றான். சுரேஷ், பிஜுவின் தொப்பையைத் தட்டி, “தொப்பை போட்ட ஃபார்ட்டி கிழவன்ஸ்… பொறாமை எதுக்கு? ஐ’ம் தி ஒன்லி எலிஜிபில் பேச்சிலர்” என்றான்.

மேல்வீடு

இந்த வீட்டுக்கு அவர்கள் குடிவந்து பத்து நாள்தான் ஆகிறது. சங்கரிக்கு சென்னையே பிடிபடவில்லை. சென்னை மக்களின் முக அமைப்பே அவளுக்கு விநோதமாகத் தெரிந்தது. மதுரைக்குத் தெற்கே உள்ளவர்கள் என்று தெரிந்த பின்புதான், அவர்கள் முகம் மனித முகமாகப் பட்டது. ‘போகப் போக பளகிரும்ட்டி’ என்றான் மாசாணம். ‘மொதல்ல அப்படித்தான் இருந்துச்சு, அப்புறம் பளகிட்டுன்னு நம்ம முருகன் சொன்னாம் கேட்டேல்லா.’

சுற்றம்

துளசி மாடம் வீட்டுக்கு வேண்டும் என்று சொல்லி என் மனைவிதான் அதனை வாங்கி வைத்தாள். அபார்ட்மெண்ட்டுகளில் துளசி மாடத்தை எங்கே வைப்பது என்று நான் எத்தனை சொல்லியும், துளசி மாடம் வேண்டும் என்று உறுதியாக இருந்து, அவளும் என் அம்மாவும் போய் சிறிய மாடம் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து, வீட்டின் பின்னால் வைத்துக்கொண்டார்கள், அதற்குப் பக்கத்தில்தான் கழிவுநீர் தேங்கும் தொட்டியும் இருந்தது. கழிவுநீர்த் தொட்டி நிரம்பி தண்ணீர் வெளியே வரும்போதெல்லாம் பயந்து போய் ‘துளசி மாடத்துக்கு என்னாச்சு’ என்று பார்க்க ஓடுவோம். மெல்ல அதனை நகர்த்தி வேறு இடத்தில் வைப்போம்.

காத்திருப்பு

சிலந்தியின் எச்சில்தடத்தின் மையத்தில்
நிலைகொண்டிருந்தது சிலந்தியின் கர்வம்
சிலந்திக்கும் பெண்ணுக்குமான போட்டியில்
கடந்துவிடுகிறது ஓர் யுகம்
காற்றடிக்கத் தொடங்குகிறது

மூன்று கவிதைகள்

பொழுது போகாத நேரத்தில்
அவன் கிறுக்கி வைத்திருந்த ஓவியங்கள்
தாத்தா தன் நிலையிலிருந்து
கைத்தடியுடன் இறங்கி நடந்தார்
அப்பா எப்போதும்போல் ஏதோ யோசனையுடன்
தாத்தாவும் அப்பாவும் பார்த்துக்கொள்ளும்போது
பாட்டி தன் ஓவியத்திலிருந்து கீழிறங்கினாள்

ஆங்கென் நட்பு

சுவரில் மோதிய வண்ணம்
கசிவைத் தேடியவண்ணம்
மெல்ல பசியத் தொடங்குகிறது அறை
புல்வெளியின் மணத்தோடும்
பசும் குழந்தையொன்றின் பால் மணத்தோடும்

அலை

பெரியம்மையிடம் கேட்டேன். ஏன் சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க? இருபது வருஷம் இருக்குமா என்றாள். நான் ரொம்ப யோசித்து இருக்கும் என்றேன். இப்ப வந்து ஏம் போனீங்கயேங்கேல. நினைப்பு தட்டமாட்டேங்கே என்றாள்.

ஒலிக்காத குரல்கள்

கோபிகிருஷ்ணனின் இந்த நூலை வாசிக்கும் எவர் ஒருவரும் நிச்சயம் ஒரு கட்டத்தில் நாமும் மனநோயாளிதானோ என்று யோசித்தே தீரவேண்டும் என்று நினைக்கிறேன். மிகச்சாதாரண விஷயங்கள் முதல், அதிர வைக்கும் விஷயங்கள் வரை இந்நூலில் மனநோயாக நடமாடுகின்றன.