செல்வராஜ் ஜெகதீசன் – கவிதைகளின் நேரடித்தன்மை

செல்வராஜ் ஜெகதீசன் தொடர்ந்து நேரடியான கவிதைகளையே முயன்றிருக்கிறார். கவிதையுலகுக்கு புதியவர்கள் கவிதையை வாசிப்பதில் இருக்கும் சிக்கல்களை இவரது கவிதைகளில் காண முடிவதில்லை. கவிதையின் நேரடித்தன்மை அல்லது எளிமைத்தன்மையை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; அவை கவிதைகளே அல்ல வெறும் காட்சிகள் மட்டுமே என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

நின்று பெய்யும் மழை – பிரான்சிஸ் கிருபா

ஈரமேறிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரின் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.

கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்

கலாப்ரியா பேசத் துவங்கும்போதே தனக்கு இது மகிழ்ச்சியாகவும், சற்று கூச்சமாகவும் இருப்பதாகச் சொன்னார். தனது நேர்காணல்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில்(Pattern) இருப்பதாகச் சொன்னவர், இந்தக் கூட்டத்தில் சற்று வித்தியாசமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறதா என்று முயல்வதாகக் குறிப்பிட்டார். தனது குடும்பத்தில் ஒன்பது பேர்களில் தான் மட்டுமே கல்லூரி வரை சென்றதாகவும் அதில் தனக்குக் கிடைத்த சுதந்திரம் மிக முக்கியமானதாகவும் இருந்ததாகச் சொன்னார். ஆனால் தனக்குள் உள்ளூர இருந்த அறம் சார்ந்த கட்டுப்பாடு அல்லது பயம் காரணமாக தனக்கான ஒரு எல்லைக் கோடு தொடர்ந்து இருந்தது என்றார்.