ஜாய் வில்லியம்ஸின் “கடவுளைப் பற்றிய 99 கதைகள்”

தற்செயலான துப்பாக்கிச் சூட்டிற்கு ஊரின் தென்பகுதியில் உள்ள ஒரு குழந்தை பலியானது. ஏழே வயதான அவன் பலியாகியிருக்கத் தேவையில்லை. சொல்லப்போனால் யாருமே பலியாகியிருக்கக்கூடாது. துப்பாக்கி வைத்திருந்தவன் அந்த குறிப்பிட்ட வீட்டில் உள்ளவர்களுக்கு பயம் காட்ட நினைத்தான்.