ஒளி

பிரிசில்லாவின் உடலில் இருந்த இயல்பான சமன்பாடு ஃபிலோமினாவில் என்றுமே தோன்றியதில்லை. பாந்தமில்லாமல் பருமனாக இருந்தாள். சுழலும் பரிசலைப்போல் நடந்தாள். என்னேரமும் ஏதோ ஒரு பக்கத்திலிருந்து ஒரு பறவைக்கூட்டம் படபடபடவென்று வெடித்துவெளிவரும் என்பதுபோல் அவள் உடலில் ஒரு ததும்பல் இருந்துகொண்டே இருந்தது. உடலில் குடிகொண்ட அந்த சமனின்மை முகத்தில் இன்னும் கூர்மையாக வெளிப்பட்டது. களைகளைப்போல் பிசுறுபிசுறாக வடிவமற்ற புருவங்கள். சற்றே ஒற்றைக்கண் பார்வை. இடதுபக்க யானைக்காது.

ஒரு மழைநாள்

வெளியே மழை ஒழுகிக்கொண்டிருந்தது. பெரியப்பா என் கண்களை நேருக்கு நேர் பார்த்தார். அகல் திரியின் கடைசிச்சுருள் தீப்பிடிக்க சுடர் கரகரத்து எழுந்ததில் பெரியப்பாவின் கண்களில் உறைந்திருந்த குரோதத்தின் ஜுவாலை தெரிந்தது. தீயின் ஒளி முகத்தில் நீர் போல் வழிந்திறங்கியது.

சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை

இக்கதை எழுதப்பட்டது 1913-ஆம் ஆண்டு. எழுதியவர் பெயர் அம்மணி அம்மாள். “சங்கல்பமும் சம்பவமும்” என்ற பெயரில் இச்சிறுகதை விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் அவ்வாண்டு வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படும் 1915-ல் வெளியாகிய வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியான கதை இது. சிறுகதையின் வடிவமும் படைப்புக்கணங்களும் கொண்ட ஆக்கம். ஆக இதுவே தமிழின் முதல் சிறுகதையாக இருக்கலாம் …
இன்று இந்தக்கதையை ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய முயற்சியின் பிரதியாக, ஒரு நவீனத்துவப் பிரதியாக வாசிக்க முடிகிறது. அதே நேரத்தில், எனக்கு இக்கதையை வாசிக்கும்போது, அந்த யுகத்தில் வெளியுலகுக்கு முதன்முதலாக வந்து எழுதிய பெண் எழுத்தாளர் ஒருவரின் இலட்சியவாதத்தைப் பிரதிபலிக்கும் கதையாகவும் பொருள் படுகிறது.

தேள்

“உன்னுடைய விஷ ஆராய்ச்சிக்கு நீ இங்குத் தேள்களை வைத்திருக்கிறாய் அல்லவா? எனக்கு ஒரு தேளை தொட்டுப்பார்க்கவேண்டும். அதை என் மீது ஏற விட்டுப்பார்க்க வேண்டும்.”
லூசிஃப் திடுக்கிட்டான். “ஏன்?”
“பயத்தை வெல்ல அதுதான் ஒரே வழி. போர்க்களத்தில் நாங்கள் இதைத்தான் செய்வோம். நிணம், குருதி, சித்ரவதை இதை எந்த ஒரு போர் வீரனும் முதல் நாள் காணும் போது அஞ்சத்தான் செய்வான். அதனால் அவனைப் போருக்கு அனுப்புவதற்கு முன்னாலேயே காயத்துக்கும் வலிக்கும் போரின் நிதர்சனங்களுக்கும் முழுவதுமாகப் பழக்கப்படுத்தி விடுவோம்.”