காளான் (mushroom) உயிரினங்களின் வித்தியாசமான உலகத்தை பிரதிபலிக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைச்சுழலைக் கொண்டுள்ளது. காளானின் முதன்மையான உயிரியல் அமைப்பு மைசீலியம் என்கிற நுண்ணிய ஊசிகளால் (hyphae) ஆன வலையாகும், தரையிலும், மரச்சரிவிலும், மற்றும் உயிரியல் பொருள்களில் உள்ள வெற்றிடங்களில் பரவுகிறது. காளானின் உணவு உறிஞ்சுதல், வளர்ச்சி ஆகியவை மைசீலியம் மூலம் நடைபெறுகிறது.
Author: அருணாசலம் ரமணன்
பறவைகளும் பாலூட்டிகளும்: நுண்ணறிவின் பரிணாமப் பாதைகள்
பறவைகளின் மூளையில் நரம்பணுக்கள் மிகவும் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் அமைந்துள்ளன. அவை மனித மூளையின் நியோகார்டெக்ஸுக்குச் சமமான பணிகளை மேற்கொள்கின்றன. சில பறவைகளில் நரம்பணு அடர்த்தி குரங்குகளை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக, ஒரு காகத்தின் நெல்லிக்காய் அளவிலான மூளையில் சுமார் 1.5 பில்லியன் நரம்பணுக்கள் இருக்கின்றன. இந்த சிறிய, திறமையான வடிவமைப்பு நுண்ணறிவுக்கு எடை அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கிறது.
உயிரின் மூலக்கூறு சமச்சீரின்மையை எது தூண்டியது?
பண்டைய பூமியில், காந்தமயமான கனிமங்கள் எலக்ட்ரான் ஸ்பின்னிற்கும் மூலக்கூறின் வடிவத்திற்கும் இடையில் மூலமொழி ஒன்றை பேச வைத்திருக்கலாம். சமச்சீரின்மை சமநிலையிலான சிறிய வேறுபாட்டை தன்னைத்தானே வலுப்படுத்தும் உறுதியான வடிவமைப்புகளாக மாற்ற உதவியிருக்கலாம். அத்தகைய வடிவங்கள், ஆர்.ஏ.ஓ போன்றவற்றின் தொடர்ச்சியிலும் உருவெடுத்து, அவற்றின் உருவாக்கத்திற்கும், பின்னர் புரதங்களுக்கும், செல்களுக்கும் வழி வகுத்தன.
மாறும் திசையை உணர்த்திடும் வௌவாலின் மறைமுக அறிவு
ஆராய்ச்சியாளர்கள் கவனித்த விஷயம் உண்மையிலேயே வியப்பிற்குரியது. வௌவால்கள் பறக்கும்போது, அவற்றின் மூளையில் உள்ள தலைத் திசை செல்கள் (head direction cells) எனப்படும் குறிப்பிட்ட நரம்பணுக்கள், அந்த விலங்கு எந்தத் திசையை நோக்கி இருக்கிறதோ அதற்கேற்ப செயல்பட்டன. இவை உயிரியல் திசைகாட்டி (biological compass) போலச் செயல்படுகின்றன: வௌவால் குறிப்பிட்ட திசையை நோக்கித் திரும்பும்போது, உதாரணமாக, வடகிழக்கு – குறிப்பிட்ட நரம்பணுக்கள் மின்னின.
உயிர் கட்டமைப்பின் நுட்பமான வரைபடம்
எந்த பகுதி மூடப்பட்டு இருக்கும்? எந்த இடத்தில் டி.என்.ஏ சுலபமாக வளைந்து, சுற்றிப் போகும்? – இவை எல்லாவற்றையும் குரோமாட்டின்அமைப்பு தீர்மானிக்கும். சில பகுதிகள் தண்ணீர் போல எளிதாகக் கலக்கும், நகரும் என்ஜைம்கள் வந்து வேலை செய்யும் இடம். சில திடமான பகுதிகள் – சற்று மந்தம், நெருக்கம், வலுவாக அடுக்கப்பட்ட, அணுக முடியாத இடம்.
மரங்களின் அகன்ற வலை
தாவரங்கள் மைக்கோரைசல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி உணவைப் பகிர்ந்து கொள்கின்றன என்ற பரவலான நம்பிக்கை இருந்தபோதிலும், சான்றுகள் முடிவில்லாதவை. ஆய்வக மற்றும் கள சோதனைகளில், தாவரங்களுக்கு இடையில் மாற்றப்படும் கார்பன் மற்றும் பிற வளங்களின் அளவு பொதுவாக குறைவாகவே இருக்கும், பெரும்பாலும் மைக்கோரைசல் வேர்களில் இருக்கும். அதாவது பூஞ்சைகள் ஒரு தாவரத்திலிருந்து கார்பனைப் பெறுகின்றன, ஆனால் அதில் பெரும்பகுதி மற்றொரு தாவரத்திற்கு மாற்றப்படுவதற்குப் பதிலாக பூஞ்சையிலேயே இருக்கும்.
லியோனார்டோ டா வின்சியின் ஈயக் கலைமூலம் ஒளியின் ரசவாதம்
ஈயத்தையும் எண்ணெயையும் சாதாரணத் தணிந்த சூழலின் வரம்பை விட்டுச் சேர்த்த இடத்துக்குத் தள்ளியதனால், நமது காலத்தில் பெயரிட்டு, ஒரு பெட்டகத்தில் வைத்துக் காணக்கூடிய ஒரு அரிய தாதுவை அவர் உருவாக்கி விட்டார். அவருக்கு அப்போது எவ்வித சூத்திரஙகளும், கட்ட வரைபடங்களும் இல்லாமல் இருந்தாலும், விரலின் தொடுதல், பரவுதலின் நடத்தை, உலர்தலின் வேகம், வெளிச்சம் பற்றுகிற விதம் – ஆகியவை எல்லாம், அவருக்கு இன்று நாம் தேடுமா அதே அறிவியலை அளித்தன.
இயற்கை ஒரு ஆடம்பரம் அல்ல, மூளைக்கான மருந்து
இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவெனில், ஒரு பாமரனுக்குப் புரியும் வகையில், அதாவது கவனத்தைத் திரும்பத் திருத்தவும் அல்லது சீராக்கவும் (attention restoration) அமைத்த விதம். நாம் ஒரு நாள் முழுக்க வெவ்வேறு பணிகள் மற்றும் கணினி, கைபேசி போன்றவற்றில் ஈடுபட்டு சோர்வடையும் உணர்வு பல நேரங்களில் இருப்பது உண்டு. அந்த நேரத்தில் வெளியில் பசுமை சூழ்ந்த இடத்திற்குச் சென்று ஒரு 15-20 நிமிடங்கள் நடந்துவிட்டு வரும்போது, ஒருவிதமான நிம்மதியை அனுபவித்திருப்போம். அந்தக் காலத்தையும் உணர்வையும், பெர்மன் ஆராய்ச்சிக் கணக்குகளோடு இணைத்து காட்டுகிறார்.
மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு இருக்கிறதா?
தொட்டு உணர்வு, பார்வை, கேள்வி, மணம், சுவை“ என்று நம்மால் வரையறுக்கப்பட்ட ஐந்து உணர்வுகளின் பட்டியல் முழுமையல்ல என்று நவீன நரம்பியல் இந்த வரைபடத்தை விரிவுபடுத்தி, மேலும் பல உணர்வுகளை வாழ்வியல் அமைப்பிற்குள் கொண்டு வருகிறது. உடல் உறுப்புகளின் நிலையை அறியும் ‘ப்ரோப்ரியோசெப்ஷன்’, சமநிலை உணர்வு, வெப்பம் உணர்வு, வலி உணர்வு, உட்புற உறுப்புகளின் இயக்கம் உணரும் ‘இன்டரோசெப்ஷன்’ ஆகியவை இவற்றுள் அடங்கும்.
இன்ஃபோசிஸ் பரிசுகள் 2025 – இயற்பியல் அறிவியல்
இளைய விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு, இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளையால் மந்திரமுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்புகிறது: உலகளாவிய சவால்களில் கவனம் செலுத்தி, அறிவியல் கடுமையுடன் செயல்படுத்தப்படும் துணிச்சலான இடைநிலை ஆராய்ச்சி, மற்ற குழுவினரின் அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்ல, உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள தீர்வுகளை தர முடியும் என்கின்ற தொலைநோக்கு பார்வையும் தான்.
நீலப் பிரகாசம்
ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றிய மற்றொரு ஆராய்ச்சி, வாயுக்கள் போன்ற சிறிய மூலக்கூறுகளைப் பிடிக்க அல்லது வைத்திருக்கக்கூடிய, சிறிய துளைகள் அல்லது இடைவெளிகளைக் கொண்ட நுண்துளைப் பொருட்கள் அல்லது திடப்பொருட்களை உருவாக்குவதாகும். இது தேவையில்லாத மூலக்கூறுகளை வடிகட்ட அல்லது வாயுக்களை சேமிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜேம்ஸ் வாட்சன் (1928 –2025)
கேம்பிரிட்ஜில் வாட்சன், க்ரிக் என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து, DNA வின் அமைப்பை கண்டறிவதில் ஈடுபட்டார். DNA-வின் சரியான அமைப்பை ரோசலின்ட் ப்ராங்ளின் மற்றும் வில்கின்ஸ் வழங்கிய எக்ஸ்-கதிர் விளிம்பு வளைவுப் படங்கள் (X-ray diffraction photographs) மூலம் கண்டறிந்தனர். பாஸ்பேட் முதுகெலும்புகள் மூலக்கூறின் வெளிப்புறத்தில் உள்ளது மற்றும் அது ஒரு இரட்டைச் சுருள் என்றும் ரோசலிண்ட் சுட்டிக் காட்டினார். இந்த முக்கிய நுண்ணறிவு, இரண்டு இழைகளும் எதிரெதிர் இணையானவை என்பதை உணர்ந்துகொள்ளவும், சரியான இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டுபிடிப்பதற்கும் ஏதுவானது.
1901-2025 நோபல் பரிசுகள் பற்றிய பிரதிபலிப்புகள்
அவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1901ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த பரிசுகள், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உலக அமைதியின் உயர்ந்த அங்கீகாரமாக மாறின. இயற்பியலுக்காக Wilhelm Conrad Röntgen, வேதியலுக்காக Jacobus H. van‘t Hoff, மருத்துவத்துக்காக Emil von Behring, இலக்கியத்துக்காக Sully Prudhomme மற்றும் அமைதிக்காக சர்வதேச redcross அமைப்பின் நிறுவனர் Henry Dunant மற்றும் அமைதி இயக்க தலைவர் Frédéric Passy ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் சமூக தாக்கத்துடன் கூடிய புதுமைகளை கௌரவிப்பதற்கான முன்மாதிரியை உருவாக்கினர்.
வேதியியல் நோபல் பரிசு 2025
நவீன வேதியியலை ஆராய்வதற்கான புதிய அறைகள் ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson), ஓமர் எம். யாகி (Omar M. Yaghi), மற்றும் சுசுமு கிடகாவா (Susumu Kitagawa) என்ற மூவரின் ஆய்வுகள், பலகாலமாக கருதி வந்த “இயற்கையானது நிலைத்தன்மை காரணமாக நுண்துளைகள் கொண்ட பொருட்களை விட அடர்த்தியான பொருட்களையே “வேதியியல் நோபல் பரிசு 2025”
இயற்பியல் நோபல் பரிசு 2025
விஞ்ஞானிகள் எவ்வாறு குவாண்டம் கோட்பாட்டை யதார்த்தமாக மாற்றினார்கள் இந்த ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு, குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் (Quantum Mechanical Tunneling) என்ற அடிப்படை கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இது மேக்ரோஸ்கோபிக் (பெரிய அளவிலான) குவாண்டம் டன்னலிங் மற்றும் மின்சார சுற்றுகளில் ஆற்றல் குவாண்டைசேஷன் (energy quantization) “இயற்பியல் நோபல் பரிசு 2025”
உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2025
இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்புகள் அக்டோபர் 6 முதல் 13 வரை நடைபெறும். அனைத்து பரிசு அறிவிப்புகளும் தமிழில் இங்கே — சொல்வனம் — தளத்தில் பகிரப்படும். பரிசுகள் குறித்த விரிவான தகவல்களும் இங்கே சொல்வனத்தில் வெளியிடப்படும். நமது உடலை ஒரு பரபரப்பான நகரமாக கருதுவோம். அங்கு “உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2025”
மரங்களின் மர்மங்கள்: பில்லியன் உயிர்களின் கதை
உயிர்களின் மிகப்பெரிய களஞ்சியமாக கருதப்படும், உயிருள்ள மரங்களைக் கொண்ட காடுகள் பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியுள்ளன. மேலும் அவற்றின் தண்டுகள், கிளைகள் மற்றும் வேர்கள் அனைத்தும், விலங்குகள் மற்றும் மனிதர்களை விடவும் அதிக கார்பனைத் தாங்கியுள்ளன. இந்த மர உயிர்த்திணிவு (biomass) வெறும் செயலற்ற சேமிப்பு இடமல்ல, இது ஒரு மாறும் ஆற்றல் மையமாகும். வளர்ச்சிக்கு எரிபொருளாக நீர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சர்க்கரைகளை அதன் நரம்புகள் வழியாக செலுத்தப் படுகிறது.
இயற்கை ஏன் வடிவங்களை உருவாக்குகிறது
சுழல் வடிவங்கள் (spirals), இயற்கையின் மிகவும் கவர்ச்சிகரமான வடிவங்களாகும். அம்மோனைட் புதைபடிவங்கள், சூறாவளிகள், மற்றும் சூரியகாந்தி விதைகளின் அமைப்பு ஆகியவை இதற்கு உதாரணங்கள். இந்த logarithmic சுழல்கள், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும்போது தங்கள் வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. உதாரணமாக, கடல் சிப்பியில் புரதப் பட்டைகள் சுழல் வடிவங்களை உருவாக்குகின்றன. இவை ஃபிபோனாச்சி வரிசையைப் பின்பற்றி, சூரியகாந்தி விதைகள் அல்லது பைன் கோன்களில் உள்ள செதில்களை அமைக்கின்றன
ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?
ஒரு செல்லுக்கு “நினைவு” என்பது, நம் போன்ற பழைய நினைவுகளை நினைவுகூர்வது அல்ல. அது, முன்னர் நடந்த அனுபவங்களின் அடிப்படை மாற்றங்களால், அடுத்த முறை ஒரு சைகை வரும்போது அதை வேறு விதமாக எதிர்கொள்வது. ஒரு செல், ஊட்டச்சத்து, ஹார்மோன், அருகில் உள்ள செல்களின் சைகைகள் போன்ற வேதியியல் வடிவங்களை ஒவ்வொரு தருணத்திலும் பெறுகிறது. அந்த அனுபவங்கள், செல்களின் உள்ளே உள்ள புரோட்டீன்/டிஎன்ஏ செயல்பாடுகளை மாற்றுகிறது.
பாறைகள் பகிரும் பழங்கால கதைகள்
தக்காண பீடபூமியில் பாறைகளின் உருவாக்கம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடிப்புகளினால் உருவான பசால்ட் (basalt) பாறை அடுக்குகளில் உள்ளது. இந்த நிகழ்வு ‘டக்கன் டிராப்ஸ்’ (deccan traps) என்று அழைக்கப்படுகிறது. அடுக்கடுக்காக படிந்துள்ள பசால்ட் பாறைகள் பல லட்சம் சதுர கிலோமீட்டருக்கு மேல் பரப்பில் காணப்படுகின்றன. தக்காண பீடபூமி ஆழமான உணர்வும் ஆயுட்காலமும் கொண்டது. இதில் கிடைக்கும் கறுப்பு (Black) மண் வகை பயிரிட மிகவும் உகந்தது.
பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை
மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் போன்ற வறண்ட பகுதிகளில் காணப்படும் பல படிக்கிணறுகள், இப்பகுதியைச் சேர்ந்த ராணிகள் மற்றும் இதர பெண் புரவலர்கள் அங்கிருந்தவர்களின் குடிநீர் தேவைகளை மனதில் கொண்டு, உருவாக்கிய காதல் சின்னங்கள்.
வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள்
CRISPR எனும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் இந்த RNA உருவாகும் ஜீனை சில பட்டாம்பூச்சிகளில் நீக்கி பார்த்தனர். அதனால் ஏற்பட்ட மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது: பட்டாம்பூச்சிகளின் கருப்பு நிறங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன; கருப்பு புள்ளிகள் இருந்த இடங்களில் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறங்கள் மட்டும் காணப்பட்டன. இதன் மூலம், இந்த RNA இல்லாமல் பட்டாம்பூச்சி இறக்கைகளில் கருப்பு நிறங்கள் உருவாகாது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது
எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!
சமீப காலமாக, சிறிய எறும்புகளைப் பெரும் நுண்ணோக்கிகளின் வழியாக ஆராயும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மனிதக் கண்களுக்கு சாதாரணமாகத் தெரியாத அச்சிறிய புள்ளிகள், இன்று இந்த எறும்புகள் அவைகளின் சமூக நடத்தை, ஒத்துழைப்பு, மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் அனைத்தும் உயிரியல்-ஈர்க்கப்பட்ட தொழில்நுட்பத்தில் (biomimicry) விஞ்ஞானிகளின் பெரும் ஆராய்ச்சி பொருளாக மாறிவிட்டன. இயற்கையின் இந்த சிறிய அதிசயங்கள், மனித பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய வழிகளைத் திறந்துள்ளன.
நீர் துளியில் நிகழும் புதுமைகள்
பைட்டோபிளாங்க்டன் (அல்லது பாசி பிளாங்க்டன்) என்ற ஒற்றை செல் உயிரினங்கள்தான் மிகவும் முக்கியமானவை. நிலத் தாவரங்களைப் போலவே, இவை கார்பன் டைஆக்சைடு எடுத்துக்கொண்டு, ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி கார்போஹைட்ரேட்டுகளை உருவாக்குவதுடன், ஆக்ஸிஜனையும் வெளியிடுகின்றன. கடலின் முதன்மை உற்பத்தியாளர்களான இவைகள், உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்கும் உயிரினங்கள் ஆகும்
பசுமையின் மனம் பாடும் ரகசியம்
இந்த தொட்டாற் சுருங்கி (Mimosa pudica) இலைகளை பாருங்கள். அதைத் தொட்டால், அதன் இலைகள் உடனே மூடிக்கொள்கிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் தொட்டால், அதன் எதிர்வினை குறைகிறது. ஏனெனில் அது தொடுதல் ஆபத்து இல்லை என்று புரிந்துகொள்கிறது. தொடும்போது, மிமோசா செல்கள் கால்சியம் அயனிகளை, ஒரு இரசாயன அலாரம் போல வெளியிடுவதால், இது இலைகளை மூடச் செய்கிறது. மீண்டும் மீண்டும் தொடும்போது, தாவரம் தன் ஆற்றலைச் சேமிக்க அதன் பதிலை மாற்றுகிறது.
ஒவ்வொரு பூவும் சொல்கிறதே
மலர்களின் இதழ்கள் கவிஞர்களுக்கு எப்போதும் உணர்வுகளையும் கற்பனைகளையும் தூண்டும் ஒரு கருப்பொருளாக இருக்கின்றன. இதழ்களின் மென்மை, வண்ணம், வாசனை, அழகு ஆகியவை காதல், இயற்கை, நிலையாமை, வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் போன்றவற்றை உருவகப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்க் கவிதைகளிலும், உலக இலக்கியங்களிலும் இதழ்கள் குறித்து கவிஞர்கள் பலவாறு பாடியுள்ளனர்.
பறவைகள் ஈர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடங்கள்
ஒரு பறவையின் வடிவம், அது தன் இறக்கைகளைப் பயன்படுத்தி எவ்வாறு மேல் எழும்புகிறது, காற்றில் எவ்வாறு சறுக்குகிறது என்ற விவரங்கள் அனைத்தும் நவீன விமானத்தில் உன்னிப்பாக ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. “V” உருவாக்கத்தில் பறக்கும் வாத்துக்கள், தனது முன் செல்லும் பறவையின் மேல்நோக்கி இழுக்கப்படுவதைப் பிடிப்பதன் மூலம் ஆற்றலைச் சேமிக்கிறது. இந்த குறிப்பைப் பயன்படுத்தி இராணுவப் படை அமைப்புகள் உருவானது.
தூக்கணாங்குருவி கூடு
இந்த நுண்ணிய உறவில், மனிதனும் பறவைகளும் ஒரு தனித்துவமான இணை வாழ்வைப் பகிர்ந்து கொள்கின்றனர். மனிதனால் வடிவமைக்கப்பட்ட உலகத்தைப் புரிந்து கொள்ளவும் அதில் தங்களைத் தழுவிக்கொள்ளவும் பறவைகள் கற்றுக்கொண்டுள்ளன. நூற்றாண்டுகளாக, நகரச் சூழலுக்கு தங்களைச் சீரமைத்து, மனிதர்களுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளைப் பறவைகள் கண்டுபிடித்துள்ளன. மின்கம்பிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற நவீன பொருட்களை கூட தங்கள் கூடு கட்டுவதற்காக பயன்படுத்தி, உயரமான கட்டிடங்களின் நடுவிலும் தழைத்து வளர்ந்து வருகின்றன
ரங் பர்ஸே
பாரம்பரியமாக, குலால் வசந்த கால மலர்கள், பெர்ரி வகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது, மேலும் அதன் பொருட்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதாகவும் கருதினர். பொதுவாக பயன்படுத்தப்பட்ட நிறங்களில் மஞ்சள், சிவப்பு ochre, கரிய மை, indigo நீலம் மற்றும் லாபிஸ் லசுலி போன்றவை அடங்கும். இந்த கனிமங்கள் மரக்கொழுந்து (அ) பிசின் போன்ற பிணைப்பிகளுடன் கலந்து நீடித்த தன்மையை வழங்கியது.
தியாகம், அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்ட பாக்டீரியாவின் புதிய பக்கம்
ஒரு புரட்சிகரமான ஆய்வில், சில பாக்டீரியாக்கள் (E. coli போன்றவை) இறந்த பிறகும் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்யும் திறனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மைக்ரோப்கள் (microbes) தங்கள் செல்களின் கூறுகளை ஊட்டச்சத்துகளாக மாற்றும் என்சைம்களை உருவாக்குகின்றன, இது அருகிலுள்ள செல்களுக்கு (பெரும்பாலும் அவர்களின் மரபணு உறவுகளுக்கு) ஊட்டமாக செயல்படுகிறது.
விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம்
தெற்கு மெக்சிகோவின் யுகடான் (Yucatan) தீபகற்பத்தின் மையத்தில், அடர்ந்த காடுகள் பழங்கால நாகரிகங்களின் ரகசியங்களை கிசுகிசுக்கின்றன. அங்கே ஒரு நவீன தேடல் உருவாகிக் கொண்டிருந்தது. Louis May Ku என்ற கலைஞர், மாயா ப்ளூ எனப்படும் புதிரான ஒரு வண்ணத்தின் மர்மத்தால் ஈர்க்கப்படுகிறார். காலத்தையும், வானிலையையும், இன்றைய வேதியியலையும் வென்று இன்றும் நிலைத்திருக்கும் இவ்வண்ணம், மாயா நாகரீகத்தின் சுவரோவியங்கள், பானைகள் மற்றும் புனித பொருட்களில் பளபளப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதை உருவாக்கிய அறிவு வரலாற்றில் தொலைந்து போயிருந்தது.
நவீன உலகை உருவாக்கும் கணிதம்
எண் முறை முறையை உருவாக்குவதில் பிற நாடுகளின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, இந்தியாவின் ஹிந்து-அரபிக் எண் முறை உலகளாவிய கணித வளர்ச்சிக்கு அடிப்படை அமைப்பாக இருந்தது. இந்த முறை அரபு நாடுகள் மூலம் ஐரோப்பாவுக்கு பரவியது, இதன் மூலம் 0 (பூஜ்யம்) உள்ளிட்ட எளிய மற்றும் சக்திவாய்ந்த எண்ணியல் அமைப்பு உலகளாவிய கணித கணக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டது.
அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள்
ராமகிருஷ்ணனின் கதை எப்போதாவது நமது செல்கள், நமது டிஎன்ஏ மற்றும் நமது புரதங்களின் நுணுக்கங்களுக்குள் மிகத் தொலைவில் அலைகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, அவரது எழுத்து புத்திசாலித்தனமாகவும் அணுகக்கூடியதாகவும் உள்ளது. சராசரி வாசகருக்கு இந்த உயர்-சூழல் கருத்துக்களை மறைக்க அவர் பாடுபடுகிறார், மேலும் அவரது அத்தியாயங்கள் பெரும்பாலும் அவரது அறிவியல் கருத்துக்களுக்கு உருவகங்களாகவோ அல்லது முன்மாதிரிகளாகவோ செயல்படும் துடிப்பான நிகழ்வுகளுடன் தொடங்குகின்றன
புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும்
அச்சமயத்தில், ‘படிக பொறியியல்’ சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால், ‘Dots, lines and crystal structures’ என்ற கண்ணோட்டத்தில், எப்படி கோலம் என்கிற தென்னிந்தியர் கலை அணுக்கள் மற்றும் மூலகங்களால் கட்டமைக்கப்பட்ட படிகத்தின் வடிவத்தைப் புரிந்து கொள்வதற்கும், மேலும் அது இயற்கையில் காணப்படும் பல கனிமங்கள் காலநிலைக்கு தகுந்தவாறு எவ்வாறு மாறுகிறது என்பதற்கான விளக்கமும் இதில் பெற முடியும் என்பதற்கான ஒரு புதிய முயற்சி ஆகும்.
நாளைய வேதியியல் ஆய்வக உதவியாளர்கள்
ஆர்கானா ஆய்வுகூடத்தில் வேதியியல் நிபுணர்களுடன் இயங்குவதற்காக இயற்கை மொழி செயலாக்கத்தைக் (Natural Language Processing) கையாளுகிறது, இது பெரிய மொழி மாதிரிகளால் (Large Language Models – LLMs) இயக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் வாய்மொழியாக ஆர்கானாவுடன் தொடர்பு கொள்கிறார்கள், மேலும் ஆர்கானா அந்த வழிகாட்டுதல்களை χDL போன்ற வேதியியல் விளக்க மொழிகளைப் பயன்படுத்தி பரிசோதனை நடவடிக்கைகளாக மாற்றுகிறது
கல்லிலே கலைவண்ணம் கண்டார்
முன்புறத்தில் சூர்யபனா மற்றும் சந்திரபானா என்று பெயரிடப்பட்ட இரண்டு ஒற்றைக்கல் கட்டமைப்புகள் நிற்கின்றன. ஒவ்வொன்றும் லாலிபாப்கள் போன்று தோன்றும் ஒரு பெரிய தூணில் ஒரு வட்டமான தட்டை தாங்கிக் கொண்டிருக்கிறது. தட்டுகளில் சித்தரிக்கும் காளைகள் ஒன்றையொன்று எதிர்கொள்வது மாறியான வேலைப்பாடுகள். தட்டுக்கள் இரண்டும் ஒரே அளவு மற்றும் 6 அடி விட்டம் கொண்டவை
உலகளாவிய இசையின் உணர்ச்சித் தாக்கம், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால்
இசைக்கான சில உலகளாவிய பதில்கள் குழந்தைப் பருவத்திலேயே வெளிப்படுகின்றன, இதில் நகரும் கால் தட்டுதல் மற்றும் தலையசைத்தல் ஆகியவை அடங்கும். இயக்கம் இல்லாமல் கூட உணர்ச்சி-மோட்டார் பதில்களைக் கட்டுப்படுத்தும். மூளைப் பகுதிகளைச் செயல்படுத்த இசை அறியப்படுகிறது.
கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால்
நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம், காரணம் ஏன்’ என்ற ராமனின் கடலின் நீல நிறம் பற்றிய ஆரம்பகால ஆராய்ச்சி ‘ராமன் விளைவில்’ தொடங்கி இன்று ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி என்ற நவீன நுட்பமான தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது. நாளை இது ஒரு கைபேசி போன்ற ஒரு கையடக்க ராமன் ஸ்பெக்ட்ரோமீட்டரைக் கொண்டு ஃபிரான்செஸ்கா மற்றும் பெட்டோவா ஓவியங்களின் காணப்படும் நீலநிறத்தின் உண்மைத்தன்மையை லாபிஸ் லசூலி, அசூரைட் மதிப்பீடு செய்யும் என்றால், ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும்
The catalyst – RNA and the Quest to Unlock Life’s Deepest Secrets – ஓரு பார்வை DNA என்பது மரபியல் தகவல்களின் களஞ்சியம் மேலும், இது ஒரு உயிரினத்திற்குத் தேவையான அனைத்து புரதங்களையும் குறியாக்கம் செய்யும் மரபணுக்களைக் கொண்டுள்ளது – நமது தசைகள் நகர்வதை “தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும்”
ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை
அறிவியல் என்பது புதுமைகளின் களஞ்சியம். உலகம் முழுவதும் நிகழும் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எளிய நடையில் இந்த நெடுவரிசை மூலம் உங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கன்னி முயற்சி. ஒவ்வொரு செய்தியும் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், சுவாரஸ்யமான மற்றும் புரிதலுக்குரிய முறையில் வழங்கப்படும்.
நீலாம்பரி ராகம் உனக்காகவே நீலா
கச்சேரியின் நடுவில், எம்எஸ் அம்மா “தொல்லுயி…” என்று தொடங்கும் அன்னமாச்சார்யா கீர்த்தனையைப் பாடத் தொடங்கினார். எனது நண்பன் “ஆஹா நீலாம்பரி ராகம், சபாஷ்” என்று உற்சாகமானான். “மாதவ மாமனு” கேட்டிருக்கியோ என்றவன், என்னை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் தொடங்கிய ராக ஆலோபனையில் தன்னை மறந்து விட்டான். நான் அருகில் நடைபெறும் கிசுகிசுக்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் கணிப்பு
உயிர்களின் பன்முகத்தன்மை புரதங்களின் அற்புதமான இரசாயன கருவிகளின் திறனைக் காட்டுகிறது. அவை ஒன்றாக வாழ்வின் அடிப்படையான அனைத்து இரசாயன எதிர்வினைகளையும் கட்டுப்படுத்தி இயக்குகின்றன. புரதங்கள் ஹார்மோன்கள், சமிக்ஞை பொருட்கள், ஆன்டிபாடிகள் மற்றும் பல்வேறு திசுக்களின் கட்டுமானத் தொகுதிகளாகவும் செயல்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று “கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் கணிப்பு”
இயந்திர கற்றல் முன்னோடிகளுக்கு 2024 இயற்பியல் நோபல் பரிசு
“செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) இன் இன்றைய ஏற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் இயந்திர கற்றல் நுட்பங்களை உருவாக்கியதன் அடிப்படை கண்டுபிடிப்புக்களுக் காக ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் (Princeton University, USA) மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் (University of Toronto, Canada) ஆகிய இரண்டு விஞ்ஞானிகளுக்கும், 2024 இயற்பியலுக்கான நோபல் “இயந்திர கற்றல் முன்னோடிகளுக்கு 2024 இயற்பியல் நோபல் பரிசு”
உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024
நம் உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லிலும் ஒரே மாதிரியான மரபணு வழிமுறைகள் அல்லது டிஎன்ஏ உள்ளது. இந்த மரபணுக்களில் சில மட்டுமே ஒவ்வொரு ‘செல்’லிலும் வெளிப்படுத்தப்படுகின்றன, இது ‘செல்’லின் தனித்துவமான செயல்பாடுகளைச் செய்யும் புரதங்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. 2024ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க “உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024”
பசுமை ஆற்றல் – பகிராத மறுபக்கம்
பசுமைப் பாதையை நோக்கிய பந்தயத்தில் வெற்றி, தோல்வி கண்டவர்கள். இப்புத்தகத்தின் அடித்தளம், கடந்த பத்து ஆண்டுகளாக இடைவிடாத பேசும் பொருளாகக் கருதப்படும் லித்தியம் அயான் பேட்டரியை (LIB)ப் பற்றியது. இப்புத்தகம் முதல் இருபது பக்கங்களில் இதன் வளர்ச்சியை மேல்நோக்காகக் குறிப்பிட்டாலும், இருநூறு ஆண்டுகளுக்குக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட இக்கருவியை அல்லது மின்கலத்தை விவரிப்பது இப்புத்தகத்தின் நோக்கமில்லை.
தண்ணீரில் எழுத முடியுமா!
எழுத்துக்கள் எழுதுவதற்கு தண்ணீர் ஒரு சாத்தியமான ஊடகமாக இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்களைக் கூறலாம். நீரானது தொடர்ந்து மாறிக்கொண்டும் சுழன்று கொண்டும் இருப்பதால், மை பரவுவதற்கும், உருவாக்கத்திலிருந்து வெளியேறுவதற்கும் அதிக நேரம் பிடிக்காது.
நாடும் சுவை, தேடும் தொல்லியல்
தொல்லியல் என்பது பழங்கால எலும்புகள், மட்டைகள் மற்றும் எறிகணை புள்ளிகள் பற்றியது மட்டுமல்ல, அத்தகைய கலைப்பொருட்கள் காணப்படும் சூழல்களையும் ஆராய்வதாகும். பழைய துண்டுகள், தொலைந்து போன பொருள்களைத் தவிர, அவை படிந்திருக்கும் பூமியின் அடுக்குகள், மண்ணின் கலவை போன்றவற்றையும் உட்கொண்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு காலத்தில் பானைகளை உருவாக்கியவர்கள், வேட்டையாடுவதற்கான புள்ளிகள் அல்லது விலங்குகளின் மறைவுகளை இந்த இடத்தில் துடைத்தவர்கள் பற்றிய கதையை வடிவமைக்க உதவும் தடயங்கள்.
மனக் கட்டுப்பாட்டின் மந்திரவாதிகள்
நம் மனதை கட்டுப்படுத்துவதே மிகவும் சிரமம் என்றபோதில், வெளிப்புற சக்திகள் உங்கள் மனதை கட்டுப்படுத்தி, உங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு எதிராகச் செயல்படச் செய்தால் என்னவாகும்? இது ஒரு திகிலூட்டும் சாத்தியம். இவ்வாறான கற்பனைகள், நமது புனைகதைகளில் அடிக்கடி படம்பிடித்து காண்பிக்கப்படுகிறது. இது ஹாரி பாட்டரில் மூன்று மன்னிக்க முடியாத சாபங்களில் ஒன்றின் இலக்காகும். ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 இல் புனைகதை மொழியான நியூஸ்பீக்கின் நோக்கம் கூட இதுதான். இது பிரேவ் நியூ வேர்ல்ட் மற்றும் தி மஞ்சூரியன் கேண்டிடேட் போன்ற கிளாசிக்களிலும் ஈர்க்கிறது. 1950 களில், கம்யூனிஸ்டுகள் மனதைக் கட்டுப்படுத்தும் நுட்பங்களை உருவாக்கியுள்ளதாக, சிஐஏ மிகவும் கவலைப்பட்டது. அதற்காக, MK-ULTRA எனப்படும் ஒரு ரகசியத் திட்டத்தைத் தொடங்கவும் செய்தது
ஓரிகமியால் மடிந்த கண்ணாடி பொருட்களை உருவாக்கும் புதிய நுட்பம்
புதுமையான பொருட்களின் கலவையுடன் நிலையான ஒரு 3D பிரிண்டரில் பல்வகை கண்ணாடிப் பொருட்கள் அச்சிட முடியும். சிக்கலான சிலிக்கா கண்ணாடி வடிவமைக்க பொதுவாக 1000° C க்கு மேல் சூடாக்க வேண்டும். அச்சிடலின் போது இத்தகைய வெப்பமடைவதைத் தவிர்க்க, சூரிச்சில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் குணால் மசானியா, ஆண்ட்ரே ஸ்டுடார்ட் மற்றும் குழுவினர், ஒரு கண்ணாடி செய்முறையை உருவாக்கினர். அதில் கனிம கண்ணாடி முன்னோடிகளுடன், ஒளி-பதிலளிக்கக்கூடிய கரிம கலவைகள் உள்ளன
