- ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை
- கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால்
- நாளைய வேதியியல் ஆய்வக உதவியாளர்கள்
- கல்லிலே கலைவண்ணம் கண்டார்
- உலகளாவிய இசையின் உணர்ச்சித் தாக்கம், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால்
- புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும்
- அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள்
- நவீன உலகை உருவாக்கும் கணிதம்
- விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம்
- தியாகம், அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்ட பாக்டீரியாவின் புதிய பக்கம்
- ரங் பர்ஸே
- தூக்கணாங்குருவி கூடு
- பறவைகள் ஈர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடங்கள்
- ஒவ்வொரு பூவும் சொல்கிறதே
- பசுமையின் மனம் பாடும் ரகசியம்
- நீர் துளியில் நிகழும் புதுமைகள்
- எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!
- வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள்
- பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை
- பாறைகள் பகிரும் பழங்கால கதைகள்
- ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?
- இயற்கை ஏன் வடிவங்களை உருவாக்குகிறது
- மரங்களின் மர்மங்கள்: பில்லியன் உயிர்களின் கதை
- நீலப் பிரகாசம்
- மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு இருக்கிறதா?
- இயற்கை ஒரு ஆடம்பரம் அல்ல, மூளைக்கான மருந்து

ஆறாவது உணர்வுக்கு அப்பால் மனிதர்களுக்கு “தொலையுணர்வுத் தொடுகை” என்ற மறைக்கப்பட்ட ஏழாவது உணர்வும் இருப்பதாக லண்டன் க்வீன் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த உணர்வு ஒரு பொருளை உடலால் தொடாமலேயே அதன் இருப்பை உணரும் திறன் ஆகும்.

மணற்பரப்பில் மறைந்திருக்கும் இரையை கண்டறியும் கடற்பறவைகளை போலவே, மனிதர்களும் மணலில் விரல்களை நகர்த்தும்போது உருவாகும் அழுத்த அலைகளை கண்டறிவதன் மூலம், புதைக்கப்பட்ட பொருளை உணர முடிகிறது.
மனிதனுக்கு ஏழாவது உணர்வு இருக்கிறதா என்ற கேள்வியைத் தொடர்ந்து, கையை மணலில் விட்டு தொடாமலேயே புதையுண்ட பொருளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இது ஏதோ பேயைப் பார்த்தது, எதிர்காலத்தைச் சொல்வது போன்ற திரைப்படக் கற்பனை இல்லை.
உண்மையான மேலும் அளக்கக்கூடிய ஒரு திறமை: தொடாத தொலைவிலிருந்தே புதையுண்ட பொருளை உணரும் “தொலைத் தொடு உணர்வு” (remote touch).
கடற்கரை மணலில் ஒரு புதையலை யாரோ புதைத்து வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு விரலை மட்டுமே மணலுக்குள் விட்டு, விரல் அந்தப் பொருளைத் தொடுவதற்கு முன்பாகவே, அது இருக்கும் இடத்தை சரியாக கணிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
இது தான் இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கும் மனிதத் திறமை!
தொட்டு உணர்வு, பார்வை, கேள்வி, மணம், சுவை“ என்று நம்மால் வரையறுக்கப்பட்ட ஐந்து உணர்வுகளின் பட்டியல் முழுமையல்ல என்று நவீன நரம்பியல் இந்த வரைபடத்தை விரிவுபடுத்தி, மேலும் பல உணர்வுகளை வாழ்வியல் அமைப்பிற்குள் கொண்டு வருகிறது. உடல் உறுப்புகளின் நிலையை அறியும் ‘ப்ரோப்ரியோசெப்ஷன்’, சமநிலை உணர்வு, வெப்பம் உணர்வு, வலி உணர்வு, உட்புற உறுப்புகளின் இயக்கம் உணரும் ‘இன்டரோசெப்ஷன்’ ஆகியவை இவற்றுள் அடங்கும்.
இப்போது, புதிய ஆராய்ச்சிகள் இன்னும் நுண்ணிய ஒரு சாத்தியத்தை வெளிப்படுத்துகின்றன—அது தொலைவில் இருந்து நிகழும் அதிர்வுகளையும் இயக்கங்களையும் உணரும் திறன், ஒருவகையான “தொலைத் தொடு” அல்லது ஏழாவது உணர்வு.
இந்தக் கருத்து எவ்வாறு உருவானது? ‘தொலைத் தொடு’ என்ற யூகமானது திடீரென்று தோன்றவில்லை. இயற்கையிலேயே சில உயிரினங்கள் இதுபோன்ற தொலைத் தொட்டு உணர்வினைக் கொண்டுள்ளன. கடற்கரையோரம் வாழும் sandpipers, red knots போன்ற சில பறவைகள், மணலுக்கடியில் மறைந்திருக்கும் சிப்பிகளையும் புழுக்களையும் துல்லியமாகக் கண்டுபிடிப்பதை பலமுறை கண்டு ரசித்திருக்கலாம். அவை அலகை மணலில் லேசாக புதைத்தாலே போதும், தொடாமலேயே இரை எங்கிருக்கிறது என்று தெரிந்துவிடும்.
மீன்கள் தங்கள் உடலின் பக்கவாட்டில் உள்ள ‘lateral line’ அமைப்பினால் நீரில் ஏற்படும் அலைவுகள் மற்றும் அழுத்த மாற்றங்களை உணர்கின்றன. யானைகள் தூரத்திலிருந்து நில அதிர்வுகளால் மண்ணில் பரவும் தகவல்களைத் தங்கள் பாதங்களால் உணர்கின்றன. சில சிலந்திகள் மற்றும் சிறு பூச்சிகள் காற்றில் நிகழும் மிகச் சிறு அதிர்வுகளை நாளங்கள் மூலம் உணர்கின்றன. இதை விஞ்ஞானிகள் “remote mechanosensation” என்று அழைக்கிறார்கள்.
இது இயற்பியல், நரம்பியல், உயிரியல் பொறியியல் ஆகியவற்றின் சங்கமப் புள்ளியில் உதித்தது. தசாப்தங்களாக, மனிதத் தோல் வெறும் மேற்பரப்பாக இல்லாமல் நுண்ணிய சென்சார் வலையமைப்பாக இருப்பது அறியப்பட்டுள்ளது. சிறு இயந்திர அதிர்வுகளையும் புலனாக எடுத்துக் கொள்ளும் receptor-கள் அதன் உள்ளே திரளாகக் காணப்படுகின்றன.
2023–2024 காலகட்டத்தில் வெளிவந்த நரம்பியல் ஆராய்ச்சிகள், நேரடி தொடுதலின்றி காற்றில் நுண் அதிர்வுகள் உருவாக்கும் மெல்லிய அழுத்த மாற்றங்களுக்குப் பொழுதுபோக்குத் தன்மையோடு மனிதர்கள் பிரதிபலிப்பதை காட்டின. எம்ஆர்ஐ மற்றும் எம்இஜி (magnetoencephalography) ஆய்வுகள், இம்மெல்லிய தூண்டுதல்களுக்கு மூளை அதேபோல் பதிலளிப்பதை வெளிப்படுத்தின. இதை ஆய்வாளர்கள் மறைந்த ஏழாவது உணர்வாகக் குறித்தனர்—மனிதனின் தொடு உணர்விற்கு ஒரு தொலைவான நீடிப்பு.

இதுபோல் இயந்திர அதிர்வுகளை உணரும் receptor அமைப்புகள் மனிதனிடமும் காணப்படுகின்றன.
ஒரு பூச்சி தோலில் விழும்போது, அது மூளையில் அதிர்வுரு சைகைகளை அனுப்புகிறது. தோலினுள் உள்ள receptor-கள் 40–500 ஹெர்ட்ஸ் வரை அதிர்வுகளை உணர்ந்து தெரிவிக்கின்றன. ஆனால் இவை தொடுதலின்றியும் நிகழலாம். அருகிலுள்ள காற்றில் சிறிதளவாவது அதிர்வு தோலின் மேல் அடையும்போது, அந்தச் சிறு இயக்கத்தை நம் நரம்புகள் ஒருவகை சமிக்ஞைகளாக பெறுவதாக சில ஆய்வுகள் காட்டுகின்றன.
இது ஒரு தொடரியல் (continuum) எனலாம்: நேரடி தொடுதல் – நம் வழக்கமான தொடு உணர்வு. அருகிலிருந்து அதிர்வை உணர்தல் – தொலைத் தொடு. ஒலியாய் அதிர்வை உணர்தல் – கேள்வி உணர்வு. இதன் மூலம் நம் உணர்வுக்களுக்கிடையேயான எல்லைகள் கலந்தவையாக மாறுகின்றன.
மனிதனின் முன்னோர்கள் இருட்டிலும் பசியிலும் இயங்கிய காலத்தில், சுற்றியுள்ள சூழலில் மிகச் சிறு அசைவுகள் கூட உயிர்காப்பிற்கு உதவியிருக்கலாம். தொலைவில் நிகழும் அதிர்வை உணரும் திறன் ஒரு உயிர்வாழ்வுத் திறனாக இருந்திருக்கலாம். Sandpipers பறவைகளின் அலகில் உள்ள ‘Herbst corpuscles’ என்பது இதற்கு உயிரியல் சான்று. அவை மனிதனின் ‘Pacinian corpuscles’ என்பதற்குச் சமானமானவை. அந்தப் பரிணாம வளர்ச்சி சார்ந்த மரபின் ஒரு மீதி, நமது தோல் நரம்புகளிலும் இருக்கலாம். உட்புற உணர்வும் புதிய முனைவுகளும் சேர்ந்த இன்டரோசெப்ஷன் எனப்படும் இப்புதிய உணர்வு, உடலின் உள்ளுணர்வுடன் தொடர்புடையது. இதேபோல், வெளிப்புறச் செங்குத்துத் தூண்டுதல்களையும் நெருங்கிய அடிப்படையில் மனம்–உடல் இணைந்த மற்றொரு துறையாகப் பார்க்கின்றனர். இது நமது உடல்–சூழல் எல்லையை மீளச் சிந்திக்க வைக்கிறது. தோல் என்பது வெறும் எல்லை அல்ல, தொலைவில் நிகழும் ஆற்றல் மாறுதல்களை உணரும் ஒரு மேற்பரப்பு எனக் கூறலாம்.
தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடு நவீன ரோபோடிக்ஸ் இதையே சில ஆண்டுகளாக ஆராய்கிறது. காற்றின் அதிர்வை உணரும் artificial skin உருவாக்கப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் தங்கள் பயிற்சியால் காற்றின் அதிர்வை உணரும் திறனை மேம்படுத்தியவர்களாக இருக்கிறார்கள்; இது அத்தகைய திறன் மனிதனுக்குள் அடங்கியதே எனக் காட்டுகிறது. உணர்வு பற்றிய தத்துவ மற்றும் பண்பாட்டு சிந்தனைகள் மனிதனின் அனைத்து உணர்வுகளும் அவன் சாத்தியமான உலகத்தைக் கட்டமைத்துக் கொள்கின்றன. அதனால், மறைந்த உணர்வொன்று கண்டறியப்பட்டால், அது நமது நிஜத்தின் வரம்பையும் மாற்றுகிறது. தமிழ் இலக்கியத்திலும் வேதாந்தத்திலும் “ஐந்துஉணர்வுக்கும் அப்பாற்பட்ட அறிவு” எனப் பல குறிப்பீடுகள் உள்ளன; அது மனதின் விரிவான படைப்பாற்றலாகக் காணப்பட்டது. நவீன நரம்பியல் இதற்குரிய உயிரியல் ஆதாரத்தை மெதுவாக வெளிப்படுத்தி வருகிறது.
லண்டனின் Queen Mary University மற்றும் University College London-ல் பணியாற்றும் இளம் விஞ்ஞானிகள் கேட்ட ஒரே கேள்வி,“பறவைகளால் முடிகிறதென்றால், மனிதனாலும் முடியுமா?”
ஆனால் மணலுக்குள் புதைந்த பொருளைத் தொடாமலேயே உணர முடியுமா? என்பதை சோதிக்க, இந்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஒரு புதுமையான ஆய்வை மேற்கொண்டனர்.
ஒரு பெரிய பெட்டியில் மெல்லிய, உலர்ந்த மணலை நிரப்பினர். பின்னர் அதில் சிறிய பிளாஸ்டிக் கட்டிகளை பல்வேறு ஆழங்களில் புதைத்தார்கள். பங்கேற்பாளர்கள் (பெரும்பாலும் மாணவர்கள்) ஒரு விரலை மட்டும் மணலில் மெதுவாக நகர்த்த அனுமதிக்கப்பட்டார்கள். வினாடிக்கு 2 செ.மீ. மட்டுமே நகரும் வேகத்தைக் கட்டுப்படுத்த ஒரு ஒளி அடையாளம் வைத்திருந்தார்கள். மிக முக்கியமான விதி: விரல் பொருளைத் தொடுவதற்கு முன்பாகவே “இங்கே இருக்கிறது!” என்று சொல்ல வேண்டும். தொட்ட பிறகு சொன்னால் அது செல்லாது!

இப்பரிசோதனையின் முடிவில், 70-75% பங்கேற்பாளர்கள் சராசரியாக 6.9 செ.மீ. தொலைவிலிருந்தே பொருளை உணர்ந்து சரியாகச் சுட்டிக்காட்டினார்கள்! இந்த வெற்றி விகிதம் பறவைகளுக்கு நெருக்கமான துல்லியம் என்று கூறுகிறார்கள்!
சில சமயம் பொருளே இல்லாத போதும் தவறாகச் சொல்பவர்கள் மிகக் குறைவு.
இது எப்படி எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்? விரல் மணலைத் தள்ளி நகரும் போது, மண்துகள்கள் சிறிய அழுத்த அலைகளை உருவாக்குகின்றன. புதையுண்ட பொருள் அந்த அலைகளைத் திசைதிருப்புகிறது. அந்த நுண்ணிய மாற்றங்களை நம் விரல் நுனியில் உள்ள நரம்புகள் புரிந்துகொள்கின்றன. ஒரு பெரிய “ஆஹா” உணர்வு இல்லை எனினும், ஆயிரக்கணக்கான சிறிய தடவல்களை மூளை ஒன்றாகச் சேர்த்து முடிவெடுக்கிறது.
இதே பரிசோதனையை, தானியங்கு பொறிகள் (robots) மூலமும் சோதிக்கப்பட்டன. அதே பெட்டி, அதே மணல், ஆனால் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்பட்ட ரோபோ விரல். நீண்ட குறுகிய கால நினைவாற்றல் (LSTM) வழிமுறையைப் பயன்படுத்தி பயிற்சி பெற்ற ரோபோடிக் தொட்டுணரக்கூடிய உணரியுடன் மனிதனின் செயல்திறனை ஒப்பிட்டனர். சுவாரஸ்யமாக, ரோபோ சராசரியாக சற்று தொலைவில் இருந்து பொருட்களை உணர முடியும், ஆனால் பெரும்பாலும் தவறான நேர்மறைகளை உருவாக்கி, ஒட்டுமொத்த துல்லியத்தில் 40% மட்டுமே விளைவித்தது. இந்த கண்டுபிடிப்புகள், உடல் தொடர்புக்கு முன் மக்கள் உண்மையிலேயே பொருளை உணர முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இது பொதுவாக நம்முடன் நேரடி தொடர்பில் நுழையும் பொருட்களுடன் தொடர்புடைய ஒரு உணர்வுக்கான ஆச்சரியமான திறன். மனிதர்களும் ரோபோக்களும் இயற்பியல் மாதிரிகள் மற்றும் இடப்பெயர்ச்சியுடன் கணிக்கப்பட்ட அதிகபட்ச உணர்திறனுக்கு மிக அருகில் செயல்பட்டன.
“மனித மற்றும் ரோபோ ஆய்வுகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் தகவல்களைத் தெரிவித்தன என்பது இந்த ஆராய்ச்சியை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளது. மனித பரிசோதனைகள் ரோபோவின் கற்றல் அணுகுமுறையை வழிநடத்தின, மேலும் ரோபோவின் செயல்திறன் மனித தரவை விளக்குவதற்கு புதிய கண்ணோட்டங்களை வழங்கியது. உளவியல், ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இது பலதுறை ஒத்துழைப்பு அடிப்படை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இரண்டையும் தூண்டும் என்பதைக் காட்டுகிறது”, என்கிறார் லோரென்சோ ஜமோன், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தானியங்கியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பேராசிரியர்.
இது உண்மையிலேயே ஏழாவது உணர்வுதானா? பல பத்திரிக்கைகள் இதை “seventh sense” என்று அழைத்தாலும், விஞ்ஞான ரீதியாக இது தொடு உணர்வின் ஒரு நீட்சி தான். ஆனால் எத்தனை அழகான நீட்சி!
“மனிதர்களிடம் தொலைத் தொடு உணர்வு இருக்கிறது” என்பதை முதல் முறையாக நிரூபித்துள்ளோம் என்கிறார் ஆய்வின் முதன்மை ஆசிரியை டாக்டர் எலிசபெத்தா வெர்சேஸ் (Elisabetta Versace). மேலும், இது நம் உலகப் பார்வையையே மாற்றும் என்றும் நம்புகிறார்.
இது நம் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்யும் என்று சிறிது கற்பனை செய்யலாம்:
பூகம்பத்தில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் வேகமாகக் செயல்படலாம். தொல்லியல் ஆராய்ச்சியில் பொக்கிஷங்களை அழிக்காமல் கண்டறியலாம். செயற்கை கைகள் கொண்ட ரோபோக்கள் இன்னும் திறமையாக மாறும். பார்வையற்றோருக்கு மணல், உதிரி மண் போன்ற இடங்களில் நடக்க உதவும் தொழில்நுட்பங்கள் வரலாம்.
மேலும்: https://news.mit.edu/2021/robotic-finger-buried-underground-0526 : Slender robotic finger senses buried items | MIT News | Massachusetts Institute of Technology
எதிர்கால ஆய்வுகள் எங்கே போகின்றன?
இது இப்போது ஒரு மாநாட்டில் (IEEE ICDL 2025) வெளியிடப்பட்ட ஆய்வு மட்டுமே. விரைவில் உயரிய இதழ்களில் முழு ஆய்வுக்கட்டுரை வரும் என எதிர்பார்க்கலாம்.
மணல் அல்லாமல், பனி, மண், சேறு, துகள் மணல் (gravel) போன்றவற்றிலும் இது வேலை செய்யுமா என்று அடுத்த கேள்வி எழுகிறது. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்தத் திறன் எப்படி இருக்கும்? மூளையின் எந்தப் பகுதி இதைச் செய்கிறது? பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் இது தனித்தனியே பரிணாம வளர்ச்சியா (convergent evolution) அல்லது பொதுவான மூதாதையரிடமிருந்து வந்ததா?
ரோபோக்களுக்கு இந்தத் திறமையை முழுமையாகக் கற்றுக்கொடுக்க முடியுமா?
லண்டனில் உள்ள Prepared Minds Lab, Centre for Advanced Robotics போன்ற குழுக்கள் இப்போதே பல மில்லியன் பவுண்ட் மானியங்களைத் தேடி வருகின்றன. 2026-2028-க்குள் இது ஒரு பெரிய ஆய்வுத் துறையாக மாறும் என்கின்றனர்.
நாம் நினைத்ததைவிட நம் உடல் இன்னும் எத்தனையோ ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது.
ஒரு விரல் மணலில் பதிந்து, “இங்கே ஒன்று புதைந்திருக்கிறது” என்று உணரும் போது, நாமும் ஒரு சிறிய கடற்கரைப் பறவையாக மாறலாம்.
அல்லது அடுத்த முறை கடற்கரைக்குச் செல்லும் போது, விரலை மணலில் விட்டு நாணயங்களைத் தேடி எடுத்து, நமது ஏழாம் உணர்வை அறிந்துகொள்ளலாம்.
2https://www.popularmechanics.com/science/a69398216/hidden-sense-fingertips/
3https://neurosciencenews.com/remote-touch-neuroscience-29911/
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
