இரண்டொழிந்தது

எது எதையோ பொருத்தம் பார்த்த எழிலின் மனம் எப்படி சாதியை மறந்தது எனத் தெரியவில்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தான் இருப்பது கொல்லப் பக்கம் என்ற தெளிவு வரவே, துளிர் விட்ட மொட்டு காற்றின் விசையால் மண்ணில் விழுந்தது போல் ஆனாள் எழில். காப்பியை வாங்காமலேயே கோதையின் வீட்டை விட்டு புத்தகப் பையோடு வெளியேறினாள்

டெர்மினல்

ட்ராமின் ஜன்னல் கம்பிகளின் மீது கனத்த போர்வை போல தூசு படிந்திருந்ததில் நடைபாதையில் இருந்த மரம், விளக்குக் கம்பம் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ பழைய படத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கைப் போல வழுக்கியபடி மங்கலாகக் காட்சியளித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினார்கள். நடத்துநர் மணி கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கும்போதெல்லாம் ட்ராம் விக்கலுடன் முன்னால் சென்று நின்றது.

பர்வீன் ஷாகிர் கவிதைகள்

காதலர்களின் பிரிவும் சேர்தலும் தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்டிருப்பதைப் போல உருதுக் கவிதைகளிலும் பாடப்பட்டிருக்கின்றன. வஸ்ல் (wasl) என்னும் உருது வார்த்தை இணைவதையும், ஹிஜ்ர் (hijr) என்னும் உருது வார்த்தை பிரிவையும் குறிக்கின்றன. ஹஸ்ரத் மோகானி எழுதி, குலாம் அலியால் பாடப்பட்டு கஜல் ரசிகர்களை இன்றும் ஈர்க்கும்

குமார சம்பவம் மஹா காவ்யம்

ஈசனின் பிரிய பத்னியாக அவருடைய மடியில் அமர ஏதுவாக இருக்கவே என்பது போல இடை பாகமும் பின்னழகும் விளங்கின. அடுத்து அழகிய நாபியும், அதைச் சுற்றி ரோம ராசியும், மேகலையில் பதித்த மணி போலவும், வளித்ரயம் என்ற கோடுகள், அழகிய ஸ்தனங்கள், உத்பலம் போன்ற கண்கள் என  ஒவ்வொரு அங்கமும் யௌவனம் வந்து விட்டதை பறை சாற்றின போலும்

தலை துண்டிக்கப்பட்ட புத்தர்

சப்தமில்லாததால்
நிசப்தமாய் இருக்கும்
நிசப்தமாய்
இல்லாது
நிசப்தமாய் இருக்கிறதால்
நிசப்தமாய் இருக்கிற
நிசப்தத்துக்குள்
என்னிரு விழிகள் செவிமடுக்க-
மேனியுலர்ந்து
பழுத்துக் கொண்டே இருக்கும்

மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது

ஒரு கல்யாணமாகாத பெண் உலகத்தைப் பார்க்கறதுக்கும் கல்யாணமான பெண் பார்க்கறதுக்கும் வித்தியாசம் இருக்கும். கல்யாணமாகி குழந்தை குட்டி பெற்று அதுகளையும் கட்டியவனையும் பராமரித்துக்கொண்டு, அதோடு ராஜாங்க காரியங்களையும் கவனிக்கறது கஷ்டம் தான். ஒண்ணு வேணும்னா செய்திருப்பேன். சமையல்கட்டை பெரிசாக்கி சமைச்சுக்கிட்டே அரசியல் பேசி நிர்வாகம் பண்ணியிருப்பேன். சமையலும் பண்ணியிருப்பேன். அப்புறம் ஒண்ணு. எனக்கு சரியாக சமைக்க தெரியாது. ஆனால் கற்றுக்கொண்டிருப்பேன்

 சிறுகோட்டுப் பெருங்குளம்

This entry is part 11 of 11 in the series கவிதாயினி

மல்லர் போர் என்பது  எதிர்ப்பவரை குறிப்பிட்ட பொழுது தாக்குதல் நடத்தவிடாது செயலிழக்க செய்தல். அந்த மல்லனின் வீரத்தில் திகைப்புற்று மையல் கொண்ட ஊர், வெளியூரில் இருந்து வந்த மல்லனை வென்றவனாக ஏற்றுக்கொள்வதா.. வேண்டாமா என்று தடுமாறுகிறது. அங்கே கூட்டத்தில் மற்பார் காண வந்த ஒருத்திக்கு அவன் மீது மையல் உண்டாகிறது. அவளும் அவனை  காதலிப்பதா? வேண்டாமா? என்று இருநிலைகளில் அலைகழிகிறாள்.

சிறுகதைகளின் வழியாக அமெரிக்க வரலாறு (1900-1939)

ஆனால் 1931ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் பேசுகையில் அமெரிக்க அதிபர் ஹூவர் கவனத்துடன் பீதிக்குப்  பதிலாகப் முதன் முதலாக பொருளாதார மந்தநிலை என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்டார். ஹுவரை பொறுத்தவரைப் பீதியை விட மந்தநிலை என்னும் வார்த்தை மிக குறைவான அச்சத்தினை மக்களிடம் கொடுக்கும் என நினைத்தார்.

உதிரும் வண்ண இலைகள் !

This entry is part 4 of 4 in the series பருவம்

துள்ளுகின்ற மீன்களாகிய மேகலையை அணிந்து, நீர்நிலைகளின் கரையோரங்களில் அமர்ந்திருக்கும் அன்னப்பறவைகள் முத்துமாலைகள் போலக் காட்சியளிக்க, பரந்த மணல் பிரதேசம் எனும் நிதம்பத்தையுடைய நதிகள், தம் இளமையாலும் அழகாலும் செருக்குற்ற இளமங்கையர் போல் தளர்நடையிட்டுக் கொஞ்சிக் குழைந்து, மெதுவாக ஆடி அசைந்து செல்கின்றன.

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி

This entry is part 2 of 2 in the series ஆத்தோரம் மணலெடுத்து

இளம் வயதில் அழகும் அறிவும் நிறைந்த ஒருத்தியின் மேல் பையன்களுக்கு மோகம் வருவது இயற்கை. காலப்போக்கில் அழகின் தாக்கம் குறைந்து அறிவின் உயர்ச்சி மட்டுமே தங்கும். அப்போது ஆசைக்கு பதில் பிரமிப்பு. நிகிலுக்கும் விரைவில் அந்த மாற்றம் நிகழும். திரும்பிப் பார்க்கும்போது, ‘சே! என்ன அசட்டுத்தனம்!’ என்று நினைக்கத் தோன்றும். வெட்கப்பட ஒன்றும் இல்லை. உடல் மற்றும் மன வளர்ச்சியில் ஒரு பாலம். 

தண்ணீரில் எழுத முடியுமா!

எழுத்துக்கள் எழுதுவதற்கு தண்ணீர் ஒரு சாத்தியமான ஊடகமாக இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்களைக் கூறலாம். நீரானது தொடர்ந்து மாறிக்கொண்டும் சுழன்று கொண்டும் இருப்பதால், மை பரவுவதற்கும், உருவாக்கத்திலிருந்து வெளியேறுவதற்கும் அதிக நேரம் பிடிக்காது. 

சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?

This entry is part 18 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

ஒரே ஆறுதலாக அமைந்த வகுப்பு தமிழ் வகுப்பு. ராயகிரியிலிருந்து வரும் ஜெயராஜ் சார்தான் தமிழ் எடுத்தார். அவர் வகுப்பில் மட்டும்தான் எல்லோரும் சிரிக்க முடிந்தது. செய்யுள் பகுதி என்றாள் எவர் தனி உற்சாகம் அடைவார். புத்தகத்தில் உள்ள பாடல்களைத் தாண்டியும் அவர் சொல்லிக் கொண்டே போவார். வகுப்பில் 3 முறைகளுக்கு மேல் சந்தேகம் கேட்கக்கூடாது என பிற ஆசிரியர்களால் நிறுத்தப்பட்டிருந்த பிரேமுக்கு ஜெயராஜ் சார் வகுப்பில் எந்தத் தடையுமில்லை.

மெட்ரோ மோஹினி

அப்போதுதான் தலையில் பல்பு எரிந்தது. கடந்த இரண்டு வாரங்களாக காலை நேரங்களில் மெட்ரோவில் மூன்று தற்கொலைகள். போலீசாரால் இறந்தவர்கள் எதற்காக தன்னையே மாய்த்துக்கொண்டனர் எனச் சரியாகக் கூறமுடியவில்லை. இதனால்தானோ அதிகம் கூட்டமில்லை?

பேரன்பின் பிசாசு 

வாழ்வது நானென்று
ஆனாலும்
செல்வது உன் வழியில் !
சேர்வது உன் மடியில்!

நாய்வால்

வாழ்க்கைச்சக்கரத்தில் வயோதிகம்  எவ்வளவு சீக்கிரம் ஒருவரை ஆக்கிரமிக்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. அப்படித்தான் அவர்கள் இருவருக்கும் ஆயிற்று. தலை நரைத்தது. கண்  முகம் தோல்  சுருங்கிப்போனது.  முட்டிவலி  நெட்டிக்கொண்டு வந்தது.  இயலாமை  அன்றாடம்  அனுபவமானது.  சர்க்கரையும் இரத்த அழுத்தமும்  கொலஸ்ட்ராலும்  உன்னை விட்டேனா பார்  என்று ஒன்றன் பின் ஒன்றாகத் துரத்திக்கொண்டு வந்தன.

அழகிய இலண்டன்

This entry is part 9 of 9 in the series பயணங்கள்- லண்டன்

லண்டன் வரலாற்றில் 1666ல் நான்கு நாட்களுக்கு நடந்த பெரும் தீவிபத்து காரணமாக நகரில் பல கட்டடங்களும் பல்லாயிரக்கணக்கான வீடுகளும் பல தேவாலயங்களும் எரிந்து சேதமடைந்துள்ளன. மக்கள் வீடின்றி தெருவில் நிற்க, பலரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆற்றைக் கடந்து சென்றிருக்கிறார்கள். ‘லண்டன் பிரிட்ஜ்’ செல்லும் வழியில் தீவிபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒரு நினைவுத்தூணை பார்த்துவிட்டு வாருங்கள் என்று எங்களை இறக்கிவிட்டார் அந்த பேருந்து ஓட்டுநர். நாங்களும் தகவல்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்…

This entry is part 33 of 33 in the series அதிரியன் நினைவுகள்

சமீபத்தில் கப்படோசியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ரியன் சமர்ப்பித்த அறிக்கை, காஸ்பியன் கடலோரமுள்ள சிறு இராச்சியத்தை ஆண்டுகொண்டிருந்த பராஸ்மன்ஸ்(Pharasmanès) மீது குற்றம் சாட்டியிருந்தது. இவர், மன்னர் திராயான் காலத்தில் உரோமானிய அரசுக்கு விசுவாசமாக இருக்கத் தவறி, பெரும் இழப்பை ஏற்படுத்தியிருந்தார் ; அதைத் தற்போதும் தொடர்வதாக அறிக்கை தெரிவித்தது.

தாத்தா

வளர்ந்தாலும்
எப்போதும்
தனது குழந்தையென
தாத்தாவின் காலடிகளை
நெஞ்சில் சுமக்கிறாள்
பூமித்தாய்

எதிர் (பாரா) வினை

ஒவ்வொரு மூணு மாசத்துக்கும் இப்டி எதையாச்சும் கொடுத்திட்டேதான் சார் இருப்பாங்க…விதி முறைப்படி நாம அவுங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைத்தானே செய்ய முடியும்…? அவுங்க அப்ளிகேஷனை நிறுத்தி வச்சாத்தானே தப்பு? அதைத்தான் ஃபார்வேர்டு பண்ணிடுறமே…சென்னைல இருக்கிற துறைத் தலைமைதானே இதையெல்லாம் பரிசீலிக்கணும்? லோக்கல்லயே இன்னும் ரெண்டு ஆபீஸ் தாண்டணுமே…!

மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?

சந்திரனின் நிழல் சூர்யனின் பரப்பில் பெரும்பாலும் விழும் போது, சூர்ய நிற மண்டலம் சிவப்பாகக் காட்சி அளிப்பதை, சிவப்பு ஆடு என்றும், முழு கிரஹணத்தின் போது தெரியும் சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை வெள்ளாடு என்றும் அத்ரி வர்ணிக்கிறார். இரவின் இருளுக்கும், கிரஹண இருளுக்கும் மாறுபாடு உண்டெனவும் அவர் சொல்கிறார்.

குடப்பாம்பில் கைவிட்டான்

முற்றத்தில் நுழைந்தவுடன் கண்ணெதிரில் சிறு மண்டபத்தில் சீதா சமேதராக இராமபிரான் கொலுவிருக்கப் பக்கத்தில் லட்சுமணனும், கீழே கைகட்டி வாய்பொத்தி மிக பவ்யமாக ஆஞ்சநேயரும் அருள் பாலித்தனர். நாள்தோறும் இடைவிடாமல் நடக்கும்  பூஜைகளும் அப்போது ஒலிக்கும் பாடல்களும் கண்ணுக்கும் செவிக்கும் இன்பமளித்துக் கொண்டே இருக்கும்.

உள்ளும் புறத்தும் தனிமையே!

தனிமையின் வெறுமையை விளக்கும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரில் பல பாடல்கள் தனிமை குறித்தனவாக இருக்கின்றன. பல பாடல்கள் துணையைப் பிரிந்த காதல்வலியையும் சில பாடல்கள் காதல் குறித்த சுட்டலின்றித் தனிமையை மட்டும் குறிக்கின்றன.

குங்கும பரணி

தேடல், பரிசோதனை இரண்டும் வேறுவேறானவை. புதிதாக ஒன்றை அறிவது தேடல். ஏற்கெனவே இருந்து மறைந்தவற்றை மீண்டும் கண்டுபிடிப்பது பரிசோதனை. இரண்டும் வேறுவேறான செயல்கள். இதுவரை யாரும் கண்டுபிடிக்காததை, யாரும் இதுவரை தொடாத ஒன்றை ஆராய்ந்து தெரிவிப்பது மனித இனத்திற்கு நவீன வெளிப்பாடாக இருக்கும்