மரக் கம்பங்களை நட்டு, அவற்றை தெய்வமாகப் பாவித்து, அந்தத் தெய்வங்களைச் சுற்றி ஒரு சிறு சந்நிதியை நிறுவி வழிபடுவது என்பது இந்தப் பிராந்தியத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தொல்குடிகளின் மரபு என்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள். ஸ்தம்பேஷ்வரி (ஸ்தம்பம் – கம்பம்) காந்துணிதேவி என்று பல பெயர்கள் கொண்டுள்ள இந்த மூர்த்தங்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன. இப்படி நெடுங்காலமாக திரண்டு வரும் நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தான் பூரி ஜகந்நாதரின் அமைப்பு என்பது ஆய்வாளர்களின் பார்வை
Series: கலிங்கம்
கல்வெட்டுகள்
ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் அசோகரின் கல்வெட்டை மறைத்திருந்த சிறு காடு இன்று ஒரு பூங்காவாக உருவெடுத்திருக்கிறது. இயற்கையிடமிருந்து பாதுகாக்க ஒரு மண்டபமும், மனிதனிடமிருந்து காக்க இரும்புக் கம்பி தடுப்புகளையும் தாங்கி நிற்கிறது இன்று. சுற்றிலும் அலங்காரப் புல் தரை. விளிம்பில் இருந்த புதர்களை செதுக்கிக் கொண்டிருந்தார் முண்டாசு கட்டியத் தோட்டக்காரர். ஒரு சிறு பாறையில் சாய்ந்து நின்ற அலைபேசியில் இருந்து ஹிந்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
ஈரநிலம்
அதற்குள் இரும்பு கழி கோபுர சிப்பியை உடைத்திருந்தது. அதன் உள்ளில் இருந்து நண்டு போன்ற ஏதோ ஒரு ஜீவராசி சூரியனில் பள பளக்கும் மஞ்சள் நிறக் கல் ஒன்றை அதன் துடிக்கும் கால்களால் நகர்த்திக் கொண்டிருந்தது. கல்லை, உடைந்த ஓட்டில் இருந்து, எடுத்து ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையே பிடித்து, சூரியனை நோக்கி காண்பித்து, ‘கலர் பாத்தீங்களா? புஷ்பராகக் கல். அதிர்ஷ்ட கல். மோதரம் செஞ்சு விரல்ல மாட்டுனீங்கன்னா மனசுக்கு ரொம்ப அமைதி கிடைக்கும். அவ்வளவு சக்தி’ என்று நிமிடத்தில் ஜோதிடராக உரு மாறினான் இளைஞன்.
