சந்தை நாள்

முதன்முதலாய் அவனைக் கவனமாய் பார்த்து உண்மையாய் அவனை பாராட்டியது பழவியாபாரி பியாரிலால்தான்: ‘வா கேகுபாய், என்ன நேர்த்தியாய் உடை போடுறிங்க! காலையில் கடைக்கு வரும்போது இருப்பது போலவே நாள் கடைசிவரைக்கும் உங்கள் உடை மடிப்பு கலையாமல், புதிதாய், அப்படியே இருக்கே. உங்கள் வேலைலே உங்களுக்கு நிஜம்மாகவே எத்தனை விருப்பம்!!” என்றான். இது கேகுவின் உள்ளத்தைத் தொட்டு, அன்றிலிருந்து இரு கடைக்காரர்களிடையும் ஒரு பந்தம் உருவானது.

தற்செயலாய் உருவான பிரபஞ்சம்

முன்பு விபத்துகளாகக் கருதப்பட்ட நிகழ்வுகளை, அடிப்படைக் கொள்கைகளுக்கும் காரணங்களுக்கும் உட்பட்ட நிகழ்வுகளாக நிலைநிறுத்துவதே அறிவியலின் வரலாற்றுச் செயல்பாடுகள். இதுவரை தெள்ளத் தெளிய விளக்கப்பட்ட நிகழ்வுகளோடு பட்டியலில் சேர்க்க வேண்டியவை இதோ: வானத்தின் நீல நிறம், கோள்களின் சுற்றுப்பாதைகள், ஏரியில் இயக்கப்படும் படகு விட்டுச்செல்லும் வழித்தடம் , உதிர்பனித்துகளின் அறுகோணப் பாங்கு, பறந்து செல்லும் வான்கோழியின் எடை, கொதிக்கும் நீரின் வெப்ப நிலை, மழைத்துளியின் பரிமாணம், சூரியனின் வட்டவடிவத் தோற்றம் எனப்பல.

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – கன்னடம்

மர்மமான நிறுத்ததுக்கு அழைத்து செல்ல
ஓட்டுனர் அற்ற ஒரு பஸ்ஸைப் போல்
இரவு எங்கள் இருவர் மேலும்
ஒரே காலத்தில் படிந்திருந்தது.

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – தெலுங்கு

கண்ணாடியென்றால்
சுவற்றில் தொங்கும் உடலென்று பொருளல்ல
உன் மனச்சாட்சி
எப்போதும் உன் பிரதிபலிப்பின்
பின்னாலிருக்கும் மாயாஜால வித்தைக்காரன்

ப்ரூஸ் ஸ்டெர்லிங்க் – ஒரு பேட்டி

ப்ரூஸ் ஸ்டெர்லிங் அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தில் ஆஸ்டின் என்கிற நகரில் 1954 ஆம் வருடம் பிறந்தவர். அறிவியல் நவீனங்கள் எழுதிப் புகழ் பெற்றவரானார். அறிவியல் நவீனங்களில் ‘சைபர் பங்க்’ என்கிற ஒரு கிளைப் பிரிவைத் தோற்றுவித்த சிலரில் இவர் ஒருவர் என்று அறியப்பட்டவர். சமீப காலத்தில் இவர் வலையுலகின் விமர்சகர்களில் ஒருவராகவும், சைபர் உலகின் கருத்தாளராகவும் அறியப்பட்டு, யூரோபியன் உயர்கல்வி நிலையம் ஒன்றில் விரிவுரையாளராகச் செயலாற்றுகிறார். அது இவர் செய்யும் பல வகைத் தொழில்களில் ஒன்று.

முகம்மது ஆல்வியின் உருது கவிதைகள்

வெள்ளிச்சிறகுகளை அகல
விரித்தொரு பறவை
தனதேயானப் பரவச அலையில்
மிதக்கிறது,
நீலக் கடலலைகளின் மேல்.

யாருக்குத் தெரியும்

சற்று நேரம் கழித்து அவள் மீண்டும் கூறினாள்: “ஒரு ரட்சகன் பெருமையோடல்லவா வரவேண்டும். அந்தக் குழந்தை இந்த ரத்தத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? எப்படி இந்தக் கடனைத் தீர்க்கப் போகிறது அது?”
படைவீரன் சொன்னான்: “அவன் பிழைத்திருந்தாலல்லவா?”
இருவரும் மீண்டும் மௌனமானார்கள்.

கவிமொழியைக் கைமாற்ற முடியுமா? டெப்ரா ஏய்கர் கவிதையை முன்வைத்து…

கவிதை மொழிபெயர்ப்பு இன்னும் சங்கடமானது. கட்டுரைகளிலும், கதைகளிலும் அதன் படைப்பாளி சொல்ல வருவதை புரிந்துகொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு விரிவும், பரப்பும், கவிதையில் இல்லை. வெகுசில வரிகளிலேயே சொல்லவருவதை சொல்லியும் சொல்லாமலும் குறிப்பது கவிதை. இதனாலேயே கவிதையை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் சொல்வது இயலாத விஷயம் என்று வாதிடுபவர்கள் உண்டு.

எங்கிருந்து அழைக்கிறேன் நான்?

கண்ணிமைக்கும் நேரத்தில் ஜேபி அவளை பின்தொடர்ந்து முன்வராந்தாவுக்குச் சென்றான். வராந்தாவின் திரைச் சீலைக் கதவை அவளுக்காக அவன் திறந்துவைத்தான். அவளுடன் படிகளில் இறங்கி அவள் தன்னுடைய டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்றான். அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருந்தது அது. உலகத்தில் வேறு எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. கால்களை நடுநடுங்கச் செய்யும் ஒருத்தியை அவன் சந்தித்திருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டான். அவளது முத்தம் இன்னும் அவன் உதடுகளில் எரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான்.

எதையோ கனவுகிற விளையாட்டு

அந்தக் குரலிலேயே தெரிந்து போகிறது, மிகக் கவனமாக பீதியடையாமல் இருக்க முயற்சி நடப்பது. மிகவும் பயந்து போயிருக்கிற ஒரு தாய், தன்னிடம் உள்ள அத்தனை அலசலறிவையும் பயன்படுத்தி, தன் மூளையின் வேதிப்பொருட்களின் உத்வேகத்தை மீறித் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைப் பல்லாலும் நகத்தாலும், ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளாமல், புத்திசாலித்தனத்தால் எதிர் கொண்டிருக்கிறாள் என்பது. “ஏதாவது மோசமாக நடந்து விட்டதா?”

குழந்தை மனம் : ஆலிசன் கோப்னிக் நேர்காணல்

குழந்தை உளவியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருக்கும் ஆலிசன், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண முடியும் என்று வாதிடுகிறார். குழந்தைகள், சீர்திருத்தப் படவேண்டிய சிறிய மனிதர்கள் எனும் மேற்கத்திய பார்வை மாறிவரும் அதே நேரத்தில், குழந்தைகளை சிறிய தெய்வங்களாகக் கொண்டாடும் இந்திய மரபார்ந்த பார்வையும் சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

ஜெஃப் டையருடன் ஒரு நேர்காணல்

“நான் பற்பல பொருள்களைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். எல்லாப் பொருள்களுக்கும் ஒரே மாதிரி கட்டமைப்பையே பயன்படுத்தியிருந்தால், அதெல்லாம் ஒரு தூசுக்குச் சமமாகி விடும்..”

மெர்க்கேட்டரின் வயது 500

1569 ஆம் ஆண்டு மெர்கேட்டர் வரைபடம், நிலப்பட வரைவியலில் அதுகாறும் இருந்த பழைய வடிப்புகளையெல்லாம் உடைத்தெறிந்து, அது அழகுக்காக வரையப்பட்ட படமில்லை, பயனுள்ளதொரு நிலவரைபடம் என்று காட்டியது.

குறிக்கோளில்லாத பிரபஞ்சம்

நம் பிரபஞ்சமும், அதன் இயக்க விதிகளும் , தெய்வீக வழிகாட்டலோ, குறிக்கோளோ இல்லாமல், தன்னிச்சையாகத் தோன்றின என்பதற்கான நிரூபணமாகிவிடுமா? அல்ல, ஆனால் அப்படியும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதையே தெரிவிக்கிறது.

கடற்குதிரை

பழக்கூழாலோ,கண்ணாடிக் குழம்பை ஊதியோ வடிவமைத்த
சதுரங்கக் குதிரைகளா?
குமுறும் ஆழியில்
பக்கவாட்டில் மட்டுமே தெரியும்
தன்னிரக்கக் கோமாளிகள்.

நகருக்குள் சென் ஹுவான்ஷெங்கின் சாகசம்

பெருமூச்செறிந்தான். சரி, வீட்டுக்குக் கிளம்பலாம் என்று எழுந்தான். கால்கள் துவண்டன. மிகவும் பலகீனமாக உணர்ந்தான். உடல்நலமில்லையா என்ன? கூட்டத்தைச் சமாளித்ததில் அவன் எதையுமே அறியவில்லை. மிகவும் சோர்வாக இருந்தது. வாய் வறண்டு காய்ச்சலடிப்பது போலிருந்தது. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. உடல் மிகக் குளிர்ந்தது. சூடாக ஒரு கோப்பை தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், கடைகள் எல்லாமே மூடியிருந்தன. ரயில் நிலையத்தில் சுடுநீர் கிடைக்கும் என்ற ஞாபகம் வந்தது. கிடுகிடுவென்று போனான்.

சீனாவின் நிஜமான மக்கள் புரட்சி

பத்திரிகை சுதந்திரம் இல்லாத சமூகத்தில், பாதிக்கப்பட்டவர்கள் கவனம் பெறுவது கடினம். நேற்று நடந்ததையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்களேன்: நான் CNN-க்குத் தொலைபேசியில் நேர்முகம் தந்திருந்தேன். அதன்பின் திடீரென்று, CNN ஒளிபரப்பு ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. என் தொலைகாட்சிப் பெட்டி முழுமையாக மௌனமானது. எனக்கு அது முதல் அனுபவம். கடவுளே, நான் பேட்டி கொடுத்ததால்தான் இப்படி நடக்கிறதா, என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! என்று நான் நினைத்தேன். எந்த ஒரு நாட்டில் இப்படி நடக்கும்? ஒருவேளை க்யூபா, வட கொரியா, சீனா. ஆனால் அவர்களுக்கு என்ன வேண்டும், அவர்கள் எதைப் பார்த்து பயப்படுகிறார்கள்?

வெளியே, வெட்டவெளியில்

அந்தி ஆகவிருக்கிறது.நீ இப்போது போகவேண்டும்,
மீண்டும் உன் வழித்தடங்களைக் கண்டுகொண்டு: வயலில் கிடக்கும் துருபிடித்தக் கருவிகள்
மற்றும் ஏரிக்கு அந்த பக்கம் இருக்கும் வீடு, செம்பழுப்பாக,
சதுரமாக சரக்குபெட்டி போல திடமானதாக.

வெர்மீயர்

காதுகளில் ர்ர்ர் என்ற ரீங்காரம்.ஆழமா? உயரமா?
அது அந்த சுவருக்கப்பாலிருந்து வரும் அழுத்தம்,
யதார்த்தத்தை மிதக்க வைத்து,
தூரிகையை நிலைக்க வைக்கும் அழுத்தம்.

புரட்சியில் நீ இணையும் நாள் இதுதானா?

காவல் துறையினர், தன்னைப் பார்க்கக்கூடிய அளவில், அண்மையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்ட லிஸ், கொஞ்சம் தாராளமாகவே நீலிக்கண்ணீர் வடித்தாள். அவர்கள் கிரெக்கிடம் அச்சிட்ட தாள் ஒன்றினை அளித்து, அவனிடமிருந்த பற்றுச்சீட்டின் எஞ்சிய பகுதியில் முத்திரை பதித்துவிட்டு, அவளை கண்ணியமாக நடத்தி, வீட்டிற்கு உடனே இட்டுச்செல்லுமாறு கூறினர்.

தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… – இறுதிப் பகுதி

நான் இதை முன்பும் சொல்லி இருக்கிறென்: எனக்கு உலகைப் பற்றிய மேம்பட்ட புரிதல் இல்லை. மேம்பட்ட புரிதலை விடுங்கள், நிஜத்தில் எனக்கு இந்த உலகம் புரிபடவில்லை. நான் புரிந்தவளல்ல. எனக்குப் புரியவில்லை என்பதினால்தான் நான் எழுதுகிறேன். அதற்கான விலையைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எதற்கும் ஈடில்லை. ஒருவரின் துன்பம், வாழ்க்கை என்பதே, இருப்பதிலேயே மிக்க மதிப்புள்ளது.

பாத்திரங்கள் சுருங்கும்

எழுதாமல் இருப்பதற்கு
முன்னால் வருவது எழுத்து. அங்குதான் இருக்கிறது
சிறிய பெரிய ஏனைய கவிதைகளை ஊட்டி
வளர்த்திருக்கும் ரகசியம்.

அடக்கப் பிரசங்கம்

புகைப்படங்கள் அனைத்திலும், அப்பா ஒரு சைகையின் மத்தியில் உறைந்து நின்றார் புகைப்படங்கள் அனைத்திலும் அப்பா தான் அடுத்து என்ன செய்ய என்பது தெரியாதவர் போலிருந்தார். ஆனால் அப்பாவுக்கு எப்போதும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அதனால்தான் இந்தப் படங்கள் அனைத்தும் பொய்யாக இருந்தன. அத்தனை பொய்ப் படங்களாலும், அத்தனை பொய் முகங்களாலும் அறை சில்லிட்டிருந்தது.

தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையும், அந்த உலகத்துடன் ஒரு தனி உறவும் கொண்டவரென நான் நம்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் இப்படியே. மேலும் நாம் செய்யும் எதையும் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செய்கிறோம். ஏனெனில் நமக்கு வேறு வழிகளில்லை.

தணிக்கையாளர்கள்

நாட்கள் செல்லச் செல்ல அவன் அந்தப் பணியை மிகவும் விருப்பத்துடன் செய்தான். அவன் இங்கு வந்த காரணமே தற்போது அவனுக்கு முற்றிலும் மறந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கடிதங்களின் பலவரிகளை அழிக்க வேண்டியிருந்தது. பல கடிதங்களை குப்பைக்கூடையிலும் சேர்த்தான். அரசாங்கத்திற்கு ”எதிரான” மக்களின் சூக்குமுமான வாசகங்களை கண்டு பயந்த நாட்களும் உண்டு. தற்போதெல்லாம் அவனால் “விலைவாசி உயர்ந்துவிட்டது”, “வானம் மந்தமாக உள்ளது” போன்ற வரிகளில் கூட அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் புதைந்திருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.

இடைமட்ட மேலாளுகைக்கு நிலையான வியூகங்கள்

அந்த அறையைவிட்டு வெளியேறியபோது ஒரு கைப்பிடி அந்த அகன்ற இலைகளைப் பிடுங்கிக்கொண்டு என் அலுவலகத்திற்கு மீண்டும் வந்தேன். என் நாவால் இலையின் தடித்த பகுதியிலிருந்து ஒரு நரம்பைக் கண்டுபிடித்தேன். அவ்வளவு மோசமில்லை. பசுஞ்சுவையோடிருந்தது. அது உலரும்வரை நன்றாக உறிஞ்சியெடுத்துவிட்டு சக்கையைக் குப்பைக்கூடையில் எறிந்தேன்.

தலை வெட்டப்பட்ட கோழி

அந்தச் சிறுமிக்கு இப்போது விரல் நுனியை ஊன்றி தன் உடலை மேலே எழுப்ப வசதியான ஒரு இடம் கிடைத்தது. அந்த இடத்தில் தன் விரல் நுனியை நன்கு அழுத்திக்கொண்டாள். தன் உடலை மேலே உயர்த்த முயன்றாள். ஆனால் அவள் காலை யாரோ மிக இறுக்கமாக பிடித்திருப்பதை உணர்ந்தாள். கீழே பார்த்தாள். அந்த எட்டு கண்களும் அவளுக்கு பெரும் அச்சத்தை அளித்தன.

’ ஒரு எடிட்டராக நான் என்ன செய்கிறேன் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை’

“நீங்கள் ஒரு நல்ல எடிட்டரா மோசமான எடிட்டரா இல்லை எடிட்டரே இல்லையா என்பது முக்கியமில்லை: நீங்கள் ஒரு மிக முக்கியமான வாசிப்பின் பிரதிநிதி. ஆமாம் அவருடைய கணவர் அதைப் படித்திருக்கிறார். ஆமாம், அவருடைய ஏஜண்ட் அதைப் படித்திருக்கிறார். ஆனால் நீ அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறாய், அதற்கான தகுதி உனக்கு இல்லை என்றாலும். நீ பணத்தின் குறியீடாகவும் இருக்கிறாய்.”

மாக்ஸீன் க்யூமின் – இரு கவிதைகள்

பத்து நிமிடங்களுக்குப் பின் அவன் அம்மாவை வீழ்த்தினேன்.
அவள் காற்றில் கர்ணமடித்து விழுந்தாள், ஊசிப்பற்கள்
இன்னும் ஒரு ஸ்விஸ் கீரை இலையில் குத்தியபடி இருக்க.
அடுத்து ஒரு குழந்தை. ஓ, ஒன்று இரண்டு மூன்று
என்னுள் இருந்த கொலைகாரி முறுக்கி மேலெழும்ப.
கழுகுக்கண் கொலையாளி மேடையேறி முன் நின்றாள்.

வில்லியம் கிப்ஸன், அறிவியல் நவீன ‘ஆளுமை’

நீங்கள் ஒரு பயங்கரவாதி என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சம் பேர்தான் இருப்பீர்கள். நீங்கள் மோதுவதோ, ஏராளமான பெருந்தலைகளுடன். பயங்கரவாதம் என்பது உங்களுடைய பிராண்டைப் பிரபலமாக்கும் முயற்சி. ஏனெனில் உங்களிடம் இருப்பதெல்லாம் அந்த பிராண்ட் ஒன்றுதான். பயங்கரவாதிகளிடம் அவ்வளவாகப் பொருள் வசதி இருப்பதில்லை. முதலில், பயங்கரவாதம் என்ற சொல்லே எனக்குப் பிடிக்கவில்லை. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அந்த வார்த்தை துல்லியமாகச் சொல்லுவதில்லை

போர் – நினைவுகள், சாட்சியங்கள்

என்னைப் பொருத்தவரை இலக்கியமும் கலையும் இறுதியில் மானுடம் குறித்தவை. ஒரு நாவலை நான் எழுதி முடிக்கையில், அதிலிருந்து எதையாவது நான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும், அல்லது இந்த உலகில் மனிதராய் வாழ்வதன் அர்த்தத்தைக் குறித்து என் மண்டைக்குள் ஏதாவது குடைந்துகொண்டிருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் அறம் என்றால், ‘ஆம்’ என்பதே என் பதில்.

எலெக்ட்ரிக் எறும்பு – 2

என் பேரண்டமே என் விரல்களுக்கு இடையில் உள்ளது, அவன் புரிந்து கொண்டான். இந்த சனியன் பிடித்த நாடா எப்படி வேலை செய்கிறது என்று மட்டும் புரிந்து விட்டால். நான் முதலில் என்ன தேடினேன் என்றால், என் செயல்திட்டத்தை இயக்குகிற சர்க்யூட்களைக் கண்டுபிடித்தால், என் வாழ்க்கையை உண்மையாக ஒரு நிலைப்புள்ளதாக ஆக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் இதைப் பார்த்தால்…

கல்மேடு

சிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”

மொழிபெயர்ப்பு என்னும் கலை – இறுதிப்பகுதி

முழு எத்தர்கள், சற்றே மந்த புத்திக்காரர்கள், மலட்டுப் புலவர்கள் ஆகியோரைத் தவிர்த்தால், தோராயமாக, மூன்று விதமான மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர். நான் முன்னர் கூறிய மூன்று வகைத் தீங்குகள்- அறியாமை, விட்டு விடுதல், மற்றும் ஒற்றித் திருத்தல்- அவற்றுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், இந்த மூன்று வகையினரும் மேற்படி மூவகைப்
பிழைகளையும் செய்யக் கூடும்.

மொழிபெயர்ப்பு என்னும் கலை

ஷேக்ஸ்பியரையும், ஃப்ளூபேரையும் ட்யூட்சேவையும், டாந்தேவையும், ஸெர்வண்டெஸையும், காப்காவையும், ரசிக்க ஒரு மனிதனுக்கு ஆறு மொழிகளில் ஆழமான நுண்ணறிவு வேண்டியிருக்கிறது. இவற்றைத் தவிர பிற மொழிகள் இருக்கின்றன. அந்ததந்த மொழிகளில் சிறந்த கவிஞர்கள் இருக்கின்றனர்… லத்தீன் உள்ளதா, கிரேக்கமும் உள்ளதே? பிறகு, மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் என்னதான் செய்வதாம்?

எலெக்ட்ரிக் எறும்பு

மேல்பரப்பில் பார்த்தால் சாதாரண உடலுறுப்பு போலவே இருந்தது. இயற்கையான தோல், அதன் கீழே இயற்கையான சதை, நிஜமான ரத்தம் தமனி, நாடி, சல்லிக் குழாய்களில் எல்லாம் ஓடியது. ஆனால் அதற்குக் கீழே, எலெக்ட்ரிக் சர்க்யூட்கள், சிறு கம்பிகள், நுண்ணிய அளவில் பொருத்தப்பட்டு… மின்னின…கைக்குள் கூர்ந்து பார்த்தான்…

ரகு ராய் – பேட்டி

உண்மையில் இது ஒரு நாடே அல்ல. திரும்பிப்பார்த்தால் நீதி வழங்க 25 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இது ஒரு கௌரவமோ அல்லது சுயமரியாதையோ அற்ற நாடு. ஆண்டர்சனை முதலில் தப்ப விட்டுவிட்டு அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் நம்மை சமமாக மதிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? சரிசமமாக நடத்தத் தகுதியற்றவர் நீங்கள். பிரிட்டிஷ் பெட்ரோலியக் கிணறு கசிவில் இறக்கும் பறவைக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த விபத்தில் இறந்த மக்களுக்கு இல்லை.

வித்யா சங்கர் – ஒரு பேட்டி

நான் வீணை கற்றுக் கொள்ள துவங்கியபோது என் வயது எட்டு. ஒரு சுவாரஸியமான சம்பவம் இருக்கிறது. ஒரு முறை, ”எளியேனே” எனும் ஆனய்யாவின் கீர்த்தனையை சபேச ஐயர் பாடப்பாட, என் தந்தை ஸ்வரப்படுத்த முயன்றார். சரணத்தில், ஒரு குறிப்பிட்ட வரியை ஸ்வரப்படுத்துவதில் என் அப்பா சற்று திணறினார். நான் என் உள்ளுணர்வு சொன்னபடி உடனடியாக ஸ்வரப்படுத்தினேன். உடனே சபேச ஐயர் என் தந்தையிடம் நான் பாடிய விதமே ஸ்வரப்படுத்தும்படி சொன்னார்.

மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

மொழிபெயர்ப்பு கவிதைகள்

வார்த்தைகளால் அடைய முடியா இடத்தில் அது தொங்கியது
வெளிச்சம் செல்ல முடியா இடத்தில் அது உறங்கியது.
அதன் வாசனை பாம்பைப் போலவோ எலியைப் போலவோ இல்லை,
புலன்நுகர்ச்சியாகவோ புலனடக்கமாகவோ இல்லை.

கரும்பறவையைப் பார்க்க பதிமூன்று வழிகள்

நீண்ட சாளரத்தின்
கரடு முரடானக்
கண்ணாடியில்,
நீர் உறைந்து நிறைந்தது.
அதன் குறுக்கும் நெடுக்குமாய்
கரும்பறவை நிழலாக நகர்கிறது.

சீனப் பெண் கவிஞர்களின் ஐந்து கவிதைகள்

யாரிடம் சொல்வேன்
இறந்தோருக்கான எனது
நிரந்தர சோகத்தை?
இந்த வேகத்தில்
மலைகளையும் நதிகளையும்
மட்டுமே கண்டேன்.
என் ஆடையிலிருந்த
உதிரத்துடன் சேர்ந்தது என் கண்ணீர்.

பூச்சுகளற்ற எதார்த்தம், இடரில் நகைப்பு- போலிஷ் கவிதைகள்

இவருடைய பல கவிதைத் தொகுப்புகளும், படித்தவர் மனதில் ஸ்டாலினிய காலத்து அடக்கு முறை ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துன்பங்களையும், யூரோப்பின் இருண்டகாலம் எனப்படும் அந்த வருடங்களையும் ஒருக்காலும் மறக்க் முடியாமல் பதிப்பன எனச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் பரபரப்பான முழக்கங்கள் நிறைந்த, ஆரவாரிப்புகள் உள்ள கவிதைகள் அல்ல இவருடையவை. அவை அரசியல் கவிதைகளே அல்ல, கவனமான உளவியல் பார்வை கொண்டவை.

சிறு பிள்ளைக் குறும்பு

காகம் சிரித்தது.
கடவுளின் ஒரே மகனை, அப்புழுவைக் கடித்து
நெளியும் இரு துண்டுகளாக்கியது.வால்பாதியை ஆணுக்குள் திணித்தது,
காயப்பட்ட முனையை வெளியே தொங்க விட்டு.

பிற மனிதர்கள்

பைசாசம் அவன் உயிரை அக்கக்காகப் பிரித்து எடுத்தது. கணம் கணமாக, படுமோசமான ஒவ்வொரு சம்பவத்தையும். இதெல்லாம் ஒரு நூறு வருடம் நீடித்தாற்போலிருந்தது, இல்லை இல்லை, ஆயிரம் வருடங்கள் போல நீண்டது- அவர்களுக்கென்ன அந்த சாம்பல் நிற அறையில், கால நெருக்கடி என்று ஏதும்தான் இல்லையே, எல்லா நேரமும் இருந்ததே. இறுதியில் அவனுக்குப் புரிந்தது, அந்தப் பைசாசம் சொன்னது சரிதான். உடலால் சித்திரவதைப்பட்டது எவ்வளவோ அன்பாக இருந்தது.

கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 1

நான் விருந்தளிக்கிறவன் அல்ல. நான் அவன் அப்பா. இல்லாத அவன் அப்பா நான்தான். அவன் தொட்டுணர்ந்த அப்பா. அவனைவிட்டு விலகியிருப்பதான என் பாவனையில், அவனது இதயத்துக்கும், ஆத்மாவுக்கும் வஞ்சனை செய்தேன் நான். ஆனாலும் உள்ளூற நான் அவன்சார்ந்த நெருங்கிய இணைப்பைக் கொண்டிருந்தேன், அதையிட்டு மேலதிகம் அக்கறையான சிந்தனையைச் செலுத்தவில்லை.

சந்தேகம்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில்
துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும்
எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும்
சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்?

தலைமை அறிஞர்களாக விளங்கிய இவர்களின் வார்த்தைகளை உதிரி சமூக விஞ்ஞானிகளும் வழிமொழிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வழிமொழிந்து நின்றவர்கள் JNU போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், மேற்கு நாடுகளிலிருந்து அழைப்பையும் பெற்றனர். மதச்சார்பின்மைவாதிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தன்னுடைய உள்ளார்ந்த தணிக்கையை உருப்பெருக்கிக் கொண்டது. எந்த ஆய்வுகள் பதிக்கப்படவேண்டும், அரசின் நிதி உதவி எதற்கு ஒதுக்கப்படவேண்டும், எந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படவேண்டும் போன்றவற்றை இந்த உள்ளார்ந்த தணிக்கை முடிவு செய்தது.

சத்தியத்தின் தாமரை பூத்துவருவதை திஸ்ஸ கண்டாரா?

உண்மையைக் கொண்டுபோய் அடகுவைத்து
உரிமையை இரும்புச் சங்கிலி கொண்டு
சிறையிலிட்ட அந் நாளில்
திஸ்ஸ கண்டாரா
அதிகாரத்தால் உன்மத்தம் பிடித்தவோர் அரசனை

”ஆர்மீனியன் கோல்கத்தா”*

ஒரு துருக்கியக் கேப்டன் பலாகியனிடம் சொன்னான். ”யுத்தநேரம் என்பதால் குண்டுகள் கிராக்கியாயிருந்தன. எனவே மக்கள் கிராமத்தில் என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் கையிலெடுத்தார்கள் – கோடரிகள். வெட்டுக்கத்திகள், புல் அரிவாள், பிடியறுவாள், தடிகள், மண்வெட்டிகள். சுத்தியல்,கொறடுகள்- இவற்றை வைத்தே கொன்று குவித்தார்கள்.”