புத்தகங்கள் மீது தீராப்பசி கொண்ட எந்த குழந்தையும் கனவு காணும் ஒன்று அவளுக்கு வாய்த் திருந்தது, புத்தகக்கடை உரிமையாளரான தந்தை. அதை அவள் ஒன்றும் பெரிதாக பயன்படுத்திக்கொள்ளவில்லைதான். நாங்கள் அவள் அளவிற்கு கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை. எங்கள் பிறந்தநாள்களுக்கு மலிவான சிறிய புத்தகத்தை கூட கொடுக்காமல், தன் தந்தையின் கடையிலிருந்து புகைப்பட வாழ்த்தட்டைகளை அவளே நேரில் கொண்டு வந்து கொடுப்பாள்…