பாலையில் துவங்கிய நெடும் பயணம்

ரஷ்யரைத் தோற்கடித்த பின், ரத்தமில்லாது அந்தப்பகுதி ஆட்சியாளரைக் கொல்லத் தீர்மானித்த மங்கோலியத் தளபதிகள், அவர்களைத் தரையில் படுக்கவைத்து, மேலே ஒரு மரமேடையைப் போட்டு அதன் மீது கூட்டமாக அமர்ந்து உணவு உண்டனராம். மரப்பலகைக்குக் கீழே அந்த அரச குலத்தினர் நசுங்கிச் செத்தனராம். இப்படிப்பட்ட உளவியல் வன்முறையால் மங்கோலியருக்கு என்ன லாபம் என்றால், அந்த பெரும் நிலப்பகுதியே ஒன்றரை நூற்றாண்டுக்கு பெரும் கலவரங்கள் எழுச்சிகள் இன்றி அடங்கி இருந்தது.

சாபம்

சிறிது நேரம் தன் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார். திடீரென்று ‘உங்கள் காரில் எங்கே சேதம்?’ என்று வினவினார். அங்கேதான் பிரச்சினை முளைத்தது. அவரிடம் கதைகொடுத்து நேரத்தை நீட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் இருந்தேன். காரில் இருந்து இறங்கி காரின் பின்பக்கத்தை காட்டினேன். யாரோ உயிருள்ள பெண் ஒருவரின் பின்பக்கத்தை ஆராய்வதுபோல நீண்ட நேரம் கூர்ந்து கவனித்தார்.

அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும்

எகிப்தின் புரட்சி படிப்படியாக அத்தனை சர்வாதிகார அரபு நாடுகளையும் கவிழ்த்து விடும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என்று இஸ்லாமிய/அரேபிய பகுதிகள் சொல்லப்பட்டாலும். வட ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் (அதாவது எகிப்திற்கு கிழக்கே, எகிப்திற்கு மேற்கே எனலாம்) அவற்றின் சமூக, அரசியல் வரலாற்றை ஒட்டி பல வேறுபாடுகள் உள்ளன. எகிப்திற்கு கிழக்கில் மத்திய கிழக்கில் புகுந்து போகப்போக இது போன்ற புரட்சிகள் எளிதாக வெற்றி பெறுவது கஷ்டம்.

இலவச இணையம் – எப்படி சாத்தியம்?

முதலில் ஹாட்மெயில், பிறகு யாஹூ மற்றும் ஜிமெயில் மின்னஞ்சல் வந்து இன்று பல கோடி மக்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வியாபார சம்மந்தப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பல கோடி மக்களின் மின்னஞ்சல் மற்றும் புகைப்படங்களை சேகரிப்பதற்கு ராட்சச வழங்கி கணினி வயல்கள் (server farms) தேவை. அவற்றைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எதற்காக இலவசமாக இவர்கள் இந்தச் சேவையைக் கொடுக்கிறார்கள்? இவர்களுக்கு வருமானம் எப்படிக் கிடைக்கிறது?

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 9

கட்டிடங்களில் நுணுக்கமும் சிக்கலும் கூடிய வடிவங்களை படைக்க பரோக் பாணிதான் பொருந்தி வந்தது. ரொகோகோ பாணியின் நுழைவால் அத்துடன் கீழை நாட்டுப் பாணி, இசைவுப் பொருத்தமில்லாத வடிவக் கட்டு மானம் உள்ளிட்ட பல உத்திகளின் தாக்கம் மேலோங்கியது. ஜெர்மனி, போஹிமியோ, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் கத்தோலிக கிருஸ்துவர் வசித்த பகுதிகளில் இப்புதிய பாணி விரும்பி ஏற்கப்பட்டது. முன்பு இருந்த பரோக் பாணியுடன் கலந்து ஒரு புதிய கலைப்பாணி தோன்றியது.

வைரம் தேடிய மண்

மண் அனைத்தையும் வெற்றி கொள்ளும். மண், காலத்துடைப்பான். மண்ணின் நீரினும் சீரிய ஆற்றொழுக்குக்குக்கு கரைகள் கிடையாது, அணைபோட்டு மாளாது. மண்ணில் பிறந்தோம், மண்ணில் இருந்தோம், மண் நமக்கு இல்லிடமும் ஆகும். நம் காலடியில் கிடக்கும் மண்ணினும் வலியது எதுவும் இல்லை- அதன் உறுதியான வெற்றியைச் சுட்டுகிறது நமீபியாவின் கோல்மான்ஸ்கோப் “வைரம் தேடிய மண்”

வெங்கட் சாமிநாதன்

தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் எழுத்துலகைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவுமிருக்கிறார்கள். இத்தருணத்தில் வெ.சா அவர்களைக் குறித்து ச.திருமலைராஜன் எழுதியிருக்கும் சிறப்புக்கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மகரந்தம்

ஜப்பானியர்கள் அண்மையில் சந்தித்த பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்த ஆழிப் பேரலையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என்ற அளவில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் ஜிஷுக்கு என்ற சுய கட்டுப்பாடு கடைபிடிக்கும் வகையில் அனைத்து தளங்களிலும் ஆரவாரங்களைத் தவிர்க்கிறார்கள்.

வாசகர் மறுமொழி

ப.கோலப்பன் எழுதிய ‘வெறுமை’ சிறுகதை மிக அருமை. பொதுவாகத் தமிழில் நல்ல சிறுகதைகள் அருகி வரும் காலத்தில் இது ஒரு ஆசுவாசமளிக்கும் நல்ல எழுத்து, நல்ல கதை. வெறுமை சிறுகதை சங்கீத வெறுமையை வெகு அழகாகச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. சங்கீதம் ரசிப்பவர்களுக்கு, முக்கியமாக நாதஸ்வர ரசிகர்களுக்கு இச்சிறுகதை ஒரு பொக்கிஷம். தி.ஜா எழுத்துகளைப் போல அரிதான சங்கீதப் புனைவு.

மோகமுள் – நாவல் பிறந்த கதை

“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.

பகுதி 02 – ஹூகோவ்: சீனாவின் வசிப்பிடப் பதிவு முறை

சொந்த நாட்டுக்குள்ளேயே வேறு ஊருக்கோ, மாநிலத்துக்கோ, குறிப்பாக சிற்றூரிலிருந்து பேரூருக்குப் போவோர் இதுபோன்ற வசிப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்துப் பெற்ற அடையாள அட்டையைக் கையில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு உணவு விநியோகம், இருப்பிட வசதிகளை அரசு தருவதற்காக இப்படிக் கணக்கு வைக்கிறது என்று ஒரு சாக்குச் சொல்ல இடம் உண்டு. அதுவல்ல மையக் காரணம். மக்களைக் கட்டுப்படுத்தல்தான் என்பது இன்றைய உண்மை.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஆறு

நிரவல் என்பதே இசை வைத்து நிரப்புதல் என்கையில் புரியவேண்டியது, ஒரிஜினல் பாடல் வரிகள் முதலில் அதற்கேற்றவாறு தாளத்தினுள் நிறைய அவகாசங்களுடன் சுருக்கமாகப் பொருந்தியிருக்கவேண்டும். இடைவெளிகள் இருந்தால்தானே நிரப்பமுடியும். பல்லவி உருவாக்குகையில் இதை மனதில்கொண்டு நிரவல் செய்வதற்கு தகுந்தவாறு வரிகளை வார்த்தைகளுக்கிடையே வேண்டிய அவகாசங்கள், அருதிகள் வைக்க முடியுமாறு அமைக்கவேண்டும்.

உதிரம்

கும்மிருட்டுக்கு மனித உருவம் கொடுத்தது போல் நிற்கிறாள். கூந்தல் பின்காலைத் தொட்டுப் புரள்கிறது. பத்து கைகள். நெருங்க நெருங்க இன்னும் உருவம் தெளிவானது. கழுத்தில் போட்டிருக்கும் செவ்வரளி மாலை விம்மி நிற்கும் முலை மேடுகளில் லேசாக மடிந்து கால் முட்டுகளைத் தொடுகிறது. சூலம், அம்பு, சூரிக்கத்தி என எட்டு கைக்கும் ஒவ்வொரு ஆயுதம். ஒரு கையில் கொப்பரையில் குங்குமம். தரை வரை நீளும் ஒரு கையில் துண்டிக்கப்பட்ட தலையை முடியைப் பிடித்து தூக்கி வைத்திருக்கிறாள். எந்த யுகத்தில் கொல்லப்பட்ட எந்த அரக்கனோ? அறுபட்ட கழுத்தில் இருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. கைகளில் எல்லாம் சீமந்தம் முடிந்த சூலிக்கு அடுக்கியிருப்பது போல் வளையல்கள். இன்னும் நெருங்கிய போது அந்த கருமையான முகத்தில் செவ்வரியோடிய வெள்ளை விழிகள் பளிச்சென தெரிகின்றன. முகத்தில் சாம்பிராணி தைலம் பூசப்பட்டிருந்தது. அதன் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கில் பேசரி பளிச்சென மின்னுகிறது. காதுகளில் குண்டலங்கள். இரத்த சிவப்பில் வாய். உக்கிரமான பத்திரகாளி வந்து விட்டாள். உலகம் அழியப் போகிறது. தன்னையறியாமல் கையை எடு்த்துக் கும்பிட்டார். கண்ணில் நீர் தாரை தாரையாகப் பாய்ந்தது.

லாட்டரி

மிசர்ஸ் ஹட்சின்சன் கூட்டத்தினூடே பார்க்க முனைந்தவளாய் தன் கழுத்தை நீட்டி தன் கணவனும் குழந்தைகளும் முன்புறத்தில் நின்றுக் கொண்டிருப்பதைத் தேடிக் கண்டுபிடித்து விட்டாள். தான் விடைபெறுவதைக் குறிக்கும் வகையில் மிசர்ஸ் டெலாக்ரோவின் கரத்தில் தட்டிவிட்டு கூட்டத்தின் உட்புகுந்து தனக்கு வழி செய்து கொள்ளத் துவங்கினாள். சிரித்த முகத்துடன் அவளுக்கு வழி விட்டுப் பிரிந்தனர் அங்கு கூடியிருந்தவர்கள்

அக்கூ குருவி

யாழ்பாணத்தில் கலவரம் ஆரம்பித்தது. எல்லாம் பாழாய் போச்சு. ஒரு நாள் ராஜன் ஊரில் இல்லை. எங்கள் ஊரில் ராணுவத்தினர் வீடுகளில் புகுந்து சோதனை நடத்துகிறார்கள் என்று செய்தி. இதற்கு முன்னால் இதுபோல் நடந்த சில இடங்களில் ராணுவம் நுழைந்தபோது நடந்திருந்த பயங்கரங்களைக் கேள்விப்பட்டிருந்த்தினால் ஏதும் தவறு செய்யவில்லை என்றாலும் கூட ரொம்ப பயந்து போனேன்.

கல்

பார்வைக் கோட்டின் ஓரத்தில் கட்டிடங்கள் தெளிவற்ற சிறிய உருவங்களாக எழும்ப ஆரம்பித்தன. பிறகு நெருங்க நெருங்க அவை பிரம்மாண்டமாக உயர்ந்தெழுந்தன. செயற்கை புல்வெளிகள் திடீரென வெண்பரப்பில் பச்சை கோடுகள் காட்டின. பெரும்பாலான கட்டிடங்கள் அரை வட்ட கோளமாக இருந்தன. மேலே சூரிய ஒளியை சேமிக்கும் வளைந்த கண்ணாடிகள் இருந்தன. ஆங்காங்கே சத்து மண் படுகைகளில் ராட்சத மரங்கள் வளர்ந்திருந்தன.

பண்டிட் பாலேஷுடன் ஒரு மாலை

பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசையைத் தொடர்ந்து கேட்டுக் கேட்டு அந்த வாத்தியத்தை திரையிசையில் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். திரையிசையில் வாசிக்கும் பல வாத்தியக்கலைஞர்கள் ஒப்பற்ற மேதைகள். அவர்களில் ஒருவர் முப்பது வருடங்களாகத் தமிழ்த்திரையிசையில் ஷெனாய் வாசித்து வரும் பண்டிட் பாலேஷ். உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மாணவர். சாலிகிராமத்தில் என் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரம்தான் பாலேஷின் வீடு. அவ்வப்போது சாலிகிராமத்து வீதிகளில் நாங்கள் சந்தித்துக் கொள்வதுண்டு. பார்க்கும்போதெல்லாம், இருவரும் சாவகாசமாக அமர்ந்து இசை குறித்து நிறைய பேச வேண்டும் என்று சொல்லிக் கொள்வோம். பல நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் ஒருநாள் அது அமைந்தது. அவரது வீட்டின் மாடியிலுள்ள ஓர் அறையில் அவரது குருமார்களின் புகைப்படங்களுக்கு அருகே அமர்ந்து பேசத் தொடங்கினோம். பாலேஷின் மகன் கிருஷ்ணா பாலேஷும் உடனிருந்தார்.

வெறுமை

லேசா இராகம் வாசிச்சதும் ஆபேரியோணு நெனக்கதுக்குள்ள ஹிந்துஸ்தானி மாதிரி கேக்கு. பீம்பிளாசப் போட்டு உருக்கிட்டாரு. இவரு வாசித்ததும் தவிலுல உருட்டுச் சொல்லு அடிச்சுட்டு, கையைப் பொத்தி வலந்தலையிலே ஜிம் ஜிம்முன்னு ஒரு முத்தாய்ப்பு வைச்சான். யாரு? சண்முகவடிவேலுதான். கந்தன் கருணை புரியும் வடிவேலுண்ணு இவரு எடுத்தாரு. மதுரை மணி பாடி எத்தனை தடவைக் கேட்டிருக்கேன். “வடிவேல்” என்று அவர் பாடுகையில் பழனி சுப்புடு மிருதங்கத்தில் பிளாங்குனு ஒரு சாப்பு கொடுப்பாரு. அது ஒரு அனுபவம். காருக்குறிச்சி வேறு தினுசு. ஒவ்வொரு வரியும் வாய்ப்பாட்டு மாதிரியே கேக்கு.

மூன்று கவிதைகள்

சட்டை, கன்னம் கை கால் என்று
எங்கும் மண்தீற்றல்களுடன்
இரண்டு கற்களை எடுத்துக்கொண்டு வந்து
இப்பவே வீட்டுக்குப்போய் பச்சை அட்டையை
எடுத்துவரவேண்டும் என்கிறாள் பொறுப்பு வழியும் குரலில்

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 8

தனது சமகால பெண்ணியப் படைப்பாளிகளில் சிலரைப் போலவே இவரும் உடையற்ற தனது உடலையே படைப்புக்கருவாகவும், கித்தானாகவும் பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் சமுதாயத்தில் பெண்ணெனப்படுபவளின் முன்னரே முடிவு செய்யப்பட்ட அடையாளத்தை கேள்விக்குறியாக்கி முறியடிக்கிறார். சமூகத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களைப் பற்றி தனது எதிர் கருத்துக்களை வெளியிட ஒருபோதும் இவர் அஞ்சியது இல்லை.

உயிரின் கதை – 6

துணி வியாபாரம் செய்யும் ஆன்டன் வான் லீவன்ஹாக் (Anton Van Leeuwenhoek) என்ற டச்சுக்காரர் 1674-இல் ஒருநாள் படகில் சவாரி போய்விட்டுத் திரும்பியபோது கொண்டுவந்த தண்ணீரை, ஒரு கண்ணாடிக் குப்பியில் ஊற்றி எண்ணெய் விளக்கை ஒளி ஆதாரமாகக் கொண்டு தானே வடிவமைத்து உண்டாக்கிய நுண்ணோக்கியில் பார்த்து அதுவரை வெறும் கண்ணால் பார்க்க முடியாத நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு ’உயிரித்துணுக்குகள்’ (animalicule) என்று பெயரிட்டார்.

பகுதி 01 – கூட்டுக்குள் அலையும் தேனீக் கூட்டம்

சீனர்கள் தங்கள் நாட்டுக்குள் செய்யும் இடப்பெயர்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் – ஆதி மனித நாகரீகத்தின் வளர்ச்சியைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம். சீனாவின் கிராமங்கள் நகரமயமாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் நகரங்கள், உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், குடும்ப வாழ்க்கையும் தனி மனித வாழ்க்கையும் வெறுமையாகிக் கொண்டிருக்கின்றன. சொந்த நாட்டுக்குள்ளேயே சீனர்கள் அகதிகளாக மாறி ஓடத் தொடங்கியது எப்போது? எதனால்? இதன் காரண காரியங்கள் சுவாரசியமானவை. வாருங்கள், சீனாவுக்கு!

உயர் நிர்வாகக் குழுக்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு

உலகம் முழுவதிலும் வேலைகளில் பெண்கள் எதிர்கொள்ள நேர்கிற தடைகளுக்கு, மொத்தமாக ஒரு உருவகம் கொடுக்கப்படுகிறது. அது, வேலைகளில் பெண்களை உயர விடாமல் தடுக்கும் ’கண்ணாடிக்கூரை’ என அழைக்கப்படுகிறது. நிறுவனங்களின் உயர் தளங்கள் தகுதி உள்ள பெண்களால் அடையப்படக் கூடியவை என்ற தோற்றம் தரும். ஆனால் உயர முயற்சி செய்யும்போதுதான் ஏதோ ஒரு தாண்டமுடியாத தடை அங்கிருப்பது தெரியும்.

அதெல்லாம் மாறியபோது

எங்களை விட உருவில் பெரியவர்கள். பெரிதாக மட்டுமில்லை, அகலம் வேறு. இரண்டு பேர் என்னை விட உயரம், நானே ரொம்பவும் நெட்டை என்று பெயர். காலணி இல்லாமல் என் உயரம் ஒரு மீட்டர், 80 சென்டி மீடர். அவர்களைப் பார்த்ததுமே எங்கள் இனம் என்று தெரிந்தது, ஆனால் எங்களிடமிருந்து வேறுபட்டு இருந்தனர். எளிதில் சொல்லி விட முடியாதபடி மாறிய ஆட்களாகத் தெரிந்தார்கள்.

பால்வழி குற்றத் தடுப்பு

பேராசிரியர் மங்கை நடராஜன் நியுயார்க் மாநிலத்தின் சிடி யுனிவர்ஸிடி பல்கலை அமைப்பில் ஒரு அங்கமான, புகழ் பெற்ற, ஜான் ஜேய் காலேஜ் ஆஃப் க்ரிமினல் ஜஸ்டிஸ் என்ற கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்புக்கு இயக்குநராக இருக்கிறார். இந்தக் கட்டுரை, ஐக்கிய நாட்டுச் சபையின் 12ஆவது பேரவையில் குற்றத் தடுப்பும், குற்றத்துக்கு நீதியும் ஆகிய கருதுபொருளில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய ஒரு உரையின் அண்மையான தழுவலாக எழுதப்பட்டது.

தம்புராவின் மெளனம்

தஞ்சை இசைச்சூழல் தமிழகத்தின் தொன்மையான கலாசாரப் பின்னணியை உயிர்ப்போடு வைத்திருந்த ஒன்று. தஞ்சை இசைச்சூழலில் எஞ்சியிருந்த வளமான இசைக்கலைஞர்களில் ஒருவரான தஞ்சை வெங்கடேசய்யங்கார் சென்ற வாரம் தன்னுடைய 85-ஆவது வயதில் மறைந்தார். அவரைக் குறித்தும், தஞ்சை இசைச்சூழலைக் குறித்தும், தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்ட தஞ்சை K.சிவசுப்ரமணியன் அவர்களிடம் ஒரு பேட்டி கண்டோம்.

ஆப்பிரிக்க புஷ் யானைகள்

ஸ்மித்சொனியன் இன்ஸ்டிட்யூட்டின் இணைய தளம் ஸ்மித்சோனியன் வைல்ட். இங்கு உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் காமேராவைப் பொறியாக வைத்து எடுத்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை இணைத்திருக்கிறார்கள். இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் சிறப்பான வகைகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கென்யாவில் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க புஷ் யானைகளின் புகைப்படங்கள் எவ்வளவு “ஆப்பிரிக்க புஷ் யானைகள்”

சக்தி சுரபி – இயற்கை எரி சக்தி

உங்கள் வீட்டுக் கழிவிலிருந்து கிடைக்கும் எரி சக்தியால் உங்கள் வீட்டு எல்பிஜியை உங்களால் குறைக்க முடிந்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. ஆனால் இலவசங்களின் மயக்கத்தில் இருக்கும் சமூகம் இந்த தொழில்நுட்பம் குறித்து புரிந்து கொள்வது தற்போதைக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறிதான்.

தமிழினி கலை இதழ், உபு இணைய தளம்

தமிழறிஞர்கள், தமிழாராய்ச்சி, தத்துவம், சிற்பக்கலை, கல்வெட்டு ஆராய்ச்சி, சமூகம், சமகாலத் தமிழ்ச்சூழல் ஆகியவற்றைக் குறித்துத் தீவிரமான பல கட்டுரைகளை வெளியிட்டு வரும் சிறந்த சிற்றிதழான தமிழினியை இப்போது இணையத்திலும் படிக்கலாம். உபு டாட் காம் என்ற தளத்தில் ஏராளமான அரிய இசைத்தொகுப்புகளையும் திரைப்படங்களையும் பதிவிடுகிறார்கள். தொடர்ந்து புதிய படைப்புகளை இணைக்கிறார்கள்.

வாசகர் கடிதங்கள்

இந்த சொல்வனம் இதழில் வந்த கணியான் கூத்து கட்டுரை அபாரம். நான் மிகவும் ரசித்துப் படித்தேன். திருச்செல்வன் இதை ஒரு கலை வடிவம் என்று மட்டுமில்லாமல், தன் சொந்த அனுபவத்தையும் சேர்த்து எழுதியிருப்பது மிகவும் அற்புதமானதாகவும், அவர் ரசனையின் உண்மையைச் சொல்வதாகவும் இருந்தது. இதைப் போன்று அழிந்து, நசிந்து வரும் நாட்டார் கலைகளைக் குறித்து சொல்வனம் வெளியிடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

04. உலகப் புகழ் பெற்ற பிரதேஸ் இசை நிகழ்ச்சி

யுத்தத்துக்குப் பின் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தும் ஸ்பெயினைப் பற்றிக் கவலைப்படவில்லை. இசை நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்குமாறு அழைத்த ஐ.நா சபையிடம் தன் கொள்கையைப் பற்றி கசல்ஸ் விளக்கினார். அதையே ஒரு பேட்டியாக டைம்ஸ் பத்திரிக்கைக்குக் கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். தன இன மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஃபிராங்கோ மன்னிப்பு கேட்கும் அதேநேரத்தில் உடனடியாக மக்களாட்சியை காடலோனியாவில் அமுலாக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

சென்னையில் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்

இது நடந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமான ஒரு திருப்புமுனை தொடர் ஒன்று உண்டு. இந்தியாவில் 2001ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் தொடர்தான் அது. இந்தியாவே பார்த்திராத, ஒரு புதிய கேப்டனாக கங்குலி உருப்பெற்றார். ஒரு போராடும் இந்தியாவை, பணியாத இந்திய அணியை உருவாக்கியதில் கங்குலியின் பங்கு அதி முக்கியமானது.

மகரந்தம்

வளி மண்டலத்திலிருந்து இது தவிர மின்னல் மூலமாகவும் நைட்ரஜன் பூமிக்கு வரும். இந்த நைட்ரஜன் புவியில் ஒரு சுழற்சியில் உள்ளது. வளி மண்டலத்திலிருந்து நிலம் நீர் என செல்லும் அச்சுழலில் இப்போது கடல்களில் உள்ள நைட்ரஜனில் துண்டு விழுகிறது என்கிறார்கள். உண்மையிலேயே துண்டு விழுகிறதா அல்லது அதன் சுழற்சியில் நாம் இன்னும் அறிந்திராத மர்மப் பாதைகள் இருக்கின்றனவா?

உள்ளம் கவர்ந்த உள்வேலை

இந்த ஊழலின் விளைவுகளை இன்றும் உலகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச்சரிவால், குறைந்தபட்சம் 1.5 கோடி பேர் மீண்டும் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்கள் உலகெங்கும் வேலை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஒரு நிதி நிறுவனத் தலைமை அதிகாரி கூட இன்றுவரை சிறை செல்லவில்லை. இதைக் குறித்து அழகாக விளக்குகிறது ‘Inside Job’ என்ற விவரணப்படம்.

முக்தாம்மாவுடன் ஒரு மணி நேரம்

2004-ஆம் ஆண்டு தொண்ணூறு வயது இருக்கும் முக்தம்மா கீழே விழுந்ததில் அவர் தலையில் அடிபட்டு நினைவிழந்து இருந்தார். எங்களை யார் என்று அறிந்து கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது. அனால் அந்த நிலையிலும் அந்த பந்துவராளி பதத்தின் ஒரு சங்கதியும் அவர் நினைவைவிட்டு அகலவில்லை. எந்த ஒரு பிழையுமில்லாமல் பாடினார்.

உயிரின் கதை – 5

நம் உடலிலே உயிர் எங்கே இருக்கிறது என்ற கேள்வியைத்தான் நானும் சின்னப் பையனாக காய்ச்சல் வந்து வீட்டில் தனியாகப் படுத்திருந்தபோது ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆஸ்பத்திரியில் ஊசி போடப்போன டாக்டர் மாமாவிடம் கேட்டபோது, ”இதயத்துக்குள், வலது ஓர மூலையில், ஆவி ரூபத்தில்!” சொல்லிவிட்டு தாம்பூலத்தை எடுத்து வாயில் போட்டு குதப்பிக்கொண்டே சிரிஞ்சில் மருந்தை எடுத்துக் கொண்டிருந்தார். பயந்து கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ”அப்ப ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது வெளியே போய்டாதா?” என்றேன்.

மகரந்தம்

மனித குலத்தின் தேவை வளர வளர, அதற்கு ஈடுகொடுத்து கணிணியின் வேகமும் வளர வேண்டும். இல்லையேல், எளிய மனிதர்களுக்கான நுகர்வோர் மின்ணணுவியல் துறை முதல் பெரும் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அறிவியல் துறை வரை, பல்வேறு தளங்களில் பெரும் தேக்கம் ஏற்படும். அதனால், வேறு வழியே இல்லை, கணிணியின் வேகம் அதிகரித்தபடி இருக்க வேண்டும். ஆனால் எப்படி? கணிணி வல்லுநர்கள் முன்வைக்கப்பட்ட சவால் இது.

மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்

மக்கள் தொகை என்று எடுத்துக்கொண்டால் இன்றைய அராபியச்சமூகம் மிகவும் இளமையான ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை 15-இலிருந்து 29-க்குள் உள்ள இளைஞர் கூட்டம். எகிப்து போன்ற நாடுகளில் இவர்கள் படித்த ஆனால் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். அராபிய நாடுகளின் ஃபேஸ்புக் பயனாளர்களில் 22% எகிப்தில் உள்ளனர். பிற அராபிய நாடுகள் போல அரசாங்கம் வலைத்தளங்களை கடுமையாய்க் கட்டுப்படுத்துவதும் எகிப்தில் கிடையாது. இந்த சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பங்கெடுப்பது 15-லிருந்து 29-க்குள் இருக்கும் இளைஞர்களே.

வில்லியம் கிப்ஸன், அறிவியல் நவீன ‘ஆளுமை’

நீங்கள் ஒரு பயங்கரவாதி என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சம் பேர்தான் இருப்பீர்கள். நீங்கள் மோதுவதோ, ஏராளமான பெருந்தலைகளுடன். பயங்கரவாதம் என்பது உங்களுடைய பிராண்டைப் பிரபலமாக்கும் முயற்சி. ஏனெனில் உங்களிடம் இருப்பதெல்லாம் அந்த பிராண்ட் ஒன்றுதான். பயங்கரவாதிகளிடம் அவ்வளவாகப் பொருள் வசதி இருப்பதில்லை. முதலில், பயங்கரவாதம் என்ற சொல்லே எனக்குப் பிடிக்கவில்லை. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அந்த வார்த்தை துல்லியமாகச் சொல்லுவதில்லை

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-7

மிக அண்மைக் காலமாகப் பெண்ணியவாதிகள் தனக்கும் தனதுடலுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதான ஓவியம்-சிற்பங்களைப் படைக்கிறார்கள். அவற்றைப் பெண் என்பவள் இறைவனால் ஆணுக்காகப் படைக்கப்பட்ட அழகான கவர்ச்சி மிக்க போகப்பொருள் என்பன போன்ற கற்பனைகளைத் தகர்க்கவேண்டியே படைக்கிறார்கள். இனி பெண்ணின் பார்வையில் சித்தரிக்கப்படத் தேவையில்லை என்னும் கருத்தில் உறுதியாக உள்ளனர். ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த வலிகளைச் சொல்கிறார்கள். சமுதாயத்தின்மேல் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆண் என்பவன் அவர்களிடத்தில் காண மறுக்கும் சில விஷயங்களை படைப்பில் கொணர்கிறார்கள்.

தளவாய்ப்பேட்ட சந்தையும், மேலாண்மை உத்தியும்

ஒரு சின்ன விளையாட்டில் துவங்கி, பேரம் பேசுதலின் பல்வேறு அம்சங்களை விளக்கினார். முதலில் சொன்னது – அடிப்படை உழைப்பு. எந்த ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றாலும், அதைப் பற்றிய விவரங்கள், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை முதலில் சேகரிக்க வேண்டும் என்றார். இது பால பாடம். பங்கு பெற்ற எல்லோருமே செய்வதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஜேம்ஸ் பாண்ட் பட வில்லி மாதிரி சிரித்த அவர் அடுத்து ஒரு புள்ளி விவரம் கொடுத்தார்.

பிப்ரவரி மழை

மஞ்சுநாத் அவளை தினமும் பனர்கட்டா சாலையில் மீனாக்ஷி கோயிலுக்கு பக்கம் இருக்கும் ஹுல்லிமாவு என்ற இடத்தில் அவளது வீட்டில் விடும் டிரைவர். எஃப் எம் போட்டுவிட்டு, ரியர் மிரர் வியூவை சரிசெய்து பார்த்த போது திவ்யா போட்டிருந்த உள்ளாடை மீது அவன் கண்கள் சில வினாடிகள் அதிகப்படியாகத் தங்கியது. திவ்யா செல்பேசியில் பேசிக்கொண்டு ஒரு சாக்லெட் பட்டையை தின்றுகொண்டு இருந்தாள்.

உரிமையை மீட்கும் பெண்கள்

பெண் விடுதலை என்பதை ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்தே தமிழகத்தில் உள்ள பெண்ணியலாளர்களில் பெரும்பாலானவர்கள் செயல்படுவதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அப்பட்டமான உண்மையை சொல்வதானால், பெண் விடுதலை என்பது வன்முறையிலிருந்து விடுதலை என்ற நிலையை அடையவே வெகு தூரம் போக வேண்டியிருக்கும் போலிருக்கிறது. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பங்கு, சம உரிமை, சம வாய்ப்பு என்பதெல்லாம் போக்கு காட்டும் கோஷங்களாக வெற்றி பெற்று, உலகெங்கும் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் தீனக்குரலை மறைத்து விட்டிருக்கின்றன.

தொலைபேசி – ஒரு பரிணாமம்

90-களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் பொது தொலைபேசியகத்தில் ஒரு பெரிய வரிசை காத்திருக்கும். ஏனெனில் தொலைதூர அழைப்புகளுக்கு(STD) ஒன்பது மணிக்கு மேல் விலை சற்று குறைவு. ஓசி விகடன், ஓசி குமுதம் இவற்றோடு ஓசி டெலிபோன் வாய்ப்புக்காக கழுகாய் திரியும் பக்கத்துவீட்டுகாரர்கள் இன்னும் நினைவில் உள்ளனர். ஆனால் “தொலைபேசி – ஒரு பரிணாமம்”

‘மரணம் மற்றும்…’ கன்னடச் சிறுகதைகள்

இக்கதைத் தொகுப்பில் பாராட்டப்பட வேண்டியது அதன் சரளமான அம்சம். சரளம் என்றால் தன்னிஷ்டத்துக்கு மொழிபெயர்த்து மூலக்கதையைக் காணாமலடிப்பது அல்ல. தீவிரமான கதைகளில் உரையாடல்களைத் தூயத் தமிழிலும், கொஞ்சம் இறுக்கம் தளர்ந்த கதைகளில் ‘இயல்பான’ பேச்சுத் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார் நஞ்சுண்டன். கெளடர் என்பதாலேயே கொங்குநாட்டுக் கவுண்டர் வட்டாரவழக்கில் உரையாடல்களை அமைத்துவிட்டு அதை ‘மொழிபெயர்ப்பாளனின் சுதந்திரம்’ என்றெல்லாம் நஞ்சுண்டன் சொல்லியிருக்கலாம்.

சகலகலாச்சாரியார் எஸ்.ராஜம்

ராஜம் தனது வாழ்க்கையிலேயே இவ்வளவு பதவிசாகவும் நறுவிசாகவும் லலிதமாகவும் நளினமாகவும் எளிமையாகவும் பொறுமையாகவும் இருந்ததை புரிந்துகொண்டால் அவர் பாடலும் சித்திரமும் கேட்காமலே பார்க்காமலே புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் லலிதாராமும் காந்தனும் நமக்கு மேலும் புரியவைக்க அவர்கள் எடுத்த ஆவணப்படத்தில் இருந்து ஒரு பகுதியை குறும்படமாகக் காட்டினார்கள். மதுரை மணி அய்யர் அவர்கள் ராஜத்திடம் சொன்னது – “ராஜூ ராகமெல்லாம் குளிச்சுட்டு வர்றமாதிரி சுத்தமா இருக்கணும்.” இதை நினைவூட்டுவது போல் ராஜம் குளித்துவிட்டு துண்டுடன் வருகிறார். ஒரு சுத்த ராகமாக திகழ்கிறார்.

‘இசையால் வளமாகும் ஆளுமை’ – ஆர்.கே.ஸ்ரீகண்டனுடன் ஒரு நேர்காணல்

பெங்களூரில் வசிக்கும் கர்நாடக சங்கீத மேதை ஆர்.கே.ஸ்ரீகண்டன் அவர்களுக்கு இந்த வருடத்துக்கான பத்மபூஷண் விருது கிடைத்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. 91 வயதான ஸ்ரீகண்டனுக்கு எழுபது வயதுதான் என்று சத்தியம் செய்து கூறலாம். எல்லோரும் நம்பிவிடுவார்கள். மெலிந்த தேகம், கூர்மையான பார்வை, சின்ன ஓசையையும் துல்லியமாகக் கேட்கும் காது. அவர் பேச்சு, பாவனை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி. மிக அருமையாகத் தமிழ் பேசுகிறார். கையோடு எடுத்துப் போயிருந்த லாப்டாப்பில் சொல்வனத்தில் வந்த சில இசைக்கட்டுரைகளைக் காட்டினேன். ஆர்வமாகப் படித்துப் பார்த்தார். சாவகாசமாகப் படித்துப் பார்க்கவேண்டும் என்று அக்கட்டுரைகளின் ப்ரிண்ட்-அவுட்டுகளைத் தரச்சொல்லிக் கேட்டார். பின் உரையாடத் தொடங்கினோம்.

கணியான் கூத்து

“வாரானே சுடைலைக் கண்ணு, சுடலைக் கண்ணு….நாங்குநேரி தான் கடந்து, தான் கடந்து” “பக்கத்திலே முண்டனுமாம் முண்டனுமாம்” என்று உடையும் குரலில் கம்மலுடன் மத்திம காலத்தில் அப்பாடல் ஒலிக்கும். அதற்கு ஒத்திசைந்து வாசிக்கப்படும் மகுடம் (கையால் வாசிக்கப்படும் தப்பு). பாடலைப் பாடும் அண்ணாவி அதே வரிகளைத் துரித காலத்தில் பாடும் போது, சர்வலகுவாக மிருதங்கம் வாசிப்பதைப் போல் சொற்களை விளாசித் தள்ளுவார்கள் மகுடம் வாசிப்பவர்கள்.ஏதோ ஒன்று நம்மைப் போட்டு உலுக்கியது போன்ற உணர்வுடன், ஒலி வரும் பாதையை நோக்கி செல்வதற்கு ஆசை எழும்.